Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இவர்? - ஸ்டாலின் !
+11
Muthumohamed
SenthilMookan
KINGUMAR
M.M.SENTHIL
jenisiva
amirmaran
சிவா
ரேவதி
ayyasamy ram
அசுரன்
krishnaamma
15 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
யார் இவர்? - ஸ்டாலின் !
First topic message reminder :
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
Dr.S.Soundarapandian wrote:[link="/t105131p45-topic#1056812"]
நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
அவர் பெயர் ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.
ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.
அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.
அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் "கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக் களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.
சாராய வடிப்பின் போது அதில் ஏற்படும் ஒரு வகை நுரையைப் பார்த்த பிரீஸ்ட்லி அந்த நுரைக்கும் ஒரு வாயுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று யூகித்து, அதைச் சோதிக்க எண்ணினார். எனவே, அந்த நுரையைச் சேகரித்து ஒரு புட்டியிலிட்டு அதில் சிறிது நீரைக் கலந்து குடித்துப் பார்த்தார்.
அந்தக் கலவையில் சிறிது மணமும், ஒரு ருசியும் இருந்தது. அதை அருந்தியதும் ஒரு வகையான உற்சாக உணர்வும் தோன்றியது. அந்த பானத்தை மேலும் ஆராய்ந்து சில உண்மை களைப் புரிந்து கொண்டார் பிரீஸ்ட்லி. சில பொருள் கள் புளிக்கும் போது உண்டாகும் கரியமில வாயுவை நீரில் கரைத்தால் அது இனிப்பும், நல்ல மணமும், உற்சாகமும் தரக்கூடிய ஒரு வித பானமாக ஆகும் என்பது பாதிரியார் பிரீஸ்ட்லிக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவருடைய அந்தக் கண்டுபிடிப்புத்தான் சோடா என்றழைக்கப்பட்டது. பின்னர் பல வகை வண்ண எசன்சுகளைக் கலந்து சோடா, கலர் பானங்களாகவும் உற்பத்தி செய்யப் பட்டது. பாதிரியாராக இருந்து விஞ்ஞானியாக உயர்ந்த பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்த துர்நாற்றம் தான் சோடா, கலர் பானங்களையும் கரியமில வாயுவையும் கண்டுபிடிக்க உதவியதுன்னு சொன்னா ஆச்சரியமா இல்ல...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
நன்றி ஐயா, நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
ஒரு விஞ்ஞானியை இரண்டு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அவர் எங்கள் நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வற்புறுத்தின. அந்த இரண்டு நாடுகளில் ஒன்று அந்த விஞ்ஞானி பிறந்த நாடு. இன்னொன்று அவர் மேற்கல்வி கற்று ஆராய்ச்சி நிபுணராக வளர்ந்த நாடு.
அந்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் லியோனிடோ கபிட்சா. அவர் பிறந்த நாடு ரஷ்யா; வளர்ந்த நாடு இங்கிலாந்து.
சோவியத் ரஷ்யா வில் ஜார் மன்னனின் படைத் தளபதியாக இருந்த ஒருவரின் மகனாகப் பிறந்த கபிட்சா, மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கே அவர் ஸர் எர்னஸ்ட் ரூதர் போர்டு என்ற பிரபல அணு விஞ்ஞானியோடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
பின்னர் ஹென்றி காவெண்டிஷ் ஆய்வுக் கூடத்தின் காந்தவியல் ஆய்வுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஆண்டில் அவர் டிரினிடி கல்லூரியில் ஆராய்ச்சி யாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினராகவும் கபிட்சா தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுக் காலத்தில் ஓர் அயல் நாட்டு விஞ்ஞானி அந்தக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள பட்டது அதுதான் முதல் தடவை.
நாளடைவில் ராயல் விஞ்ஞானக் கழகம் கபிட்சாவின் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கென்றே "மாண்ட் ஆய்வகம்' என்ற ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தது. அதில் எல்லா வகையான நவீனக் கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது. இது கபிட்சாவின் தனித் திறமைக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கவுரவமாகும்.
இங்கிலாந்தில் அணுவியல் ஆய்வுகளோடு, வலுவுள்ள காந்தப் புலங்களை உண்டாக்கும் முறைகள், வெப்ப மாற்றீடற்ற விரிவின் மூலம் ஹீலியத்தைத் திரவமாக்கும் உத்திகள் ஆகியவற்றிலும் பல சாதனைகளைச் செய்தார் கபிட்சா. உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களும் அவருக்கு பல கவுரவப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தன.
இவ்வளவு பெருமைக்குரிய கபிட்சா, தாம் பிறந்த நாடான ரஷ்யாவையும் மறக்க வில்லை. அடிக்கடி ரஷ்யாவுக்குச் சென்று அறிவியல் ஆய்வு களில் ஈடுபட்டிருந்த அறிஞர்களைச் சந்தித்து, ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தார்.1934ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த விஞ்ஞானி கள் மாநாட்டில் கலந்து கொண்ட கபிட்சாவை, சோவியத் அரசாங்கம் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்றும், ரஷ்யாவிலேயே தங்கி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஆணையிட்டு விட்டது. அதனால் கபிட்சா ரஷ்யாவிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதை இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் தலைவராக இருந்த அணுவியல் விஞ்ஞானி ரூதர்போர்டு விரும்பவில்லை. விஞ்ஞானிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அரசியல் காரணங்களைக் காட்டி விஞ்ஞானி களின் ஆராய்ச்சிகளுக்குத் தடை செய்யக் கூடாது என்றும் ரூதர்போர்டு கருதினார்.
அவரே நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்கியதிலிருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்த பொருளுதவியும், மற்ற உதவிகளையும் செய்து அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ வழி வகுத்தது இங்கிலாந்து நாடுதான்.
கபிட்சாவின் தனிப்பட்ட ஆய்வுக்காகவே நிறுவப்பட்ட மாண்ட் ஆய்வுக் கூடத்தில் நிறுவப்பட்டிருந்த பல நவீனமான கருவிகளைப் பயன்படுத்தும் நுணுக்கம் கபிட்சாவுக்கு மட்டுமே தெரியும். இப்படிப் பட்ட நிலையில் கபிட்சா இங்கிலாந்துக்குத் திரும்பி வராவிட்டால் மாண்ட் ஆய்வுக் கூடத்திலுள்ள 30 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள கருவிகளெல்லாம் வீணாகி விடும்.
அதனால் மிகவும் வருந்திய ரூதர்போர்டு, கபிட்சாவை எப்படியாவது திரும்பப் பெற விரும்பினார். ரஷ்ய அரசாங்கத்துக்குப் பல கடிதங்களை எழுதி கபிட்சாவைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குச் செவி சாய்க்க ரஷ்ய அரசு மறுத்து விட்டது.
அதன் பின்னர் இரண்டு விஞ்ஞானி களை ரஷ்யாவுக்கு அனுப்பி கபிட்சாவைத் திரும்பப் பெற, பேச்சு வார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அப்போதும் சோவியத் அரசு கபிட்சாவை அனுப்ப சம்மதிக்காவிட்டால், அவரது ஆராய்ச்சிக் காகவே வாங்கப்பட்ட நவீனக் கருவிகளை யாவது சோவியத் அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் படி தாம் அனுப்பி வைத்த விஞ்ஞானி களிடம் சொல்லியனுப்பினார் ரூதர்போர்டு.
அந்த இரண்டு விஞ்ஞானிகளும் சோவியத் யூனியனுக்குச் சென்று அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளோடு பேசினர். அப்போதும் கபிட்சாவை அனுப்ப சோவியத் அரசு மறுத்து விட்டது.ஆனால், ரூதர்போர்டின் இரண்டாவது யோசனைப்படி, கபிட்சாவுக்காக வாங்கப் பட்ட நவீன கருவிகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளச் சம்மதித்தது. அதன்படி அந்தக் கருவிகளெல்லாம் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட்டன. ரஷ்யா அதற்குரிய பணத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.
ஒரு விஞ்ஞானிக்கு இரண்டு நாடு களும் சொந்தம் கொண்டாடிய சம்பவம் உலக வரலாற்றில் மிக,மிக அரிது. கபிட்சாவுக்காக நடந்த இத்தகைய போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யார் இவர்? - ஸ்டாலின் !
இங்கிலாந்தில் ஓர் ஏழைக் கருமானின் மகனாகப் பிறந்து படிக்கக்கூட வசதியில்லாமல் 13 வயதிலேயே வேலைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது ஒருவருக்கு.ஆனால், அவர் கண்டுபிடித்த ஒரு சாதனம்தான் பிற்காலத்தில் நவீன உலக அமைப்புக்கே வழி திறந்து விட்டது. அந்த விஞ்ஞானியின் பெயர் மைக்கேல் பாரடே. அவர் கண்டுபிடித்த சாதனம் டைனமோ எனப்படும் மின்னாக்கி.
வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலையை மேற்கொண்ட பாரடே, பின்னர் பைண்டிங் வேலையில் சேர்ந்து பழகிக் கொண்டார். அப்போது பல்வேறு அறிவியல் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தாம் படிக்கும் நூல்களில் உள்ள பல முக்கிய விஷயங்களை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.
அதன் பயனாக அறிவியல் விஷயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அறிவியல் சொற்பொழிவு எங்கே நடந்தாலும் அங்கெல்லாம் தவறாமல் சென்று அறிவியல் மேதைகளின் பேச்சைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இவ்வாறு அவர் கேட்ட சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்கது அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியின் சொற்பொழிவு. அவருடைய சொற்பொழிவுகளை எல்லாம் வரி விடாமல் குறிப் பெடுத்து, எழுதித் தொகுத்து, பைண்ட் செய்து ஒருநாள் அவரிடமே காட்டினார் பாரடே. அவருடைய ஆர்வத்தையும், முயற்சி யையும் கண்டு வியந்த ஹம்ப்ரி டேவி தாம் பணியாற்றி வந்த ராயல் விஞ்ஞானக் கழகத்திலேயே அவருக்கும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார்.
அந்த வேலையைச் செய்து கொண்டிருந்த போதே ஓய்வு நேரத்தில் சிறுசிறு பரிசோதனை செய்த பாரடே, அத்தகைய சோதனைகளின் விவரங்களையும் முடிவுகளையும் அழகாகவும், விவரமாகவும் எழுதி பைண்ட் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தத் தொகுப்பையும் ஒருநாள் ஹம்ப்ரிடேவியிடம் கொண்டு போய்க் காட்டினார் பாரடே.
அவற்றையெல்லாம் கவனமாகப் பரிசீலித்த டேவி, பாரடேயின் திறமையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அவரைத் தம்முடைய ஆய்வுக் கூட உதவியாளராகவே நியமித்துக் கொண்டார்.அன்று முதல் டேவி ஆசிரியராகவும், பாரடே மாணவராகவும் மாறினர். டேவி செய்ய வேண்டிய பல்வேறு சோதனைகளை பாரடேயே செய்யத் தொடங்கினார். பாரடேயின் சோதனை முடிவுகளைக் கொண்டே ஹம்ப்ரி டேவி பல சாதனைகளை நிகழ்த்தி பெயரும் புகழும் பெற்றார். பாரடே திரைக்குப் பின்னால் இருந்து எல்லாச் சோதனைகளையும் செய்து தன் குருவுக்கு உதவினார்.
1813ம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். பாரடேயும் அவரோடு சென்றார். உலகப் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைத்தது.நாடு திரும்பியதும் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் அவர் கடுமையாகப் பணியாற்ற நேரிட்டது. 1865ம் ஆண்டில் பென்ஸீன் என்ற கார்பன் சேர்மத்தைக் கண்டுபிடித்தார் பாரடே. ஆனால், அந்தப் பெருமை முழுவதும் டேவிக்கே போய் சேர்ந்தது. இப்படி பல பெருமைகளைத் தன் குரு நாதருக்குப் பெற்றுக் கொடுத்த பாரடேயை, அந்த குருநாதரே கடுமையாக எதிர்த்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது.
ஆயினும் அதனால், ஹம்ப்ரி டேவி எள்ளளவும் பெருமையடையவில்லை. மைக்கேல் பாரடே தான் மேலும் மேலும் புகழடைந்தார். இவ்வாறு பாரடேயின் வாழ்க்கையில் பல சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» யார் இவர்????????
» இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இவர் யார்?
» இவர் யார் தெரிகிறதா..???
» யார் இவர் ..? கண்டுபிடியுங்கள்..!
» இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இவர் யார்?
» இவர் யார் தெரிகிறதா..???
» யார் இவர் ..? கண்டுபிடியுங்கள்..!
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|