Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
+2
ayyasamy ram
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
First topic message reminder :
பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய நகரங்களில், அவர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள், அதிக அளவில் திரளுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில், நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு, அந்த மாநில பா.ஜ.,வினர், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் மூலமாக, பீகாரின் பல பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான பா.ஜ.,வினர், கூட்டம் நடந்த, பாட்னா, காந்தி மைதானத்தில், நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நரேந்திர மோடி, காலை, 10:00 மணிக்கு, பாட்னா வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பரபரப்பு :அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.பொதுக் கூட்டம் நடக்கும், காந்தி மைதானத்திலிருந்து, ரயில்வே ஸ்டேஷன், இரண்டு கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த, 10 நிமிடங்களுக்குள், காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர்ச்சியாக, ஐந்து குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. கூட்டம் நடந்த மைதானத்திலும், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே, பீதி ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில், மொத்தம், ஆறு பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடையூறு இல்லை:ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கூட்டம் நடக்கவிருந்த மைதானம் ஆகிய இடங்களில், வெடிக்காத நிலையில், மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டன. கூட்டம் நடந்த இடத்தில், பரபரப்பும், பீதியும் ஏற்பட்டாலும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கூட்ட மேடைக்கு வந்த பின், அங்கு அமைதி ஏற்பட்டது. பிரசார கூட்டமும், எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமாரிடம், பிரதமர் வலியுறுத்தினார்.
நான்கு பேர் கைது:மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""குண்டுவெடிப்பு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வெடித்த குண்டுகள் அனைத்துமே, குறைந்த திறனுடையவை. இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை,'' என்றார். இதற்கிடையே, மோடியின் கூட்டம் முடிவடைந்ததற்கு பின், நேற்று மாலையும், பாட்னாவில், ஒரு இடத்தில் குண்டு வெடித்ததால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், குண்டுகள் வெடித்தது, பா.ஜ.,வினரிடையேயும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கானசதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள், பாட்னா விரைந்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர், குண்டு வெடிப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் கூட்டம் ரத்து:பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முங்கர் என்ற இடத்தில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்துக்கு கிளம்புவதற்கு, தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, குண்டுவெடிப்பு குறித்த செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தை ரத்து செய்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
என்.ஐ.ஏ., விசாரணை:குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்கு, தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடினார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், பாட்னாவுக்கு விரைந்தனர். அவர்களுடன், தேசிய பாதுகாப்பு படை வீரர்களும், விரைந்துள்ளனர். இவர்கள், குண்டுகள் வெடித்த இடத்தில், முக்கிய தடயங்களை சேகரிப்பதுடன், விசாரணையையும், மேற்கொள்ளவுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமும், தேசிய புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தவுள்ளனர்.
பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய நகரங்களில், அவர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள், அதிக அளவில் திரளுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில், நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு, அந்த மாநில பா.ஜ.,வினர், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் மூலமாக, பீகாரின் பல பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான பா.ஜ.,வினர், கூட்டம் நடந்த, பாட்னா, காந்தி மைதானத்தில், நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நரேந்திர மோடி, காலை, 10:00 மணிக்கு, பாட்னா வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பரபரப்பு :அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.பொதுக் கூட்டம் நடக்கும், காந்தி மைதானத்திலிருந்து, ரயில்வே ஸ்டேஷன், இரண்டு கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த, 10 நிமிடங்களுக்குள், காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர்ச்சியாக, ஐந்து குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. கூட்டம் நடந்த மைதானத்திலும், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே, பீதி ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில், மொத்தம், ஆறு பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடையூறு இல்லை:ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கூட்டம் நடக்கவிருந்த மைதானம் ஆகிய இடங்களில், வெடிக்காத நிலையில், மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டன. கூட்டம் நடந்த இடத்தில், பரபரப்பும், பீதியும் ஏற்பட்டாலும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கூட்ட மேடைக்கு வந்த பின், அங்கு அமைதி ஏற்பட்டது. பிரசார கூட்டமும், எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமாரிடம், பிரதமர் வலியுறுத்தினார்.
நான்கு பேர் கைது:மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""குண்டுவெடிப்பு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வெடித்த குண்டுகள் அனைத்துமே, குறைந்த திறனுடையவை. இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை,'' என்றார். இதற்கிடையே, மோடியின் கூட்டம் முடிவடைந்ததற்கு பின், நேற்று மாலையும், பாட்னாவில், ஒரு இடத்தில் குண்டு வெடித்ததால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், குண்டுகள் வெடித்தது, பா.ஜ.,வினரிடையேயும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கானசதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள், பாட்னா விரைந்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர், குண்டு வெடிப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் கூட்டம் ரத்து:பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முங்கர் என்ற இடத்தில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்துக்கு கிளம்புவதற்கு, தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, குண்டுவெடிப்பு குறித்த செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தை ரத்து செய்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
என்.ஐ.ஏ., விசாரணை:குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்கு, தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடினார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், பாட்னாவுக்கு விரைந்தனர். அவர்களுடன், தேசிய பாதுகாப்பு படை வீரர்களும், விரைந்துள்ளனர். இவர்கள், குண்டுகள் வெடித்த இடத்தில், முக்கிய தடயங்களை சேகரிப்பதுடன், விசாரணையையும், மேற்கொள்ளவுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமும், தேசிய புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தவுள்ளனர்.
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
பிகாரில் பங்கேற்ற கூட்டத்தில் நடைபெற்ற
குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து
திங்கள்கிழமை (அக்.28) மற்றும்
செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆகிய இரு
நாள்களில் தமிழகம் முழுவதும் கண்டன
போராட்டம் நடைபெறும் என்று அக்
கட்சியின் மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
-
பிகாரில் பங்கேற்ற கூட்டத்தில் நடைபெற்ற
குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து
திங்கள்கிழமை (அக்.28) மற்றும்
செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆகிய இரு
நாள்களில் தமிழகம் முழுவதும் கண்டன
போராட்டம் நடைபெறும் என்று அக்
கட்சியின் மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
-
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
அரசியல் என்றாலே மக்களை பலி வாங்கித்தான் விளம்பரம் என்பது
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
குண்டு வெடித்தும் தைரியமா மேடை ஏறி பேசி இருக்கார்!!!
மேடையில் குண்டு இல்லைன்னு அவருக்கு எப்படி தெரியும்?
மேடையில் குண்டு இல்லைன்னு அவருக்கு எப்படி தெரியும்?
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
மக்கள் என்பவன் தான் உழைத்தால் தான் தன் குடும்பம் பிழைக்கும் எனத் தெரிந்திருந்தும், ஏன் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் பின்னால் ஒடுகிறான்! இப்படிக் கொல்லாமல் ஒட்டு மொத்த கூட்டத்திற்கு வந்தவர்களையும் கொன்றிருந்தால் அடுத்து யாரும் பொதுக்கூட்டங்களின் பக்கமே செல்லமாட்டார்கள்!vishwajee wrote:அரசியல் என்றாலே மக்களை பலி வாங்கித்தான் விளம்பரம் என்பது
இப்போது தொடர்கதையாகிவிட்டது.
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம், அதுபோல் இவர்களே குண்டு வைத்திருந்தால்?amirmaran wrote:குண்டு வெடித்தும் தைரியமா மேடை ஏறி பேசி இருக்கார்!!!
மேடையில் குண்டு இல்லைன்னு அவருக்கு எப்படி தெரியும்?
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
அன்சாரி எழுதி வைத்திருந்த செல்போன் நம்பர்கள் துப்பு துலக்க உதவியது: சதி திட்டம் முழுமையாக கண்டுபிடிப்பு!
மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பை நடத்திய தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியின் கவனக்குறைவே நேற்று பீகார் போலீசாருக்கு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.
ரெயில் நிலையத்தில் குண்டு வைக்கும் பொறுப்பு இம்தியாஸ் அன்சாரி என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவன் மொத்தம் 3 குண்டுகளை எடுத்து வந்திருந்தான்.
குண்டு வைக்க செல்லும்போது யாரும் செல்போனை எடுத்துச் செல்லக்கூடாது என்று இந்தியன் முஜாகிதீன் மூத்த தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் அன்சாரி தன் கூட்டாளிகள் சுமார் 12 பேர் பெயரையும் அவர்களது செல்போன் நம்பர்களையும் ஒரு தாளில் எழுதி மடித்து தன் சட்டை பைக்குள் வைத்திருந்தான்.
அவன் 2 குண்டுகளை வைத்துவிட்டு 3–வது குண்டை வைப்பதற்காக ரெயில் நிலையத்தின் மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தான். அதற்குள் முதல் குண்டு வெடித்துவிட்டதால் ரெயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டு, பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓட தொடங்கினார்கள்.
உடனடியாக போலீசார் ரெயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். இதனால் கையில் 3–வது குண்டை வைத்திருந்த அன்சாரிக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடினான்.
ஆனால் போலீசார் அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவனிடம் வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவனை முழுமையாக சோதனையிட்டனர்.
அவன் எழுதி வைத்திருந்த அவனது கூட்டாளிகளின் பெயர், செல்போன் விவரம் அடங்கிய தாளை போலீசார் எடுத்தனர். இதுதான் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முழுமையாக அம்பலப்படுத்தவும், துப்பு துலக்கவும் பெரிதும் கை கொடுத்தது.
முக்கியமாக குண்டு வெடிப்பை திட்டமிட்டு நடத்தியது முகம்மது தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி என்பது தெரிய வந்துள்ளது. இவன் 2011–ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிலும், இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன்.
இவன் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தோற்று வித்த யாசீன் பத்கலின் வலதுகரமாக திகழ்ந்தவன் ஆவான். இப்போது இவன்தான் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துக்கு தலைமையேற்று நடத்தி வருகிறான்.
கடந்த ஆகஸ்டு மாதம் பத்கல் போலீசாரிடம் பிடிபட்டான். அதற்கு பழிக்கு பழி வாங்கவே அக்தர் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக தெரிகிறது.
அக்தர் பாட்னாவில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அக்தருக்கு மேஈனு என்றும் ஒரு பெயர் உண்டு. இவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன்.
அவன் உள்பட 12 முக்கிய தீவிரவாதிகளின் செல்போன் நம்பர்கள் அன்சாரி மூலம் கிடைத்திருப்பதால் அதை வைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 12 தீவிரவாதிகளும் கடந்த ஒரு வாரத்தில் யார்– யாருடன் பேசி இருக்கிறார்கள் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு போலீசார் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பான முழு தகவல்களும் ஓரிரு நாட்களில் வெட்ட வெளிச்சமாக வாய்ப்புள்ளது.
malaimalar
மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பை நடத்திய தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியின் கவனக்குறைவே நேற்று பீகார் போலீசாருக்கு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.
ரெயில் நிலையத்தில் குண்டு வைக்கும் பொறுப்பு இம்தியாஸ் அன்சாரி என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவன் மொத்தம் 3 குண்டுகளை எடுத்து வந்திருந்தான்.
குண்டு வைக்க செல்லும்போது யாரும் செல்போனை எடுத்துச் செல்லக்கூடாது என்று இந்தியன் முஜாகிதீன் மூத்த தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் அன்சாரி தன் கூட்டாளிகள் சுமார் 12 பேர் பெயரையும் அவர்களது செல்போன் நம்பர்களையும் ஒரு தாளில் எழுதி மடித்து தன் சட்டை பைக்குள் வைத்திருந்தான்.
அவன் 2 குண்டுகளை வைத்துவிட்டு 3–வது குண்டை வைப்பதற்காக ரெயில் நிலையத்தின் மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தான். அதற்குள் முதல் குண்டு வெடித்துவிட்டதால் ரெயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டு, பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓட தொடங்கினார்கள்.
உடனடியாக போலீசார் ரெயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். இதனால் கையில் 3–வது குண்டை வைத்திருந்த அன்சாரிக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடினான்.
ஆனால் போலீசார் அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவனிடம் வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவனை முழுமையாக சோதனையிட்டனர்.
அவன் எழுதி வைத்திருந்த அவனது கூட்டாளிகளின் பெயர், செல்போன் விவரம் அடங்கிய தாளை போலீசார் எடுத்தனர். இதுதான் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முழுமையாக அம்பலப்படுத்தவும், துப்பு துலக்கவும் பெரிதும் கை கொடுத்தது.
முக்கியமாக குண்டு வெடிப்பை திட்டமிட்டு நடத்தியது முகம்மது தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி என்பது தெரிய வந்துள்ளது. இவன் 2011–ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிலும், இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன்.
இவன் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தோற்று வித்த யாசீன் பத்கலின் வலதுகரமாக திகழ்ந்தவன் ஆவான். இப்போது இவன்தான் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துக்கு தலைமையேற்று நடத்தி வருகிறான்.
கடந்த ஆகஸ்டு மாதம் பத்கல் போலீசாரிடம் பிடிபட்டான். அதற்கு பழிக்கு பழி வாங்கவே அக்தர் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக தெரிகிறது.
அக்தர் பாட்னாவில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அக்தருக்கு மேஈனு என்றும் ஒரு பெயர் உண்டு. இவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன்.
அவன் உள்பட 12 முக்கிய தீவிரவாதிகளின் செல்போன் நம்பர்கள் அன்சாரி மூலம் கிடைத்திருப்பதால் அதை வைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 12 தீவிரவாதிகளும் கடந்த ஒரு வாரத்தில் யார்– யாருடன் பேசி இருக்கிறார்கள் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு போலீசார் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பான முழு தகவல்களும் ஓரிரு நாட்களில் வெட்ட வெளிச்சமாக வாய்ப்புள்ளது.
malaimalar
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
இந்த தீவிரவாதிகளை சிறையில் அடைக்க கூடாது.மாறாக பாகிஸ்தானிலோ,ஆப்கானிஸ்தனிலோ வசிக்கும்படி செய்ய வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் அருமை புரியும்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
இது சரியான தண்டனையாக இருக்கும் செய்வார்களா?டார்வின் wrote:இந்த தீவிரவாதிகளை சிறையில் அடைக்க கூடாது.மாறாக பாகிஸ்தானிலோ,ஆப்கானிஸ்தனிலோ வசிக்கும்படி செய்ய வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் அருமை புரியும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|