புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
81 Posts - 67%
heezulia
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
1 Post - 1%
viyasan
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
273 Posts - 45%
heezulia
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
18 Posts - 3%
prajai
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_m10 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Oct 14, 2013 4:41 am

[url=http://www.eegarai.net/t103041-1]பாகம்-1[/url]
[url=http://www.eegarai.net/t103318-2]பாகம்-2[/url]

இணையத்தில் தமிழ் சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றை கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ் சொல்லாக்கம் பற்றி சற்று சிந்திக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் சொல்லாக்க முறை பழங்காலத்திய சொல்லாக்க முறைகளில் இருந்து முற்றிலும் முரண்பட்டு/ தடம்புரண்டு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அக்கட்டுரையின் ஆசிரியர் அவ்வளவு பிரபலமோ அல்லது தமிழ் சொல்லாக்கத்தை பற்றி நன்கு தெரிந்தவர் என சொல்லவரவில்லை ஆனால் அவர் கூறும் கருத்து உண்மையில் சாதாரண தமிழனின் மனதில் இருக்கும் தமிழ் சொற்களை பற்றிய ஒரு ஏக்கமாக/எண்ணமாக தான் நான் கருதுகிறேன். இதோ அக்கட்டுரையில் இருந்து சில பாகங்கள்

[quote]தமிழில் Cricket என்ற சொல்லை மட்டைப்பந்து என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ஆங்கிலத்தில் cricket என்று புதிய சொல் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், நாம் இருக்கும் பழைய சொற்களையே பயன் படுத்தியுள்ளோம். இன்னொரு உதாரணம், பேருந்து என்னும் சொல். இது பெரிய மற்றும் உந்து என்னும் இரு சொற்களில் இருந்து வந்துள்ளது. இதை வழக்கத்தில் பஸ்சு என்றே நாம் பேசி வருகிறோம். 

பண்டைய தமிழகத்தில் இப்படியொரு நிலை இருந்தால் எப்படியிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். மரம், செடி, கொடிகளைப் பார்த்த தமிழன் மண்ணின் கீழ் உள்ள அவற்றின் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். தண்டு, கிளை, இலை, மலர் போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய அவனது முன்னோர்கள் வேர் என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். முதல் முறையாக அவற்றை மண்ணின் கீழ் பார்க்கும் தமிழன் அவற்றிற்கு 'மண் கீழ் கிளை' என்றா பெயரிட்டான்? வேர் என்னும் ஒரு தனிச் சிறப்பான பெயரைத்தானே சூட்டியுள்ளான்? இப்படிச் செய்தல் சந்தேகமின்றி தமிழின் வளர்ச்சியே. மேலும், மண்ணைத் தோண்டி உழுவதற்கான கருவி தமிழனுக்குப் புதிதாக அறிமுகமாகி, அதற்கு அவன் நிலக்கரண்டி என்றோ மண் கரண்டி பெயரிட்டால் எப்படியிருக்கும்? எனினும், நாம் சிறப்பாக கலப்பை என்னும் பெயரைத்தானே கொண்டுள்ளோம்? [/quote]
மேலே சொன்ன கருத்துக்களை தான் நானும் இந்த தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வருகிறேன். புதியகண்டுபிடிப்புகள், நுட்பங்கள், பொருட்கள், கருவிகள், கருத்துக்கள், செய்முறைகள் என வரும் போது அவைகளுக்கு தயவு செய்து புதிய சொற்களை தான் உருவாக்க வேண்டும், ஒவ்வொருவரும் புது வரவுகளுக்கு ஒவ்வொரு முறையில் பொருள் கொண்டு இருக்கும் இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து சொல்லாக்கம் செய்வது நம்முடைய திறமையின்மையை தான் காட்டுகிறது.

அப்படியே சில தமிழ் அறிஞர்கள் சிரத்தையுடன் ஆர்வமுடன் பழங்காலத்திய சொல்லாக்க முறையில் அழகாக சொற்களை உருவாக்கி கொடுத்தாலும் அந்த சொற்களை அப்படியே நிராகரிப்பது, அச்சொல்லை ஊடகங்களில் பயன்படுத்த ஊடகத்தார் மறுப்பது, இந்த சொல் யாருக்கும் புரியாது என சப்பை கட்டு கட்டுவது அல்லது அதை கண்டுகொள்ளது விட்டுவிடுவது என அந்த சொல்லாக்க அறிஞரை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு வறுத்தெடுக்கும் பழக்கம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இது நம் இரத்தத்தில் உரிய பழக்கம் அல்லவா எப்படி விடமுடியும்.கிணற்றில் தண்ணியில் இருந்து சுவரில் ஏறும் தவளையை கிழே இழுத்துவிடும் கிணற்று தவளையாக தானே தமிழன் இருக்கிறான்.


ஒரு தமிழ் அறிஞர் என்ற ஆங்கில சொல்லுக்கு முகவு (நகர்வு) என்ற சொல்லை அடிப்படையாக வைத்து முகட்டி, முயத்தர், முயத்தி என அழகாக புதிய சொல் உருவாக்கி கொடுத்தார்.இன்னொரு அறிஞர் விமானம் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என பறனை என்ற சொல்லை உருவாக்கினார்.என்ன நடந்து யாரவது இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் எண்ணம் கொண்டோமா? நான் இங்கு சொல்லும் போது தான் உங்களுக்கே இதுபோன்ற சொற்கள் இருப்பது தெரிய வருகிறது. காரணம் மனமில்லை இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற பிடிவாதம் தான் இன்று தமிழை அழிக்கும் கருவிகளில் ஒன்றாக இணைத்துள்ளது.

தம்பி motor என்றால் என்ன? மின்சாரத்தால் சுத்துவது அல்லது ஓடுவது....அப்படியா அப்போ மின் என்ற சொல்லை தூக்கி முன்னாடி போடு ஓடு என்ற சொல்லை தூக்கி பின்னாடி போட்டு மின்னோடி என்ற புதிய சொல் தயார் , அப்புறம் Transformer, இது மின்சாரத்தை மற்ற உதவும் கருவி அப்போ மின் மாற்றி என்று பெயர் வை, Transformer Coil என்றால் மின் மாற்றி மின் சுருள் என்று பெயர் வை என்று வடிவேல் பெப்சிக்கும், கோக்க கோலவிற்கும் பெயர் வைப்பது போல் தான் சென்று கொண்டுள்ளது நம் சொல்லாக்க லட்சணம். தமிழில் புதிய சொற்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் ஊறிவிட்டது. தமிழுக்கு இன்னொரு பெயர் அழகு, அந்த அழகு தற்போது பின்பற்றும் இதுபோன்ற சொல்லாக்க முறைகளால் பளிரவில்லை மங்கி தான் வருகிறது.  

நான் இந்த தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வரும் கருத்தை ஏற்பது பற்றி சொல்லாக்க ஆர்வலர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடினாலும், இதுவரை இரண்டு/மூன்று சொற்களை மொழிமாற்றி இணைத்தே புதிய சொல் என்று உருவாக்கி வந்த அவர்களுக்கு பழைய முறையை விடுத்து புதிய முறையை பின்பற்றுவது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இவர் யார்? சொல்லும் கருத்து சரிதானே?, இது போன்றதொரு கருத்தை இதுவரை யாருமே சொல்லவில்லையே?, தமிழை பற்றி இவருக்கு என்ன தெரியும்? என பல கேள்விகள் அவர்கள் மனதை ஆக்கிரமிக்கும் என்பது சந்தேகமில்லை.  

நான் வலியுறுத்தும் கருத்துக்கு எவ்வளவு ஆதாரங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுத்தாலும் சொல்லாக்கர்கள்/அறிஞர்கள் முழு மனதுடன் இவர் சொல்வது சரி தான் என்று சொல்ல நா வராது என்பதை நான் அறிவேன், காரணம்

- இதுவரை பின்பற்றி வரும் முறையை தவறு என்று சொல்வது.
- பழகிவிட்ட ஒரு சொல்லாக்க முறையில் இருந்து மாற மனமில்லாதது.
- சொல்லை பார்த்தால் அதன் பொருள் விளங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது.
- எந்த மொழியியல் ஆர்வலர்களும் அறிவுருத்தாத முறை என்பது.
- ஆங்கிலத்தில் உள்ள சொல்லை அப்படியே மொழிமாற்றம் செய்து புதிய சொல் என சொல்லிவிட்டால் அனாவசியமாக யாரும் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்ற எண்ணம்.
- ஆங்கில மொழியிடம் அடிமைபட்டுவிட்ட மனம், இப்படி செய்தால் தமிழ் உருபட்டுவிடுமா என்ற நினைத்து அடங்கிபோவது.
- எல்லாவற்றிக்கும் மேலாகா தமிழை வளர்க்க வேண்டிய அரசே தமிழின் வளர்ச்சியில் அக்கறைகொள்ளாத போது நமக்கு என்னய்யா வீராப்பு வேண்டியிருக்கு என்ற நியமான எண்ணம்.

நான் எந்த ஒரு புது சொல்லாக்க முறைகளையும் உருவாக்கவில்லை, அப்படி உருவாக்க தேவையும் இல்லை. நம் முன்னோர்கள் பின்பற்றிய சொல்லாக்க முறையை நாம் பின்பற்றி அவர்கள் சிறப்புடன் தமிழை நம்மிடம் பத்திரமாக கொடுத்தது போல் நாமும் நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு கொடுக்க என்ன தயக்கம் என்று தான் கேட்கிறேன். பழங்காலத்திய சொல்லாக்க முறையில் இருந்து தடம் மாறி தற்காலத்திய சொல்லாக்கம் செல்வதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என வேண்டுகிறேன். தமிழின் அழகை இதுபோன்றதொரு முறைகளால் பலரும் சேர்ந்து சீரழிக்க வேண்டாம் என ஆசைப்படுகிறேன். உருவாக்கப்படும் புதிய சொற்கள் பேச்சுவழக்கில் வராமல் இருப்பதற்கான  காரணங்களுக்கு இதுபோன்றதொரு சொல்லாக்க முறையும் ஒன்று என கூறுகிறேன். அரசாங்கம் அவர்களின் சமுதாய மதிப்பு குறையும் போது மாட்டுமே தமிழுக்கு தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொண்டு அவர்களின் மதிப்பை உயர்தும் கருவியாக நம்மையும் தமிழையும் பயன்படுத்தும் போது, அவர்களிடம் இருந்து தமிழுக்கு ஏதேனும் நல்லது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது. வேண்டுமென்றால் உலக தமிழ் மாநாடு மட்டும் நடக்கும். நான் அறிவுறுத்தும் கருத்துக்களில் பழங்காலத்திய சொல்லாக்க முறைகளை பற்றிய சொல் பகுப்பு ஆதாரங்களை கட்டுரை பாகம்-2 இல் அட்டவனைபடுத்தியுள்ளேன். மேலும் சில சொற்களை இங்கு கொடுக்கிறேன்.

எக்காளம் = எக்கு(பெரிய) + காளம்(சப்தம்) -- பெரிய சப்தம்
மின்சாரம் = மின் + சாரம் (சக்தி)--மின் ஆற்றல்
கோடாரி = கோடல்(உடைத்தல்) + அரி(பிள-த்தல்)--உடைத்து பிளக்கும் கருவி
தக்கை = தக்க(தகுந்த) + கை (Bar) --- தகுந்த பாகம் (Suitable Piece)
சுளகு(முறம்) = சுள்(மென்மை) + உ -- மெல்லிய தானியத்தை பிரிக்கும் பொருள்
ஊரா (ஊர்பசு) = ஊர் + ஆ (பசு) -- ஊருக்கு பொதுவான பசு
கடப்பாரை = கடப்பு + ஆரை (அச்சு மரம்) பொருளை கடத்த உதவும் கை மரம் (Bar)

தமிழ் சொற்கள் வளத்தில் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பை விட சாதாரண மக்களின் பங்களிப்பே முதன்மையானது. அவர்கள் தான் பெருவாரியான தமிழ் சொற்களை தமிழுக்கு அளித்து தமிழை வளப்படுத்தி வரும் முதன்மை அறிஞர்கள். அந்த பங்களிப்பு எப்போது ஆங்கிலம் அவர்களை தாக்க தொடங்கியதோ அப்போதே முற்றிலும் நின்று போய் விட்டது. அப்படி என்ன நமக்கு தெரியாத சொல்லாக்கம் செய்து விட்டான் இந்த படிக்காத கிராமத்துக்காரன்.கிராமத்தில் தான் தமிழ் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு புதிய பொருட்களுக்கும் தமிழில் எதாவது ஒரு பெயர் கொண்டு அழைக்கும் முதல் நபர்களும் அவர்கள் தான் அந்த பெயரை-சொல்லை தமிழில் இணைப்பதும் அவர்கள் தான். சொல்லபோனால் வேறுமொழி சொற்களை பயன்படுத்துவதை குற்ற உணர்வுடன் பார்க்கும் அந்த உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்கள் அவர்கள் தான். Soap என்பதை சவக்கார கட்டி என்று அழைக்கும் அந்த தமிழ் உணர்வு இப்போது அண்மைகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர்களின் தமிழ் பங்களிப்பு முற்றிலும் சுழியமாகி விட்டது. இருப்பினும் தமிழ் சொல்லாக்க முறைகளுக்கு உண்மையான ஊற்றுகண் கிராமங்கள் தான். எப்படி இதோ எடுத்துக்காட்டுடன்...

விவசாயத்தில் பயிருடன் சேர்ந்து வளரும் களையை நீக்க பயன்படும் கருவிக்கு களை கொத்தி என்று பெயர். இது கிராமப்புறங்களில் களாத்தி என்றே அழைக்கப்படுகிறது. இந்த சொல் எப்படி உருவானது? பேசும் வழக்கில் களை என்ற சொல்லில் இருக்கும் 'ஐ' எனும் உயிர் ஒலியும் கொத்தி எனும் சொல்லில் இருக்கும் 'ஒ' எனும் உயிர் ஒலியும் மங்கி களாத்தி என்ற புதிய சொல் உருவாகியுள்ளது.

- பேச்சு வழக்கில் களை கொத்தி என்று நாக்கு அழைக்க மறுப்பது ஏன்?
- பேச ஏதுவாக களை கொத்தி களாத்தியானது ஏன்?
- களாத்தி என்ற சொல் மற்றவர்களுக்கு பொருள் (தெரியாதவர்களுக்கு) புரியும்படி அமையாதது ஏன்?

சற்று சிந்தித்து பாருங்கள், இதற்கு பெயர் தான் சான்றுடன் கூடிய இயற்கையான சொல்லாக்க முறை. இது போன்ற சொல்லாக்க முறைகளும் தான் தமிழுக்கு அந்த காலத்தில் இருந்தே கிராமங்கள் அளித்துவரும் பங்களிப்பு.இந்த இயற்கையான சொல்லாக்க முறை தத்துவம் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இப்போது புரிகிறதா நான் ஏதும் புதிதாக சொல்லவில்லை என்று. இந்த சொற்களை தான் நம் இலக்கண நூல்கள் உரிச்சொல் என்ற அடைவுக்குள் கொண்டுவருகின்றன. எப்படி வந்தன என்றால் கூறமுடியாத சொற்கள் தான் உரிச்சொற்கள்.

இதில் களாத்தி என்பது புதிய சொல், களை கொத்தி என்பது விளக்க உரை/சொல் எனலாம். ஆனால் நம்முடைய சொல்லாக்கர்கள் விளக்க உரை/சொல் தான் புது சொல் என்று உருவாக்கி வருகின்றனர்.

மேலும் சில சொற்களை ஆதாரமாக வைக்கிறேன்.  

வாப்பட்டி = வாய்பெட்டி = வாய் + பெட்டி --- தானியங்கள் சிதறாமல் இருக்க உரலின் வாயில் வைக்கப்படும் கூம்பு பெட்டி
சீயக்காய் = சிகைக்காய் = சிகை + காய் --- தலைகுளிக்கும் போது அழுக்கு நீக்கும் ஒருவகை பொடி
வந்தாச்சு = வந்தாயிற்று = வந்து + ஆயிற்று --- வந்து விட்டேன் எனும் வினையை குறிக்கும் சொல்.
செஞ்சுட்டு = செய்துவிட்டு = செய்து + விட்டு ---- முடிந்து விட்டது எனும் வினையை குறிக்கும் சொல்.
எப்பவும் =  எப்பொழுதும் = எந்த + பொழுதும் ---- எந்த நேரமும்
வந்திடு = வந்துவிடு = வந்து + விடு ---- வந்து விடு எனும் வினையை குறிக்கும் சொல்.
மம்மட்டி = மண்வெட்டி = மண் + வெட்டி ---- மண்ணை வெட்ட பயன்படும் கருவி
கறுக்கருவால் = கதிர் + அறுக்கும் + அருவாள் = கதிர் + அருவாள் ---- நெற்கதிரை அறுவடை செய்யும் கை கருவி
வியக்கூர் = வியர்கூர் = வியர்வை + கூர் ---- ஒருவகை தோல் ஒவ்வாமை
உலக்கை = உரல்கை =  உரல் + கை (bar) ---- உரலில் தானியத்தை குத்த பயன்படும் கம்பு
கலப்பை =  கலக்கை = கலக்கும் + கை --- மண்ணை கலக்க பயன்படும் கருவி
விளையாட்டு = வினையாட்டு = வினை + ஆட்டு ----வினையை கொண்டு ஆட்டம்
பிரண்டை = பிரண்டு = பிரல் + தண்டு ---  பிரல் வகை தண்டு கொடி

மேலே உள்ள சொற்கள் சிலவற்றை (வந்தாச்சு, செஞ்சுட்டு, எப்பவும், வந்துடு) நாம் கொச்சை சொற்கள் என சொல்வதுண்டு. அவை கொச்சை சொற்கள் அல்ல, தற்கால பேச்சு வழக்கிற்கு ஏற்ப உருவான புதிய சொற்கள் என்று சொல்வது தான் சரி.

இதுபோன்ற கருத்தை வலியுறுத்தும் நீங்கள் எதாவது புதிய சொற்களை உருவாக்கி வைத்துள்ளீர்களா என்று கேட்பது எனக்கும் கேட்கிறது. நிச்சயம் நிறைய புது சொற்களை உருவாக்கி வைத்துள்ளேன், அடுத்த பதிவில் பார்க்கலாம்.


தொடரும்......

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Oct 14, 2013 4:46 am

பதிவு நீட்சிகள் எதுவும் வேலை செய்யவில்லை தல புன்னகை 

சும்மா அப்படியே அள்ளி தான் போட்டுள்ளேன். சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 14, 2013 5:07 am

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) 103459460 

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Oct 14, 2013 7:01 am

விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்... பகிர்வுக்குப் பாராட்டுகள்...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 14, 2013 9:22 am

அப்படியே சில தமிழ் அறிஞர்கள் சிரத்தையுடன் ஆர்வமுடன் பழங்காலத்திய சொல்லாக்க முறையில் அழகாக சொற்களை உருவாக்கி கொடுத்தாலும் அந்த சொற்களை அப்படியே
நிராகரிப்பது, அச்சொல்லை ஊடகங்களில் பயன்படுத்த ஊடகத்தார் மறுப்பது, இந்த சொல் யாருக்கும் புரியாது என சப்பை கட்டு கட்டுவது அல்லது அதை கண்டுகொள்ளது விட்டுவிடுவது என அந்த சொல்லாக்க அறிஞரை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு வறுத்தெடுக்கும் பழக்கம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இது நம் இரத்தத்தில் உரிய பழக்கம் அல்லவா எப்படி விடமுடியும்.கிணற்றில் தண்ணியில் இருந்து சுவரில் ஏறும் தவளையை கிழே இழுத்துவிடும் கிணற்று தவளையாக தானே தமிழன் இருக்கிறான்.
இன்றைய  தமிழின் நிலையும்  இப்படிதான்  உள்ளது  ,

இதுபோன்ற கருத்தை வலியுறுத்தும் நீங்கள் எதாவது புதிய சொற்களை உருவாக்கி வைத்துள்ளீர்களா என்று கேட்பது எனக்கும் கேட்கிறது. நிச்சயம் நிறைய புது சொற்களை உருவாக்கி வைத்துள்ளேன், அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான்  கேட்டது  உங்களுக்கு  கேட்டு விட்டதா  ? சரி  அடுத்த  பதிவில் அந்த  சொற்களை பதிவிடுங்கள் நானும்  தெரிந்துகொள்கிறோம் .



[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Oct 14, 2013 10:00 am

நிச்சயம் பூவன் வரும் பதிவுகளில் புது சொற்களை பதிகிறேன். நான் உருவாக்கி விட்டதால் இனி அந்த சொற்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று பொருள் இல்லை, தமிழ் ஆர்வலர் ஐயா ராம்கி போன்றோர் எற்கனவே இதுபோன்ற முறையில் உருவாக்கிய நிறைய சொற்களை தமிழ் உலகம் பய்ன்படுத்த முன்வர வேண்டும் என்பது தான் என் ஆசை. motor என்ற ஆங்கில சொல்லுக்கு முயத்தி, முகட்டி என்று சொல்லாக்கம் செய்தவர் அவர் தான். இது மட்டும் இல்லை நிறைய உள்ளது அதைபற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 11:41 am

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) 3838410834  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) 103459460 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 11:44 am

பூவனா அது. பூவன் அண்ணா எப்படி இருக்கீங்க? நலமா? புதிய தமிழ் சொற்களை பயன்படுத்த தயங்கும் பத்திரிக்கைகளை என்ன செய்வது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 29, 2013 8:22 pm

 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) 103459460  தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3) 3838410834 

தேடிப் படிக்கும் பதிவுகளில் சிலவற்றில் உங்களின் பதிவு மிக முக்கியமானது. தமிழ் ஆர்வர்கள் பலரும் களமிறங்கி கருத்துகளை முன் வைத்து விவாதித்து தமிழை வளர்க்க வேண்டும்..

உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்

எந்த மொழியிலும் பெரும்பாலான சொற்களை நடைமுறைப் பேச்சு தான் வளர்க்கிறது. மொழியறிஞர்கள் இவற்றை தொகுக்க, வகுக்க, பகுக்கத் தான் பாடுபட்டுள்ளனர். சொற்கள் பழைய சொற்களின் இருந்து தான் பிறக்கிறது. இன்றைய தலைமுறை சிலாகிக்கும் பேஸ்புக், twitter போன்ற சொற்கள் ஏற்கனவே இருந்த ஆங்கில சொற்களில் இருந்து தான் பிறந்துள்ளது. மண் வெட்டியும் இப்படித் தான். இந்நிலையில் இருக்கும் சொல் இல்லாமல் புதிய சொல் உருவாகும் பொழுது அது பிரபலம் அடைவ்து சற்று கடினமே....அனைத்து மொழிகளுக்கும் இது பொருத்தும். மலாய் மொழி வளரும் பொழுதும், அமெரிக்க ஆங்கிலம் வளரும் பொழுதும் ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களில் எழுத்துப் பிழை (மாற்றம்) செய்து அம்மொழி சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மொழியாளர்கள் இதையே பெரும் சிறப்பென பேசி வருகின்றனர்.. ஆனால் தமிழில் பல்லாயிரம் வார்த்தைகள் பன்னெடுங்காலம் முன்பே வழக்கில் இருந்துள்ளது. ஒரு சொல்லை உருவாக்கும் பொழுது அச்சொல்லின் பொருள் உணர்த்தும் சொற்கள் இங்கிருப்பின் அவற்றை கொண்டு தான் அது உருவாகும். சோப்பை, சவுக்காரம் என்று அழைப்பது சவுக்காரம் என்ற பொருள் துணி வெளுக்கும் வண்ணார்கள் பயன்படுத்தபட்ட ஒரு வேதிக்கட்டி. புதிய சொல்லல்ல. புதிதாக பல் சொற்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. கணினி, இணையம், கைபேசி போன்றவை. இவற்றை ஆராய்ந்தால் இங்கு இருந்த சொல்லில் இருந்து தான் அது பிறந்துள்ளது என்பதை அறியலாம். நீங்கள் பட்டியலிட்ட பெரும்பாலான சொற்கள் இப்படித் தான் உருவாகி உள்ளது..மம்மட்டி சரி ஆனால் கைபேசி சரியில்லை என்று சொல்ல விழைவது சிறப்பாகாது.

இந்நிலையில் ஒரு புறம் புதிய சொற்கள் உருவாக இருக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்றும், மறு புறம் அவற்றை நியாப்படுத்த இருக்கும் சொல்லில் இருந்து பிறந்து, வளர்ந்து, சுருங்கிய சொற்களை உதாரணமாக முன் வைக்கும் பொழுது சொற்களை எப்படி உருவாக்க வேண்டும் என்ற குழப்பம் தான் மிஞ்சுகிறது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:37 pm

அருமையானா பதிவு.............



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக