ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி

3 posters

Go down

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி Empty விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி

Post by சிவா Sat Oct 26, 2013 8:54 am



சென்னை:”தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியார் தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் நேற்று கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, கடந்த இரு ஆண்டுகளில், மேட்டூர் அனல் மின் திட்டத்தில், 600 மெகாவாட் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டதால், 500 மெகவாட் மின்சாரம் தற்போது கிடைக்கிறது. அதேபோல், வடசென்னை அனல் மின் திட்டத்தின், இரண்டாவது அலகும் விரைந்து முடிக்கப்பட்டு, 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. விரைவில், இந்த உற்பத்தி, 600 மெகாவாட்டை எட்டும்.

வல்லூர் மின் திட்டம் முடிக்கப்பட்டு, 1,700 மெகாவாட் கிடைக்கிறது. இத்திட்டங்கள் தவிர, பிற மாநிலங்களிலிருந்து மூன்றாண்டுகளுக்கு, 500 மெகாவாட் மின்சாரம் ஜூன் மாதம் முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில், 1,000 மெகாவட் மின்சாரத்தை சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய, ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வர, வழித் தடங்களை அமைக்கும் வேலையில், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் முதல் கர்நாடகம் ரெய்சூர் வரை, 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.இப்பணிகள், 2014ம் ஆண்டு முடிவடையும். இதன்மூலம், கொள்முதல் செய்யும் மின்சாரத்தை முழுமையாகப் பெறமுடியும். தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்த காரணத்தால், நீர்மின் உற்பத்தி முழு அளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என, வானிலை மையம் கூறியுள்ளதால், மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். அக்., 1ம் தேதி, இதுநாள் இல்லாத வகையில், உச்ச மின் தேவையான, 12,118 மெகாவாட் மின்சாரத்தை மின் வாரியம் பூர்த்தி செய்துள்ளது.

மின்வெட்டை படிப்படியாகக் குறைக்கும் வகையில், உயரழுத்த ஆலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, பிற நேரங்களில் மின் வெட்டு, 40 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோகங்களுக்கு, சென்னையில் இரண்டு மணி நேரம், பிற பகுதிகளுக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தாலும், "மின்வெட்டே இல்லை' என்பது தான் யதார்த்த நிலை. மின் தட்டுப்பாடு விரைவில் நீங்கி, தங்கு தடையின்றி அனைத்துத் தரப்பினருக்கும் விரைவில் மின்சாரம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'திவாலான மின் வாரியத்தை மீட்டுள்ளோம்':

திவாலாகும் நிலைமையிலிருந்து, மின் வாரியத்தை காப்பாற்றியுள்ளோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், மின் நிலைமை குறித்த, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், மின் துறையை பாழ்படுத்தி, திவாலாகும் நிலைக்கு ஆக்கிவிட்டனர். 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடனையும் மின் வாரியத்துக்கு ஏற்படுத்தி விட்டனர். தமிழக மின் வாரியத்துக்கு கடன் கொடுக்கக் கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவும் போட்டது; இதனால், நானும் கவலைப்பட்டேன். ஆனால், இதை ஒரு சவாலாக எடுத்து, மின் வாரியத்தின் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த, அரசே பொறுப்பேற்று, கடன் முழுவதையும் அடைக்கும் அளவிற்கு நிலைமையை மாற்றியுள்ளோம். எனவே, "தமிழகம் மின் பற்றாக்குறையிலிருந்து மீளுமா' என, இனி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. மின் பற்றாக்குறையை, 99 சதவீதம் தீர்த்து விட்டோம். இன்னும், 1 சதவீதம் தான் குறை உள்ளது; அதையும், இந்தாண்டு இறுதிக்குள் தீர்த்து விடுவோம்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

மத்திய அரசு மறுப்பு; ஜெ., புகார்:

""தூத்துக்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலைய நிலத்துக்கு, அனுமதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது; இதனால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்,'' என, முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.சட்டசபையில், மின் நிலைமை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அவர் பேசியதாவது:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து, தூத்துக்குடியில், 500 மெ.வா., திறனில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தை, தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்துக்காக, வ.உ.சி., துறைமுகத்திடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலைத்தை, காடுகள் என, வருவாய்த் துறை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. அதை மறுவகைப்படுத்த, மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை.இதனால், நிலத்தை மறுவகைப்படுத்த, சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகியுள்ளது. "நியாயமாக மக்களுக்கு, பயனளிக்கக் கூடிய மின் திட்டத்துக்கு, நிலத்தை வகைப்படுத்திக் கொடுங்கள்' என, மத்திய அரசைக் கேட்டால், காங்கிரஸ் தலைமையில் செயல்படும் மத்திய அரசு, அனுமதி தர மறுக்கிறது.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி Empty Re: விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி

Post by ayyasamy ram Sat Oct 26, 2013 9:01 am


'திவாலான மின் வாரியத்தை மீட்டுள்ளோம்':...
-
ஏன் மீட்க முடியாது..?
-
200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால்
செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 320 மட்டுமே
-
அதுவே 230 யூனிட்டாக இருந்தால் செலுத்த வேண்டிய
கட்டணம் ரூ 520 ஆகும்...
-
இப்படி கட்டண முறையை அமைத்துக் கொடுத்த
புத்திசாலி அதிகாரிகளுக்கு பரிசு கொடுத்து
ஊக்குவித்தாலை நலம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி Empty Re: விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி

Post by N.S.Mani Sat Oct 26, 2013 9:08 am

முன்பு கன்று வைத்து, வளர்த்த மரங்களிளிருந்து பழங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து பழங்கள் கிடைக்க இப்பொழுதும் அதிக கன்றுகள் நட ஆவான செய்வதற்கான ஆக்க பூர்வ செயல்களையும் எதிபார்க்கிறோம்..
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி Empty Re: விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம் - சட்டசபையில் ஜெ., உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum