புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:44 am

தமிழ் இலக்​கி​யப் பாக்​கள் அனைத்​துமே முக்​க​னி​யின் சாறு பிழிந்து புனை​யப்​பட்​ட​வையோ என எண்​ணும் வகை​யில்,​​ படிக்​குந்​தோ​றும் இன்​பம் பயப்​பவை;​ நினைக்​குந்​தோ​றும் நெஞ்​சத்தை குளிர் சார​லால் நனைப்​பவை.​
வி​த​வி​த​மான கனி​கள் விளைந்​தா​லும் "முக்​கனி' என தமி​ழர்​க​ளால் சிறப்​பிக்​கப்​பெற்​றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்​றி​லும்,​​ இலக்​கி​யத் தோட்​டங்​க​ளில் அதி​கம் கனிந்து மணம் வீசி,​​ வாச​கனை வாச​னை​யா​லும்,​​ சுவை​யா​லும் சுண்டி இழுப்​பது பலாக்​க​னி​தான்.​

ம​னித மனத்தை குரங்​கு​டன் ஒப்​பி​டு​வது வழக்​கம்.​ குரங்கு மனத்தை எத​னு​டன் ஒப்​பி​டு​வது?​ அரு​வி​யின் இக்​க​ரை​யில் நிற்​கி​றது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அரு​வி​யைக் கடந்து அக்​க​ரைக்​குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்​கள் அடர்ந்த காடு என்​றால் மந்​திக்​குக் கேட்​கவே வேண்​டாம்.​ இங்கோ,​​ இடை​யில் தடுப்​பது தண்​ணீர்க் காடு!​


அப்​போது,​​ பறிப்​பார் இல்​லா​மல் முற்​றிய பலாக்​கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்​த​படி வரு​கி​றது.​ அரு​வி​யில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்​ப​ழத்​தின் மீதேறி அமர்ந்து கொள்​கி​றது.​ மலைச்​சார​லில் உள்ள ஓர் ஊரின் பக்​க​மா​கச் சென்று வீழும் அரு​வி​யின் துறையை அடைந்​த​தும் பலாப்​ப​ழத்தி​லி​ருந்து இறங்​கிச் செல்​கி​றது மந்தி.​

பசி நீக்​கும் உண​வுப் பொரு​ளான பலா பட​கா​கி​விட்​டது.​ அரு​வி​யைக் கடந்து செல்ல உத​வி​ய​தால் "பலா'க்க​னியை "பால'க்கனி என்றே அழைக்​க​லாம் எனத் தோன்​று​கி​ற​தல்​லவா!​​

அரு​வி​பாய்ந்த கரு​வி​ரல் மந்தி
செழுங்​கோட் பல​வின் பழம்​புணை யாகச்
சாரல் பேரூர் முன்​துறை இழி​த​ரும்...​
​(பா..382,​ வரி​கள் 9}11)


என,​​ தலை​வ​னின் நாட்டு வளத்​தைக் கூறும் தலை​வி​யின் கூற்​றா​கத் தொடர்​கி​றது,​​ கபி​ல​ரின் அந்த அக​நா​னூற்​றுப் பாடல்.​ அந்த மந்​தி​யைப்​போ​லவே,​​ தலை​வ​னும் தான் மேற்​கொண்ட செய​லில் எத்​த​கைய இடை​யூ​று​கள் வந்​தா​லும் அவற்​றைத் தக்க வழி​க​ளில் தகர்த்​தெ​றிந்து தன்னை வந்​த​டை​வான் என மறை​மு​க​மா​கக் குறிப்​பி​டு​கி​றாள் தலைவி.​
த​லை​வ​னின் மலை நாட்டு வளத்​துக்கு மட்​டு​மல்ல,​​ தலை​வி​யின் மன வளத்​தைச் சோதிக்​கும் காமத்​தின் பாங்​கை​யும் பளிங்​கென உவ​மை​யாக்க பலாக்​க​னி​யால் முடி​யும்.​

உ​யிரோ மிகச் சிறி​யது.​ கண்​வழி புகுந்து நெஞ்​சில் வேரோடி உயி​ரெ​லாம் பட​ரும் காமமோ மிகப் பெரி​யது.​ அர​சன் அன்று கொல்​வான்;​ தெய்​வம் நின்​றும் கொல்​லும் என்​பார்​கள்.​ காமமோ என்​றும் கொல்​லும்.​ காதல் பார்​வை​யா​லும்,​​ கனிந்த மொழி​க​ளா​லும் தலை​வி​யின் இத​யத்​தைக் கடத்​தி​ய​வன்,​​ இப்​போது திரு​ம​ணம் செய்​யா​மல் காலத்​தைக் கடத்​து​கி​றான்.​ சித்​திர விழி​யாள் சில நாள் பொறுக்​க​லாம்,​​ ஆனால்,​​ நாள்​கள் மாதங்​க​ளா​கி​விட்ட பின்​பும் மண​நாள் குறித்து எவ்​வித அறி​கு​றி​யை​யும் காண்​பிக்​க​வில்லை அவன்.​ எப்​ப​டிப் பொறுப்​பாள்?​

கூ​டா​ரத்​துக்​குள் நுழைந்த ஒட்​ட​கத்​தின் கதை​யாக,​​ காமம் தலை​வி​யின் உயிரை வதைக்​கி​றது.​ அதை,​​ அவ​ளது தலை​வ​னி​டம் சொல்ல வேண்​டிய இக்​கட்​டுக்கு உள்​ளா​கி​றாள் இன்​னு​யிர்த் தோழி.​ தோழி​யும் பெண்​தானே!​ நேர​டி​யாய்ச் சொல்ல அந்த நேரி​ழை​யா​ளுக்கு நெஞ்​சில் துணி​வேது?​ உவ​மை​யால் உணர்த்த நினைக்​கி​றது இத​யம்.​

ம​லைத்து நிற்​கும் அவள் பார்​வை​யில்,​​ மலை​யில் வளர்ந்​தி​ருக்​கும் பலா மரங்​கள் தென்​ப​டு​கின்​றன.​ அவற்​றில் உள்ள மெல்​லிய கொம்​பு​க​ளில் மிகப் பருத்த பலாக் கனி​கள் முற்​றித் தொங்​கு​வ​தைப் பார்க்​கி​றாள் தோழி.​ பலாக் கனி​யைத் தாங்​கும் மெல்​லிய கொம்​பின் பரி​தாப நிலை​யைச் சொல்லி,​​ தலைவி துன்​பம் நீங்கி,​​ இன்​பம்​பெற வேண்​டு​மா​னால் உடனே அவ​ளைத் திரு​ம​ணம் செய்​து​கொள் என்​கி​றாள் தோழி,​​ தலை​வ​னி​டம்.​

வேரல்வேலி வேர்​கோட் பல​வின்
சாரல் நாட செவ்​வியை ஆகு​மதி
யார் அத​றிந்​திசி னோரே?​ சாரல்
சிறு​கோட்​டுப் பெரும்​ப​ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்​த​வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)


என,​​ காமத்​தின் தன்​மையை "குறுந்​தொகை'யில் தோழி​யின் கூற்​றாக,​​ சுளைப்​பலா உவ​மை​யால் சுவை​ப​டச் சொல்​ப​வர் வேறு யாரு​மல்​லர்,​​ குறிஞ்​சிக் கவி​ஞர் கபி​ல​ரே​தான்.​

க​டை​யெழு வள்​ளல்​க​ளில் ஒரு​வன் பொதிகை மலை​யில் பொன்​னாட்சி தந்த ஆய் என்​ப​வன்.​ பகை​வர் எதிர்த்து நின்​றால் அவர்​க​ளின் தலை​களை அவன் கரங்​கள் கிள்ளி எடுக்​கும்;​ பரி​சில் பெற வரு​வோ​ருக்கோ அவன் கரங்​கள் பொருள்​களை அளக்​கா​மல் அள்​ளிக்​கொ​டுக்​கும்.​

வீ​ர​மும் ஈர​மும் ஒரு கொடி​யில் மலர்ந்த மலர்​க​ளாய் மணம் வீசு​வ​தைத் தமி​ழக மன்​னர்​க​ளி​டம் மட்​டுந்​தான் அதி​கம் காண முடி​யும்.​ அதற்கு ஆயும் விதி​வி​லக்​கல்​லன்.​

அ​வ​னி​டம் பரி​சில் பெற்​றுச் செல்​வ​தற்​காக கூத்​தர்​கள் சிலர் அவனை நாடி வரு​கின்​ற​னர்.​ அவ​னது எல்​லைக்​குள்​பட்ட மலைக்​கா​டு​க​ளின் வழியே வரும் அவர்​கள் இளைப்​பா​றும் பொருட்டு தங்​கள் தோள்​க​ளிலே சுமந்​து​வந்த மத்​த​ளங்​களை பலா​ம​ரத்​தின் கிளை​க​ளில் மாட்​டித் தொங்​க​விட்​டுள்​ள​னர்.​

மந்தி ஒன்​றின் பார்​வை​யில் மத்​த​ளம் பட்​டு​விட்​டது.​ சும்​மா​யி​ருக்​குமா?​ தொடு​தொ​டு​வென மனது தொல்​லை​செய்ய,​​ விடு​வி​டு​வென மரக்​கி​ளையி​லி​ருந்து இறங்கி வரு​கி​றது.​

மத்​த​ளம் என அறி​யாத அம் மந்தி,​​ கனி​தான் என நினைத்து கனி​வோடு தட்​டு​கி​றது.​ அதி​லி​ருந்து இன்​னிசை வரு​கி​றது.​ அரு​கே​யுள்ள குளத்தி​லி​ருக்​கும் ஆண் அன்​னங்​களோ அந்த இசைக்​குத் தக்​க​படி குர​லெ​ழுப்​பு​கின்​றன.​ விளைவு...இசை​யும் பாட்​டும் அங்கே இல​வ​ச​மாக அரங்​கே​று​கின்​றன.​

மன்​றப் பல​வின் மாச்​சினை மந்தி
இர​வ​லர் நாற்​றிய விசி​கூடு முழ​வின்
பாடின் றெண்​கண் கனி​செத் தடிப்​பின்
அன்​னச் சேவல் மாறெ​ழுந் தாலும்
கழல்​தொடி ஆஅய் மழை​த​வழ் பொதி​யில்..​
​(புற​நா​னூறு,​​ 128,​ வரி​கள் 1}5)


எனத் தொட​ரும் புல​வர் உறை​யூர் ஏணிச்​சேரி முட​மோ​சி​யார்,​​ இப்​ப​டிப்​பட்ட சூழ​லில் பகை​வ​ருக்கு இங்​கென்ன வேலை என்று கூறி ஆய் மன்​ன​னின் வீரத்​தைப் புகழ்​கி​றார்.​

ப​லாப்​ப​ழத்தை "வாய்ப் புசிக்​கும்'; மத்​த​ளமோ இசை​யால் காது​க​ளைக் குளி​ர​வைக்​கும்.​ இங்கே இரண்​டையு கலக்​கச் செய்த மட​மந்தி நடத்​திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்​கும்?​'

உ​ரு​வத்​தில் பெரி​ய​தா​யி​ருந்​தா​லும்,​​ உவ​மை​யாக எடுத்​தாள எளி​தாய் இருப்​ப​தாலோ என்​னவோ வருக்கை ​(வேர்ப்​பலா)​ புல​வர்​க​ளின் பாடல்​க​ளில் தனக்​கென ஓர் இருக்கை கொண்​டுள்​ளது என்​றால் மிகை​யில்​லை​தானே!

நன்றி - தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக