ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
VENKUSADAS
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 

Top posting users this month
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 
VENKUSADAS
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_m10 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

Go down

 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் Empty இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

Post by சிவா Wed Oct 23, 2013 3:44 am

தமிழ் இலக்​கி​யப் பாக்​கள் அனைத்​துமே முக்​க​னி​யின் சாறு பிழிந்து புனை​யப்​பட்​ட​வையோ என எண்​ணும் வகை​யில்,​​ படிக்​குந்​தோ​றும் இன்​பம் பயப்​பவை;​ நினைக்​குந்​தோ​றும் நெஞ்​சத்தை குளிர் சார​லால் நனைப்​பவை.​
வி​த​வி​த​மான கனி​கள் விளைந்​தா​லும் "முக்​கனி' என தமி​ழர்​க​ளால் சிறப்​பிக்​கப்​பெற்​றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்​றி​லும்,​​ இலக்​கி​யத் தோட்​டங்​க​ளில் அதி​கம் கனிந்து மணம் வீசி,​​ வாச​கனை வாச​னை​யா​லும்,​​ சுவை​யா​லும் சுண்டி இழுப்​பது பலாக்​க​னி​தான்.​

ம​னித மனத்தை குரங்​கு​டன் ஒப்​பி​டு​வது வழக்​கம்.​ குரங்கு மனத்தை எத​னு​டன் ஒப்​பி​டு​வது?​ அரு​வி​யின் இக்​க​ரை​யில் நிற்​கி​றது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அரு​வி​யைக் கடந்து அக்​க​ரைக்​குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்​கள் அடர்ந்த காடு என்​றால் மந்​திக்​குக் கேட்​கவே வேண்​டாம்.​ இங்கோ,​​ இடை​யில் தடுப்​பது தண்​ணீர்க் காடு!​


அப்​போது,​​ பறிப்​பார் இல்​லா​மல் முற்​றிய பலாக்​கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்​த​படி வரு​கி​றது.​ அரு​வி​யில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்​ப​ழத்​தின் மீதேறி அமர்ந்து கொள்​கி​றது.​ மலைச்​சார​லில் உள்ள ஓர் ஊரின் பக்​க​மா​கச் சென்று வீழும் அரு​வி​யின் துறையை அடைந்​த​தும் பலாப்​ப​ழத்தி​லி​ருந்து இறங்​கிச் செல்​கி​றது மந்தி.​

பசி நீக்​கும் உண​வுப் பொரு​ளான பலா பட​கா​கி​விட்​டது.​ அரு​வி​யைக் கடந்து செல்ல உத​வி​ய​தால் "பலா'க்க​னியை "பால'க்கனி என்றே அழைக்​க​லாம் எனத் தோன்​று​கி​ற​தல்​லவா!​​

அரு​வி​பாய்ந்த கரு​வி​ரல் மந்தி
செழுங்​கோட் பல​வின் பழம்​புணை யாகச்
சாரல் பேரூர் முன்​துறை இழி​த​ரும்...​
​(பா..382,​ வரி​கள் 9}11)


என,​​ தலை​வ​னின் நாட்டு வளத்​தைக் கூறும் தலை​வி​யின் கூற்​றா​கத் தொடர்​கி​றது,​​ கபி​ல​ரின் அந்த அக​நா​னூற்​றுப் பாடல்.​ அந்த மந்​தி​யைப்​போ​லவே,​​ தலை​வ​னும் தான் மேற்​கொண்ட செய​லில் எத்​த​கைய இடை​யூ​று​கள் வந்​தா​லும் அவற்​றைத் தக்க வழி​க​ளில் தகர்த்​தெ​றிந்து தன்னை வந்​த​டை​வான் என மறை​மு​க​மா​கக் குறிப்​பி​டு​கி​றாள் தலைவி.​
த​லை​வ​னின் மலை நாட்டு வளத்​துக்கு மட்​டு​மல்ல,​​ தலை​வி​யின் மன வளத்​தைச் சோதிக்​கும் காமத்​தின் பாங்​கை​யும் பளிங்​கென உவ​மை​யாக்க பலாக்​க​னி​யால் முடி​யும்.​

உ​யிரோ மிகச் சிறி​யது.​ கண்​வழி புகுந்து நெஞ்​சில் வேரோடி உயி​ரெ​லாம் பட​ரும் காமமோ மிகப் பெரி​யது.​ அர​சன் அன்று கொல்​வான்;​ தெய்​வம் நின்​றும் கொல்​லும் என்​பார்​கள்.​ காமமோ என்​றும் கொல்​லும்.​ காதல் பார்​வை​யா​லும்,​​ கனிந்த மொழி​க​ளா​லும் தலை​வி​யின் இத​யத்​தைக் கடத்​தி​ய​வன்,​​ இப்​போது திரு​ம​ணம் செய்​யா​மல் காலத்​தைக் கடத்​து​கி​றான்.​ சித்​திர விழி​யாள் சில நாள் பொறுக்​க​லாம்,​​ ஆனால்,​​ நாள்​கள் மாதங்​க​ளா​கி​விட்ட பின்​பும் மண​நாள் குறித்து எவ்​வித அறி​கு​றி​யை​யும் காண்​பிக்​க​வில்லை அவன்.​ எப்​ப​டிப் பொறுப்​பாள்?​

கூ​டா​ரத்​துக்​குள் நுழைந்த ஒட்​ட​கத்​தின் கதை​யாக,​​ காமம் தலை​வி​யின் உயிரை வதைக்​கி​றது.​ அதை,​​ அவ​ளது தலை​வ​னி​டம் சொல்ல வேண்​டிய இக்​கட்​டுக்கு உள்​ளா​கி​றாள் இன்​னு​யிர்த் தோழி.​ தோழி​யும் பெண்​தானே!​ நேர​டி​யாய்ச் சொல்ல அந்த நேரி​ழை​யா​ளுக்கு நெஞ்​சில் துணி​வேது?​ உவ​மை​யால் உணர்த்த நினைக்​கி​றது இத​யம்.​

ம​லைத்து நிற்​கும் அவள் பார்​வை​யில்,​​ மலை​யில் வளர்ந்​தி​ருக்​கும் பலா மரங்​கள் தென்​ப​டு​கின்​றன.​ அவற்​றில் உள்ள மெல்​லிய கொம்​பு​க​ளில் மிகப் பருத்த பலாக் கனி​கள் முற்​றித் தொங்​கு​வ​தைப் பார்க்​கி​றாள் தோழி.​ பலாக் கனி​யைத் தாங்​கும் மெல்​லிய கொம்​பின் பரி​தாப நிலை​யைச் சொல்லி,​​ தலைவி துன்​பம் நீங்கி,​​ இன்​பம்​பெற வேண்​டு​மா​னால் உடனே அவ​ளைத் திரு​ம​ணம் செய்​து​கொள் என்​கி​றாள் தோழி,​​ தலை​வ​னி​டம்.​

வேரல்வேலி வேர்​கோட் பல​வின்
சாரல் நாட செவ்​வியை ஆகு​மதி
யார் அத​றிந்​திசி னோரே?​ சாரல்
சிறு​கோட்​டுப் பெரும்​ப​ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்​த​வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)


என,​​ காமத்​தின் தன்​மையை "குறுந்​தொகை'யில் தோழி​யின் கூற்​றாக,​​ சுளைப்​பலா உவ​மை​யால் சுவை​ப​டச் சொல்​ப​வர் வேறு யாரு​மல்​லர்,​​ குறிஞ்​சிக் கவி​ஞர் கபி​ல​ரே​தான்.​

க​டை​யெழு வள்​ளல்​க​ளில் ஒரு​வன் பொதிகை மலை​யில் பொன்​னாட்சி தந்த ஆய் என்​ப​வன்.​ பகை​வர் எதிர்த்து நின்​றால் அவர்​க​ளின் தலை​களை அவன் கரங்​கள் கிள்ளி எடுக்​கும்;​ பரி​சில் பெற வரு​வோ​ருக்கோ அவன் கரங்​கள் பொருள்​களை அளக்​கா​மல் அள்​ளிக்​கொ​டுக்​கும்.​

வீ​ர​மும் ஈர​மும் ஒரு கொடி​யில் மலர்ந்த மலர்​க​ளாய் மணம் வீசு​வ​தைத் தமி​ழக மன்​னர்​க​ளி​டம் மட்​டுந்​தான் அதி​கம் காண முடி​யும்.​ அதற்கு ஆயும் விதி​வி​லக்​கல்​லன்.​

அ​வ​னி​டம் பரி​சில் பெற்​றுச் செல்​வ​தற்​காக கூத்​தர்​கள் சிலர் அவனை நாடி வரு​கின்​ற​னர்.​ அவ​னது எல்​லைக்​குள்​பட்ட மலைக்​கா​டு​க​ளின் வழியே வரும் அவர்​கள் இளைப்​பா​றும் பொருட்டு தங்​கள் தோள்​க​ளிலே சுமந்​து​வந்த மத்​த​ளங்​களை பலா​ம​ரத்​தின் கிளை​க​ளில் மாட்​டித் தொங்​க​விட்​டுள்​ள​னர்.​

மந்தி ஒன்​றின் பார்​வை​யில் மத்​த​ளம் பட்​டு​விட்​டது.​ சும்​மா​யி​ருக்​குமா?​ தொடு​தொ​டு​வென மனது தொல்​லை​செய்ய,​​ விடு​வி​டு​வென மரக்​கி​ளையி​லி​ருந்து இறங்கி வரு​கி​றது.​

மத்​த​ளம் என அறி​யாத அம் மந்தி,​​ கனி​தான் என நினைத்து கனி​வோடு தட்​டு​கி​றது.​ அதி​லி​ருந்து இன்​னிசை வரு​கி​றது.​ அரு​கே​யுள்ள குளத்தி​லி​ருக்​கும் ஆண் அன்​னங்​களோ அந்த இசைக்​குத் தக்​க​படி குர​லெ​ழுப்​பு​கின்​றன.​ விளைவு...இசை​யும் பாட்​டும் அங்கே இல​வ​ச​மாக அரங்​கே​று​கின்​றன.​

மன்​றப் பல​வின் மாச்​சினை மந்தி
இர​வ​லர் நாற்​றிய விசி​கூடு முழ​வின்
பாடின் றெண்​கண் கனி​செத் தடிப்​பின்
அன்​னச் சேவல் மாறெ​ழுந் தாலும்
கழல்​தொடி ஆஅய் மழை​த​வழ் பொதி​யில்..​
​(புற​நா​னூறு,​​ 128,​ வரி​கள் 1}5)


எனத் தொட​ரும் புல​வர் உறை​யூர் ஏணிச்​சேரி முட​மோ​சி​யார்,​​ இப்​ப​டிப்​பட்ட சூழ​லில் பகை​வ​ருக்கு இங்​கென்ன வேலை என்று கூறி ஆய் மன்​ன​னின் வீரத்​தைப் புகழ்​கி​றார்.​

ப​லாப்​ப​ழத்தை "வாய்ப் புசிக்​கும்'; மத்​த​ளமோ இசை​யால் காது​க​ளைக் குளி​ர​வைக்​கும்.​ இங்கே இரண்​டையு கலக்​கச் செய்த மட​மந்தி நடத்​திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்​கும்?​'

உ​ரு​வத்​தில் பெரி​ய​தா​யி​ருந்​தா​லும்,​​ உவ​மை​யாக எடுத்​தாள எளி​தாய் இருப்​ப​தாலோ என்​னவோ வருக்கை ​(வேர்ப்​பலா)​ புல​வர்​க​ளின் பாடல்​க​ளில் தனக்​கென ஓர் இருக்கை கொண்​டுள்​ளது என்​றால் மிகை​யில்​லை​தானே!

நன்றி - தமிழ்மணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum