Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
+19
Dr.S.Soundarapandian
யினியவன்
ராஜா
கவின்
soplangi
ஹர்ஷித்
பாலாஜி
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
ரேவதி
டார்வின்
SajeevJino
மாணிக்கம் நடேசன்
amirmaran
krishnaamma
சிவா
M.M.SENTHIL
ayyasamy ram
23 posters
Page 5 of 12
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி நிறைவு
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப் பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை 1 லட்சத்து 92 கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலையில் மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.
இதனையடுத்து ‘மங்கள்யான்’ விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.
‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப் பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை 1 லட்சத்து 92 கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலையில் மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.
இதனையடுத்து ‘மங்கள்யான்’ விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.
‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
2 லட்சம் கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் மங்கள்யான் விண்கலம்
மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக 1.92 லட்சம் கிலோமீட்டராக சனிக்கிழமை (நவ.16) அதிகாலை அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மங்கள்யானின் பாதை அதிகரிப்புத் திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது பூமியிலிருந்து 1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டர் தொலைவில் 217 கிலோமீட்டர் கொண்ட நீள்வட்டப் பாதையில் பூமியை விண்கலம் சுற்றிவருகிறது. விநாடிக்கு 101 மீட்டர் வேகத்தில் விண்கலம் சுற்றி வருவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்கலத்தின் பாதையை அதிகரிக்கும் முயற்சி சனிக்கிழமை அதிகாலை 1.27 மணிக்கு தொடங்கியது. 4 நிமிஷங்களில் விண்கலத்தின் பாதை திட்டமிட்டவாறு அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மொத்தம் 34 கிலோ எரிபொருள் இந்த முயற்சியில் எரிக்கப்பட்டது. இந்த முயற்சியில் விண்கலத்தின் பாதை 74 ஆயிரம் கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்ததாக, மங்கள்யான் விண்கலம் செவ்வாயை நோக்கிய பாதையில் டிசம்பர் 1-ஆம் தேதி செலுத்தப்பட உள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அப்போது பூமியிலிருந்து அருகில் 256 கிலோமீட்டரும், தொலைவில் 23,566 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
ஆனால், செவ்வாயை நோக்கிய பாதையில் விண்கலத்தைச் செலுத்த அதன் சுற்றுப்பாதை 2 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டியிருந்தது.
பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 5 முயற்சிகளில் விண்கலத்தின் பாதை வெற்றிகரமாக சுமார் 2 லட்சம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, செவ்வாயை நோக்கிய மிகவும் கடினமான 300 நாள்கள் பயணத்துக்கு விண்கலத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கவுள்ளன. இடைப்பட்ட நாள்களில் விண்கலத்தில் சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நான்காவது பாதை அதிகரிப்பு முயற்சியில் விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டது.
மொத்தம் 1,350 கிலோ எடைகொண்ட மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில் அனுப்பப்பட்டுள்ளது.
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
T.N.Balasubramanian wrote:இந்த பிரயாணத்திற்கு தேவையான எரிபொருள் என்ன?
ஆரம்பத்தில் எவ்வளவு நிரப்பவேண்டும்?
போகும் வழியில் self generation ஆ?(சுய உற்பத்தியா?)
அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க இயலுமா?
இவ்வளவு உயரம் /தூரம் போனாலும் ,ground control ஆல் இயக்கி செயல்படுத்த முடியுமா?
ரமணியன்
ராக்கெட்டுகளில் தான் எரிபொருள் சேகரித்து வைக்கப்பட்டு புவி வட்ட பாதை வரை செயல் படும் ..அதன் பிறகு எல்லாமே விண்வெளி ஈர்ப்பு விசை தான் ..மெதுவாக ஒரு பக்கத்தை பார்த்து தட்டி விட்டாலே போதும் அது மிக வேகமாக சென்று விடும் ..
இப்போது செயற்கைகோளில் உள்ள சூரிய மின் தகடுகள் தான் அதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றன..
நம்மால் அதன் மொத்த செயல்பாட்டையும் பூமியில் இருந்தே கட்டுப்படுத்த இயலும் ..ஒரு பிரத்தேகமான band மற்றும் frequency மூலம் இதை செய்கிறோம் ..இதை பற்றி மேலும் தகவல்களை என்னால் கூற இயலாது மன்னிக்கவும்..!!
அமெரிக்கர்கள் பூமியிலிருந்தே செவ்வாயில் உள்ள ஒரு ரோபோவை கட்டுப்படுத்தியது நினைவிருக்கலாம் ..இப்போது கூட அது செயல்பாட்டில் உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
SajeevJino wrote:T.N.Balasubramanian wrote:இந்த பிரயாணத்திற்கு தேவையான எரிபொருள் என்ன?
ஆரம்பத்தில் எவ்வளவு நிரப்பவேண்டும்?
போகும் வழியில் self generation ஆ?(சுய உற்பத்தியா?)
அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க இயலுமா?
இவ்வளவு உயரம் /தூரம் போனாலும் ,ground control ஆல் இயக்கி செயல்படுத்த முடியுமா?
ரமணியன்
ராக்கெட்டுகளில் தான் எரிபொருள் சேகரித்து வைக்கப்பட்டு புவி வட்ட பாதை வரை செயல் படும் ..அதன் பிறகு எல்லாமே விண்வெளி ஈர்ப்பு விசை தான் ..மெதுவாக ஒரு பக்கத்தை பார்த்து தட்டி விட்டாலே போதும் அது மிக வேகமாக சென்று விடும் ..
இப்போது செயற்கைகோளில் உள்ள சூரிய மின் தகடுகள் தான் அதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றன..
நம்மால் அதன் மொத்த செயல்பாட்டையும் பூமியில் இருந்தே கட்டுப்படுத்த இயலும் ..ஒரு பிரத்தேகமான band மற்றும் frequency மூலம் இதை செய்கிறோம் ..இதை பற்றி மேலும் தகவல்களை என்னால் கூற இயலாது மன்னிக்கவும்..!!
அமெரிக்கர்கள் பூமியிலிருந்தே செவ்வாயில் உள்ள ஒரு ரோபோவை கட்டுப்படுத்தியது நினைவிருக்கலாம் ..இப்போது கூட அது செயல்பாட்டில் உள்ளது
தங்களின் விளக்கங்கள் என்றும் சிறப்பானவைகள்!
தகவலுக்கு நன்றி!
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நோக்கி டிசம்பர் 1–ந்தேதி புறப்படும்: இஸ்ரோ தலைவர் பேட்டி
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சமீபத்தில் மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புவி வட்டப்பாதையில் 1.93 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்றடைந்து விட்டது. அடுத்த கட்டமாக டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி புறப்பட்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழுதடைந்த பி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட் முதல் நிலை முறையாக உள்ளது. டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும். அதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதியியல் துறை விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சமீபத்தில் மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புவி வட்டப்பாதையில் 1.93 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்றடைந்து விட்டது. அடுத்த கட்டமாக டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி புறப்பட்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழுதடைந்த பி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட் முதல் நிலை முறையாக உள்ளது. டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும். அதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதியியல் துறை விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
சிறப்பான தொடர் பதிவு ... பகிர்வுக்கு நன்றி தல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
பூமியின் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை நோக்கி டிசம்பர் 1–ந் தேதி பயணம் மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
டிசம்பர் 1–ந் தேதி செல்லும்
செவ்வாய் கிரகத்திற்கு கடந்த 5–ந் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்து கொண்டு இருக்கிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
வரும் டிசம்பர் 1–ந் தேதி பூமியின் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விடுபட்டு செவ்வாய் கிரகத்திற்கு தனது பயணத்தை தொடங்கும். மங்கள்யான் ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட்
ஜி.எஸ்.எல்.வி– டி5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் உள்நாட்டு எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
தற்போது ஜி.எஸ்.எல்.வி–டி5 முழுமையாக தயார்படுத்தப்பட்டு உள்ளது. டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-- dinaththanthi
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
டிசம்பர் 1–ந் தேதி செல்லும்
செவ்வாய் கிரகத்திற்கு கடந்த 5–ந் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்து கொண்டு இருக்கிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
வரும் டிசம்பர் 1–ந் தேதி பூமியின் சுற்றுவட்ட பகுதியில் இருந்து விடுபட்டு செவ்வாய் கிரகத்திற்கு தனது பயணத்தை தொடங்கும். மங்கள்யான் ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட்
ஜி.எஸ்.எல்.வி– டி5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் உள்நாட்டு எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
தற்போது ஜி.எஸ்.எல்.வி–டி5 முழுமையாக தயார்படுத்தப்பட்டு உள்ளது. டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-- dinaththanthi
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
First Picture from Mangalyaan . Taken yesterday from an altitude of 70,000 km while checking Mars Color Camera.
![மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 5 BZhrHYECQAAxI8j](https://pbs.twimg.com/media/BZhrHYECQAAxI8j.jpg:large)
![மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 5 BZhrHYECQAAxI8j](https://pbs.twimg.com/media/BZhrHYECQAAxI8j.jpg:large)
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
விண்வெளியில் சாதித்தது இந்தியா: செவ்வாய் நோக்கி புறப்பட்டது "மங்கள்யான்'
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட, "மங்கள்யான்' செயற்கைக்கோள், இன்று , புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ' சார்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. கடைசியாக, நவ., 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில், 'மங்கள்யான்' செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளை விடுவிக்க, அதன் வேகத்தை அதிகரிக்கும் பணியில், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று அதிகாலை, 12:30 மணிக்கு, "மங்கள்யான்' செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்' பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும். இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்' செயற்கைக்கோள் அடையும்.
சாதனை:
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது. முன்னதாக, சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட்ட, "மங்கள்யான்' செயற்கைக்கோள், இன்று , புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆராய, "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டத்தின் கீழ், 450 கோடி ரூபாய் மதிப்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. "இஸ்ரோ' சார்பில், "மங்கள்யான்' செயற்கைக்கோள், நவம்பர், 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி., சி - 25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, "மங்கள்யான்' செயற்கைக்கோளின் நீள்வட்ட பாதையை, பல கட்டங்களாக அதிகரிக்கும் பணி, பெங்களூருவில் உள்ள, "பீன்யா' கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. கடைசியாக, நவ., 16ம் தேதி, பூமியில் இருந்து, 1,92,874 கி.மீ., உயரத்தில், 'மங்கள்யான்' செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, "மங்கள்யான்' செயற்கைக்கோளை விடுவிக்க, அதன் வேகத்தை அதிகரிக்கும் பணியில், "இஸ்ரோ' விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று அதிகாலை, 12:30 மணிக்கு, "மங்கள்யான்' செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்ட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகம் நோக்கி தன், 68 கோடி கி.மீ., பயணத்தை துவக்கியது. "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள, சிறிய வகை ராக்கெட்கள் இயக்கப்பட்டு, நொடிக்கு 647.96 மைல் வேகத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி, "மங்கள்யான்' பயணிக்கும். இந்த வேகத்தில் சென்றால் தான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து, விடுபட முடியும். இதே வேகத்தில், விண்வெளியில் பயணித்து, 2014, செப்., 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை, "மங்கள்யான்' செயற்கைக்கோள் அடையும்.
சாதனை:
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது. முன்னதாக, சீனா செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பிய விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற முடியாமல் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் செவ்வாய் ஆராய்ச்சியை சீனா உள்ளிட்ட நாடுகள் கூர்மையாக கவனித்து வந்தன. இந்நிலையில், மங்கள்யானின் இந்த வெற்றி, விண்வெளி துறையின் இந்தியாவின் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளது.
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மாங்கள்யான் எப்போ திரும்பி வரும், வரும் போது ரெண்டு கிலோ கத்திரிக்காய் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்
» ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்
» நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்
» 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ
» விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்
» ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்
» நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்
» 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ
Page 5 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|