புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
6 Posts - 86%
cordiac
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
251 Posts - 52%
heezulia
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%
cordiac
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_m10தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 9:28 pm

தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச் சோகம்.

கால் நூற்றாண்டுக்கிடையில் தெருக்கூத்துக் கலை மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறது. சிற்றூர்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும்.

கூத்து நிகழ்த்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டு வந்து கூத்தைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன்னிரவில் தொடங்கி, விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் களை கட்டும்.

கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாப்பாத்திரம் - கட்டியக்காரன். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவர்ந்திழுக்கும் கதாப்பாத்திரமான அவர், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி ஒப்பனை செய்திருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான உடையணிந்திருப்பார்.

' பல பல பல பல பல பப்பூன் வந்தேனே.. பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனே ' என்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி பரவும்.

பார்வையாளர்களை வரவேற்றுப் பாடி, நகைச்சுவையான பாடல்களைப் பாடி, நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன் பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாப்பாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக, பணியாளராக, அமைச்சராக சூழலுக்கேற்ப அவர் மாறுவார்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மேடைக்கு வருவதற்கு முன்பாக திரைக்குப் பின்னால் நின்று பாடல் மூலம் தம்மை அறிமுகப்படுத்திய பிறகு மேடையில் தோன்றுவர். அவர்களின் வண்ணமயமான ஒப்பனையைக் காண்பதற்காகப் பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருப்பர். கதாப்பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வண்ணத்தைக் கலைஞர்கள் தங்கள் முகத்தில் பூசியிருப்பர்.

ஒவ்வொரு கலைஞரும் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துவர். சிறப்பாக நடிப்பவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பார்வையாளர்கள் ஊக்கப்படுத்துவர். கூத்து முடிகின்றவரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல் நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கமுடையதாய் இருக்கும்.

இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதிகமின்மையால் கலைஞர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு கலை வெளிப்பாடு குறைகிறது. அது மட்டுமின்றி வணிகமயமாகி வரும் வேளாண் முறை, நகரமயமாகி வரும் வாழ்க்கை முறை, தொலைக்காட்சிகளின் வருகை எனப் பல்வேறு காரணங்களால் தெருக்கூத்துக் கலை மெல்ல நலிவடைந்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே கூத்துக்கலைஞர்களாக உள்ளனர். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில்தான் கூத்து பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கூத்துக்கலைஞர்கள் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் கூத்துக் கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் கூத்துக் கலையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

கூத்து வாத்தியார் என்றழைக்கப்படும் நாடக ஆசிரியர்தான் கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து கூத்து நிகழ்த்துவார். நடிகர்களுக்கு முன் பணம் கொடுப்பதற்காகவும் ஒப்பனைப் பொருள்களைப் புதுப்பிப்பதற்காகவும் அவர் ஓர் ஆண்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே அத்தொகையை வட்டிக்குக் கடனாகப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அரசு கூத்துக்கலைஞர்கள் சங்கத்திற்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

நலிவடைந்த இலக்கியவாதிகளுக்கு உதவி செய்வதைப்போல் கூத்துக் கலைஞர்களுக்கும் அரசு உதவிட வேண்டும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப்போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கலாம். கூத்துக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி போன்ற விருதுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, கிராமப் பகுதிகளில் வாழும் கூத்துக்கலைஞர்களும் விருது பெறும்படிச் செய்திட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் இராசகோபால் படையாட்சி என்ற நாடகப் பேராசிரியர் இருபதுக்கும் மேற்பட்ட கூத்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், அவற்றை நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்கு பரிவுத்தொகை வழங்கலாம். குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள் நாயக்கன் பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவர்கள்.

இது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக்கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து நிகழ்த்தப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யலாம்.

அரசு மனது வைத்தால் இது எளிதாக நடக்கும். மனம் வைக்குமா? - இரத்தின. புகழேந்தி -thehindu

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 20, 2013 10:01 pm

மிக மிக முக்கியமானதும், நாம் கவனிக்காமல் விட்டதும் இந்த கூத்து.  வெளிச்சமில்லாத காலத்திலும் மண்ணெண்ணெய் விளக்கில் நம் பாட்டன் காலத்தில் விடிய, விடிய நடந்து வந்த ஒரு அற்புதமான கலை.
நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறை எப்படி அடியோடு மாறிப்போனதோ அதேபோலத்தான் இந்த கலையும் தற்போதைய ரெகார்டு டான்ஸ் போன்ற விசயங்களால் அடியோடு ஒளிந்து போய் விட்டது.  
ஒரு சின்ன சந்தோசம், இன்னும் கூட சில கிராமப்புறங்களில் இதற்கென்றே ரசிகர்கள் இருக்கிறார்கள்.  அவர்களால் வருடம் ஒரு முறையேனும் கோவில் திருவிழாவின்போது இந்த கூத்து நடக்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக