புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_m10அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலிகையை கௌதமர் மணந்த கதை !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 19, 2013 2:47 pm

இரண்டு முகப் பசு

கலிகை! பஞ்ச கன்னியருள் ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட அகலிகையைக் கல்லாக மாறுவதற்கு கௌதமர் சாபமிட்டார். பின்பு ராமரால் சாப விமோசனம் பெற்று, அகலிகை மீண்டும் தன் கணவருடன் இணைந்தாள் என்பதை நாம் அறிவோம்.
தவ வலிமை வாய்ந்த கௌதமர் எப்படி அகலிகையைக் கரம் பற்றினார் என்பதைப் பார்ப்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான். பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை ஹரியின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.
அகலிகையை கௌதமர் மணந்த கதை ! Agaligai
அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை! அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.
இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே பிரம்மதேவர், 'ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ''மகத்தானவர்களே... உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும். நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.
அதைக் கேட்ட தேவேந்திரன், ''முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே... இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!'' என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.
'முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், 'சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.
அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ''மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!'' என்றார்.
இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, ''கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!'' என்றார் விரக்தியுடன்.
தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.
அப்போது, ''கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!'' என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.
அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.
அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.
அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.
'எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.
ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று நெறிதவறி நடந்த அந்தச் செயல்!

காமாதுராணாம் ந பயம்! ந லஜ்ஜா! (மோக வயப்பட்டவனுக்கு பயமும் இல்லை; வெட்கமும் இல்லை!)
ம.கி.ச., சென்னை-49
vigatan 




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 19, 2013 3:50 pm

நன்றி, ரேவதி !
அகலிகை அவதரித்து / முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு நான் அறியாத ஒன்று.
நல்லத் தகவல்.
ரமணியன்

( அதுக்காக அடுத்த தடவை சந்திக்கும் போது பரீட்சை வைத்து கேள்வி கேட்கக்கூடாது)
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 19, 2013 3:51 pm

நெறி தவறி நடக்க இந்திரனுக்கு உதவியாக
இருந்தான் சந்திரன்..

-
பொழுது புலர்ந்து விட்டதாக வசிட்டரை ஏமாற்ற,
சந்திரன் மறைந்தான். அதிகாலை என எண்ணி
சந்தியாவந்தனம் செய்ய வீட்டை விட்டு
வெளியேறினார்.

இதுதான் தருணம் என வசிட்டர் வேடத்தில் வீட்டினுள்
நுழைந்த பாதகன் இந்திரன், தன் சபத்தை நிறைவேற்றிக்
கொண்டான்
-
...சந்திரன் தன் கடமை தவறி சபலத்திற்கு துணை
போனதால் அவனை வானில் உதிக்க முடியாமல் வசிட்டர்
சபித்தார். இதனால் இயற்கை நியதிகள் குழப்பமடையவே
மாதமொரு முறை தோன்றாமல் இருக்க சாபமிட்டார்
--
சபலப்பட்டவர் மட்டுமன்றி சபலத்திற்கு துணைபோனவரும்
தண்டிக்கப்படுவார் என்பது நியதி.
தேவலோக அதிபதியானாலும் சபலப்பட்டால் அவரும்
அவமானப்பட்டு சீரழிய வேண்டியதுதான் விதி.
இதனால்தான் இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்றனர்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 19, 2013 4:29 pm

ayyasamy ram wrote:நெறி தவறி நடக்க இந்திரனுக்கு உதவியாக
இருந்தான் சந்திரன்..

-
பொழுது புலர்ந்து விட்டதாக வசிட்டரை ஏமாற்ற,
சந்திரன் மறைந்தான்.  அதிகாலை என எண்ணி
சந்தியாவந்தனம் செய்ய வீட்டை விட்டு
வெளியேறினார்.

இதுதான் தருணம் என வசிட்டர் வேடத்தில் வீட்டினுள்
நுழைந்த பாதகன் இந்திரன், தன் சபத்தை நிறைவேற்றிக்
கொண்டான்
-
...சந்திரன் தன் கடமை தவறி சபலத்திற்கு துணை
போனதால் அவனை வானில் உதிக்க முடியாமல் வசிட்டர்
சபித்தார். இதனால் இயற்கை நியதிகள் குழப்பமடையவே  
மாதமொரு முறை தோன்றாமல் இருக்க சாபமிட்டார்
--
சபலப்பட்டவர் மட்டுமன்றி சபலத்திற்கு துணைபோனவரும்
தண்டிக்கப்படுவார் என்பது நியதி.
தேவலோக அதிபதியானாலும் சபலப்பட்டால் அவரும்
அவமானப்பட்டு சீரழிய வேண்டியதுதான் விதி.
இதனால்தான் இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்றனர்.
நன்றி நன்றி



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 19, 2013 4:38 pm

T.N.Balasubramanian wrote:நன்றி, ரேவதி !
அகலிகை அவதரித்து / முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு நான் அறியாத ஒன்று.
நல்லத் தகவல்.
ரமணியன்

( அதுக்காக அடுத்த தடவை  சந்திக்கும் போது   பரீட்சை வைத்து கேள்வி கேட்கக்கூடாது)
 
நன்றி ஐயா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 4:38 pm

அருமை ரேவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 19, 2013 4:40 pm

krishnaamma wrote:அருமை ரேவதி புன்னகை
நன்றி அம்மா 
கீழே உள்ள உரை பெட்டியில் பின்னுட்டம்  டைப் செய்து copy  பேஸ்ட் பண்ணாமலே போஸ்ட் செய்து விடுகிறேன் சிரி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 5:13 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:அருமை ரேவதி புன்னகை
நன்றி அம்மா 
கீழே உள்ள உரை பெட்டியில் பின்னுட்டம்  டைப் செய்து copy  பேஸ்ட் பண்ணாமலே போஸ்ட் செய்து விடுகிறேன் சிரி
எனக்கும் சில சமையம் அப்படி ஆச்சு,பழக்க தோஷத்தில் பதிவிடுவை தட்டி விடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக