ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணியம் இருந்தால்....

2 posters

Go down

புண்ணியம் இருந்தால்.... Empty புண்ணியம் இருந்தால்....

Post by krishnaamma Fri Oct 18, 2013 8:19 pm

புண்ணியம் இருந்தால்.... A84gCQM6TAete6VCzuF5+E_1381479185

எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பு கிறார் பகவான்; ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை. காரணம், அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம். புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.

ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை, "சகஸ்ர போஜனம்' என்பர். ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை; குறையக் கூடாது. சாப்பாடு என்றால் ஏதோ, "போட்டதை சாப்பிட்டு விட்டு போ...' என்பது மாதிரியல்ல; வயிறு நிறைய சாப்பாடு. பல வித பதார்த்தங்கள், லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல்... இப்படி ஏகப்பட்ட அயிட்டம், சகஸ்ர போஜனத்தில் உண்டு.

எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர். அதில், ஒருவனுக்கு வயிற்று வலி. ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும். இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்? மற்றொருவனுக்கு சர்க்கரை வியாதி. இவனால் லட்டு, ஜிலேபி, பாயசம் எதையும் சாப்பிட முடியாது. இவனாலும் ஆசை தீர, வயிறு நிறைய சாப்பிட முடியாது.
அடுத்தவன், உடல் நலமில்லாதவன். நாட்டு மருந்து சாப்பிடுகிறான். பூசணிக்காய், பாகற்காய், மாங்காய், வாயு பதார்த்தங்களை, சாப்பிடக் கூடாது என்பது, வைத்தியரின் உத்தரவு. இவனாலும், திருப்தியாக சாப்பிட முடியாது.

"எல்லாரும், வேண்டியதைக் கேட்டு, திருப்தியாக சாப்பிடுங்கள்' என்றார் சாப்பாடு போடும் அன்பர். ஆனால், அப்படி சாப்பிட முடியாதவர்களும் இருக்கின்றனரல்லவா... இதைப் போலத் தான் பகவான், எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், இவர்களுடைய தீவினை காரணமாக, சுகத்தைப் பெற முடிவதில்லை. இதற்கு, பகவான் என்ன செய்ய முடியும்?

போனது போகட்டும்... இந்த ஜென்மாவிலாவது, நல்ல காரியங்களை செய்து, புண்ணியத்தை தேடிக் கொள். அடுத்த பிறவியிலாவது செல்வச் செழிப்புடன் சுகமாக இருக்கலாம், என்கின்றனர் தவசீலர்கள். ஆனால், நம்மில் பலருக்கு, பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது; புண்ணியம் தெரிவதில்லை. அதனால், கண்ணுக்குத் தெரிந்த பணத்தின் மீது ஆசை!
சேர்த்து சேர்த்து வைத்து, எண்ணி எண்ணி பார்த்து, சந்தோஷப்படு கிறான். புண்ணித்தை தேடிக் கொள் என்றால்,"போங்க சார்... புண்ணியத்தை எவன் கண்டான்...' என்கின்றனர். ஆனால், கண்ணுக்குத் தெரியாத புண்ணியம் தான் பரலோகத்திலும், அடுத்த பிறவியிலும், கை தூக்கி விடும் என்பதை, புரிந்து கொள்வதில்லை.


நன்றி : வாரமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புண்ணியம் இருந்தால்.... Empty Re: புண்ணியம் இருந்தால்....

Post by ayyasamy ram Sat Oct 19, 2013 11:00 am

தானத்தில் சிறந்தது அன்னதானம்...
-
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்று புறநானூறும், மணிமேகலையும்
அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
-
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து,
உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள்
என்றும் வீண்போவதில்லை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புண்ணியம் இருந்தால்.... Empty Re: புண்ணியம் இருந்தால்....

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:07 pm

ayyasamy ram wrote:தானத்தில் சிறந்தது அன்னதானம்...
-
உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்று புறநானூறும், மணிமேகலையும்
அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
-
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து,
உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள்
என்றும் வீண்போவதில்லை
ம்...ரொம்ப சரி நண்பரே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புண்ணியம் இருந்தால்.... Empty Re: புண்ணியம் இருந்தால்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum