ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

3 posters

Go down

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Empty ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

Post by சாமி Thu Oct 17, 2013 3:38 pm

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! 6HpNvd89RiK0hqYjyjAj+pinju-jan-2012-22

கியூப் டைஸ் என அழைக்கப்படும் ஆறு சதுர முக பக்கங்கள் கொண்ட தாய விளையாட்டுக்கும் நம் இந்திய தாய விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தாயக்கட்டைகள் நான்கு முகங்கள் உடையது. மரம் மற்றும் உலோகங்களில் ஆன விளையாட்டு பொருள்.

அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்துமே ஓரளவுக்கு எளிதாக அனைத்து இடத்திலும் விளையாடும் வண்ணம் இருந்தன. உள்ளரங்கு விளையாட்டுகள் எனப்படும் இண்டோர் கேம்ஸ்க்கும் அதிகம் செலவழிக்க தேவை இருந்ததில்லை. மனிதர்களுக்கு மதிப்பு இருந்த காலம். விளையாட மனிதர்கள் இருந்தால் போதும்.. எதையாவது வைத்து கொண்டு விளையாடிவிடலாம். விலையுய‌ர்ந்த பொம்மைகளும், ஐ-பாட், ப்ளே ஸ்டேஷன்களும் தேவைப்படாத காலங்கள் பொற்காலங்கள்தான். அடுத்த தலைமுறையை வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சரியாக வளர்க்க முடியவில்லையோ என்று உணர வேண்டி இருக்கிறது.

ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ் (Fine Motor Skills) எனப்படும் கை, விரல்கள் மற்றும் மூளைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையிலும் உண்டு. இரு கைகளால் உருட்டி போடும்போது இரு பக்க மூளையைத் தூண்டும் பயிற்சி, தொடக்கத்திலேயே கிடைக்கிறது.

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! XETNczaQKK3tZJJ72JEg+images
தாயம் சூது எனவும் சொல்லப்படுவது உண்டு. தாயக்கட்டை பார்க்க எளிதான விளையாட்டாக, சிறு குழந்தைகூட விளையாட முடிந்ததாக இருந்தாலும், இதில் கூட ஆட்ட திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். சகுனி தருமரை தோற்கடித்தது போல. தருமர் தருமத்தின் நினைவில் இருந்தார். சகுனி தாயத்தின் நினைவில் இருந்ததால் விளையாட்டில் ஜெயிக்க முடிந்தது. யாராக இருந்தாலும் விளையாட்டை அர்ப்பணிப்போடு விளையாடுபவர்களுக்கு விளையாட்டு வேடிக்கை ஆகாமல் வெற்றியை அள்ளித்தரும்.

“ஒரு புறாவுக்குப் போரா?!” என்று வடிவேலு சொன்னது போல, ஒரு தாயத்தால் நாடே போய் குருஷேத்திர போர் வந்தது. நமக்கு பகவத் கீதையும் கிடைத்தது. எனவே தாய விளையாட்டு நம் ரத்தத்தோடு பின்னிப் பிணைந்தது. தாய விளையாட்டை எத்தனையோ யுகங்களாக விளையாடி வருகிறோம். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. உடனே ஆப் ஸ்டோரில் ( App Store ) தேடி ஸ்மார்ட் போனில் குழந்தைகளுக்கு கொடுப்பதை விட, அவர்களோடு அமர்ந்து விளையாடினால் உறவுகளும் மேம்படும். தொலைக்காட்சி நேரமும் குறையும்.

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! CHBp8FATTgm6LcT6iZJo+dhaayam
இந்த விளையாட்டுக்கு பின்னால் மிகப்பெரிய வரலாறும் உண்டு. இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகளிலும் விளையாடி உள்ளார்கள். கிரேக்கத்தில் முதன் முதலாக ஆடு எலும்பில் தாயக்குழி போட்டு தாயக்கட்டை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஆறு சோழிகள், அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவது உண்டு. நான்கு சோழிகள் திரும்பி இருந்தால் நான்கு என்று கணக்கில் வரும். அதைத் தவிர மரத்தால், உலோகத்தால் ஆன தாயகட்டைகள் பல்வேறு விதங்களில் வந்துவிட்டன. கேசினோவில் கூட தாயத்தை வைத்துதான் டைஸ் கேம் (Dice Game) என்று சக்கை போடு போடுகிறார்கள். எந்த விளையாட்டிலும் இருக்கும் சூதை கண்டுபிடிக்கும் மனித மனம். டைஸை எடுத்து ஒரு பக்கம் லேசாக தேய்த்து விட்டால் நாம் போட நினைக்கும் எண்ணை போடலாம். சூதுக்கே சூது செய்யவும் மனிதன் அறிவான்.

தாயக்கட்டங்கள் தரையில் பெரும்பாலும் வரையப்படும். எங்கள் பாட்டி வீட்டில் அந்த காலத்தில் ஒரு இடத்தில வரையப்பட்டு இருக்கும். சிலர் மரத்தில் செய்து வைத்து இருப்பார்கள். துணியில் கூட வடிவம் செய்து வைத்து கொள்வது உண்டு. நிறைய வகைகளில் விளையாடலாம். இதில் பழிவாங்கும் படலம் கூட உண்டு. ஒருவரை பின் வைத்து துரத்தி வெட்டி வீழ்த்துவது இலக்காக இருக்கும். வெறி பிடித்து தாயம் விளையாடிய காலங்கள் நினைவில அசை போடுகின்றன. உணவு, தூக்கம் கூட போய் விளையாடும் விளையாட்டு. அந்தளவுக்கு ஜெயிக்கும் உத்வேகம் கொடுக்கும். இதில் கணக்கும் கற்று கொள்ளலாம். ப்ராபபிளிடி தியரி (Probability Theory) தாயங்களில் அடங்கி உள்ளது.

இது ஒரு வித கட்டம். இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவருக்கு ஆறு ஆட்ட காய்கள் வைத்து கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில் நடுவில் வைத்து கொள்ள வேண்டும். தாயம் போட்டே ஆட்ட காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக்கட்டை அல்லது சோழிகளை போட்டு எந்த எண் வருகிறதோ அத்தனை கட்டங்கள் நகர்த்த வேண்டும்.

நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தை துவங்க வேண்டும். தாய கட்டையில் போடும் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காயை நகர்த்த வேண்டும். வழியில் எதிர் அணியின் ஆட்ட காய் இருந்தால் வெட்ட வாய்ப்பு வரும். குறுக்கு கோடு போட்ட கட்டங்களில் வெட்ட முடியாது. அது சேஃப்டி ஜோன் (Safety Zone).

ஒரு காய் முழுக்க ஒரு சுற்று வந்துவிட்டால், ஆட்டக்காரர் அந்த காயை தக்கவைத்துக் கொள்ளலாம். முதலில் ஆறு காய்களையும் ஒரு சுற்று முடித்து வந்தவருக்கே வெற்றி. ஆனால் பல தடைகளை தாண்டிதான் வர வேண்டும். சரியாக வெட்டுபடாமல் காய் நகர்த்த தெரிந்து இருக்க வேண்டும்.

இது இன்னொரு ஆட்ட கட்டங்கள். இது சுற்றி, சுற்றி வெட்டுபடாமல் உள்ளே வந்து சேருபவருக்கே வெற்றி. நான் வளர்ந்தவுடன் எங்கள் ஊருக்கு ஏரோப்ளேன் தாயக்கட்டம் என்ற புது வகை அறிமுகமானது. அதன் படம்தான் இது. இது இருவர் இரு முனைகளில் ஆரம்பித்து தலை வரை சென்று கடைசி கட்டத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு நகர்தலுக்கும் தாயத்தை உருட்ட வேண்டும்.

பலவிதங்களில் விளையாடும் தாயத்தை ஒருமுறை குழந்தைகளோடு அமர்ந்து விளையாடி பார்த்தால் டெக்னாலஜி, வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நாம் எதை இழந்து இருக்கிறோம் என்ற அருமை புரியவரும். சிறு, சிறு சந்தோஷங்களில் ஒளிந்து இருக்கிறது வாழ்க்கை. பழங்கால விளையாட்டுகள் மேலே வந்தால் வருவது விளையாட்டுகள் மட்டுமல்ல... நம் வாழ்கையின் சந்தோஷங்களும். - கிருத்திகா தரண் - the hindu
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Empty Re: ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

Post by பாலாஜி Thu Oct 17, 2013 3:49 pm

நல்ல பதிவு


நானும் சின்ன வயதில் நிறைய விளையாடி உள்ளேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Empty Re: ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

Post by ரேவதி Thu Oct 17, 2013 5:26 pm

சின்ன வயதில் அம்மா & பாட்டியை ஏமாற்றி விளையாடி ஜெயித்தது நியாபகம் வருகிறது சிரி 
நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Empty Re: ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum