Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்
2 posters
Page 1 of 1
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்
![சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் MUM1MUM1516102013](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/MUM1MUM1516102013.jpg)
சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்தார்.
கமாண்டோ படை வீரர்
மராட்டிய மாநிலம் தானே நகர போலீஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(வயது 31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர போலீஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார். கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம்.
ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர்.
தேடலுக்கு அடித்தளமிட்ட அதிகாரி
அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது ‘எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை’ என்று சோகத்துடன் தெரிவித்தார். ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது. இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு, கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.
உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார். மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.
சமையல்காரர் தந்த தகவல்
இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார். அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.
கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7–ம் வகுப்பு வரையிலும் படித்தார். அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார்.
மேலும் முதியவர் ஒருவர், மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.
கடந்த 4–ந்தேதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார். அங்கு இருந்த பெண்ணிடம் ‘நாங்கள் போலீஸ், உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா?’ என்று கேட்டார்.
அடையாளம் காட்டிய ‘பச்சை’
அதற்கு, ‘ஆமாம்’ என்று கூறிய அந்த பெண், தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று பச்சை குத்தியிருக்கும் என்றார். உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் ‘‘நான்தான் உங்களுடைய மகன்’’ என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார். இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.
தூய்மையான தாய்மை பாசத்துடன் அன்பு முத்தங்களை மந்தா பகிர்ந்துகொண்டார். 6 வயதில் காணாமல் போன மகன் 25 வருடத்திற்கு பின்னர் கிடைத்த மகிழ்ச்சியை அவரால் விவரிக்க முடியாமல் ஆனந்தம் பொங்க கண்களில் கண்ணீர் வடிய திளைத்தார் மந்தா. சிறு வயதில் காணாமல் போன கணேஷ் ரகுநாத் மீண்டும் வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
மகிழ்ச்சி
கணேஷ் ரகுநாத்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு இனிப்பு வழங்கி தங்களுடைய அளவிடமுடியாத மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சிறுவயதில் காணாமல் போன மகன் கமாண்டோ படை வீரராக மீண்டும் கிடைத்திருப்பது மந்தாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காணாமல் போன தினத்தன்று வாழ்வில் நல்ல நிலையை எட்டும் வரை சந்தித்த கஷ்டங்களை கணேஷ் ரகுநாத் தாங்குடே குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு தாயாருடன் சேர்ந்த கமாண்டோ படை வீரர் கணேஷ் ரகுநாத் தாங்குடே, தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:–
ரெயில் நிலையத்தில் பிரிந்தேன்
நானும், என்னுடைய நண்பனும் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடைய நண்பனின் மாமா சுற்றுலா செல்வதாக கூறி நண்பனை அழைத்தார். உடன் நானும் அவனோடு நின்று கொண்டிருந்ததால் என்னையும் அவர்களுடன் வருமாறு அழைத்துச்சென்றனர்.
அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் அனைவரும் ஏறினோம். ரெயில் சிறிது தூரம் சென்றதும் எனக்கு அதிக பசி ஏற்பட்டது. உடனே நான் ரெயில் நிலையத்தில் இறங்கி சாப்பிடுவதற்காக ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தபோது கூட்ட நெரிசலில் அனைவரும் பிரிந்துவிட்டோம். நான், ரெயில் புறப்பட்டு சென்ற திசைக்கு எதிர் திசை நோக்கி வந்த ரெயிலில் ஏறினேன்.
பசியாற்றிய விநாயகர் சதுர்த்தி
அந்த ரெயில் எங்கு நின்றதோ அங்குள்ள ரெயில்நிலைய பிளாட்பாரத்திலேயே 3 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வந்ததால் வயிற்று பசிக்காக ஒவ்வொரு பூஜை நடைபெறும் விநாயகர் மண்டல்களுக்கு சென்று பிரசாதம் மூலம் பசியாற்றி வந்தேன். நான் இறுதியாக ஒரு கடற்கரை பகுதியின் அருகே சென்றேன்.
அப்போது அங்கு நடைபாதையில் குடிசை அமைத்து வசித்து வந்த மீன் விற்பனை செய்யும் குடும்பத்தினர் என்னை அவர்கள் உடன் தங்க வைத்தனர். அந்த குடும்பத்தினருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுடன் நான் ரெயில் பெட்டியை சுத்தம் செய்து பிச்சை எடுத்து வந்தேன். பிச்சை மூலம் கிடைக்கும் பணத்தை மீனவ குடும்பத்திடம் கொடுப்பேன்.
விளையாட்டில் ஆர்வம்
அவர்கள் எனக்கு பசியாற சாப்பாடும், தங்கும் இடமும் தந்தார்கள். இப்படியே என்னுடைய கடுமையான நாட்கள் நகர்ந்துகொண்டே வந்தது. ஒரு நாள் நான் சாலையில் செல்லும்போது வாகனம் ஒன்று என் மீது மோதியது. இதில் தலையில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஒர்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை பார்க்க யாருமே வரவில்லை.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு பால்வாடியில் 7–ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் விளையாட்டு போட்டிகளில் தேர்ச்சிப்பெற்று புனேயில் உள்ள விடுதிக்கு பால்வாடி சார்பில் என்னை ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். அவர்கள் என்னை தானேயில் உள்ள அரசு சாரா அமைப்பு மூலம் படிக்க வைத்தனர்.
போலீஸ் படையில் சேர்ந்தேன்
விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்த என்னை தானேயில் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) படிக்க வைத்தனர். படிப்போடு நான் விளையாட்டு துறையிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். படித்துக்கொண்டு இருக்கும்போதே தானே போலீஸ் படையில் போலீஸ் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது.
இதில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று கடந்த 2010–ம் ஆண்டு தானே மாநகர போலீஸ் படை பிரிவில் போலீஸ்காரராக வேலைக்கு சேர்ந்தேன். இதனையடுத்து விளையாட்டு துறையில் நான் செய்த சாகசங்கள், திறமைகளின் உதவியால் படிப்படியாக ஒவ்வொறு துறையாக பணி உயர்வு பெற்று தற்போது கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- dina thanthi
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தத்து கொடுக்கப்பட்ட குழந்தை 15 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தது
» 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் துபாய் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» கூகுள் எர்த்' இணையதளம் உதவியால் 26 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தவர்
» அரசியலில் இருந்து காங்கிரஸ் காணாமல் போய் விடும்: லாலு
» 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் துபாய் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» கூகுள் எர்த்' இணையதளம் உதவியால் 26 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தவர்
» அரசியலில் இருந்து காங்கிரஸ் காணாமல் போய் விடும்: லாலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|