புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நீரால் அமையும் வாழ்வு! Poll_c10நீரால் அமையும் வாழ்வு! Poll_m10நீரால் அமையும் வாழ்வு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரால் அமையும் வாழ்வு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 3:41 pm



நம் ஊரில் தண்ணீர் லாரி வரும் சத்தம் கேட்டாலே போதும், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் எடுத்து வருவதற்கு ஒரு நாளில் பல மணிநேரங்கள் தாய்மார்கள் செலவிட வேண்டியிருக்கிறது.

குழாயடிச் சண்டை என்றதும் நம் நினைவிற்கு வருவதும் பெண்கள்தான். ஏனென்றால், தண்ணீர் பிடிக்கும் வேலை பெரும்பாலும் பெண்களைச் சார்ந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல், சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது என்று தண்ணீர் பயன்பட்டுள்ள எல்லாப் பணிகளும் குடும்பத்தில் இருக்கும் மகளிர் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே தண்ணீர் தொடர்பான பற்றாக்குறை, மாசுபாடு ஆகிவற்றின் வலியும் வேதனையும் பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஆறு மணிநேரம் செலவிடுகிறார்கள். மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசம். சேறும் சகதியும் மேடும் பள்ளமும் உள்ள சிதைந்த பாதைகளின் வழியாகத் தண்ணீர் கொண்டுவருவது என்பது மேலும் பல மணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. மிகவும் அத்தியாவசியமான தண்ணீரைச் சேகரிப்பதிலேயே பாதி நாள் கடந்துவிடுவதால் அங்குள்ள இளம் பெண்கள் பள்ளிப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட வேண்டிய நிலை. இதனால் மனித ஆற்றல் பயனற்றுப் போவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது எனக் கூறுகிறது சர்வதேச சுகாதார மற்றும் கல்வி அறக்கட்டளை அறிக்கை.

நகர்ப்புற வாழ்க்கையில், தண்ணீருக்கான பற்றாக்குறையையும் மாசுபாட்டையும் எதிர்கொள்பவர்கள் குடிசைவாழ் மக்களாக இருக்கிறார்கள். கூவத்தின் கரைகள் இதற்கான கூப்பாடுகளோடே விடிகின்றன. வசதி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பல அம்சங்கள் பெண்களுக்கு ஏதுவாக இல்லை. வேலைக்குச் செல்லும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குத் தங்களுக்காக நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கையில், தன்னைச் சுற்றி இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவே. ஆனால் சற்றுக் கவனித்துப் பார்த்தால், பெண்களுக்காக பிரத்யேகச் சிக்கல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் முக்கியமானது, பொதுக் கழிப்பிட வசதி. கழிப்பிடங்கள் இல்லாத நிலை, போதாத நிலை, ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படாத நிலை.

மார்கெட்டிங், சேல்ஸ் போன்ற வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டிய வேலைகள் செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கக்கூட இடமில்லாத நிலை இருக்கிறது. சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்சினைகள், மூல நோய் போன்றவை இந்த பிரச்சினையோடு தொடர்புடையவை. பெண்கள் இயற்கை உபாதைகளை அடக்கி வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.

இம்மாதிரியான அடிப்படை வசதிகளுக்கே வழியில்லாத நிலையில், பெரிய பெரிய மால்கள் கட்டுவது, நூற்றுக்கணக்காக கார்கள் ஓடுவது மட்டுமே வளர்ச்சியாக ஆகிவிட முடியாது. இன்றைக்குத் தொழில்மயமாகிவரும், நகர்மயமாகிவரும் சூழலில் போக்குவரத்து வளர்ச்சி பிரம்மாண்டமாகி உள்ளது.

கணிசமான பெண்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வெளியில் செல்ல வேண்டிய நிலையில் காற்று மாசுபாடு அவர்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே, வீட்டிற்குள் உள்ள மாசுபாடுகளால் பாதிக்கப்படும் அவர்களுக்கு, இது ஒரு கூடுதலான பிரச்சினை. இப்படி தினம்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் மட்டுமல்லாது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 'வளர்ச்சி' திட்டங்களும் சூழலியல் சவால்களை விடுத்துவருகின்றன.

பெரிய அணைக்கட்டுகளுக்கான திட்டங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் எனப் பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வெள்ளம் தாக்கும் சமயங்களில் ஏழை மக்கள் அதிலிருந்து தப்ப மேட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர வேண்டிய சமயங்களில், ஆண்கள் தட்டுமுட்டுச் சாமான்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதையும் பெண்கள் குழந்தைகள், முதியோர்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொள்வதையும் ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சூழல் நலன்களுக்கான சவால்கள் பெரும்பாலும் தாய்மைக்கான சவால்களாகவே உள்ளன. இதனால்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தீவிரமாக இருக்கிறது. அங்குள்ள பெண்கள் எங்கள் குழந்தைகள் ஊனமாக பிறப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று எழுப்பும் கேள்வியில் சூழல் சீர்கேடுக்கு எதிரான தாய்மையின் கவலையும் அதைப் போக்குவதற்கான சவாலும் அடங்கியுள்ளன.

கல்பாக்கம் பகுதியில் உள்ள பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை, கர்ப்பப்பை கோளாறுகள், குழந்தை ஊனமாகப் பிறப்பது போன்ற பிரச்சினைகள் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், நகப்பூச்சு, ஷாம்பு, ஹேர் ஸ்ப்ரே, ஹேர் டை முதலான அழகு சாதனங்களாலும், வீட்டு உபயோகப் பொருட்களாலும் ஏராளமான செயற்கை வேதிப் பொருட்கள் பெண்களின் உடலில் கலந்துவிடுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

தாய்க்கும் தாயிலிருந்து பிறக்கும் குழந்தைக்கும் இந்த வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நஞ்சுக்கொடியிலிருந்து எடுத்த ஆய்வு மாதிரிகள் 230க்கும் மேற்பட்ட செயற்கை வேதிப்பொருட்கள் கலந்திருப்பதைக் காட்டின.

எனவே, சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பது என்பது மகளிருக்கு எதிரான யுத்தம் என்றே சொல்ல முடியும். உடல் நலனுக்குத் தீங்கிழைக்கும் நுகர்வுப் பொருட்களுக்குப் பெரும்பன்மையான பெண்கள் அடிமையாகிவரும் நிலையில், இது பெண்கள் தமக்கு எதிராகத் தொடுத்துக்கொள்ளும் யுத்தமாகவே இருக்கிறது.

தாய்நாடு, தாய்மண், இயற்கை அன்னை என்று நாம் பயன்படுத்தும் சொற்களில் பெண்மைக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவை அடையாளம் காண முடியும். அத்தகைய இயற்கையை வளர்க்க நாம் சிறு சிறு முயற்சிகள் மேற்கொள்வது சாத்தியமே.

சுத்தமான குடிநீர், மாசில்லாத காற்று போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வு மரம் வளர்ப்பதுதான் எனக் கூறுகிறார் 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்காரி மாத்தாய். இவர் கென்யாவில் சுமார் 300 கோடி மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமுன்ட் மாவட்டத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் அதனைக் கொண்டாடும் விதமாக அங்கு 111 மரங்கள் நடப்படுக்கின்றன. இவை அனைத்தும் குறிப்பது ஒர் எளிய விஷயம். நம்மை இயற்கை பாதுகாப்பதைவிட, நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதேதான்!

எம். ஆர். ஷோபனா



நீரால் அமையும் வாழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக