ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் கவிதைகள்

3 posters

Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 2:17 pm

பார்வை

பாதையில்
நடந்துக் கொண்டிருந்தவன்
திரும்பித்திரும்பிப் பார்த்தான்
எதற்காகத் திரும்பிப்
பார்க்கிறான் என்று
புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
பின்னால் யாரோ
அழகானப் பெண் வருவது
அவன் பார்வை
மீண்டும் பின்னால்
முன்னால் இல்லை
வேகமாய் எதிரில் வந்த
மோட்டார் பைக்காரன்
“முன்னால பார்த்துப்போடா
முண்டம்
வீட்டுலே சொல்லிட்டு
வந்துட்டியா?” என்று
கத்தினான்
அப்பத்தான்
சுய நினைவுக்கு வந்தான்
வெட்கத்துடன்
வியர்த்துக்கொட்டியது
அவன் முகம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 2:22 pm

பிரபஞ்ச ரகசியம்

*உலகில் வாழும் மானுடத்தின்
உண்மை ரகசிய மெல்லாம்
உனக்குத் தெரியுமா?
தெரியுமென்றால்,
அது அகந்தை
தெரியாது என்றால்,
அது தன்னடக்கம்
பிரபஞ்ச ரகசியம்
உணர்வது அவசியம்!



** எது, எதை, எப்படி
எடைபோட வேண்டுமென்று
நிர்ணயித்துள்ளவன் நீ
தங்கத்தை எடைபோட
குன்றிமணியை அல்லவா
பயன்படுத்த வைத்தாய்
இப்பொழுதோ
தங்கம் விலை உயர்வானது
குன்றி மணி விலை குறைவானது!



***எது தீட்டானது?
உங்கள்
உடலா? ஆன்மாவா?
பாதையோரம் ஒதுங்கி நின்று
புலையன் கேட்டக் கேள்வி
ஆதிசங்கரரை அதிர வைத்தது
இவர்களில்
யார் ஞானி?
யார் அஞ்ஞானி?

***ஆசைகள்
அழிவதில்லை
நாமே
அழிகிறோம்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 3:09 pm

அலைகளில் அலைகழிந்து...

அஸ்தியை
கடல் நீரில் – உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!

---

கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம் காலமாய்
மாலை நேரம்
விளக்கு வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும் எவரும்
கொடுப்பதில்லை
சமையல் உப்பு.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 3:10 pm

அத்துமீறும் வன்முறைகள்
ஊரெங்கும்
வெடிகுண்டு,
கலவரம், மரணம்.
பயந்து ஒதுங்கும்
மக்கள் நெரிசல்,
அத்துமீறும்
வன்முறைகள்,
அமைதியாய்
அச்சமின்றி
வேடிக்கை பார்க்கும்
உயர்கோபுரத்திலிருந்து
வெண்புறாக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 3:11 pm

உப்பு கரித்தது உதடு
இனிக்குமென நினைத்து
முத்தமிட்டான்
உப்பு கரித்தது உதடு.

பலரும் பாராட்டினார்கள்
பாட்டியின்
நாட்டு(கை) வைத்தியம்.

எழுபது வயது முதியவர்
நகைச்சுவை எழுதி அனுப்பினார்
பரிசாக் கிடைத்தது “டீ” சர்ட்.

ஒலி எழுப்பிப் பார்த்தார் ஓட்டுநர்
அசைந்து நகரவில்லை
பாதையின் குறுக்கே எருமை.

காலையில் மார்க்கெட் போகிறது
காரில் சொகுசாய்
வளர்ப்பு நாய்க் குட்டி.

ஜல்லிக்கட்டுப் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றவன்
குடும்பவாழ்க்கையில் தோல்வி.

காற்றில் மிதந்து வந்தது
மூக்கைப் பொத்தினார்கள்
தோல் கழிவுநீர் நாற்றம்.

அபாரமான பயிற்சி
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது
மோப்ப நாய்கள்.

“தண்ணி வண்டி” என
குழந்தைகள் கேலி செய்தனர்
போதையில் போகும் குடிகாரன்

தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.

குடிநீர் தொட்டியில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
குதித்து விளையாடிய அணில்.

மனிதர்களால் இயலவில்லை
கள்ள நோட்டைக்
கண்டுபிடிக்கிறது கருவி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Oct 14, 2013 3:13 pm

வளர்ச்சி
தெருக் கூத்துப் பர்த்து
மெய்சிலிர்த்து
பொழுதுபோக்கி வாழ்ந்தார்
என் தாத்தா

வானொலிப்
பெட்டிவாங்கி
பாட்டுக்கேட்டார்
என் அப்பா

கலர் டி.வி
பெட்டி வாங்கி
படம்பார்க்கிறேன்
நான்

மடிக்கணினி
வாங்கிப்பலதைப்
படிக்கிறான்
என் மகன்

கைபேசி
இன்டெர்நெட்டில்
உலக நடப்பை
அறிகிறான்
என் பேரன்

நாளை...
என்ன கருவி
புதியதாய் இருக்கும் -என்
கொள்ளுபேரன்

கைகளில்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Nov 21, 2013 5:20 pm

கருத்துரைகளுக்கு நன்றி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by jenisiva Thu Nov 21, 2013 9:23 pm

ந.க.துறைவன் கவிதைகள் 3838410834 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by N.S.Mani Thu Nov 21, 2013 11:18 pm

கொள்ளுபேரன் கைகளில்...
*********************
நன்கு பாருங்கள்
அவனது விரலில்
அதில் தெரியும்
பிரபஞ்சம்!.....
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum