புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_m10தமிழ் இலக்கியத்தில் கண்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியத்தில் கண்கள்


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sun Oct 27, 2013 8:34 pm

சிலர் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள்.அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல்நுட்பம் ‘கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம்.கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை “கண்ணப் பார்த்து பேசு மாப்ள” என்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை.அது நேர்பார்வையும் அல்ல.

ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை,அந்தக் கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டுசேர்க்கும் என்பது மிகையல்ல.

இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.

காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம்.கண்கள் இரண்டால் பாடல் சமீபத்திய உதாரணம்.ஆனால் ஆண்டாண்டு காலமாய்,இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு லயித்திருக்கிறார்கள்.

என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

திருக்குறள்... வள்ளுவர்..மிகுந்த பொறாமை கொள்ளச்செய்யும் ஒரு மனிதர் (அல்லது திருக்குறளை தொகுத்த பலர்!)மீது ஏற்படும் என்றால் அது திருக்குறள் இயற்றப்பட்ட கைகளின் மீதுதான்.

ஆம். வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை.அதில் காதல்..கண்கள்..என இப்படி

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால்,அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/பார்வை..

(தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே..அந்தத் ‘தானை’தான் வள்ளுவர் சொல்வது)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னுயிர் பறிக்கும் எமனோ,பார்க்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும் சேர்ந்ததோ அவளின் கண்கள்.

இன்றைய ‘லட்சத்திச் சொச்ச’ காதல் கவிதைகளின் மூலம் இந்தக் ‘குரல்’தானோ?

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது.ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை..மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை.

ரசனையின் உச்சம் வள்ளுவா..மீண்டு-ம் வா.தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது.

திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இருமடங்கு.

‘பூஒத்து அலமரும் தகைய; ஏஒத்து
எல்லாரும் அறிய நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட மென்தோள்,மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே’

இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக்கண்,பூவிற்கு நிகரான கண்,மருட்சியில் சுழலும் கண் என பலவகைக் கண்களுடன் ஒப்பிட்டு..தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான்.

அழகியல் அல்லது அழகியல் மட்டுமே.

தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப் பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.

...
மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்...

மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,செவ்வரிகளைக்கொண்ட குளிச்சியான கண்கள்

மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை விரியச் செய்யும் வரிகள் அவை.

காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் ‘கயல்விழியாள் என் காதலியே’ என்றி எழுதி வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி..என்று தொடங்கும் பாடலில்

...
கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர்

கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துயர் எடுப்பும்...

என்கிறார்.கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.

புறநானூற்றில் போனால் போகிறது என்று ஆணின்,சோழன் கரிகாற் பெருவளத்தானின் கண்ணை இப்படி

களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்...

என்று கண்ணை வில்லொடு கோர்க்கிறார் புலவர் கருங்குழலாதனார்.

கம்பர்...

‘நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல்’

என கண்களைக் கூர் வேலுக்கு ஒப்பிட்டுக்கூறும் கம்பர்

‘கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்’

என கடைக்கண் பார்வையின் ஆழம் பற்றி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

‘மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்’

‘கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது’

கமலச் செங்கண்ணன் ராமனை அந்த ஊர் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறதாம். பெண்ணுக்கு இணையாக ஆணையும் வர்ணித்ததில் கம்பர் தனிச் சிறப்பு பெறுகிறார்.

மையோ மரகதமோ மரிகடலோ மலை முகிலோ
அய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

என்று ராமனை வியப்பது ஒரு உதாரணம்.

மாடத்தில் நின்ற சீதையின் கண்களை இப்படி

வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்..

என்கிற கம்பர் அடுத்து,

‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்’

என்று முடிக்கிறார்.

இராமன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் சீதையின் நிலையை

‘மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்’

என்கிறார்.‘விழியில் விழுந்து இதயம் நுழைந்த’கம்ப வரிகள்..

கண்கள் பற்றி இப்படி போய்க்கொண்டே இருக்கிறது இலக்கியத்தில்.

நன்றிகள் :http://manikandanvisvanathan.wordpress.com/2010/04/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
[You must be registered and logged in to see this link.]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 9:21 pm


“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்றுபெரிது”
(திருக்குறள் – காமம் குறிப்பறிதல் 1112)

‘‘இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து’’
(திருக்குறள்-காமம் குறிப்பறிதல் 1111)

என்னும் இருபாடல்களும் காதல் குறிப்பறிதலில் கண்ணின் பங்கைச் சிறப்பிக்கின்றன.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 29, 2013 11:03 pm

நந்தகோபால் நல்ல தலைப்பைக் காட்டியுள்ளார் ! ‘இலக்கியத்தில் கண்’ என்ற எனது நூலைப் (பழைய ஸ்டார் பிரசுரம், சென்னை) படித்தால் இப் பொருளை நன்கு உணரலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 30, 2013 8:19 am

சில கண்களைப் பார்த்தால் பின்னங்கால் பிடரில பட ஓட வேண்டி இருக்கு, அவ்வளவு பயங்கரம். என்னுடைய தினசரி அனுபவம்ங்க.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக