புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_m10வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடந்தாங்கலில் ஒரு நாள் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Wed Oct 09, 2013 9:35 pm

" வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும் இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது .

வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது . பறவைகளை தங்கள் குழந்தைகள் போலே பாவித்து , அவைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் . இந்த கிராம மக்களின் இந்த உயர்ந்த பண்பால் தான் நமக்கு இந்த சரணாலயம் கிடைத்துள்ளது . 1962 முதல் இந்தச் சரணாலயம் வனத்துறையின்
கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது .

வேடந்தாங்கல் சரணாலயம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கல்பட்டிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் சென்று விடலாம் . நானும் எனது நண்பனும் சென்னையிலிருந்து சென்றோம் . பறவைகளின் உலகைக் காண மிகுந்த ஆவலுடன் செங்கல்பட்டு வரை மின்சார ரயிலிலும் , செங்கல்பட்டிலிருந்து பேருந்திலும் சென்றோம் . பேருந்தில் செல்லும்போதே சரணாலயம் எங்கு இருக்கிறது என்று அறிய முடிந்தது . காரணம் ,சரணாலயம் இருக்கும் இடத்தில் நிறைய பறவைகள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன .

நவம்பர் முதல் ஜூன் வரை பறவைகளைப் பார்க்க முடியும் . டிசம்பர் மாதம் பறவைகளைக் காண மிகச்சிறந்த மாதம் . காலை 6 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அதிக பறவைகளைக் காண முடியும் . அதற்குமேல் இரை தேடச் சென்றுவிடும் . மாலை 5 க்கு மேல்தான் மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் . அதிகாலை அல்லது மாலை பொழுதில் அங்கு இருக்கும் வரையில் நம் பயணத்திட்டம் அமைய வேண்டும் . நாங்கள் காலை 9 மணிக்குத்தான் அங்கு சென்றோம் .சொந்த கிராமத்துக்குச் சென்றது போல உணர்ந்தோம் . சுற்றுலாப் பகுதி என்பதற்க்கான அடையாளம் சிறிது கூட இல்லை . இந்நிலை தொடரட்டும் . நபருக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் . 9 மணி ஆனபோதும் நீரில் இருந்த மரங்களில் நிறைய பறவைகள் இருந்தன . பறவைகளை காண்பதற்கு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது . அதில் வனத்துறை சார்பில் பைனாகுலர் மூலம் பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது . பைனாகுலர் மூலம் பறவைகளைக் காண்பது ஒரு நல்ல அனுபவம் .

வனத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது . உணவு மட்டும் நாம் கொண்டு சென்றுவிட வேண்டும் .
மாலையில் கூட்டுக்குத் திரும்பும் பறவைகளைப் பார்த்த பிறகுதான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து நாள் முழுவதும் அங்கேயே தங்கினோம் . எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம் . மதிய உணவு கொண்டு செல்லவில்லை . 50 ரூபாய்க்கு வாங்கிய நுங்கு தான் மதிய உணவு . காலியாக இருந்த இடத்தில் கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கினோம் . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்ட எங்கள் காதுகளுக்கு இன்று நல்ல விருந்து , இடைவிடாமல் நாள் முழுவதும் பறவைகளின் ஒலிகளை உண்டு மகிழ்ந்தன .

குறைந்த உயரம் முதல் அதிக உயரம் வரை வானத்தில் பறவைகள் வட்டமாக
பறந்து கொண்டிருந்தன . படுத்துக்கொண்டே காரணத்தை ஆராய்ந்தபோது இரை தேடச் சென்ற மற்ற பறவைகளுக்கு இருப்பிடத்தை உணர்த்தவே அவை இவ்வாறு ( கலங்கரை விளக்கம் போல சரணாலய விளக்கமோ ! ) பறப்பதாக உணர்ந்தோம் . கிளைடர் விமானம், இவை பறப்பதைப் பார்த்துதான் உருவாக்கி இருக்க வேண்டும் . அவ்வளவு அழகாக காற்றில் மிதக்கின்றன .பல்வேறு வகையான பறவைகள் இருந்தன .

பாம்பு பறவை ( Snake Bird ) அவ்வளவு அழகு . நீருக்குள் மூழ்கி மீனைப் பிடிக்கிறது . மீனைப் பிடித்தவுடன் கரைக்குச் சென்று மீனை உண்ணுகிறது . பறவைகள் தண்ணீரின்மேல் இறங்கும் முறை அவ்வளவு அழகு . பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது . பார்த்துக்கொண்டே தான் இருந்தோம் .

வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் பேசினோம் . இந்தப் பறவைகள் மற்றும் அங்கு இருந்த குரங்குகள் , இவற்றை தங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள் . இவற்றுக்கு யாரும் எந்த தீங்கும் செய்வதில்லை . அவர் சினிமா பார்த்து 20 வருடங்கள் ஆகின்றதாம் ( கொடுத்து வைத்தவர் !) . விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் . தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது . இதற்குத் தீர்வு ?

மாலை 5 மணிக்கு மேல் இரை தேடச் சென்ற பறவைகள் கூட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தன . நான்கு திசைகளிலும் இருந்து ஏராளமான பறவைகள் பறந்து வந்து கொண்டே இருந்தன .6 மணி வரை பறவைகள் வருவதை பார்த்துவிட்டு
வெளியே வந்தோம் . பேருந்துக்கு இன்னும் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருந்த வயல்வெளிக்குச் சென்றோம் . எங்கள் கண்களே எங்களால் நம்ப முடியவில்லை . தூக்கனாகுருவிகளைப் பார்த்தோம் . ஆமாம் , 15 வருடங்களுக்குப்பிறகு இப்போது தான் நான் அவற்றைப் பார்த்தேன் . அவை ஒரு பனைமரத்தில் கூடுகள் கட்டியிருந்தன . சில பறவைகள் கூடு கட்டிகொண்டிருந்தன . எங்களைப் பார்த்ததும் நிறைய பறவைகள் அருகில் இருந்த மின்சாரக்கம்பியில் போய் அமர்ந்தன . ஒரு சில பறவைகள் மட்டும் தொடர்ந்து கூடு கட்டிக் கொண்டிருந்தன . மின்சாரக்கம்பியில் அமர்ந்து இருந்த பறவைகள் தொடர்ந்து ஒலி எழுப்பின . அதைத் தொடர்ந்து மிஞ்சிய பறவைகளும் மின்சாரக் கம்பிக்குச் சென்றன . நாங்கள் அந்த மரத்தை விட்டு கொஞ்ச தூரம் வந்ததும் , சில பறவைகள் மட்டும் மரத்திற்குச் சென்றன . அவை சைகை ஒலி எழுப்பியவுடன் அனைத்து பறவைகளும் மீண்டும் மரத்திற்கு வந்தன . என்ன ஒரு எச்சரிக்கை உணர்வு !

தூக்கனாகுருவி மட்டுமல்ல நம் ஊரில் அழிந்து வரும் பறவைகளான ரெட்டை வால் குருவி , தைலன் குருவி , மைனா , காடை ,மற்றும் செம்பூத்து போன்றவற்றைக் கண்டோம் . பல வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டாம்பூச்சிகளையும் காண முடிந்தது . 6 . 15 குப் பிறகு மீண்டும் சரணாலயத்தின் உள்ளே சென்றோம் . நம்ப முடியாத எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பறவைகள் எல்லாத்திசைகளிலும் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பறந்து வந்து கொண்டே இருந்தன . ஜூன் மாதத்தில் இவ்வளவு பறவைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை .

இவ்வாறு பறவைகள் பறந்து வந்தது " Fly Away Home " என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நினைவு படுத்தியது .

இப்படி ஒரு வாய்ப்பை இழக்க இருந்தோம் . 6 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராத காரணத்தால் எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது . இந்த முழு நாளையும் 6 மணிக்குப் பிறகான நிமிடங்கள் முழுங்கி விட்டன . எவ்வளவு பறவைகள் ! . சூரிய உதயத்தில் புதிய நாளைத்தொடங்கி சூரிய மறைவில் முடிக்கின்றன . இந்த பறவைகளைப் போல் தானே முன்பு நாமும் இருந்தோம் .பறவைகள் விதைப்பதும் இல்லை ;அறுப்பதும் இல்லை !

பிரிய மனமில்லாமல் சரணாலயத்தை விட்டு வெளியே வந்தோம் . அப்போது ஒரு குறுந்தகவல் வந்தது " இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ( World Environment Day )" என்று . இவ்வளவு பொருத்தமான நாளில் பறவைகளின் உலகைக் கண்டது மேலும் களிப்பை உண்டாக்கியது . அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன் !

http://jselvaraj.blogspot.in/2011/06/blog-post_05.html

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 8:52 am

வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 103459460 
-
வேடந்தாங்கலில் ஒரு நாள் ! JKa3zNsjTieKiPkN90o3+grey-theron-in-vedanthangal

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 10, 2013 12:32 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 10, 2013 12:48 pm

பகிர்வுக்கு நன்றி வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 3838410834 வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 103459460 வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 10, 2013 1:07 pm

வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 3838410834 வேடந்தாங்கலில் ஒரு நாள் ! 3838410834 



அன்புடன் அமிர்தா

வேடந்தாங்கலில் ஒரு நாள் ! Aவேடந்தாங்கலில் ஒரு நாள் ! Mவேடந்தாங்கலில் ஒரு நாள் ! Iவேடந்தாங்கலில் ஒரு நாள் ! Rவேடந்தாங்கலில் ஒரு நாள் ! Tவேடந்தாங்கலில் ஒரு நாள் ! Hவேடந்தாங்கலில் ஒரு நாள் ! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக