புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_m10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_m10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_m10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_m10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_m10ஆதாயத்துக்காக ஆதார்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாயத்துக்காக ஆதார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 11, 2013 9:14 am

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து அவசரச் சட்டத்தில் அவமானப்பட்டது போதாதென்று, இப்போது ஆதார் அட்டை விவாகரத்திலும் நீதிமன்றத்துக்கு எதிராகவே செயல்படுகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும் அதே நாளில், ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிப்பதெனவும், இதற்கான மசோதாவை குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வமான அதிகாரம் அளிப்பதன் மூலம், அரசு மானியம், அரசு சலுகைகள் எதுவும் ஆதார் அட்டை இல்லாமல் சாத்தியமில்லை என்பதை அரசு உறுதிப்படுத்துகிறது.

வேடிக்கை என்னவென்றால், ஆதார் அட்டைத் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடையாது. 2010-இல் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிராகரிக்கப்பட்ட திட்டம் இது.

தற்போது அரசு ஓய்வூதியம் பெறுவோரும் பி.எப். ஓய்வூதியம் பெறுவோரும் தங்கள் வங்கிக் கணக்கின் மூலம்தான் பணம் பெற்று வருகின்றனர். இதில் எந்தவிதமான நடைமுறைச் சிக்கலும் இல்லை. வருமான வரித் துறையிடம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து, பிடித்தம் செய்த வரியைத் திரும்பக் கோருபவர்களுக்கு, அவர்களுக்கான தொகை, வங்கி மூலமாக நேரடியாகச் செலுத்தப்படும் நடைமுறை தொடங்கியாகிவிட்டது. நிலைமை இதுவாக இருக்க, மானியம், சமூக நலப் பயன்கள் பெற அனைவருக்கும் ஆதார் அட்டையை இந்திய அரசு ஏன் வலியுறுத்த வேண்டும்?

எல்லாத் தொகையையும் நேரடியாக தாங்கள் கொடுப்பதாக மக்களை உணர வைப்பதற்கு காங்கிரஸ் செய்யும் முயற்சிதான் இது. வெள்ளச் சேதம், வறட்சி என்கிற பெயர்களில் அரசுப் பணத்தை நிவாரணமாக வழங்கி வாக்குகளைப் பெறும் உத்தி போன்றதுதான் இதுவும்.

அடுத்த மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்குள், குறைந்தபட்சம் சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் அனைவருக்கும் மானியத்தை ரொக்கப் பணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் கொடுத்துவிட வேண்டும் என்ற உந்துதலும், எப்படியும் அதை ஒரு சாதனையாகப் பட்டியலிட வேண்டும் என்ற எண்ணமும்தான் ஆதார் விவகாரத்தில் இத்தனை அவசரம் காட்டுவதற்கு காரணமாக இருக்க முடியும். இதுதான் அரசின் நோக்கம் என்றால், தற்போது சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றிருக்கும் நபர்களுக்கு, அந்தந்த சமையல் முகவர்கள் மூலமாகவே அடையாள அட்டை படம் எடுத்து அந்த மானியத்தை வழங்கி விடலாமே, ஆதார் அட்டை எதற்கு?

சென்ற ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டில் ஆதார் புகைப்படம் எடுத்தவர்கள் எண்ணிக்கை 66.8 லட்சம் பேர் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைத்துவிடவில்லை. இந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயம் என்று சொல்வதன் மூலம் தேவையற்ற மனக்கலக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எந்தப் பயனும் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை.

கைரேகை, கருவிழி அடையாளங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான அடையாள அட்டை (பயோ மெட்ரிக் அட்டை) அனைவருக்கும் வழங்கப்படுவதில், இன்னும் சில பிரச்னைகளும் உள்ளன. அனைத்து குடிமக்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அரசு சேகரித்து வைத்துக் கொள்வது என்பது, குடிமக்களைக் கண்காணிக்க அரசால் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்? குடிமகனின் தனிமனித சுதந்திரத்தை அது பறிப்பதாக ஆகாதா? அதில் என்ன தவறு என்று கேட்கும் நடுத்தரவர்க்க, பட்டணத்து, படித்த வர்க்கத்தினர், அவர்கள் கண்காணிக்கப்படும் நிலைமை வரும்போதுதான் அதன் கடுமையை உணர்வார்கள். நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வுடன் உலவும்போதுதான் அதன் தாக்கம் புரியும்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஊடுருவி இருக்கும் லட்சக்கணக்கான (கோடிக்கணக்கான?) பாகிஸ்தான், வங்கதேச குடிமக்கள், ஆதார் அட்டையைப் பெற்று, குடியுரிமை பெற இது வழிவகுக்கப் போகிறது. தேசியப் பாதுகாப்புக்கு "ஆதார்' அட்டை உதவும் என்பதைவிட இதுவே ஆபத்தாக முடியும் வாய்ப்புதான் அதிகமாகவே இருக்கிறது.

எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக, தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த அட்டைகள் வழங்கப்படும்போது, தனிமனிதர்களின் அத்தனை விவரங்களும் அந்தத் தனியார் நிறுவனத்திடமும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆதார் அட்டை கட்டாயம் என்பது முட்டாள்தனம். ஆதார் அட்டை என்பதும், நேரடி மானியப் பட்டுவாடா என்பதும் அரசியல்தானே தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை அல்ல! - தினமணி தலையங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 9:18 am

அரசியல்ல இதெல்லாம் சகஜமாப்பா..!
-
வெறென்ன சொல்றது...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 11:43 am


ஆதார் அட்டை எதற்கு?

ஆமா எதுக்கு?




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 11, 2013 11:51 am

ஆதார் அட்டை இல்லை அவர்களின் ஆதாய அட்டைன்னு சொல்லுங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக