ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

4 posters

Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by சிவா Mon Oct 07, 2013 3:49 am


குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், அவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற ஷரத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இருந்தது. இதன்மூலம், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் செய்து விட்டு, பதவியில் தொடர்ந்து வந்தனர். சமீபத்தில், அந்த ஷரத்தை அதிரடியாக ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட், பரபரப்பு தீர்ப்பு கூறியது.இதையடுத்து, குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இந்த இக்கட்டில் இருந்து, அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று, விரும்பிய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை அவசர அவசரமாக, ஜனாதிபதி ஒப்புலுக்கு அனுப்பி வைத்து விட்டு, அமெரிக்கா சென்றுவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கிடையில் நடந்த திருப்பங்கள், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தை, காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்திவிட்டது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'அவசர சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்' என, பகிரங்க பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். லாலு போன்ற ஆதரவு தலைவர்களை காப்பாற்றவே, இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக, பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின.அதன் விளைவுதான், ராகுலின் கோபமும் எதிர்ப்பும்.

இப்பின்னணியில், தீர்ப்பு குறித்தோ அல்லது அவசர சட்டம் குறித்தோ, தி.மு.க., இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, சர்ச்சை ஏற்படுத்திய ராகுல் பேட்டியும், அக்கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை என்பது இப்போது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மிகவும் அவசரப்பட்டு விட்டது என்றும், நிதானத்துடன் இந்த பிரச்னையை அணுகியிருக்கலாம் என்றும், தி.மு.க., தலைமை கருதுவதாக தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, 'அப்செட்'டான தி.மு.க., தலைவர், அறிவாலயம் வராமல் வீட்டிலேயே இருந்த தகவலும், அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், கனிமொழியும், ராஜாவும் வழக்கை சந்தித்து வருகின்றனர். தொலைபேசி முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதியும் சிக்கியுள்ளார். மூவரும் எம்.பி.,யாக இருக்கும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, அவர்களது பதவிக்கு மட்டுமல்ல; எதிர்கால அரசியலையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்ற கவலை, தி.மு.க., வட்டாரத்தை தொற்றி உள்ளது.

ஏற்கனவே, '2ஜி' வழக்கு விவகாரங்களில் காங்கிரசின் போக்கு பிடிக்காமல் இருந்த தி.மு.க., தலைமைக்கு, அவசர சட்டமும், அது வாபஸ் பெறப்பட்ட விதமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வுக்கும் சிக்கல்:

பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வழக்கு. அதனால் தான், இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் தி.மு.க., உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் காரணமாக, அரசியல் குறுக்கீடு, அதை முறியடிக்க நீதிமன்றத்தின் தலையீடு என அடுத்தடுத்து, திருப்பங்களை சந்தித்து வரும் வழக்காக இது மாறி இருக்கிறது.இந்நிலையில், 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் தீர்ப்பு கூறப்படலாம் என்ற நிலை உள்ளது.அதன் விளைவாக, அரசு வக்கீல் திடீர் நீக்கம், பின், மீண்டும் நியமனம் என்ற பரபரப்புகளுடன் விசாரணை தொடர்கிறது. அதோடு, வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், வரும், 30ம் தேதி நீதிமன்றததில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றவரை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சுப்ரீம் கோர்ட் உத்தரவும், அதை, ரத்து செய்ய கொண்டு வந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதும், பெங்களூரு வழக்கின் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும், தி.மு.க., இளைஞரணி தலைவர் ஸ்டாலின் (மேம்பால ஊழல் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை), பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் (முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை சதி வழக்கு.

ஸ்டாலின், ராமதாஸ், வைகோ:

முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை. ஆனாலும், சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது), ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ (நிலுவையில் உள்ள பொடா சட்ட வழக்கு), முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி (மருத்துவ கல்லுாரி அனுமதி வழங்கியதில் முறைகேடு) ஆகியோர் மீதும் (இவர்கள் எந்த பதவியிலும் தற்போது இல்லை), தி.மு.க., - அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதும் (வருமானத்தை மீறி சொத்து குவிப்பு) வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளின் தீர்ப்பு, இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமலர்


அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by ayyasamy ram Mon Oct 07, 2013 5:59 am

அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by Muthumohamed Mon Oct 07, 2013 3:25 pm

நல்லா கலங்கட்டும் அவர்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Uஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Tஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Hஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Uஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Oஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Hஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Aஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Mஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Eஅவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by சிவா Mon Oct 07, 2013 3:35 pm

ayyasamy ram wrote:அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
சரியான தீர்ப்பு!


அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by அசுரன் Mon Oct 07, 2013 6:33 pm

மக்களே சரியான தீர்ப்பையும் தந்துவிடலாம். அது ரொம்ப சுலபம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Empty Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum