ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலம் தரும் பழங்கள்

2 posters

Go down

பலம் தரும் பழங்கள் Empty பலம் தரும் பழங்கள்

Post by shenbagakumar Fri Oct 04, 2013 7:15 am

காய்கறி, பழங்களின் நிறங்கள்..... பலன்கள்!

காய்கறி, பழங்களைத் தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் முக்கியமானது... என்ன நிறத்திலான காய்கறி- பழங்களை உட்கொள்கிறோம் என்பதுதான். ஒவ்வொரு நிறத்திலான காய்கறிகளும் பழங்களும் தங்களுக்கு எனத் தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களையும், பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ணக் கலவையான காய்கறி- பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்சத்தைப் பெற முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கே.ராதிகா. அவர் சொல்லும் பல வண்ணப் பழங்களின் பலன்கள் இங்கே....



சிவப்பு நிறம்

சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட்.

சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நீலம் மற்றும் ஊதா நிறம்

திராட்சை, நாவல் பழம், பிளம் பழம், கத்தரிக்காய்.

லுடீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட் உள்ளிட்டவை இவற்றில் நிறைந்து உள்ளன. இந்த ஊட்டச் சத்துக்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்தல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், செரிமானத்திற்கு உதவுதல், கால்சியம் உள்ளிட்ட சில தாதுஉப்புக்களை உடல் கிரகிக்க உதவுதல், வீக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றன. ஃபிளேவனாய்டுகள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகொண்டவை. மேலும், இவை மறதி நோயில் இருந்தும் பாதுகாக்கக்கூடியன.

பச்சை நிறம்

பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ்.

குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில் உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன. காய்கறி- பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோஃபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறதாம். எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.

மஞ்சள் ஆரஞ்சு நிறம்

மாம்பழம், அன்னாசிப்பழம், கமலா ஆரஞ்சுப்பழம், கிருணிப்பழம், பூசணி, எலுமிச்சை போன்ற பழங்களும், மஞ்சள் தானியமான மக்காச்சோளமும் அதிக அளவில் பீட்டா கரோட்டின், ஃபிளேவனாய்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வயதாகும்போது ஏற்படும் திசுக் குறைபாடுகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. திசுக்களுக்கு இடையேயான தொடர்பையும் வலுப்படுத்துகிறது.
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

பலம் தரும் பழங்கள் Empty Re: பலம் தரும் பழங்கள்

Post by mohu Fri Oct 04, 2013 11:39 am

தகவலுக்கு நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum