ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீர்மலை

Go down

திருநீர்மலை Empty திருநீர்மலை

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Oct 04, 2013 12:41 am

திருநீர்மலை 3345239_m

http://godsprophetcenter.com/cgi-bin/photoalbum/view_album/258571

நீர் வண்ணப்பெருமாள் !

ஆதியிலே இந்த மலையைச்சுற்றிலும் வெள்ளமாக நிறைந்திருந்தது ! தண்ணீராக நாராயணன் இருந்ததால் இது திருநீர்மலை எனப்பட்டது !

ஆதி என்பது பல யுகங்களுக்கு முன்பு ! தமிழகத்தின் பல இடங்களில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களை ஒரு காலகட்டம் என எடுத்துக்கொள்ளக்கூடாது !

திரு நீர் மலை என்பது மிகவும் ஆதியான ; கடவுள் பூமியை படைத்ததான ஒரு காலகட்டத்தை குறிப்பிடுவதாக எனக்கு தோன்றுகிறது !

யூதரகளுக்கு தவ்ராத் என்றொரு வேதம் மோசே என்பவருக்கு கடவுளால் அசரீரியாக சொலப்பட்டு எழுதப்பட்டது ! இதை பைபிளில் கிரிஸ்தவர்களும் ஒட்டி வைத்துக்கொண்டுள்ளனர் !

இதில் பூமியின் படைப்பு பற்றி ஆதியாகமம் என சொல்லப்பட்டுள்ளது !

ஆதியாகமம்

1 அதிகாரம்

   1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

   2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.


அதாவது பூமி வெறுமையாக தண்ணீரால் நிறைந்திருந்தது ! ஆங்காங்கே மலை முகடுகள் தென்பட்டன ! தண்ணீரின் ஆழத்தில் இருள் இருந்தது ! தண்ணீரின் மீது கடவுளின் ஆவி அசைந்துகொண்டிருந்தது !

இந்த பவ்தீக வெளிப்பாடு எப்படி நடந்திருக்கும் ?

கடவுள் அளவில்லாத ஆவி உள்ளவர் ! முற்றுயிர் !

மனிதன் முதலான அனைத்து ஜீவராசிகளும் அவற்றிர்க்கு உயிர் இருக்கும் வரை மட்டுமே இயங்கும் அது வெளியேறினால் மடிந்து ஜடமாகி அழுகி மக்கிவிடும் ! அந்த உயிர் கடவுளின் ஆவி ! முற்றுயிரிலிருந்து எனக்குள் வந்தது ! என்னில் சாட்சியாய் இருந்து என்னை வாழவைப்பது ! ஆனாலும் எனால் கரை படியாமல் நிர்க்குணமாக இருப்பது ! ஆனாலும் அது எனது உயிரல்ல ! என்னை விட்டு உயிர் பிரிந்தால் என் ஸ்தூலசரீரம் அழிந்தாலும் சூக்கும சரீரமாகிய எனது ஆத்மா அழியாது அதுவே நான் ! இன்னொரு பிறவிக்குள்ளாக கடந்து செல்லும் ! அந்த இன்னொரு பிறவியில் எனக்குள் ஏற்கனவே இருந்த ஆவிதான் வரவேண்டும் என்று அவசியமில்லை !

இதை ஏன் சொல்லிகிரேனென்றால் உலகத்தார் குறிப்பிடுவது போல உயிரை எனது உயிர் நான் என்று சொல்லமுடியாது ! அது அரூப கடவுளின் ஒரு துளி ஆவி !

ஒரு மனிதனிடம் இருக்கும் பொருட்களில் கடவுளை மிகவும் அண்டிய ஒரு பொருள் அவனது உயிர் ! அது சாட்சாத் கடவுளின் ஒரு துளி ! அதானால்தான் உயிரில் ஒன்றி தியானித்தால் கடவுளின் ஐக்கியம் விரைவில் சித்திக்கும் என்பது அத்வைத வேதாந்த ரகசியம் ! கடவுள் எனக்குள்ளாகவே இருக்கிறார் என்பது சூத்திரம் ! அகம் பிரமாஸ்யாமி !

ஆனால் உயிரை நான் என்பதாக குழப்பி நான் பிரம்மம் என்றும் ; நானே கடவுள் என்றும் மாயாவாதிகள் ; நவீன நாத்திகவாதிகள் குழப்பி தங்களை அத்வைதிகளாக ஞானமார்க்கத்தில் திளைப்பவர்களாக அலட்டிக்கொள்வது அஞ்ஞானம் !

நான் ஆத்மா ! சூக்குமமான சரீரி ! பல பிறவிகளில் பல பாவ சாபங்களை சேர்த்துவைத்துக்கொண்டிருப்பவன் !

நான் எடுக்கும் ஸ்தூல சரீரத்தை தேராக வைத்து இயங்கிக்கொண்டிருப்பவன் ! அதை நான் எனவும் நம்பிக்கொண்டிருப்பவன் !

நான் எத்தனை அக்கிரமங்கள் செய்தாலும்  எனது உடலும் ஆத்மாவும் கறைபடுமே தவிற எனக்குள் இருந்து என்னை வாழவைக்கும் உயிர் கறைபடுவதில்லை ! அது சாட்சியாக மட்டுமே இருக்கும் !

தத்வமஸி !!

அது நானாக இருக்கிறது ! ஆனால் நானல்ல !!

அது எனக்குள்ளாக இருக்கிறது ! தூய்மையானது ! கடவுளின் இயல்பானது ! அரூபி !

ஆனால் ரூபியாகிய எனது ஆத்மாவும் சரீரமும் பாவகறை உள்ளது !

இங்கு படைப்பு காலத்தில் வெற்றிடத்தில் அரூபியான கடவுள் முதலாவது பூமியும் வாணமும் உண்டாவதாக என்று பேசினார் ! அவரிடமிருந்து வெளிப்பட்ட சத்தமே நாராயணன் ! ரூபி ! பரமாத்மா ! அதற்குள்ளாக சகல ஜடங்களும் ஜீவராசிகளும் தோன்றி நிலைத்து அவருக்குள்ளாகவே அழிகின்றன ! ஒன்று வேறொன்றாய் மாறியும் செல்லுகின்றன !

அந்த வெளிப்பாடு இரண்டாம் வசணத்தில் சுட்டப்பட்டுள்ளது !
அதை விஞானப்பூர்வமாக விளக்கவும்கூடும் !

கடவுள் பேசியவுடன் என்ன நடந்திருக்கும் !

கடவுளின் அளவில்லாதா ஆவி ஓரிடத்தில் குவிந்திருக்கும் ! ஆவி குவிந்து உள்ளுக்குள் அழுத்தம் அதிகரித்து குளிர்ந்திருக்கும் ! காற்றை அழுத்தினால் அது குளிர்ந்து  தண்ணீராக மாறிவிடும் ! சூடேற்றினால் விரிந்து ஆவியாக மாறிவிடும் !

அதுபோல கடவுளின் ஆவி மையத்தில் ஜலமாக மாறியது !

தண்ணீரின் மையத்தில் அழுத்தம் அதிகரித்து குளிர்ந்து ஜலம் திடப்பொருளாக பூமியாக மாறியது !

பூமி ; பூமியைச்சூழ்ந்து ஜலம் ; அதைச்சூழ்ந்து தேவ ஆவி - அதாவது கடவுளின் ஆவி - முற்றுயிர் ! அரூபி - அது தூய்மையானது !

ஆனால் ரூபமான ஜலத்தின் ஆழத்தில் இருள் இருந்தது ! மாயை ! அஞ்ஞானம் ! அல்லது ஒவ்வொரு தீய குணத்திற்குரிய அசுர ஆவிகள் !

கிணற்றில் தண்ணீரின் ஆழத்தில் வெளிச்சம் இருக்காது ! இருளிருக்கும் !

அவ்வாறே ரூபத்தின் ஆழத்தில் இருள் பாவங்கள் வந்துவிடுகின்றன !

இவ்வாறே மனிதனிலும் ! அவனில் உள்ளுறையும் அரூப உயிர் தூய்மையாக இருந்தாலும் அவனது ரூப ஆத்மாவும் சரீரமும் தூய்மையற்றதாக இருக்கிறது !

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்;

நமது பூமியை சுற்றி இருக்கிற காற்று மண்டலம் வாணம் ! அத்ற்கு வெளியே வெற்று வெளியில் பிரபஞ்சத்தில் எண்ணிறந்த நட்சத்திர மண்டலங்கள் உள்ளன ! இந்து ஆன்மீகம் ஏழு லோகங்கள் இருப்பதாகவும் சொல்லுகிறது ! இவை அனைத்தும் இந்தப்பூமியிலிருந்தே உண்டாக்கப்பட்டன என்பது எனது கருத்து !

நான் மீண்டும் சொல்கிறேன் ! சகலமும் நாராயணனுக்குள் நாராயணனிலிருந்தே உண்டாகின்றன ! அப்படியானால் முதாலாவது உண்டான இந்த பவ்தீக வெளிப்பாடாகிய பூமியிலிருந்துதான் மற்ற சகலமும் உண்டாயிருக்கவேண்டும் !

பூமியை சூழ்ந்திருந்த ஆழ்மான ஜலத்தை ஆகாய விரிவை உண்டாக்கி ஜலத்தினின்று ஜலத்தை பிரித்தார் அதாவது சிதரடித்தார் ! ஜலம் சிதரி ஆங்காங்கே நட்சத்திரங்களாக கோள்கலாக மாறின !

இந்தப்பூமியிலிருந்துதான் சகல நட்சத்திர மண்டலங்களும் சிதரி உண்டாகி பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லுகிறது !

விஞ்ஞானிகள் பிக் பேங்க் தியரி பெருவெடிப்பு மூலம் இந்தப்பிரபஞ்சம் உண்டானதாக விளக்கம் சொல்லுகின்றனர் !

அதில் ஒரு பெரிய தீக்கோளம் - நெபுளா ஆதியில் இருந்ததாக வைத்துக்கொள்ளுங்கள் என நம்பிக்கொண்டு அது வெடித்து சிதரி இப்படி பிரபஞ்சம் பூமி உண்டானதாக விளக்கம் அளிக்கின்றனர் !

நெபுளா வெடித்ததால் எப்படியெள்ளாம் பிரபஞ்சம் உற்பத்தியானது என்பதை விளக்கினாலும் நெபுளா ஆதியிலே எப்படி அங்கு வந்தது என்பதற்கு பதில் இல்லை !

ஆனால் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட வேதம் விஞ்ஞானப்பூர்வமாகவே கடவுள் பூமியையும் பூமிக்காக மற்ற நட்சத்திரங்களையும் எப்படி படைத்தார் என்பதை விளக்குகிறது !

பூமியிம் நட்சத்திர மண்டலங்களும் அதில் மனிதனை படைத்து பாவபுண்ணியத்தில் அவன் தவித்து தன்னையு கடவுளையும் உணர்ந்து தூய்மையை நோக்கி வெளிச்சத்தை நோக்கி அவன் வரவேண்டும் என்பதற்காகவே !

மீண்டும் சொல்கிறேன் ! முழு படைப்பும் சிருஸ்டியும் மனிதனுக்காகவே !

மனிதனை படைத்து அவன் வாழுவதற்காகவே பூமியையும் அதற்கு வெளிச்சம் வழங்க நட்சத்திர மண்டலங்களையும் கடவுள் உண்டாக்கினார் ! ஜீவாத்மாவாகிய மனிதன் பரமாத்மாவுடன் ஒன்றும் வரை அவன் பாவபுண்ணியங்களுக்கேற்ற வாசஸ்தலங்களாக மற்ற லோகங்களையும் உண்டாக்கினார் ! தேவர்களையும் அசுரர்களையும் நாராயணனிலிருந்தே படைத்து மனிதர்களில் ஆளுகை செய்து குருசேத்திர யுத்தம் நடைபெற்று ஆத்மாக்கள் தெளிவடைய வைத்துள்ளர் !

3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்;

9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

இந்த மனிதனே தன்னை உணர்ந்து தெளிந்து பாவக்கறைகளை களைந்து அசுர ஆதிக்கத்திலிருந்து தன்னை விடிவிக்க நாராயணன் மூலமாக கடவுளை முழு சரணாகதி அடைந்து ஜீவன் முகதனாக மரணமில்லாபெரு வாழ்வு - ஒளிதேகம் பெற்று சூக்கும சரீரியாய் வைகுண்டத்தை அடையமுடியும் !

அத்ற்கு அந்த நாராயணனே சற்குருவாக அவதரித்த ராமர் கிரிஸ்ணர் இயேசு உபதேசங்களை கைக்கொள்வது வேதமே சரீரமாகிய அவர்களின் மீது குருபக்தி பிரேமை வளர்த்துக்கொள்வது அவசியம் !

திருநீர்மலை அத்தகு வேத உபதேசத்தின் அடையாளமாகும் !

இவ்வளவு ஆதிமகிமை நிறைந்த இம்மலையில்

கிடந்தான் -- ஜடமாக

நடந்தான் -- ஜீவராசிகளாக

நின்றான் -- பிறப்புஇறப்பு சக்கரத்தில் ஓடிக்கொண்டே இருக்காமல் தன்னை உணரும் படியாக ஜீவர்களை நிருத்துபவனாக

இருந்தான் -- அவர்கள் உள்ளத்தில் மெய்ஞானமாக மலர்ந்து அவர்களை பக்தியோகத்தில் ஆழ்பவனாக - சற்குருவாக அமர்ந்தவனாக

நாராயண தத்துவம் விளக்கப்பட்டுள்ளது !

ஆனாலும் அஞ்ஞானிகளும் அசுர சீர்கேட்டின் அச்சாணிகளுமான சிணிமாக்காரர்கள் இம்மலையை ஓடிப்போய் கலியாணம் செய்யுமிடமாகவும் அடிதடி கலட்டா செய்யுமிடமாகவும் சித்தரித்துக்கொண்டிருப்பது அடியேனை நோகச்செய்கிறது !

பணப்புழக்கத்தாலும் போக மோகத்தாலும் சமூக சீர்கேடுகளான சிணிமாக்காரர்களை கடவுள் கடுமையான கரத்தால் பீடித்து திருத்தட்டும் என வேண்டிக்கொள்வோம் !

நீர்வண்ண மேனியனின் சமுகத்தில் நல்ல தியான சக்தி உள்ளது ! ஞானத்தால் நாடி செல்வோருக்கு அது மகிமை நிறைந்த ஸ்தலமுமாகும் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum