ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திராலயம் - சில நினைவலைகள் !!

Go down

மந்திராலயம் - சில நினைவலைகள் !! Empty மந்திராலயம் - சில நினைவலைகள் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Oct 04, 2013 12:28 am

மார்ச் 26 ; 2013 10 மனியளவில் மந்திராலயம் நானும் எனது மைத்துனரும் சென்று சேர்ந்தோம் ! எனது மைத்துனர் ஹிந்தி தெரிந்தவர் ஆதலால் பயணம் எளிதாக இருந்தது !

தமிழகம் தாண்டி விட்டாலே யாரும்சரளமாக ஹிந்தி பேசுகிறார்கள் !

கடுமையான வறண்ட பிரதேசங்கள் - எப்படித்தான் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ என்பதாகவே இருந்தது

காய்ந்து நிற்கும் பருத்தி செடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்த்துள்ள பருத்தி விவசாயம் அல்லது தரிசைத்தான் மந்திராலயம் சுற்றிலும் காணமுடிந்தது !

த்மிழகத்தின் வைணவத்தலங்களில் ஒன்றான ஸ்ரீமுஸ்ணத்தின் அருகிலுள்ள புவணகிரியில் பிறந்து செழிப்பான தஞ்சை மதுரை யில் வாழ்ந்த மகான் ராகவேந்திரர் எதற்காக இந்த வறண்ட மந்திராலாயத்தை தேர்ந்தெடுத்தார் ?

ஆனாலும் யாத்ரிகர்களின் வரவால் வாழ்வும் வருவாயும் உள்ள மந்திராலயம் மட்டும் செழிப்பாகவும் எங்கு பார்த்தாலும் ராகவேந்திரரின் பெயரும் நிறம்பியிருந்தது !

அறை ஒன்றை அமர்த்திக்கொண்டு குளிக்க துங்கபத்திரை செல்வோம் என்று போய் பார்த்தால் அதல பாதாளத்தில் குண்டும்குழியுமாக குட்டைகளில் தண்ணீர் நாறிப்போய் கிடந்தது ! துங்கபத்ரா அணையில் தண்ணீர் தேக்கிவிடுவதால் திறந்துவிட்டால்தான் தண்ணீர் என்றார்கள் ! அப்படியே தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் ஓடும் நதியால் அங்கு விவசாயம் செய்யவே முடியாது !

இது அனேகமாக வறண்ட பூமியாகவே இருக்கமுடியும் !

300 அண்டுகளுக்கு முன்பு போக்குவரவு வசதியில்லாத நிலையில் ஒரு சண்யாசி (மதுரையில் திருமணம் செய்தவர் ) மனைவி பிள்ளை தற்கொலை செய்தபிறகு தேசாந்திரமாக புறப்பாட்டு இங்கு எப்படி வந்துசேர்ந்தார் ?

தன் இருப்பால் இந்தப்பகுதியை வாழ்வைப்பதுடன் அனேகர் எங்கெங்கிருந்தோ ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும்படி இதை மாற்றினார் ?

நானும் மதுரைக்காரன் இங்கு வந்திருக்கிறேன் என்பதுமட்டுமல்ல வேறொரு உறவும் அங்கு எனக்கிருந்தது !

துங்காவாகவும் பத்திரையாகவும் வரும் இரண்டு நதிகள் இணைந்து துங்கபத்திரையாக மாறி கொஞ்சப்பயணத்திலேயே அது கிரிஸ்ணா நதியில் கலந்துவிடுகிறது ! துங்கபத்திரையாக அது கடருவது சில கிலோமீட்டர்களே !

இந்தப்பிறவியில் எனது முன்னோர்கள் முஸ்லீம்களின் இனவழிப்பு கொடுமைகளிலிருந்து தப்ப துங்கபத்திரையை கடந்து வாழ்வு தேடி தமிழகம் வந்து மேற்கு தொடர்ச்சி மலையோரமாகவே ஆடுமாடு மேய்த்துக்கொண்டு விவாசய நிலங்களை கிராமங்களை உற்பத்தி செய்தவர்கள் !

முஸ்லீம்கள் தூக்கிப்போய் திருமனம் செய்ய முயற்சித்தபோது பெண்கள் சிலர் துங்கபத்திரையில் தற்கொலை செய்தவர்கள் குலதெய்வமாக குலங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன !

ஆகவே அந்த முன்னோர்கள் கடந்த வாழ்ந்த பகுதி இதுவாகத்தான் இருக்கவேண்டும் ! அங்கு நதிக்கரையில் மஞ்சளம்மா என்றொரு கிராம தெய்வம் இருந்தது 1 இதுவும் அந்த முன்னோராக இருக்க வாய்ப்புள்ளது ! இப்பகுதி ஆந்திரா என்றாலும் மக்கள் பேசும் மொழி கண்ணடம் ! ஆகவே அரைகுறை கண்ணடம் பேசினாலும் அங்குள்ளோருடன் எளிதில் கலக்கமுடிந்தது !

கர்ணாடகா உடுப்பி கிரிஸ்ணர் கோவில் தொடர்பில் உருவான மத்வ மடம் தொடர்பான மக்கள்  (பிராமணர்கள் உட்பட ) கண்ணடம் பேசுவோரே ராகவேந்திரரை அண்டியிருப்பதும் புரிந்துகொள்ளமுடிந்தது !

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை ஓரமாகவே குடியிருப்புகளை அமைத்துள்ள குடிபெயர்ந்த கண்ணடம் பேசுவோரும் தெலுங்கு பேசுவோரும் ஒரே நேரத்தில் குழுவாக குடிபெயர்ந்தவராகவே இருக்கவேண்டும் !

ஆடுமாடு மேய்த்தல் என்பதோடு வைணவர்கள் என்பதும் முக்கியமானது ! இப்போதும் ஊரூருக்கு பெருமாள் கோவில் இல்லாத ஊரே கிடையாது ! புரட்டாசி விரதம் மார்கழி விரதங்கள் அனுஸ்ட்டிக்கப்படுகின்றன !  குருமகான் ராமாணுஜரின் ஆக்கத்தால் உத்வேகமடைந்த வைணவ மடங்களில் முத்திரி வாங்கிய ஆழ்ந்த வைணவ பெரியவர்களை எனது சிறு வயதில் நிறைய கண்டிருக்கிறேன் ! பெண்கள் அவ்வளவு அழகாக ஆண்டாள் பாசுரங்களையும் ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் பாடுவார்கள் ! அழகிய தமிழில் பாடி கோவிலில் பூசை செய்வார்கள் !

இவை மத்வ மடத்தின் தொடர்பிலானவை என்பதை இங்கு புரிந்துகொண்டேன் !

பிராமணர்கள் என்றவுடன் அவர்கள் வீட்டிலே சமஸ்கிரதம் பேசுவதுபோல தவறாக கற்பித்துவிட்டார்கள் ! தமிழோ , தெலுங்கோ , கண்ணடமோ இந்தியோ மட்டுமே பேசும் சுத்த இந்தியர்களாகவே உள்ளனர் ! அந்தந்த மொழிபேசும் பிரமாணர்களுக்கென்று மடமும் குருவும் தனியாகவே உள்ளனர் ! அந்த குழு சாதாரண பொதுமக்களோடு தொடர்புடையதாகவே உள்ளது ! ஆனால் மற்றவர்கள் சமஸ்கிரதத்தை மனப்பாடம் செய்வதில்லை ! கோவிலில் பூசை செய்யும் தொழிலுக்கு தேவை என்பதால் திராவிட ஞானிகளால் உருவாக்கப்பட்ட சமஸ்கிரதத்தையும் சமஸ்கிரத சுலோகங்களையும் பிராமணர்கள் மனப்பாடம் செய்கின்றனர் ! ஆகவே சமஸ்கிரதமோ ஹிந்தியோ ஆரிய மொழியல்ல ! திராவிட பின்னேற்ற பிழைப்புவாதிகள் திராவிடர்களான வட இந்தியர்களை ஆரியர்கள் அன்னியர்கள் என்பதாக சித்தரித்து குறுகிய குழு உணர்வை தூண்டி தாங்கள் பதவிக்கு வந்து தமிழகத்தை முழு இந்தியாவும் அன்னியர்களாக பாவித்து ஒதுக்கிவைக்கும்படியாக வஞ்சித்துவிட்டனர் !

பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாமலேயே சாதாரண பொதுமக்களே தமிழில் பாடி கோவிலில் பூசை செய்யும் பழக்கத்தை ராமாணுஜர் வைணவத்தில் ஊக்குவித்து புரட்சி செய்தவர் ! அவரும் பிறப்பால் பிராமணரே ! அதுபோலவே மத்வ மடம் தொடர்பில் கண்ண்டம் பேசுவோரும் தெலுங்கு பேசுவோரும் தத்தமது கிராமங்களில் அவரவர் மொழிகளில் பிராமணர்கள் இல்லாமலேயே வைணவக்கோவிலகளில் பூசை செய்யும் நடைமுறை இருந்திருக்கிறது குறிப்பாக கதிர் நரசிங்கபெருமாள் கோவிலகள் இருக்கும் ! நரசிங்க அவதாரம் மனித சரிரத்தில் வந்த அவதாரமல்ல ! அது ஒளிதேகத்தில் தேவராகவே வந்தது ! அதனால்தான் கதிர்நரசிங்கம் !

மந்திராலயத்தில் 26 ,27 இரண்டு இரவுகள் தங்கினோம் ! இவை தொடர்பான அனுபவங்கள் சில இருந்தாலும் அவை முழுமை பெறாதவையாக இருந்ததால் என்னால் எழுதுவதற்கு இயலாததாகவே இதுவரை இருந்தது
http://www.godsprophetcenter.com/cgi-bin/photoalbum/view_album/256994

அங்கு கோவிலின் சுற்றுபிரகாத்தில் இருந்த சித்திரங்களிலிருந்து மாகானின் வாழ்க்கை வரலாறு அவர் இந்த இடம் வந்து தியானம் செய்துகொண்டிருந்ததும் அப்போது அதோனி முஸ்லீம் நவாப்பின் மகன் இறந்ததும் மகான் சென்று அவனை உயிரோடு எழுப்பியதும் என்னவேண்டுமானாலும் தருகிறேன் கேழுங்கள் என்ற போது பிற்பாடு கேட்பதாக தெரிவித்ததும் தெரிந்தது ! ஏனென்றால் மன்னனிடம் எழுதி இந்த இடத்தை வாங்க மாகான் விரும்பினாலும் அத்ற்கு முன்பு இப்போது பிருந்தாவணம் அமைத்துள்ள இடத்தில் அனுமார்க்கு முன்பாக இருந்த மஞ்சளம்மாள் என்ற கிராமதேவதையை இடம் மாறி செல்ல அணுமதி பெறவேண்டியிருந்தது அதற்காக தியானம் செய்து மஞ்சளம்மா இடம் மாறி செல்ல ஒத்துக்கொள்ளவைத்தார் !

அப்போது அதோனி நவாப் மகனை உயிரோடு எழுப்பியதை கேள்விப்பட்ட பீஜப்பூர் சுல்த்தான் மகானை சோதிக்கவேண்டி சமைத்த மாமிசத்தை தட்டை மூடி எடுத்துக்கொண்டுவந்து இந்த உணவை உட்கொள்ளவேண்டும் என்று கேட்க இப்போது அவசியமில்லை என மறுத்தாலும் மமதையுடன் நான் சுல்த்தான் ; எனது பிரஜை என் உத்தரவை செய்துதான் ஆகவேண்டும் என்றபோது சரி கொண்டுவாருங்கள் என தட்டை திறந்தபோது அது முழுக்க பழங்களாக மாறி இருந்ததாம் உடனே சுல்த்தான் மண்ணிப்பு கேட்டு தங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்டபோது இந்த ஊர் முழுதும் எழுதி வாங்கப்பட்டது முள்கள்  மட்டும் வளரும் இந்த இடத்திற்கு பதிலாக நெற்கள் விளையும் வேறு பூமியை தரவும் தயார் என்றபோது ` பிரகலாத மஹாராஜா ஹிரண்யன் வதையின்போது கோபமுற்றிருந்த நரசிம்மரை சாந்தப்படுத்த யாகம் செய்த இடம் இதுவென்பதால் இவ்விடமே தனக்கு வேண்டும் என்று மகான் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் !

அதன் பிறகு கலியுகத்தில் 750 ஆண்டுகள் இவ்விடத்திலிருந்து தம்மை நாடி வருவோருக்கு ஆறுதல் அளிப்பேன் என பிருந்தாவணத்தமைந்து ஜீவசமாதி அமர்ந்துள்ளார் !

மத்துவாச்சாரியரின் பரம்பரையில் மந்திராலய மடமும் ஸ்தாபிக்கப்பட்டு ஆன்மீக சேவை செய்து வருகிறது !

கோவில் வருமாணத்தில் மதிய உணவு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது ! அர்ச்சகர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது தட்டில் பணம் வாங்கும் பழக்கம் இல்லை ! ஊர்க்காரர்கள் விரும்பினால் பாதுகாப்பு அதிகாரியின் கீழ் செக்கூரிட்டியாக மாத சம்பளம் வழங்கப்படுகிறது செக்கூரிட்டி கட்டுப்பாடுகள் ஒழுங்கை பாதுகாக்கிறது கோவில் நடை சாத்த செக்கூரிட்டி விசில் கொடுத்தவுடன் அர்ச்சகர்கள் உடனே வெளியேறுகின்றனர் கதவை செக்கூரிட்டிகளே பூட்டுகின்றனர் அர்ச்சகர்களுக்கும் அதிகாரம் இல்லாததுபோல அதிகாரப்பகிர்வுகள் உள்ளது

ஒவ்வொரு நாளும் தேரோட்டம் அற்புதமாக நடக்கிறது !

காலையில் மகான் கையில் வைத்து உபவாசித்த மூல ராமருக்கு அபிசேகம் நடக்கிறது

நான் காவிவேட்டி காவி துண்டு போர்த்தியவனாய் ஆங்காங்கு அமர்ந்து நன்றாக தியானம் செய்தேன்

இரவு கோவில் வாசலிலேயே வேண்டுதலுடன் பொதுமக்கள் பலர் உறங்குகின்றனர் நானும் நெடு நேரம் பிரார்தித்தேன் என் குடும்ப விசயமாக ஒரு சிறு உறுத்தல் அப்போதிருந்தது அதிகாலை கனவில் ஆறுதலாக சம்பவிக்கப்போவதைப்பற்றி அறிந்தேன் அதுபோலவே அது ஆறுதலாக முடிந்தது !

அத்வைத பயிற்சி தியானம் தன்னை உணர்தல் தெளிதல் பரிசுத்தமடைதல் வளச்சியில் தாழ்மையடைந்து முழு சரணாகதியாக துவைத பக்தியை இணைத்துக்கொள்ளுதலே விசிஸ்ட்டாத்வைதம் !

இப்போதைய மடம் இதற்கான பயிற்சியை வலியுறுத்தும் நடவடைக்கைகள் எதுவும் இல்லை !

மகான் ஜீவசமாதி பிருந்தாவணத்துடன் மடாதிபதிகள் இறந்தபிறகு அவர்களின் சமாதியை அங்கு உடன் வைப்பது சரியல்ல !

ஜீவசமாதி ஆன்ம உத்வேகத்தை தரவல்லது என்றால் சமாதிகள் அதை கெடுக்கக்கூடியது !

எந்த ஒன்றுக்கு பிறகு வரும் சைபர்கள் காலப்போக்கில் அதை கெடுக்கும் என்ற விதி அங்கும் நடக்கிறது !

ஒரு மகானின் மனைவி பிள்ளையாக பூமியில் வரம் கிடைத்தும் பின் நாட்களில் செல்வம் கொட்டப்போகிறது என்பதை அறியாமல் வறுமையை சகிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அவரின் மனைவியின் ஆத்மாவுக்கு அருள் ஆறுதல் உண்டாகும் படியாக அவருக்கு நேர் பின் இடத்தில் அமர்ந்து பிரார்தித்துக்கொண்டிருந்தேன் ஒரு பசு வந்து என் மடியில் நெடு நேரம் படுத்துக்கொண்டது அது அவரின் அன்பை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன்

பிருந்தாவணத்தில் விஸ்னு சொரூபங்களுடன் தரையில் இரண்டு சொரூபங்கள் என்ன ? அனுமார் ஏன் முன்பு உள்ளார் ?

இக்கேள்விகளுக்கும் விடைதெரியாமல் இருந்தேன் !

30/08/2013 ல் ஒரு மத்வ அர்ச்சகர் ஒருவரை தற்செயலாக சந்தித்தேன் ! அவர் என்னிடம் அட்சதியை பிரசாதம் ஒன்றை கொடுத்தார் ! அப்போது அவரிடம் இக்கேள்விகளுக்கு பதில் கிடைத்தது

அந்த இரண்டு சொரூபங்களும் மூலவர் . உற்சவரான பிரகலாத மகாராஜவின் சொரூபங்கள் !

ஏனென்றால் பிரகலாதரே அடுத்த பிறவியில் உடுப்பியில் மத்துவாச்சாரியராக வந்த வியாசராஜர் ! அவரே அடுத்த பிறவியில் தமிழக புவணகிரியில் மகானாக அவதரித்தவர் !

மந்திராலய மடத்தின் மூலமாக இன்னும் 400 ஆண்டுகள் சேவை செய்து வைகுண்டம் செல்வார் !

அனுமாரின் அம்சமாக அடுத்துவந்தவரான பீமனே அடுத்த பிறவியில் மத்துவாச்சாரியராக பிறந்து உடுப்பியில் மத்துவ மடத்தையும் விசிஸ்ட்டாத்வைதத்தை உலகிற்கு கொடுத்தவர் !

கீதை குறிப்பிடும் சீடப்பரம்பரை பூமியில் பல உண்டு !

அதில் ஒரு பரம்பரை அனுமாரின் சீடப்பரம்பரை !

அதுவே மத்துவம் ! விசிஸ்ட்டாத்வைதம் !

எனவேதான் அனுமாருக்கு முன்பாக மகான் பிருந்தாவணத்தமைந்துள்ளார் !

குருமகான் ராகவேந்திரர் விசிஸ்ட்டாத்வைத மேன்மைக்குள் சற்குருவாம் நாராயணனுடன் - ராமருடன் கிரிஸ்ணருடன் இயேசுவுடன் பக்திப்பிணைப்பை வலுப்படுத்துவாராக !

ஏக இறைவனின் அருளுக்கு நம்மை பாத்திரன் ஆக்குவாராக !

கலியுக மாயைகளிலிருந்தும் மதமாச்சரிய சண்டைகளிலிருந்தும் உலகை விடிவிக்கும் பணிக்கு அநேகரை தயார்படுத்துவாராக !



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum