Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
அட்டகாசம்’ மிஷ்கின்!
படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!
தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்’ செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!
புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!
வுல்ஃப்’ பாத்திரத்தில் மிஷ்கின். ஓர் ஓநாயின் உடல் மொழியையே தனக்குள் புகுத்தியிருக்கிறார். வேட்டைக் களத்தில் ஒவ்வோர் உறுப்பினரை இழக்கும்போது தலைகுனிந்து கவலைப்படுவதும், அம்மாவையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வலியோடு ஓடுவதும், ஸ்ரீயை நம்பியும் நம்பாமல் தன் ஆட்டத்தில் ஈடுபடுத்துவதுமாக... அசரடிக்கிறார். வெடவெட ஸ்ரீக்கு, இதில் மிஷ்கினுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு மனிதாபிமானத்தில் மிஷ்கினைக் காப்பாற்றிவிட்டு, போலீஸிடம் சிக்கிப் படும்பாட்டில் மிரட்சி, வெறுப்பு, கோபம், இயலாமை... என அனைத்து முகபாவங்களையும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.
அந்த மின்சார ரயில் துரத்தலும், ஓடும் காருக்குள் மிஷ்கின், வில்லனை வெளியேற்றும் சமயோசிதமும்... ஒரு ஆக்ஷன் படத்தின் உச்சகட்ட உதறல் கொடுக்கும் காட்சிகள்! அப்படியான விறுவிறு த்ரில்லருக்கான வியூகங்கள் மட்டுமே இருந்திருந்தால், இது இன்னொரு சினிமா. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அதன் பின்னணிக்கேற்ப வார்க்கப்பட்டிருப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவன் மனநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நச்நச்சென உணர்த்தும் காட்சிகளுமே, படத்தை வேறு தளத்துக்கு அழைத்துச்செல்கின்றன!
அத்தனை ரிஸ்க் எடுத்து ஸ்ரீ காப்பாற்றிய மிஷ்கினை, அவரே கொல்லவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகும் காட்சிகள், நிதர்சனத்துக்கு மிக நெருக்கம். படித்தவர்களும் பொறுப்பானவர்களும் தங்கள் கடமையை மறக்க, ஒரு பிச்சைக்காரனின் உதவியோடு நல்லது நடக்கும் ஆரம்பக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு வாங்கும் ஒவ்வொரு போலீஸும் விநோத வார்த்தை பிரயோகிப்பது, அம்மாவின் காலுக்குச் சூடு வைத்தவர்களின் காலைக் காயப்படுத்துவது, குண்டடி வாங்கிய எட்வர்டு அப்பாவிடம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கியைக் கொடுக்க, அவர் தான் தெரியாமல்கூட யாரையும் சுட்டுவிடக் கூடாது என்று தலைக்கு மேல் உயர்த்தி துப்பாக்கியை வெடிப்பது, அத்தனை போலீஸ் கும்பலிலும் நல்ல உள்ளம் படைத்த ஓர் அதிகாரி இருப்பது, எந்த போலீஸையும் கொல்லாமல் காயப்படுத்தி, மயக்கப்படுத்தி மிஷ்கின் தப்பிப்பதுமான காட்சிகளில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சக மனிதர்கள் மீது ப்ரியம் விதைக்கிறது திரைக்கதை.
மூன்று போலீஸ்காரர்கள் வில்லனின் ஆட்களால் கொல்லப்படுகிறார்கள். முதல் இருவர் சாகும்போது இந்து, கிறிஸ்துவ கடவுள்களின் பெயர்களைச் சொல்லி விழுவார்கள். மூன்றாவது நபரான கான்ஸ்டபிள், 'ஐயா’ என்று சொல்லிக் கும்பிட்டு, வாய்தா வாங்கி, உயிர் பதைத்து நிற்பார். ஆயுள் முழுக்க 'ஐயா... ஐயா’ என்றுஅழைத்தே பிழைக்கும் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை இயல்பை பொளேரென அறையும் சாம்பிள்!
போலீஸ் அதிகாரி ஷாஜி, திருநங்கை ஏஞ்சல் கிளாடி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், சிறுமி சைதன்யா... என அறிமுகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். வழக்கமான மிஷ்கின் சாயல் இல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையோடு இருப்பது ஆச்சர்யம்! ஆனால், தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத 'சாமுராய்’ பாணி வாள் வீரர்களைப் புகுத்தி தன் டச் கொடுத்துவிட்டார் மிஷ்கின்.
மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்புக்குப் பிறகுதான் பரபரக்கிறது படம். ஆனால், அந்தச் சந்திப்புக்கான தேவை என்ன? 'ஆட்டுக்குட்டி’க் குடும்பத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நோக்கமென்றால், அதைத் தவிர்த்திருக்கலாமே ஓநாய்? நள்ளிரவுக்கு மேல் மிஷ்கினுக்கு அதீத மயக்க மருந்து செலுத்தி மேஜர் ஆபரேஷன் செய்கிறார் ஸ்ரீ. ஆனால், காலையிலேயே மயக்கம் தெளிந்து தப்பிவிடுகிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவின், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராகிள்’களில் இதுவும் ஒன்று!
ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை யாரேனும் யாரையேனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும் இவ்வளவு வன்முறையா?
இருளும் ஒளியும் கலந்த இரவு சென்னையை ஒரு பூனையைப் போல கண்காணித்து திக் திக் திகில் ஊட்டுகிறது பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவு. ஸ்ரீ திரையில் தோன்றும்போது பதறவைக்கும் பின்னணி இசை, மிஷ்கின் தோன்றும்போது நெகிழ்த்தி, மாற்றுத் திறனாளிகளைக் காட்டும்போது உருகவைக்கிறது. 'முன்னணி - இசைக்கோப்பில்’ அழுத்தமாக முத்திரைப் பதிக்கிறார் ராஜா.
'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!
நன்றி -விகடன்
படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!
தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்’ செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!
புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!
வுல்ஃப்’ பாத்திரத்தில் மிஷ்கின். ஓர் ஓநாயின் உடல் மொழியையே தனக்குள் புகுத்தியிருக்கிறார். வேட்டைக் களத்தில் ஒவ்வோர் உறுப்பினரை இழக்கும்போது தலைகுனிந்து கவலைப்படுவதும், அம்மாவையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வலியோடு ஓடுவதும், ஸ்ரீயை நம்பியும் நம்பாமல் தன் ஆட்டத்தில் ஈடுபடுத்துவதுமாக... அசரடிக்கிறார். வெடவெட ஸ்ரீக்கு, இதில் மிஷ்கினுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு மனிதாபிமானத்தில் மிஷ்கினைக் காப்பாற்றிவிட்டு, போலீஸிடம் சிக்கிப் படும்பாட்டில் மிரட்சி, வெறுப்பு, கோபம், இயலாமை... என அனைத்து முகபாவங்களையும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.
அந்த மின்சார ரயில் துரத்தலும், ஓடும் காருக்குள் மிஷ்கின், வில்லனை வெளியேற்றும் சமயோசிதமும்... ஒரு ஆக்ஷன் படத்தின் உச்சகட்ட உதறல் கொடுக்கும் காட்சிகள்! அப்படியான விறுவிறு த்ரில்லருக்கான வியூகங்கள் மட்டுமே இருந்திருந்தால், இது இன்னொரு சினிமா. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அதன் பின்னணிக்கேற்ப வார்க்கப்பட்டிருப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவன் மனநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நச்நச்சென உணர்த்தும் காட்சிகளுமே, படத்தை வேறு தளத்துக்கு அழைத்துச்செல்கின்றன!
அத்தனை ரிஸ்க் எடுத்து ஸ்ரீ காப்பாற்றிய மிஷ்கினை, அவரே கொல்லவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகும் காட்சிகள், நிதர்சனத்துக்கு மிக நெருக்கம். படித்தவர்களும் பொறுப்பானவர்களும் தங்கள் கடமையை மறக்க, ஒரு பிச்சைக்காரனின் உதவியோடு நல்லது நடக்கும் ஆரம்பக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு வாங்கும் ஒவ்வொரு போலீஸும் விநோத வார்த்தை பிரயோகிப்பது, அம்மாவின் காலுக்குச் சூடு வைத்தவர்களின் காலைக் காயப்படுத்துவது, குண்டடி வாங்கிய எட்வர்டு அப்பாவிடம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கியைக் கொடுக்க, அவர் தான் தெரியாமல்கூட யாரையும் சுட்டுவிடக் கூடாது என்று தலைக்கு மேல் உயர்த்தி துப்பாக்கியை வெடிப்பது, அத்தனை போலீஸ் கும்பலிலும் நல்ல உள்ளம் படைத்த ஓர் அதிகாரி இருப்பது, எந்த போலீஸையும் கொல்லாமல் காயப்படுத்தி, மயக்கப்படுத்தி மிஷ்கின் தப்பிப்பதுமான காட்சிகளில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சக மனிதர்கள் மீது ப்ரியம் விதைக்கிறது திரைக்கதை.
மூன்று போலீஸ்காரர்கள் வில்லனின் ஆட்களால் கொல்லப்படுகிறார்கள். முதல் இருவர் சாகும்போது இந்து, கிறிஸ்துவ கடவுள்களின் பெயர்களைச் சொல்லி விழுவார்கள். மூன்றாவது நபரான கான்ஸ்டபிள், 'ஐயா’ என்று சொல்லிக் கும்பிட்டு, வாய்தா வாங்கி, உயிர் பதைத்து நிற்பார். ஆயுள் முழுக்க 'ஐயா... ஐயா’ என்றுஅழைத்தே பிழைக்கும் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை இயல்பை பொளேரென அறையும் சாம்பிள்!
போலீஸ் அதிகாரி ஷாஜி, திருநங்கை ஏஞ்சல் கிளாடி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், சிறுமி சைதன்யா... என அறிமுகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். வழக்கமான மிஷ்கின் சாயல் இல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையோடு இருப்பது ஆச்சர்யம்! ஆனால், தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத 'சாமுராய்’ பாணி வாள் வீரர்களைப் புகுத்தி தன் டச் கொடுத்துவிட்டார் மிஷ்கின்.
மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்புக்குப் பிறகுதான் பரபரக்கிறது படம். ஆனால், அந்தச் சந்திப்புக்கான தேவை என்ன? 'ஆட்டுக்குட்டி’க் குடும்பத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நோக்கமென்றால், அதைத் தவிர்த்திருக்கலாமே ஓநாய்? நள்ளிரவுக்கு மேல் மிஷ்கினுக்கு அதீத மயக்க மருந்து செலுத்தி மேஜர் ஆபரேஷன் செய்கிறார் ஸ்ரீ. ஆனால், காலையிலேயே மயக்கம் தெளிந்து தப்பிவிடுகிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவின், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராகிள்’களில் இதுவும் ஒன்று!
ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை யாரேனும் யாரையேனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும் இவ்வளவு வன்முறையா?
இருளும் ஒளியும் கலந்த இரவு சென்னையை ஒரு பூனையைப் போல கண்காணித்து திக் திக் திகில் ஊட்டுகிறது பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவு. ஸ்ரீ திரையில் தோன்றும்போது பதறவைக்கும் பின்னணி இசை, மிஷ்கின் தோன்றும்போது நெகிழ்த்தி, மாற்றுத் திறனாளிகளைக் காட்டும்போது உருகவைக்கிறது. 'முன்னணி - இசைக்கோப்பில்’ அழுத்தமாக முத்திரைப் பதிக்கிறார் ராஜா.
'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!
நன்றி -விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
நிஜம்தான் இது வித்யாசமான படம்தான்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
மிஷ்கின் படங்கள் அனைத்தும் வித்யாசமான படங்கள்தான் .ரா.ரா3275 wrote:நிஜம்தான் இது வித்யாசமான படம்தான்.
எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர் .. அஞ்சாதே படத்தை எத்தனை முறை பார்த்துயிருப்பேன் என்று எனக்கே தெரியாது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
காட்சிக்கும் ஒளிப்பதிவிற்கும் மெனக்கெடுவார்.அது பிடிக்கும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
அவரது காட்சிபடுத்தும் விதம் எப்பொழுதும் வித்தியாசமாகவே இருக்கும்ரா.ரா3275 wrote:காட்சிக்கும் ஒளிப்பதிவிற்கும் மெனக்கெடுவார்.அது பிடிக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
உங்களின் படங்களும் இது போல தனி தன்மையுடன் இருக்க வாழ்த்துகள்ரா.ரா3275 wrote:ஆமா ஆமா...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
பாலாஜி wrote:உங்களின் படங்களும் இது போல தனி தன்மையுடன் இருக்க வாழ்த்துகள்ரா.ரா3275 wrote:ஆமா ஆமா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
நன்றி பாலாஜி மற்றும் பாட்டி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்
நன்றி எல்லா வேணாம்...ரா.ரா3275 wrote:நன்றி பாலாஜி மற்றும் பாட்டி...
டிக்கெட் மட்டும் குடுத்துருங்க ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சினிமா விமர்சனம் : 180
» 3:33 -சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» 3:33 -சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|