ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

+4
ஜாஹீதாபானு
அசுரன்
ராஜா
shenbagakumar
8 posters

Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by shenbagakumar Mon Sep 30, 2013 2:31 pm

உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்ததும் கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.

இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.

அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.

கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.

12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...

பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.

எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்

எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.

தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.

எதிர்கால லட்சியம்



எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தைஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.

ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.

சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by ராஜா Mon Sep 30, 2013 2:37 pm

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் 3838410834வாழ்த்துகள் நண்பரே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by அசுரன் Mon Sep 30, 2013 2:51 pm

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by ஜாஹீதாபானு Mon Sep 30, 2013 4:12 pm

வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by raghuramanp Mon Sep 30, 2013 4:18 pm

இதுதாண்டா தமிழன்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by பாலாஜி Mon Sep 30, 2013 4:44 pm

வாழ்த்துகள் சந்தோஷ்குமார்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:42 pm

கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.
உண்மையான தமிழ் உணர்வு கொண்ட தமிழனின் வெளிபாடு இது புன்னகை

வாழ்வில் மென்மேலும் அந்த இமயத்தில் ஏறியது போல் ஏறுமுகமாக அமைய வாழ்துக்கள் சந்தோச குமார் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by ayyasamy ram Mon Sep 30, 2013 8:58 pm

பாராட்டுகள்..
-
[You must be registered and logged in to see this image.]
-
சந்தோஷ்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 9:04 pm

ayyasamy ram wrote:பாராட்டுகள்..
-
[You must be registered and logged in to see this image.]
-
சந்தோஷ்குமார்
அருமை அய்யா நன்றி புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இமயம் தொட்ட தமிழ் இளைஞன் Empty Re: இமயம் தொட்ட தமிழ் இளைஞன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum