ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by ராஜா Sat Sep 28, 2013 5:40 pm

சோமாலியாவில் அரசை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல்-கொய்தா இயக்கத்தினருடன் இணைந்த அல்-ஷபாப் இயக்கத்தினர் உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்கி அரசுக்குத் துணை புரிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கென்யா அரசு தனது படைகளை சோமாலியாவிற்கு அனுப்பியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அல்-ஷபாப் இயக்கத்தின் தீவிரவாதிகள் சிலர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்த வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களை சிறைப் பிடித்தனர். அவர்களில் சிலரை சுட்டுக்கொன்றனர். 

அரசுத் துருப்புகள் இவர்களை மீட்க நடத்திய போராட்டம் நான்கு நாட்கள் கழித்து வெற்றிகரமாக நிறைவேறியது என்று கென்ய அதிபர் உரு கென்யாட்டா தெரிவித்தார். ஆயினும், அந்த வணிக வளாகம் முற்றிலும் சிதைந்து அரசு தரப்பின்படி 67 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் இடிபாடுகளை சீர் செய்யும்போது உயிர்பலி எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசு துக்கம் அனுஷ்டிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி நாளான இன்றும் பலியானவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அதிபரின் மருமகனுக்கு நடந்த இறுதிச் சடங்கில் உரு கென்யாட்டா கலந்துகொண்டார். இறந்தவர்களில் கென்யா நாட்டவரைத் தவிர பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா போன்ற நாட்டவர்களும் இருந்தனர். 

சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இதற்கு கென்யா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அல்-ஷபாப் இயக்கத்தினர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் கென்யா படைகள் சோமாலியாவிற்கு சென்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலே லென்கு நேற்று தெரிவித்தார். மக்கள் மற்றும் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும்வரை தங்களது இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by ராஜா Sat Sep 28, 2013 5:41 pm

சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 
ஏண்டா இப்படி ரத்த வெறி பிடித்து திரியுறீங்க ..... இந்த உலகம் எப்ப தான் அமைதியா இருக்க போகுதோ தெரியலையே.............
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by அசுரன் Sat Sep 28, 2013 6:13 pm

ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் இந்த தலைமுறையில் நிறைய மனிதர்கள் உருவத்தில் பிறந்திருக்கு சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by SajeevJino Sat Sep 28, 2013 6:40 pm

அமெரிக்க ராணுவம் சுமார் 40000 வீரர்களையும் விமான உதவி அமைப்புகளையும் 2009இல் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் நிறுவ வேண்டும் என்று பெண்டகன் அரசை நிர்பந்தித்தது ..அனால் இந்த தொடை நடுங்கி ஒபாமா இதற்க்கு மறுப்பு தெரிவித்து விட்டான்

அப்படி ஒபாமா சம்மதித்திருந்தால் நைஜீரியா மாலி சுடான் சோமாலியா ஆகிய நாடுகளில் அல்கொய்தா இந்த அளவு பரவி இருக்க மாட்டார்கள்

இப்படி பல மரணங்களும் நிகழாமல் இருந்திருக்கும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 7:50 pm

இதுக்கு அமெரிக்க என்ன செய்ய முடியும்... ஒபாமா என்ன ஜோசியம் பார்த்து தெரிஞ்சுகிட படைகளை நிறுவ முடியும். பெண்டகன் சொல்லும் எல்லா பரிந்துரைகளை ஒபாமா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லையே. நாட்டில் பொருளாதாரம் நிதி நெருக்கடி, மக்களின் நலன் போன்ற பல்வேறு சிக்கல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒபாமாவிற்கு மட்டுமே... பெண்டகனுக்கு கிடையாது.

எந்த நகர்தலை எப்போது எப்படி செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். மேலும் உலகில் நடக்கும் இதுபோன்ற சாவுகளை தடுத்து நிறுத்த அமெரிக்க ஒன்றும் கடவுளும் இல்லை.

அவங்க நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்கவே அவங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by SajeevJino Sat Sep 28, 2013 8:04 pm

ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் படர்ந்திருந்த தீவிரவாதிகள் அமெரிக்க நடவடிக்கையால் ஆப்ரிக்காவிற்கு போய் விட்டார்கள் அங்கு தங்களின் தளத்தை அமைத்து ஆப்ரிக்காவில் வேரூன்ற அவர்கள் முயற்சிபதாக பெண்டகன் உறுதி செய்தது ..

அதை முறியடிக்கவே தனது படைகளை அங்கு நிறுத்த அதிபருக்கு பெண்டகன் ஆலோசனை சொன்னது

நீங்கள் கூறுவது சரி தான் ..ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்கள் வேலை உத்தரவு அல்ல ..

அமெரிக்கா நினைத்தால் இதுபோல பல தாக்குதல்களை நிறுத்த முடியும் ..ஆனால் அவர்கள் கடவுள் கிடையாது ..

உலகின் பல இடங்களின் தீவிரவாதிகள் வெளியே வருவதற்கு பயம் அமெரிக்கா தான் ..அதை மறுக்க முடியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by அசுரன் Sat Sep 28, 2013 9:35 pm

ஆமாம் அமெரிக்கா நினைத்திருந்தால் ராஜபக்ஷே மண்டையை உடைத்திருக்கலாம். ஆனால் பல ஆயிரக்கனக்கானவர்கள் இறந்தது பற்றி பேசாமல் சில ஆயிரங்கள் கொலைகள் நடந்த நாடுகள் மேல் படை எடுப்பேன் என்று சூளூரைக்கும் இவர் தான் உண்மையான வீரன். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by SajeevJino Sun Sep 29, 2013 8:09 am

அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை

இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது

அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..

இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by ராஜா Sun Sep 29, 2013 10:44 am

SajeevJino wrote:அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை

இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது

அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..

இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ....

அத்துடன் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இந்தியாவும் (சீனாவை ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக ஆக்குவதற்கு ஆதரவு கொடுத்ததை தான் சொல்கிறேன்) இலங்கைக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்ததால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அமெரிக்காவால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by SajeevJino Sun Sep 29, 2013 11:19 am

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அமெரிக்காவை பிடிக்காது ..அதற்காக ரஷ்யா சீனாவின் பேச்சை கேட்டு இந்தியா இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்ததை யாராலும் மறக்க முடியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Empty Re: தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
» கொல்கத்தா ஸ்டேடியத்தில் இருந்து இம்ரான் படத்தை நீக்க கங்குலி மறுப்பு - பா.ஜனதாவுடன் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum