Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
தேனி: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் அபூர்வ வகை சாம்பல் நிற அணில்கள் காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கர்நாடக மாநிலம் காவிரி வனஉயிரின சரணாலயத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின சரணாலயத்திலும் மட்டும் அபூர்வ வகை சாம்பல் நிற அணிகள் உள்ளதாக கருதப்பட்டது.
அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழனி மலைப் பகுதியிலும், சின்னாறு, அமராவதி மலைப்பகுதியிலும் இந்த வகை அணில்கள் கண்டறிப்பட்டன. தற்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேனி மாவட்ட வனக்குழுவினர் இந்த பகுதியை ஆய்வு செய்து அணில்கள் உள்ளதை உறுதி செய்துள்ளனர். சிறிதளவு மட்டுமே சாம்பல் நிற அணில்கள் காணப்பட்டாலும், வனத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் சாம்பல் நிற அணில்கள்
இருந்தால், அந்த வனம் ஆரோக்கியமான வனம், என கருதப்படுகிறது.
தேனி மாவட்ட வனக் குழுவினர் கூறியதாவது: மேகமலை வனப்பகுதியில், மஞ்சனூத்து சோதனை சாவடியை கடந்து இந்திரா நகரில் இருந்து வெள்ளிமலை செல்லும் வழியில், உடங்கலாறு என்ற இடத்தில் சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இந்த வகை அணில்கள் முதன் முறையாக இப்பகுதியில் கண்டறிப்
பட்டுள்ளன. பழுப்பு நிற அணில்களும் ஓரளவு காணப்படுகின்றன. மலபார் அணில்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த அணில்கள் வன உயிரின சட்டம் பகுதி 1ல் புலிகளுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றை வேட்டையாடினால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். எனவே இந்த அணில்களை பாதுகாப்பது குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த அணில்கள் வாழ்வதற்கு மிகவும் அடர்ந்த பாதுகாப்பான வனப் பகுதிகள் தேவை. எனவே, வனப்பகுதியில் குற்றங்களை தடுக்கவும், வன வளத்தை பெருக்கவும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றனர்.
நன்றி தினமலர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கர்நாடக மாநிலம் காவிரி வனஉயிரின சரணாலயத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின சரணாலயத்திலும் மட்டும் அபூர்வ வகை சாம்பல் நிற அணிகள் உள்ளதாக கருதப்பட்டது.
அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழனி மலைப் பகுதியிலும், சின்னாறு, அமராவதி மலைப்பகுதியிலும் இந்த வகை அணில்கள் கண்டறிப்பட்டன. தற்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேனி மாவட்ட வனக்குழுவினர் இந்த பகுதியை ஆய்வு செய்து அணில்கள் உள்ளதை உறுதி செய்துள்ளனர். சிறிதளவு மட்டுமே சாம்பல் நிற அணில்கள் காணப்பட்டாலும், வனத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் சாம்பல் நிற அணில்கள்
இருந்தால், அந்த வனம் ஆரோக்கியமான வனம், என கருதப்படுகிறது.
தேனி மாவட்ட வனக் குழுவினர் கூறியதாவது: மேகமலை வனப்பகுதியில், மஞ்சனூத்து சோதனை சாவடியை கடந்து இந்திரா நகரில் இருந்து வெள்ளிமலை செல்லும் வழியில், உடங்கலாறு என்ற இடத்தில் சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இந்த வகை அணில்கள் முதன் முறையாக இப்பகுதியில் கண்டறிப்
பட்டுள்ளன. பழுப்பு நிற அணில்களும் ஓரளவு காணப்படுகின்றன. மலபார் அணில்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த அணில்கள் வன உயிரின சட்டம் பகுதி 1ல் புலிகளுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றை வேட்டையாடினால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். எனவே இந்த அணில்களை பாதுகாப்பது குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த அணில்கள் வாழ்வதற்கு மிகவும் அடர்ந்த பாதுகாப்பான வனப் பகுதிகள் தேவை. எனவே, வனப்பகுதியில் குற்றங்களை தடுக்கவும், வன வளத்தை பெருக்கவும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றனர்.
நன்றி தினமலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
Grizzled Giant Squirrel
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.
இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora) புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.
இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.
சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.
மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.
செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.
இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora) புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.
இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.
சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.
மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
அம்மாடியோ
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது!செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
பேராண்மை படத்தில் வரும் காடு தானே மேகமலை தல. அருமையான அடர்ந்த காட்டுப்பகுதி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
அதே தான் சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அப்படியே பழகி விட்டது ஐய்யா உங்களுக்குஅசுரன் wrote:பேராண்மை படத்தில் வரும் காடு தானே மேகமலை தல. அருமையான அடர்ந்த காட்டுப்பகுதி.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
எங்க ஊருதான் நான் வரும்போதுசொல்கிறேன் நீங்களும் வாங்களேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
மன்னிக்கவும் அண்ணா.சிவா wrote:இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது!செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ
எனது Note II-வில் தட்டச்சுவது கடினமாக இருக்கிறது
நேற்று 6:30 க்கு வேலை(?)முடிந்து சென்றபின் சிறிதளவே தட்டச்ச முடிந்தது.
தட்டச்சுக் குறி எங்கெங்கோ பதிகிறது (இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா?) அதனாலேயே தங்களின் பெரிய விளக்கமான பதிவுக்கு குறியீடுகளை பயன்படுத்த நேர்ந்தது .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
அம்மாடியோசெம்மொழியான் பாண்டியன் wrote:மன்னிக்கவும் அண்ணா.சிவா wrote:இதுபோன்ற பின்னூட்டங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறது!செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மாடியோ
எனது Note II-வில் தட்டச்சுவது கடினமாக இருக்கிறது
நேற்று 6:30 க்கு வேலை(?)முடிந்து சென்றபின் சிறிதளவே தட்டச்ச முடிந்தது.
தட்டச்சுக் குறி எங்கெங்கோ பதிகிறது (இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா?) அதனாலேயே தங்களின் பெரிய விளக்கமான பதிவுக்கு குறியீடுகளை பயன்படுத்த நேர்ந்தது .
(சும்மா கிண்டலுக்கு தான் )
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கேரளாவில் புலி சுட்டுக் கொலை : தற்காப்புக்காக வனத்துறை நடவடிக்கை
» மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?
» வாலாஜாபாத்தில், பாம்புடன் அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
» தேனி மேகமலையில் அதிசய பாம்பை தேடும் நிபுணர்கள்
» மர அணில்
» மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?
» வாலாஜாபாத்தில், பாம்புடன் அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
» தேனி மேகமலையில் அதிசய பாம்பை தேடும் நிபுணர்கள்
» மர அணில்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|