புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கிணறு இருக்க பயமேன்? Poll_c10கிணறு இருக்க பயமேன்? Poll_m10கிணறு இருக்க பயமேன்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணறு இருக்க பயமேன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 27, 2013 7:49 am

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி அலைந்தால், நினைத்தது கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது... அதுபோல நல்ல தண்ணீர் கிடைக்க எளிதான வழியான கிணறு கையில் இருக்கும்போது, உப்பு நீரைத் தரும் ஆழ்துளைக் கிணறை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டுவது வருத்தம் தருகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த சேகர் ராகவன். மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் செயல்முறைகளையும் எளிமையாக விளக்கும் ’மழை மையம்’ என்ற அமைப்பை சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் இவர் நடத்தி வருகிறார்.

“சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பெரிதும் நம்பியிருப்பது ஆழ்துளைக் கிணறுகளைதான். ஆழ்துளைக் கிணறுகளை் அமைக்கும்போதே 150 அடி, 200 அடி ஆழத்துக்கு குழாய்களை இறக்குகிறார்கள்.

அதிக அளவு ஆழம் தோண்டினால், தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து, இப்படி செய்கிறார்கள். ஆனால், சில ஆண்டுகளிலேயே தண்ணீர் சரிவர கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்வதற்காக, அதே வீட்டில் வேறு இடத்தில் மீண்டும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பரிதாபத்தை ரொம்பச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது,’’ என்று வேதனைப்படுகிறார் சேகர் ராகவன்.

ஆழ்துளைக் கிணறு மூலம் நல்லத் தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டால், அதுவும் இல்லை என்று அடித்துக் கூறுகிறார் இவர். ‘‘நிலத்தின் மேற்பரப்பில், அதாவது 20 அடி, 25 அடியில் எப்போதும் நல்லத் தண்ணீரே இருக்கும். அதனால்தான், கிணற்றுத் தண்ணீர் எப்போதும் குடிக்கும் அளவுக்கு ருசியாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக மெரினா கடற்கரையில் பள்ளம் தோண்டி, தண்ணீர் எடுத்து பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்து வருவதைக் கூற முடியும். கடல் மணல் பரப்பில் சுவையான நீர் கிடைக்கக் காரணம் உள்ளது. மணலுக்குள் இறங்கும் நீரை, மணலே தூய்மைப்படுத்தி விடுகிறது. அதனால்தான் சுவையான நன்னீர் கிடைக்கிறது. ஆனால், ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது 150 அடி, 200 அடி ஆழத்துக்கு நிலத்தில் துளை போடப்படுகிறது. 100 அடிக்கு மேல் செல்லும்போது, இடையில் பாறைகள் இருப்பது இயல்பான விஷயம்தான். பாறையைத் துளைத்து ஆழ்துளை போடும்போது, உப்பு நீரே கிடைக்கும். பாறைக்கு அடியில் உள்ள நீர் கடின நீர். அது உப்பு நீராக மட்டுமே இருக்க முடியும். நிலத்துக்குள் செல்லும் மழை நீர், பாறைக்குள் ஊடுருவி செல்வதில்லை. அதனால், நீண்ட நாள்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு இதுவே முக்கியக் காரணம்.”

அண்மையில், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ‘மழை மையம்’ சார்பில் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இவர். ‘‘சென்னை பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் 108 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும். விருகம்பாக்கத்தில் 370 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்காமல் திண்டாடிவந்தனர். எங்களை அணுகி அவர்கள் ஆலோசனை கேட்டபோது, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த பிறகு, கிணறுகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது அங்கு தண்ணீர் பிரச்சினை இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நிம்மதியாக உள்ளனர்.

காங்கிரீட் காடாக மாறிவிட்ட சென்னையில், கிணறுகளில் மட்டும் எப்படித் தண்ணீர் கிடைக்கும், நகரின் பல பகுதிகளில் கிணறுகள் வற்றிக் கிடக்கின்றனவே என்ற கேள்வி எழக்கூடும். ‘‘எல்லாக் கிணறுகளும் எப்போதும் வற்றிக் கிடக்க வாய்ப்பே இல்லை. நிலத்துக்குள் செல்லும் நீர் மிகக்குறைவாக இருந்தாலும் சரி, அது நிலத்தின் மேற்பகுதியிலேயே இருக்கும். அதனால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் போதுமான அளவு சேர்ந்தவுடன் கிணற்றில் நீர் ஊறி விடும். மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அதை முறையாகப் பராமரித்துவந்தால், கிணறு வற்றிப் போகாது" என்று உறுதியாகக் கூறுகிறார் சேகர் ராகவன்.

வங்கியில் பணத்தைச் சேமித்து வைத்து, தேவைப்படும் போதெல்லாம் அதை எடுத்து எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோமோ, அதுபோல நிலத்தில் நீரை சேமித்து வைத்து, கிணறுகளில் இருந்து நல்ல தண்ணீரைப் பெற நாமும் முயற்சிக்கலாமே. நன்றி-திஹிந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:26 am

//அண்மையில், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ‘மழை மையம்’ சார்பில் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இவர். ‘‘சென்னை பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் 108 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும். விருகம்பாக்கத்தில் 370 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்காமல் திண்டாடிவந்தனர். எங்களை அணுகி அவர்கள் ஆலோசனை கேட்டபோது, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த பிறகு, கிணறுகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது அங்கு தண்ணீர் பிரச்சினை இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நிம்மதியாக உள்ளனர்.//

ஆச்சரியமாக இருக்கு சாமி புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக