ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையும் முகமும்

2 posters

Go down

மூளையும் முகமும் Empty மூளையும் முகமும்

Post by imz Thu Sep 26, 2013 4:41 pm

மூளையும் முகமும் Images4


ஒருசிலரின் முகத்தைப்பார்த்தால் 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி நஷ்டத்தில் 10 ரூபாய்க்கு விற்றவர் போல் இருக்கும் நீங்கள் ஏன் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு முன்மாதிரியானவராக நற்பாதை காட்டுபவராக இருந்து அவரை சுறுசுறுப்பானவராக வைத்திருக்க முடியாது?
இதனால் உங்களுக்கு கிடைக்கும் மன நிறைவை பின்னர் அறிந்து கொள்வீர்கள். எந்நேரமும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக மற்றவர்களை இருக்கவைப்பதும் ஒரு விதத்தில் சமூகசேவை தான். பலம் மிக்க சக்தி வாய்ந்த ஒன்றே சிரிப்பு. முகத்தால் மூளையைக்கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்று, மற்றவர் வாழ்வை சிறக்க வைக்க ஒரு சிறந்த வழி இதுவே.

வீட்டில், வியாபாரத்தில், தோட்டத்தில், வேலைசெய்யும் இடத்தில், காரியாலயத்தில், பாடசாலையில், வகுப்பறையில், பாதையில் இப்படி இன்னும் பல இடங்களில் தோன்றும் பிரச்சினைகள் நிறைய பேரிற்கு தொல்லையாக அமைகிறது. இவர்கள் முகத்தை தொங்க விட்டப்படி கோபமாக, கவலையாக இருப்பது இவர்களின் மூளையின் கண்ணாடியில் சமூகத்திற்கு ஒரு காட்சிப்பொருளாக தோன்றுகின்றது. இது வெட்கத்திற்குரிய ஒரு செயலாகும்.
“சமூகத்தில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை”.  இது உங்களுக்கு நாம் கூறும் ஆறுதல் அல்ல உங்கள் வாழ்வை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லக்காட்டும் வழி.

1. இன்றிலிருந்து சந்தோஷமாக இருக்கும் முகத்தைத் தேடுவோம். கோபத்துடன் இருக்கும் அழகான முகத்தையா சிரிப்புடன் கூடிய மகிழ்வான முகத்தையா நீங்கள் விரும்புவீர்கள்? நாம் எதிர்ப்பார்ப்பதும் இருக்க நினைப்பதும் மகிழ்வுடன் கூடிய முகத்தைத்தான். அழகில்லாதவர் என தன்னை எண்ணுவோர் கூட அழகாவது, சிடுமூஞ்சிதனத்தில் இருந்து வெளியாவது இந்த சிரிப்புமூலம்தான்.

2. முகம் மூளையின் கண்ணாடி
எம் புலன்களால் அறிவு உட்பட அனைத்தும் மூளையை சென்றடையும் போதே எம் முகம் மாறுதல் அடையும்.    உதாரணம் “ புளியம் பழம் சாப்பிடும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்” என கேட்கும் போதே முகம் மாறுகிறதா? அவ்வேளை புளியங்காய் சாப்பிடவும் இல்லை காணவும் இல்லை, ஆனால் முகத்தில் மட்டும் ஏன் இத்தனை மாற்றம்? முகம் மிகவும் புதுமையானது. வெளிச்சம், இருள், சத்தம், நிறங்கள், சுவை, துர்நாற்றம், வாசம் இவைகளை உணரும் போதும் வேதனை, கோபம், பயம், அன்பு போன்ற செயற்பாடுகளின் போதும் முகம் மாறுதல் அடையும். இதனாலேயே முகம் மூளையின் கண்ணாடி என அழைக்கின்றோம்.

எமது மூளையின் துன்பங்கள், பிரச்சினைகள் ஏன் இன்னோர் மனிதனிற்கு கூறாமல் மனதில் பூட்டி வைக்கமுடியாது?
நீங்கள் முதலில் உங்கள் மூளையை முகத்தின் உதவியோடு உங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுங்கள். அப்போது நீங்கள் வெற்றியாளர்!

மற்றவரைப்போல் மாற நடிக்க ஆசைப்படுவது தவறு நீங்கள் நீங்களாக வாழ முற்படுங்கள். ஒருவரின் பார்வை பாசப்பார்வையா?  காதல் பார்வையா? கோபப்பார்வையா? என உணர்த்துவது முகத்தில் இருக்கும் கண்களே. உங்கள்நினைவுகளுக்கு ஏற்ப முகம் மாறுவது என்பது உண்மை. முயற்சி செய்யுங்கள், உங்கள் மூளையில் எப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றினாலும் முகத்தை மாற விடாது சாதாரணமான ஒருவர் போல் இருங்கள். எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருங்கள். இந்த சாதாரண பயிற்ச்சியை தொடர்ந்து செய்வீர்களானால் உங்களால் உங்கள் உருவத்தை மாற்ற முடியும். நீங்கள் ஒரு மனத்திடமான மனிதரும் ஆவீர்கள்.

எப்போதும் நீங்கள் உங்கள் முகத்தில் என்றும் புன்னகையை தவழவிடுங்கள். சந்தோஷத்தை வெளிக்காட்டுங்கள். சிரிப்பு என்பது சந்தோஷத்தின் மறுபக்கம். சந்தோஷம் என்பது நிறைவான வாழ்க்கை என்பதாகும். இன்று நீங்கள் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழாவிட்டாலும் பரவாயில்லை மிகுதி வாழ்க்கையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கழிக்கப்போகின்றீர்கள்? முடிவெடுங்கள் சிரித்த முகத்துடன் இருங்கள் முடியாவிடில் நடியுங்கள்.
உங்கள் உடல், எண்ணங்கள், சுற்றங்கள் சிறப்புற்று விளங்குவதற்காக நீங்கள் மகிழ்வாக இருப்பதாக நடிப்பதில் ஒன்றும் தவறில்லை.

3. மூளையின் நிர்வாணத்தை சிரிப்பினால் மூடுங்கள்
சிரிப்பு முளையின் ஆடை, நாம் நிர்வானத்தை வெறுக்கின்றோம் ஆனால் மூளையின் எண்ணங்களை நம் முகத்தில் ஏன் காட்டுகிறோம். உடலமைப்பை மறைக்க விதவிதமான ஆடை அணியும் போது மூளையின் நிலையை மறைக்க ஏன் முகத்திற்கு அழகான சிரிப்பாடையை அணியக்கூடாது? மூளையின் நிர்வாணத்தை யாருக்கும் வெளிக்காட்டாதீர்.
மூளை தனக்கு ஏற்றபடி எமது முகத்தை இவ்வளவு காலமும்  வழிநடத்தியது. நாம் இன்றிலிருந்து அதை மாற்றி அமைத்து புதிய பயிற்சிக்கான முயற்சியை ஆரம்பிப்போம்அது என்ன புதிய பயிற்சி? அதுதான் முகத்திற்கு பொருந்தும் மூளையை உருவாக்கும் புதுமையான ஒரு பயிற்சி.

இதனை வாசிக்கும் போது நீங்கள் யோசிக்கக்கூடும்  இது முடியுமா என்று. எப்படி நாம் எமது மூளையை எமக்கு ஏற்றபடி மாற்றமுடியும். இது உண்மை. நீங்கள் நடிக்கும் பாத்திரத்திற்கு உங்கள் மூளை பழக்கப்படும் இது உறுதி.
வாழ்க்கை என்பது புதுமையானது, அழகானது, சுலபமானது,சுகமானது என்பது இதனால் தான்.இதற்கு உதாரணம் புகைப்பிடித்தல். முதலில் பிடிக்கும் போது மூளை விஷப்புகையை ஏற்காது ஆனால் இந்நிலை தொடரும் போது மூளை இதற்கு இசைவாக்கம் அடைகிறது.

நாம் ஏதாவது ஒன்றை தொடர்ந்து மூளைக்குப்பழக்கப்படுத்தும் போது அது நல்லதோ கெட்டதோ இன்பமோ துன்பமோ அதை மூளை ஏற்றுக்கொள்ளும் என்பது மாற்றம் காணக்கூடிய உண்மை. தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்தால் மூளை தோல்வியை அடையும்.இதன் போது எதிரியுடன் நண்பன் போல் உடற்தொழிற்பாடுகளை தொடர்ந்து வழிநடத்திச்செல்லும் ஆனால் சரியில்லாததாயினும் மூளை ஒன்றை ஏற்றுக்கொண்டால் விரோதியானாலும் கைவிடாது பழக்கப்பட்டது பழக்கப்பட்டது தான்.

எமக்கு கீழ்படிவுள்ள பொக்கிஷம் தான் எமது மூளை.நாம் நினைக்கிறோம் அதன் கெட்ட குணம் அதன் நாளாந்த பழக்கத்தை இல்லாமற்செய்வது கடினம் என்று ஆனால் “நமக்கு அந்த மூளை கீழ்படிவற்று காணப்படுகிறது” என்று யாராவது கூறினால் அது சிந்திக்க திறன் அற்ற தன்னம்பிக்கையற்ற சோம்பேறிகளின் மூளையாகத்தான் இருக்க வேண்டும். சிந்தித்துச்செயற்படும் மூளை ஒருமனிதனுக்கு இல்லாவிட்டால் அவன் மனிதனாகஇருக்க முடியாது.
ஆக எதுவும் முடியாது என்பதற்கு இல்லை எம்மாலும் மனதையும் மூயையையும் மகிழ்ச்சிகரமான புன்னகை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் இந்த புதுமையான உண்மையான உபாயங்களை கையாண்டு உறவுகளுக்கும் ஊருக்கும் நமக்கும் நல்லதையே செய்வோம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சிரித்தமுகத்துடன் வாழவேண்டும்.

~~~~~~~~~~
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down

மூளையும் முகமும் Empty Re: மூளையும் முகமும்

Post by krishnaamma Thu Sep 26, 2013 7:52 pm

அருமையான பதிவு புன்னகை நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum