ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

4 posters

Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by சிவா Wed Sep 25, 2013 6:23 pm


உலகளவில் முதல் 200 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லாதது மிகுந்த வேதனை தருகிறது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

புதுச்சே மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. துணை வேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி, பி.கண்ணன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் சிறந்த கல்வி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. 400-க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் 6100 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பட்டம் பெறுவது முக்கியமான காலகட்டமாகும். அதோடு நின்று விடாமல் தொடர்ந்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. இது மிகுந்த வேதனையைத் தருகிறது. ஆனால் இந்நிலையை மாற்றிசிறந்த தரத்தை பெறும் தகுதியும், திறமையும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

கடந்த 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த தட்சிசீலம், நாளந்தா, விக்கிரமஷீலா, வல்லபி, சோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். அப்புகழை நாம் மீண்டும் பெறுவோம்.ஆசிரியர் பணி அனைத்துப் பணிகளிலும் சிறந்ததாகும். மாணவர்கள் சந்தேகங்கள் எழுப்பினால் அதற்கு பதிலளிப்பது மிகுந்த மகிழ்வை தரும். மாணவர்களுக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் திகழ வேண்டும். தாங்கள் பெற்ற அறிவை மாணவர்களுக்கு போதிப்பதில் கடமை, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தரமான கல்வியை பெறுவதும் உரிமையாகும்.இந்தியாவில் தற்போது 659 பல்கலைக்கழங்கள், 33000 கல்லூரிகளில் 1.8 கோடி பேர் பயின்று வருகின்றனர். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இது 2.9 கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவ, மாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது.ஒழுக்கம், கடமை உணர்வு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கஷ்டமான சூழலையும் சமாளிக்கலாம் என்றார் முகர்ஜி.

13 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு புதுவையில் இருந்து காலாப்பட்டு செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty Re: சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by ராஜு சரவணன் Wed Sep 25, 2013 7:14 pm

நாங்களும் தான் இந்திய அரசியல்வாதிகள் சர்வதேச தரத்துடன் படுச்ச ஆளா வரணுமுன்னு பாக்குறோம் அதற்காக நாங்க எங்க போய் புலம்புறது.புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty Re: சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by பூவன் Wed Sep 25, 2013 7:20 pm

ராஜு சரவணன் wrote:நாங்களும் தான் இந்திய அரசியல்வாதிகள் சர்வதேச தரத்துடன் படுச்ச ஆளா வரணுமுன்னு பாக்குறோம் அதற்காக நாங்க எங்க போய் புலம்புறது.புன்னகை
சர்வதேச அளவில் ஊழல் பண்ணராங்களே போதாதா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty Re: சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by யினியவன் Wed Sep 25, 2013 7:22 pm

அம்பது வருஷமா உங்க கட்சி ஆண்டு என்னத்த கிழிச்சதுன்னு யோசிங்க!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty Re: சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by பூவன் Wed Sep 25, 2013 7:24 pm

யினியவன் wrote:அம்பது வருஷமா உங்க கட்சி ஆண்டு என்னத்த கிழிச்சதுன்னு யோசிங்க!!!
ஏன் கிழிக்கல அஞ்சாறு நாற்காலி , கிழிஞ்சது தொண்டன் தொண்டன் என சொல்லியவன் வேட்டியும் கிழிஞ்சது ,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Empty Re: சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum