புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கவிதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரே சுவாரஸ்யமற்றதாக வாழ்க்கை இருக்கிறதே.கொஞ்சல் சிலுசிலுப்பாக மாற்ரினாலென்ன.?
காதல் கவிதைகள் இதோ
1.கவிதைக் காதலி
எந்தன் கவிதைக் காதலியாள்
ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்
சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே
வாழும் உருவம் இல்லையய்யா
அன்றோர் மாலை நானிருந்தேன்
ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
நிலவின் தங்கை வாஎன்றேன்
செந்தேன் வழியும் சிறுகுரலும்
செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
பார்வைகொண்டே சுட்டெரித்தாள்
சிந்தை கண்டு சிறுமகளே
சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
எதுவுமில்லை காற்றானாள்
தேகம் இல்லாத் திருமகளோ
திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
வீசும் கலையும் வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ
வானில் வெய்யோன் வலம் கொள்ள
வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
காட்சி காணும் கலைமான்போல்
வேனில்காலத் தாகத்தை
விருப்பைக் கொண்டு கலைந்தோடி
தானிப் புவியில் தடுமாறும்
தணலில் பொழியும் மழையாமோ
எந்தன் மனதில் கவிவானில்
எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத்
தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்
சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர் சிற்றூரில்
சொல்லும் கவிதைக் குறவானாள்
ஊனும் உடலம் இல்லாள் காண்
உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
வந்தாற்கூட வடிவாகாள்
காதல் கவிதைகள் இதோ
1.கவிதைக் காதலி
எந்தன் கவிதைக் காதலியாள்
ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்
சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே
வாழும் உருவம் இல்லையய்யா
அன்றோர் மாலை நானிருந்தேன்
ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
நிலவின் தங்கை வாஎன்றேன்
செந்தேன் வழியும் சிறுகுரலும்
செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
பார்வைகொண்டே சுட்டெரித்தாள்
சிந்தை கண்டு சிறுமகளே
சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
எதுவுமில்லை காற்றானாள்
தேகம் இல்லாத் திருமகளோ
திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
வீசும் கலையும் வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ
வானில் வெய்யோன் வலம் கொள்ள
வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
காட்சி காணும் கலைமான்போல்
வேனில்காலத் தாகத்தை
விருப்பைக் கொண்டு கலைந்தோடி
தானிப் புவியில் தடுமாறும்
தணலில் பொழியும் மழையாமோ
எந்தன் மனதில் கவிவானில்
எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத்
தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்
சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர் சிற்றூரில்
சொல்லும் கவிதைக் குறவானாள்
ஊனும் உடலம் இல்லாள் காண்
உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
வந்தாற்கூட வடிவாகாள்
2. தீயாகி நின்றாள்
தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே
மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே
செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்
துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்
பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட விழிக்கும்நான் மயங்குவனோ
தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ
தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே
மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே
செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்
துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்
பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட விழிக்கும்நான் மயங்குவனோ
தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
(பெரியவங்களுக்கு மட்டும்) நான் படிக்கல தல..
வாலியை மிஞ்சிடுவீங்க போல இருக்கு
வாலியை மிஞ்சிடுவீங்க போல இருக்கு
3. மலரே இளமகளே
மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துன்னை வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ
வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ
சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ
கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ
பொட்டிடும் மாடத்துப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க் மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ
முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடவோ
மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துன்னை வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ
வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ
சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ
கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ
பொட்டிடும் மாடத்துப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க் மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ
முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடவோ
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹா.. உங்கள் விருப்பபடியே தொடருங்கள்kirikasan wrote:சொல்லிட்டிங்கல்ல தலைவா ,கொஞ்சம் குறைச்சலாக்கப் போகிறேன்பிளேடு பக்கிரி wrote: (பெரியவங்களுக்கு மட்டும்) நான் படிக்கல தல..
வாலியை மிஞ்சிடுவீங்க போல இருக்கு
மனம் சிவக்காமல் வாசிப்பதற்கு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சித்தம் என் பாக்கியம்பிளேடு பக்கிரி wrote:ஹா.. உங்கள் விருப்பபடியே தொடருங்கள்kirikasan wrote:சொல்லிட்டிங்கல்ல தலைவா ,கொஞ்சம் குறைச்சலாக்கப் போகிறேன்பிளேடு பக்கிரி wrote: (பெரியவங்களுக்கு மட்டும்) நான் படிக்கல தல..
வாலியை மிஞ்சிடுவீங்க போல இருக்கு
மனம் சிவக்காமல் வாசிப்பதற்கு
இதோ
ஏகாந்தம் (தனிமை)
தலைவியின் தாகம்
வெள்ளி முளைத்ததடி வானில் - வரும்
வீசும் குளிரெடுத்த தென்றல்
உள்ளங் கலங்குதடிதோழி - மனம்
ஊஞ்சல் என அலைவதோடி
எள்ளை நிகர்த்த சிறு அன்பும் - அவர்
எண்ணம் எடுத்த துண்டோ தோழி
மின்னல் அடித்த மழை முகிலும் - விட்டு
மேகம் வெளித்தென்ன போடி
அன்றோர் முழுநிலவின் ஊடே - ஒரு
ஆலமரத்தின் கிளைமேலே
கன்னம் உரசும் இரு குருவி - தனும்’
காதல் இசைபடித்த வேளை
பொன்னே உனைவிடுத்துப் போகேன் - இது
பொய்மைப் பிதற்றல் அல்ல உண்மை
நின்னைப் பிரியினுயிர் மாயும் - என
நெஞ்சம் பொய்யுரைத்துப் போனார்
கண்ணில் கண்கள்தனும் கலந்தே - இவள்
காணும் எழில் உலகின் விந்தை
பெண்மை விழிகள் கொண்டஅச்சம் - அது
பேசும் இளங் கவிதை முற்றம்
மண்ணின் மனித குலத்தூடே - இவள்
மங்கை திருமகளின் தங்கை
எண்ணம் கலந்து விட்டேனென்றான் - இன்று
என்னைப்புறம் விடுத்து நின்றான்
புன்னை மரநிழலும் வேகும் - அந்தப்
பேடைக் குயிலினிசை நோகும்
தென்னைக் கிளியிரண்டு பேசும் - எனை
திங்கள் நிகர்த்தள் தினம் காய்ந்தாள்
தன்னந்தனி உலவும் தென்றல் - அதன்
தங்கை எனமுறையும் கூறும்
சொன்னோர் விதம் அழகு தானோ - எந்தன்
சொந்தம் ஏகாந்த மாமோ
வெண்ணை வடித்த சிலை நானோ - அது
வெம்மை தனில் உருகும் மன்றோ
தன்னைப் பழிப்பர் செயல் கண்டும் - புவி
தாங்கிக் கிடத்தலென, நானும்
மன்னிக்கத் தோன்றுதடி தோழி - இதை
மானம் சிறுத்த மன்னன் காதில்
திண்ணமுரைத்து விடுதோழி - உடல்
தீயில் கருக முதல் தோழி!
எள்ளி நகைப்பர் தெரு வெங்கும் -ஊர்
இறைந்து கிடக்குதடி தோழி
கள்ள நகையும் இதழ் கொண்டே - எனை
காணின் புறமுரைக்கும் கூட்டம்
அள்ளி அனல் தெறிக்கும் கண்கள் - அந்த
அன்னை வழங்கவில்லைத் தோழி
உள்ளம் குமுற விழிமூடி - நான்
ஓசைகெட அழுவதோடி
===============
தலைவியின் தாகம்
வெள்ளி முளைத்ததடி வானில் - வரும்
வீசும் குளிரெடுத்த தென்றல்
உள்ளங் கலங்குதடிதோழி - மனம்
ஊஞ்சல் என அலைவதோடி
எள்ளை நிகர்த்த சிறு அன்பும் - அவர்
எண்ணம் எடுத்த துண்டோ தோழி
மின்னல் அடித்த மழை முகிலும் - விட்டு
மேகம் வெளித்தென்ன போடி
அன்றோர் முழுநிலவின் ஊடே - ஒரு
ஆலமரத்தின் கிளைமேலே
கன்னம் உரசும் இரு குருவி - தனும்’
காதல் இசைபடித்த வேளை
பொன்னே உனைவிடுத்துப் போகேன் - இது
பொய்மைப் பிதற்றல் அல்ல உண்மை
நின்னைப் பிரியினுயிர் மாயும் - என
நெஞ்சம் பொய்யுரைத்துப் போனார்
கண்ணில் கண்கள்தனும் கலந்தே - இவள்
காணும் எழில் உலகின் விந்தை
பெண்மை விழிகள் கொண்டஅச்சம் - அது
பேசும் இளங் கவிதை முற்றம்
மண்ணின் மனித குலத்தூடே - இவள்
மங்கை திருமகளின் தங்கை
எண்ணம் கலந்து விட்டேனென்றான் - இன்று
என்னைப்புறம் விடுத்து நின்றான்
புன்னை மரநிழலும் வேகும் - அந்தப்
பேடைக் குயிலினிசை நோகும்
தென்னைக் கிளியிரண்டு பேசும் - எனை
திங்கள் நிகர்த்தள் தினம் காய்ந்தாள்
தன்னந்தனி உலவும் தென்றல் - அதன்
தங்கை எனமுறையும் கூறும்
சொன்னோர் விதம் அழகு தானோ - எந்தன்
சொந்தம் ஏகாந்த மாமோ
வெண்ணை வடித்த சிலை நானோ - அது
வெம்மை தனில் உருகும் மன்றோ
தன்னைப் பழிப்பர் செயல் கண்டும் - புவி
தாங்கிக் கிடத்தலென, நானும்
மன்னிக்கத் தோன்றுதடி தோழி - இதை
மானம் சிறுத்த மன்னன் காதில்
திண்ணமுரைத்து விடுதோழி - உடல்
தீயில் கருக முதல் தோழி!
எள்ளி நகைப்பர் தெரு வெங்கும் -ஊர்
இறைந்து கிடக்குதடி தோழி
கள்ள நகையும் இதழ் கொண்டே - எனை
காணின் புறமுரைக்கும் கூட்டம்
அள்ளி அனல் தெறிக்கும் கண்கள் - அந்த
அன்னை வழங்கவில்லைத் தோழி
உள்ளம் குமுற விழிமூடி - நான்
ஓசைகெட அழுவதோடி
===============
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணிக்கம் அய்யா பாவம் என்ன ஆகப் போறாரோ!!
அருமை கிரிகாசன்.
அருமை கிரிகாசன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|