ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by பூவன் Tue Sep 24, 2013 10:50 am

த்வமேகம், கூனம்ம பதாலு என்ற இரு முக்கியமான கவிதை நூல்களும், சிறுகதைகள்,தெலுங்கு இலக்கிய வரலாறு, நாடகங்கள், ஆந்திராவின் சிவவாக்கியரான வேமனாவின் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள். எண்ணற்ற தெலுங்கு திரைப்பாடல்களுக்காகவும் படித்தவர்கள் பாமரரரஃகள் வேறுபாடின்றி மெச்சப்படும் ஆருத்ரா (பாகவதலு சதாசிவ சங்கர சாஸ்திரி(1925-1999)) தன் 17வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

பேச்சு மொழியை தன் கவிதைகளில் கையாண்டவர். தெலுங்கு கவிதை இலக்கணத்தில் தேர்ந்தவரானாலும் கவிதை எளிமையாலும் இசைத்தன்மையாலும் எல்லோருக்கும் புரியும்படியுமிருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவர். மேஜிக், கைரேகையியல், பரதநாட்டியத்தில் ஹஸ்தமுத்திரைகள் என பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் கலந்தாலோசனைகளுடன் அது குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகம் கலாப்ரபூர்ணா விரிது அளித்து கொரவித்த்து. தெலுங்கு இலக்கிய வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசளித்துள்ளது.

பத்திரிகையாளராக விரும்பியவர். ஆனால் தெலுங்கு சினிமாவில் கதாசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஆனார்.


இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 11999060-railroad-tracks-through-autumn-foliage-horizontal-1024x683

நீர்க்கடிகாரம்

நீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர
ஆயுட்காலம் தாமதமாகும்.
கணக்கற்ற வருடங்கள்
நீ காத்திருக்க முடியாதென்பதால்
எந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.
டிக்கெட் பரிசோதகர் சொல்கிறார்
உன் பயணப்பெட்டிகள் அளவுக்கதிகமானவையென்று
உன் ஆசைப்பெட்டிகள்
ப்ரேக்வேனுக்குப் போகவேண்டுமென்றும்.
உன் பொருட்களை ஏற்றுமுன்
ரயில் நகர்கிறது
எனவே சிலவற்றை
உன்னைக் கவர்ந்த தலைவர்களிடம்
விட்டுச் செல்கிறாய்
ரயில் சென்றடையாது,
நீ போகவேண்டிய கிராமத்துக்கு
நீ உயிரோடிருக்கும்வரை.
கடவுளே! ஏனிப்படியெல்லாம் செய்கிறாய்?
எங்கிருக்கிறாயோ
அங்கேயே இரு.
புறப்படுமிடத்தில்.


ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம்  ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by யினியவன் Tue Sep 24, 2013 10:53 am

தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by பூவன் Tue Sep 24, 2013 10:55 am

யினியவன் wrote:தெலுகு கவிதா பா உந்தி பூவன் காரு
நன்றி இனியவன் அண்ணா காரு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by பூவன் Tue Sep 24, 2013 11:05 am

தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி என்ற முதல் கவிதையிலேயே இலக்கியகர்த்தாக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மிகவும் குறைவான கவிதைகளை எழுதியவர். ஆந்திர பிரபா பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தவர். தன் கவிதைகள் பிரசுரமானபின் தனக்கும் அவைகளுக்கும் தொடர்பில்லையென்ற கருத்து கொண்டவர். அதனால் அவற்றை இவர் சேகரித்து வைப்பதில்லை.

1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற ஸ்வப்னலிபி (கனவுப்பிரதி) கவிதைத் தொகுப்பு நண்பர்ளின் வற்புறுத்தலுக்கிணங்கி பிரசுரிக்கப்பட்ட கவிதைகளை நினைவுகூர்ந்து எழுதியது. இந்த தொகுப்புக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரை அற்புதமானது.

இவருடைய கவிதைகள் வேகுண்ட மோகன் பிரசாத்(மோ) அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோ-கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திராவிட பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

மாயாஜாலக்காரன்



கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்
எப்போதும் வீரம் செறிந்த குதிரைவீரன்
எப்போதும் உலகின் ரகசியங்களை
உடைத்துத்தின்னும் ஒரு கோமாளி
வெளியாளாக
கண்ணாடி உன் உள்ளாழமான உலகம்.

கண்ணாடியில் மிதக்கும் பிம்பங்களை
அகற்றமுடியாது. அதனால்
நானே கண்ணாடிக்குள் நுழைந்தேன்
என் பிம்பம் இனி கண்ணாடிக்குள்ளில்லை
ஆனால் நான் அங்கிருக்கிறேன் தனியாய் உடலற்று.


உள்ளுக்குள் புலம்பல்

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Human-flowers91

மரணமென்பது ஒரு மலர்மாலையா?
மரணமென்ன, கைகளால் வணக்கம் சொல்கிறதா?
மலினமான சொற்கள் மலினமான சொற்கள் மலினமான சொற்கள்

உடல்கள் இங்கே விற்கப்படுகின்றன
கொடிகளும் கைத்துப்பாக்கிகளும் வைத்திருக்கும்
கைகளும் விற்கப்படுகின்றன தனியாக
மனிதனைக் கணங்களில் மாயமாக்கும்
முகமூடி மனிதர்கள் வேண்டுமா?
மரணத்தின் நவீன கணிதவிகிதங்களை
மன்னம் செய்த கொலைகாரன் வேண்டுமா?
மனிதனை வெடிக்கச்செய்யும்பொருள்கள்
எல்லாமும் இங்கே விற்கின்றன
மனிதனை மரணத்தின் கருவியாக்கும்
தனிரக எரிசக்தியும் இங்கே விற்கிறது
வணிகப்பொருட்களின் குரலொலிக்கும் சுவரொட்டியின் முன்பு
தனியாக்கப்பட்ட தலையின் எச்சரிக்கைக்குப் பொருளில்லை
மலர்ச்செடிகள் அழுகின்றனவா?
எல்லா மலின வார்த்தைகளுமிங்கே
எல்லா கடுமையான சப்தங்களும்……….அழிவு நாடகம்
எரிப்பு விளையாட்டு
மரணம் தன் முகத்தைக் காண பயந்ததுபோல
உறக்கத்தில் நடக்கும் மனிதன்
இரத்தக் குளத்தைத் தாண்டி வருவானா? மாட்டானா?
பூச்செடிகள் சாபமிடுகின்றனவா?
வன்மையான குரலில் கத்தும்
சுவரொட்டியின் முன்னால்
உள்ளுக்குள் புலம்புவதில் பொருளில்லை.
சுகபோக அறைகளில் இன்னமும் ஒலிக்கிறது இசை.
நாடகத்தின் இயக்குனர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்
நிர்வாணதேவதையின் வழிபாடு தடையிலாது

எப்படி அர்த்தமற்றதானது வாழ்க்கை!




ஆங்கிலவழி தமிழாக்கம் : லாவண்யா

நன்றி சொல்வனம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:48 pm

அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by பூவன் Tue Sep 24, 2013 3:50 pm

கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

இதுக்கு என்ன அர்த்தம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 4:34 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
இதுக்கு  என்ன அர்த்தம்
அதே தான் அர்த்தம் பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by ராஜு சரவணன் Wed Sep 25, 2013 10:09 am

தொடருங்கள் பூவன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by mbalasaravanan Wed Sep 25, 2013 10:26 am

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by பூவன் Wed Sep 25, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:தொடருங்கள் பூவன் புன்னகை
தொடருவோம் பிறமொழி கவிகளை தேடி தருகிறேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு) Empty Re: இந்தியக் கவிதை -ஆருத்ரா (தெலுங்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum