புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
72 Posts - 53%
heezulia
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_m10'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 22, 2013 3:05 pm

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!! Madurai_jpg_1592184h

கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்

பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை, கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

எவ்வளவு பெரிய மாளிகையை காட்டினாலும் யாருமே சொந்த வீட்டைத்தான் சொர்க்கம் என்பார்கள். ஆனால், சொந்த வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்கள் நரகத்தை அனுபவித்திருக்கிறான் பதினைந்து வயது சிறுவன்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமம் அது. இங்குள்ள மதுரைவீரன் - மருதாயி தம்பதியின் இரண்டாவது பிள்ளை கந்தக்குமார் (பெயரை மாற்றி இருக்கிறோம்). தலித்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் சாதியில் பிறந்தவர் மதுரைவீரன். இவரிடம் பணம் காசுக்குத்தான் பஞ்சம்; புத்திர பாக்கியத்தில் சுக்கிர தசை சுழற்றியடித்தது. 19 வயதில் மூத்த மகள், 6 மாதக் கைக்குழந்தையாய் கடைசி மகன் என மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு தகப்பன் இந்த மதுரை வீரன்.

இவர்களது வீட்டைப் பார்த்தால் இதற்குள்ளேயா இத்தனை பேரும் உண்டு உறங்குகிறார்கள்? என்று அசந்து போவீர்கள். இத்தனையையும் சகித்துக்கொண்டு கலெக்டர் கனவோடு பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான் கந்தக்குமார். கடந்த வருடம் ஒன்பதாவது வகுப்பிலேயே இவன்தான் முதல் மாணவன். ’நிச்சயம் கலெக்டரா வருவேடா’ என்று ஆசிரியர் கைகுலுக்கியபோது அசந்து போனான் கந்தக்குமார். ‘வாத்தியார் என்னைய தொட்டுக் கைகுலுக்கிட்டாருப்பா’ அப்பாவிடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னான். ‘கலெக்டர் ஆவாய்’ என்று சொன்னதைவிட யாருமே தொடாத தன்னை ஆசிரியர் தொட்டுவிட்டார் என்பதே தேடக் கிடைக்காத பெருமையாய் இருந்தது அவனுக்கு.

ஆனால் இப்போது? இது எதுவுமே சரிவர ஞாபகமில்லை அவனுக்கு. பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் புத்தகப் பையை தலைக்கு வைத்துக் கொண்டு ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். வஞ்சகமில்லாமல் பிள்ளைகளை பெத்துப் போடத் தெரிந்தவர்களுக்கு, வீட்டுக்குள் ஒரு பிள்ளை ஏன் இப்படி முடங்கிக் கிடக்கிறது என்று கேட்கவும் நேரமில்லை. அந்த அக்கறையு மில்லை. கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று?

மனநல சிகிச்சைக்காக கந்தக் குமாரை அந்த நரகத்திலிருந்து மீட்டு வந்த மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் விவரிக்கிறார்..

“நல்லா படிச்சிட்டு இருந்த பையன் சார். அவன் இன்னைக்கி இந்த நிலையில இருக்கதுக்கு காரணமே பெத்தவங்கதான். இத்தன புள்ளைங்கள பெத்துப் போடுறோமே, இதுகள நல்லா வளத்து ஆளாக்க முடியுமாங்கிற கவலை கொஞ்சம்கூட இல்லை. அந்தாளுக்கு 47 வயசாச்சு. இப்பவும் கைக்குழந்தை இருக்கு.

இதைச் சொல்லித்தான் கந்தக்குமாரோட படிக்கிற பசங்க அவன கிண்டல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ’உங்க அப்பனுக்கு வேற வேலையே இல்லையாடா?’ன்னு அந்தப் பசங்க கேட்டதையே அவனால தாங்கிக்க முடியல. தனக்குள்ளயே புழுங்கிச் செத்துருக்கான்.

மேற்கொண்டும் அந்தப் பசங்க, ‘ஏண்டா... நீங்க அக்கா தம்பி தங்கச்சி எல்லாரும் ஆளுக்கு ஒரு தினுசா இருக்கீங்க?’ன்னு சீண்டி இருக்காங்க. அதுக்கு மேல அவனால வாய மூடிட்டு இருக்க முடியல. ’நாங்க எல்லாரும் எங்க அப்பனுக்குத்தாண்டா பொறந்தோம்’னு ஆத்திரத்தோட கத்திருக்கான்.

அப்படியும் விடாம அந்தப் பிஞ்சு மனச கொத்திக் கொத்தி அவன மனநோயாளியாவே மாத்திட்டாங்க’’ கலங்கிப்போன கதிர், தொடர்ந்து பேசினார்..

’’ஸ்கூலுக்குப் போனா பசங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற நடுக்கம் அவனுக்கு. அதனால, நாலு மாசமா வீட்டுக்குள்ளேயே புத்தக பை மேலேயே முடங்கிப் படுத்துட்டான். ரெண்டு மாசமா குளிக்கக்கூட இல்ல. தன்னையறியாம யூரின் போனதுகூட தெரியாம படுத்திருந்திருக்கான்.

’ஏண்டா கந்தக்குமார் ஸ்கூலுக்கு வரலைன்னு ஆசிரியர்கள் கேட்டதுக்கு, ‘அவனுக்கு என்னவோ ஆயிருச்சு சார். வீட்ட விட்டு வெளியில வரவே இல்ல’ன்னு மத்த பசங்க சொல்லிருக்காங்க.

இதைக் கேட்டுட்டு ஆசிரியர்கள் பாலச்சந்திரனும் சேகரும் எங்களுக்கு தகவல் குடுத்தாங்க. அவன கூட்டிட்டு வந்து மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் குடுத்தோம். ‘எனக்கு டி.என்.ஏ. டெஸ்ட்கூட எடுத்துப் பாருங்க சார்’னு அவன் சொன்னதக் கேட்டப்ப ரொம்பப் பரிதாபமா இருந்துச்சு . ‘

இனிமே புள்ள பெத்தீனா ஒன்னைய கொலை பண்ணிருவேன்’னு அம்மாவைப் பாத்து பல்லைக் கடிக்கிறான். வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கலாம்னு நாங்க பேசுனப்ப, ‘அதெல்லாம் வேணாம் சார்.

எல்லாரையும் தொட்டுப் பேசலாம்னுதான் கலெக்டராவேன்னு சொன்னேன். எங்க சாரு தான் என்னைய தொட்டு கைகுடுத்துட்டாருல்ல’னு அவன் சொன்னப்ப, இந்த சமூகம் அவன எவ்வளவு கேவலமா நடத்தி இருக்குன்னு புரிஞ்சிக்க முடிஞ்சுது.

அக்கம் பக்கத்துக்காரங்க எல்லாம், ‘மொதல்ல இவங்கள பிடிச்சு உள்ள போடுங்க சார்’னு மதுரை வீரனையும் அவரு பொண்டாட்டியையும் கைகாட்டுறாங்க. தன்னோட ரெண்டு பசங்கள

பத்தாயிரம் ரூபாய்க்கு மும்பையில முறுக்கு கம்பெனிக்காரனுக்கு கொத்தடிமையா அனுப்பி வைச்சிருக்காரு மதுரை வீரன். அவனுக்கு இப்போதைக்கு தேவை நல்ல கவுன்சலிங். அதுக்கு ஏற்பாடு செய்துருக்கோம்.

மனநல மருத்துவரோட ஆலோசனைப்படி அவனை குணப்படுத்திருவோம்’’ - நம்பிக்கை துளிர்க்க பேசினார் கதிர்.

tamil.thehindu

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 22, 2013 5:55 pm

அடப்பாவமே ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 23, 2013 12:22 pm

இது மிகவும் கொடுமை. தைரியமானவர்களையும் அழ வைத்துவிடும் இச்சிறுவனின் நிலை. அந்தச் சிறுவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அவன் குணமடைந்தான் என்ற செய்தி வந்தால்தான் சற்று ஆறுதலாக இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 12:30 pm

குழந்தையைப் பெற்று இப்படி சீரழிய விடுவதற்கு மலடியா இருந்திருக்கலாம் பெற்றவர்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 12:38 pm

சமூகம் இன்றும் சாகடித்து கொண்டு தான் உள்ளன இது போன்ற குழந்தை மனங்களையும் கொன்று விட்டு ...

கண்ணீர் மட்டும் அல்ல செந்நீர் சிந்த வைத்த கந்தகுமார் நிலைமை , இந்த சிறுவன் விரைவில் குணம் அடைந்து ஆட்சியாளர் ஆகட்டும் என இறைவனை வேண்டுகிறேன் .

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 6:21 pm

இப்படியும் பேசுற ஸ்டூடண்ட்ஸ் இருக்கங்களா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக