Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
+3
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
சாமி
7 posters
Page 1 of 1
மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
![மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Zunv](https://2img.net/r/ihimizer/img837/5193/zunv.jpg)
பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.
இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.
தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.
என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.
மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?
சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”முட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.
பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.
சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.
பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும்.
இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.
- எழுதியது ஈரோடு கதிர்.maaruthal.blogspot.
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.
அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.
இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.
இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
என் கருத்தும் 100% இதுவேதான்ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.
அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.
இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
எப்படி சரவணன் நாம் இருவரும் ஒரே அலைவரிசையாக இருக்கிறோம் ?
![மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
நல்ல முயற்ச்சி. ஆனால் சில பழமை வாதிகளுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்.
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
சரியாக சொனீர்கள்ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.
அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.
இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்..சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
சரி விடுங்க விடுங்கராஜு சரவணன் wrote:பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்..சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!
என்னிடம் நான் அவர்களிடமிருந்து போஸ்ட் il பெற்ற CD இருக்கிறது, கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள்
பாராட்ட வேண்டிய விஷயம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒவ்வொருவரும்
» ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவும்
» நாம் ஒவ்வொருவரும் மரம் வெட்டிகள்தான்…
» (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
» ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவும்
» நாம் ஒவ்வொருவரும் மரம் வெட்டிகள்தான்…
» (கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள். (don't miss it)
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|