ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

3 posters

Go down

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி? Empty செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Post by சாமி Sun Sep 22, 2013 7:27 pm

சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்...

இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே சிட்டுக்குருவிகள் அழிந்ததற்குக் காரணம் என்ன? செல்போன் அலைகள் வேறு என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

செல்போன் அலைகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை சிதைப்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் சிட்டுக்குருவிகள் அழிவைப் பற்றி பிரபலப்படுத்திய பூனேயைச் சேர்ந்த முகமது திலாவர். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற சில ஆராய்ச்சிகளை முன்வைத்து அவர் இந்தக் கூற்றை முன்வைத்தார். அந்த ஆராய்ச்சிகள் வல்லுநர்களால் மறுஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இல்லை. கேரளம், அசாம் பல்கலைக்கழகங்களும் இதே காரணத்தை முன்வைத்தன.

செல்போன் அலைகள் என்பவை டிவி, மைக்ரோவேவ் அவன் போன்ற வற்றில், வெளியாகக் கூடிய சிற்றலை மின்காந்த கதிர்வீச்சு வகையைச் சேர்ந்தவை. இவை உடல்நலனை பாதிக்கலாம் என்ற குற்றச்சாட்டை சமீபத்திய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. எக்ஸ்ரே கதிர்வீச்சு போன்றவை நீண்டகாலத்துக்கு உடலில் பட்டால், அவற்றிலிருந்து வரும் ஆற்றலை திசுக்கள் கிரகித்துக்கொண்டு மரபணு கட்டமைப்பு மாறக்கூடும். இதனால் உடலில் குறைபாடான வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணலை களோ, ரேடியோ அலைகளோ பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்குத் திறனைக் கொண்டிருப்பதில்லை.

இந்நிலையில் செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொள்ள இருக்கிறது.

சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.

நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன. மேலும் இப்போது தானியங்கள் ஞெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது. இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.

எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.

மனிதர்களுக்கு என்ன பாதிப்பு?

சிட்டுக்குருவிகள் இருக்கட்டும். செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இதுபற்றி இரண்டு விதமான வாதங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன.

செல்போன் கதிர்வீச்சு அதிக காலம் உடலில் படுவதால், மரபணு மாற்றத்தில் பங்காற்றுவதாகவோ, புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்குவதாகவோ இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நிறுவவில்லை. செல்போன் கதிர்வீச்சு, சீரமைக்க முடியாத உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

"நமது மூளைச் செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலை களான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் சிந்தனைக்குரியது," என்கிறார் புதுவையைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளர்.

செல்போன் நிறுவனங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள் செல்போன் கதிர்வீச்சின் பாதகங்கள் பற்றி போதுமான அறிவியல் ஆய்வுகள் இல்லை என்று கூறினாலும், அதிகப்படியான செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பாக சாதாரண மக்களும் உணரும் விஷயம், கேட்கும் தன்மை.

மேலும், "செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்," என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் ஃபிரீ கருவி அல்லது குறைந்த சப்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
நன்றி-தி ஹிந்து
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி? Empty Re: செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 12:17 pm



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி? Empty Re: செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 6:19 pm

ஜாஹீதாபானு wrote:http://www.eegarai.net/t103717-topic
ரிலாக்ஸ் நன்றி நன்றி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி? Empty Re: செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?
» செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்
» கதிர்வீச்சு அளைவைக் குறிப்பிட்டே இனி செல்போன் விற்க வேண்டும்! - டெல்லி அரசு
» உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum