ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு

Go down

இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு Empty இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:19 am

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.

67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.

மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.

"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வாக்குப்பெட்டிகள்

இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.

வேட்பாளர் வீடு தாக்குதல்

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ

உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%

கிளிநொச்சி 70%

வவுனியா 65%

முல்லைத்தீவு 71%

மன்னார் 70%

மத்திய மாகாணம்
கண்டி 60%

மாத்தளை 62%

நுவரேலியா 60%

வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%

குருநாகல் 55%
.

நன்றி தினமணி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» ஹவாய் மாகாணத்தில் ஜோ பிடனுக்கு வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum