Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm
» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm
» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளந்தாமரை மாநாடு
+9
ராஜா
raghuramanp
SajeevJino
அசுரன்
பாலாஜி
Muthumohamed
கரூர் கவியன்பன்
mbalasaravanan
சிவா
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இளந்தாமரை மாநாடு
First topic message reminder :
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
![இளந்தாமரை மாநாடு - Page 4 Tamil_News_large_807798](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_807798.jpg)
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
மோடி பேச குண்டு துளைக்காத மேடை
![இளந்தாமரை மாநாடு - Page 4 Tamil_News_large_807798](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_807798.jpg)
திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
அத்வானி வருகை?
திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
புல்லட் புரூப் கார்:
மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளந்தாமரை மாநாடு - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளந்தாமரை மாநாடு
பார்க்கலாம் அண்ணாபாலாஜி wrote:கூட்டணி மாறினால் காட்சிகள் மாறும்சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இளந்தாமரை மாநாடு
15 எம் பி சீட்டுங்களா ?SajeevJino wrote:நிலைமை மாறி விட்டது தோழர்களே ..கடந்த உள்ளாட்சி மற்றும் சட்ட பேரவை தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பிஜேபி வைத்துள்ளது ..கண்டிப்பாக ஒரு 15 இடங்களிலாவது பிஜேபி வெல்லும் எனபதில் ஆச்சர்யம் இல்லைசிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இளந்தாமரை மாநாடு - Page 4 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இளந்தாமரை மாநாடு
நிச்சயமாக சொல்லுகிறேன்Muthumohamed wrote:
15 எம் பி சீட்டுங்களா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
நேற்று மோடியின் பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்க்கும் போதே தெரியுது , பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்தனர் நிச்சயம் 15க்கு மேல் வெல்வார்கள்
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: இளந்தாமரை மாநாடு
"இளந்தாமரை' மாநாட்டுக்கு குவிந்த தொண்டர்கள்: விழாக்கோலம் பூண்ட திருச்சி மாநகரம்
திருச்சி: பா. ஜ., சார்பில், திருச்சியில் நேற்று நடந்த, "இளந்தாமரை' மாநாட்டுக்கு, நேற்று முன்தினம் இரவிலிருந்தே, இளைஞர்களும், தொண்டர்களும் குவிந்ததால், திருச்சியே விழாக்கோலம் கண்டது. மாநாட்டுக்கு வந்த அனைவரும், காவி நிற உடை, துண்டு, தொப்பி அணிந்து வந்ததால், மாநகரமே காவி மயமாக காட்சியளித்தது. மாநாட்டில், அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் மக்கள் பங்கேற்க வசதியாக கடந்த, 2ம் தேதியிலிருந்து, "ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவம் மூலமும் முன்பதிவு செய்யப்பட்டது. மொத்தம், 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மாநாடு மாலை, 3:00 மணிக்கு துவங்கினாலும், அதிகாலையில் இருந்தே இளைஞர்களும், தொண்டர்களும் மாநாட்டு மேடைக்கு சாரைசாரையாக வரத் துவங்கினர். ஆங்காங்கே தாரைத் தப்பட்டை, டிரம்ஸ் வாசித்து மாநாட்டுக்கு வந்த மக்களை தொண்டர்கள் மகிழ்வித்தனர். சில நாட்களாக, திருச்சியில் வெயிலின் தாக்கம், அதிகளவு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, திடீரென மழை பெய்ததால், பா.ஜ.,வினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், லேசான தூறலுடன் மழை நின்றதால், நிம்மதி அடைந்தனர். நேற்று காலை, வெயில் கொளுத்தியது. இதனால், மாநாட்டு திடல் அமைந்துள்ள பகுதியில் தொண்டர்கள், இலவச நீர் மோர், குடிநீர் வழங்கினர். மரத்தடி நிழலில் தொண்டர்களும், இளைஞர்களும், மக்களும் இளைப்பாறி, ஓய்வெடுத்தனர். மக்கள் வசதிக்காக கரீம் குட்டி என்ற தனியார், "மொபைல் டாய்லட்' ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. மாநாடு தொடர்பான, "சிடி'க்கள், மோடி குறித்த புத்தகங்கள், கட்சி புத்தகம், தொப்பி, "டிசர்ட்' போன்றவை அமோகமாக விற்பனையாயின.
மோடி வருகை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தின் அனைத்து, "செக்போஸ்ட்'களிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். "செக்போஸ்ட்'கள் வழியாக திருச்சி மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸார், சோதனைக்கு பின்னர் அனுப்பினர். கட்சி வாகனங்கள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, வாகனங்களின் எண்கள் பதிவு செய்யும் பணியில், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள், சாலை மறியல் மற்றும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டனர்.
கொளுத்தும் வெயிலிலும் குவிந்த கூட்டம்
* தமிழக பா.ஜ., இளைஞர் அணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி, பொன்மலை ஜீ கார்னர் மைதானத்தில், நேற்று மாலை, 3:45 மணிக்கு, கொளுத்தும் வெயிலில் துவங்கியது.
* ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பஸ், கார் போன்ற வாகனங்களில், நேற்று காலை முதல் திருச்சிக்கு வந்து குவிந்தனர்.
* மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்து, சென்னை திருச்சி பைபாஸ் சாலையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
* அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள், சாரை சாரையாக, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், உற்சாகத்துடன் வந்தனர்.
* பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநாட்டு மைதானம் கண்காணிக்கப்பட்டது.
* இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள்அதிகளவில் பங்கேற்றனர்.
* செங்கோட்டை வடிவத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் மீது, பா.ஜ., கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
* மாநாட்டு மேடையின் முகப்பில், பா.ஜ., தலைவர்கள் ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
* மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த, பெரிய, "டிவி' திரையில் மாநாட்டு காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பப்பட்டன.
* மாநாட்டிற்கு வந்தவர்களை, "தமிழகம் காப்போம்; தாயகம் காப்போம்' வாசகங்கள் அடங்கிய பனியனை அணிந்த தொண்டர்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
* மாநாட்டு மேடை பகுதியை, கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, மாநாட்டு மேடையை போலீசார் கண்காணித்தனர்.
* வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் பிரிவு, உளவுத்துறை, தேசிய புலனாய்வுத் துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பா.ஜ., மாநாட்டில் குற்றவாளிகள் போட்டோ:
ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட, பல வழக்குகளில் தேடப்படும், தலைமறைவாக உள்ள, நான்கு பேரின் புகைப்படங்கள், போலீசார் சார்பில், திருச்சியில் நடந்த, 'இளந்தாமரை' மாநாட்டு நுழைவாயிலில் ஒட்டப்பட்டிருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன், வேலூரில் இந்து அமைப்பைச் சேர்ந்த வெள்ளையன், சேலத்தைச் சேர்ந்த, பா.ஜ., மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக்குழு, தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் தேடப்படும் குற்றவாளிகளாக, பன்னா இஸ்மாயில், 32, பிலால் மாலிக், 25, அபுபக்கர் சித்திக், 48, "போலீஸ்' பக்ருதீன், 36, ஆகிய, நால்வரும் போலீசாரால் அறிவிக்கப்பட்டனர். திருச்சியில் நேற்று, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற, "இளந்தாமரை' மாநாடு மைதானத்தில், போலீசார் சோதனை நடத்தும் இடத்தில், குற்றவாளிகள் நால்வரின் படத்துடன், அவர்கள் பெயர் மற்றும் அங்க அடையாளங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்துடன், "இவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என்று போலீஸ் அறிவித்த நோட்டீசும் ஒட்டப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து, "இதை ஏன் இங்கே ஒட்டி வைத்துள்ளீர்கள்?' என ஆத்திரத்துடன், போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். "இவர்கள் யாரும் பார்வையாளர் தோரணையில், மாநாட்டு திடலுக்குள் நுழையாமல் இருக்கவும், அவர்களை மாநாட்டுக்கு வருபவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ளவும் ஒட்டி வைத்துள்ளோம்' என, போலீசார் விளக்கம் கூறினர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் குடும்பம்: மோடி ஆறுதல்:
சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தாருக்கு, இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க வந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, ஆறுதல் கூறினார். தமிழக, பா.ஜ., கட்சியின் இளைஞரணி சார்பில், திருச்சி "ஜி' கார்னர் மைதானத்தில் இளந்தாமரை மாநாடு நேற்று நடந்தது. இதற்காக நேற்று மதியம், 3:20 மணிக்கு, தனிவிமானம் மூலம் திருச்சி வந்த மோடி, விமான நிலையத்திலிருந்து நேராக எஸ்.ஆர்.எம்., ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின் தமிழக பா.ஜ., கட்சி நிர்வாகிகளுடன், தமிழகத்தில் கட்சி நிலவரம் குறித்தும், லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணி குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதன்பின், கடந்த ஜூலை, 19ம் தேதி சேலத்தில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட, பா.ஜ., கட்சியின் மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக சேலத்திலிருந்து ஆடிட்டர் ரமேஷ் மனைவி சுபா, அவரது தாயார் மற்றும் சகோதரர்கள், திருச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று மாலை, 4.30 மணிக்கு அவர்களை சந்தித்த மோடி, அவருடைய குடும்பத்துக்கு கட்சி என்றும் கடமைப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார். அப்போது, கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மோடிக்கு பிடித்த பெயர் பாகேஷ்?:
திருச்செந்தூர் பா.ஜ., நிர்வாகி ஒருவரின் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க, நேற்று மாலை ஹோட்டலில் இருந்த மோடியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குழந்தையைப் பார்த்த அவர், அதை கொஞ்சி, ஆண்குழந்தை என்பதால், பாகேஷ் என்று பெயர் வைத்தார்.
ஆமதாபாத் சென்றார் மோடி!
இளந்தாமரை மாநாட்டுக்கு வந்திருந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, தனி விமானம் மூலம், திருச்சி வந்தார். மாநாடு முடிந்த பிறகு, இரவு 8:00 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில், நரேந்திர மோடி, ஆமதாபாத் புறப்பட்டுச் சென்றார். ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் இரவு, 8:10 மணிக்கு, சென்னை புறப்பட்டுச் சென்றார்.
கறுப்பு பலூன் பறக்கிறதா?
மோடி பங்கேற்கும் மாநாட்டு மைதானத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அடிக்கடி வானத்தை நோக்கிப் பார்த்தபடி, ‘கறுப்பு பலூன் பறக்கிறதா?’ என, கண்காணித்தனர். திருச்சி வரும் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்த, சில அமைப்பினர் திட்டமிட்டனர். அப்படி நடக்க விடாமல் தடுக்க, திருச்சி மாநகர் முழுவதும், உளவுத் துறை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநகர் முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த, எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர், மோடி பங்கேற்கும் மாநாடு நடக்கும் மைதானத்தின் மீது, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு, எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டதாக தெரிகிறது. இதை மோப்பம் பிடித்த போலீசார், கறுப்பு பலூன் திட்டத்தை முறியடிக்க உஷாராகினர். நேற்று மதியம், 12:00 மணி முதலே, மாநாட்டு மைதானத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த உளவுத் துறை போலீசாரும், விவரம் தெரிந்த போலீஸ் அதிகாரிகளும், அடிக்கடி வானத்தில், கறுப்பு பலூன் பறக்கிறதா என்று பார்த்தபடி இருந்தனர். பல போலீசார் அடிக்கடி வானத்தை பார்த்ததால், மாநாட்டுக்கு வந்திருந்த பார்வையாளர்களும், என்ன விஷயம் என்று தெரியாமல், அடிக்கடி வானத்தை பார்த்தபடி இருந்தனர்.
திருச்சி – பாதுகாப்பு கோட்டை:
மோடி வருகை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தின் அனைத்து, ‘செக்போஸ்ட்’களிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ‘செக்போஸ்ட்’கள் வழியாக திருச்சி மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார், சோதனைக்கு பின்னர் அனுப்பினர். கட்சி வாகனங்கள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, வாகனங்களின் எண்கள் பதிவு செய்யும் பணியில், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல, ஏழு செக்போஸ்ட்களின் வழியாக, மதியம் வரை, ஆயிரக்கணக்கான வாகனங்களில், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள், மக்கள் கடந்து சென்றனர். மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், காவி நிற உடை அணிந்து வந்தனர். தவிர தொப்பி, துண்டு என அனைத்திலும் காவி நிறம் காணப்பட்டது. இதனால், மாநகரமே காவி மயமாக காட்சியளித்தது.
மோடியின் அழைப்பை மறுத்த சு.சாமி:
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அழைப்பை, சுப்ரமணியசாமி ஏற்க மறுத்துள்ளார். ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசாமி, பா.ஜ., கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், தன் கட்சியை இணைத்துக் கொண்டார். குஜராத்தில் தங்கியிருந்து, லோக்சபா தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரு தினங்களுக்கு முன், திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, சுப்ரமணியசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், உலகம் முழுவதும், பா.ஜ., கட்சியை பரப்ப உள்ளதாகவும், லண்டன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள, ஆர்.எஸ்.எஸ்.,- பா.ஜ., கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும், திருச்சி மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை என்று சாமி கூறி விட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
திருச்சி: பா. ஜ., சார்பில், திருச்சியில் நேற்று நடந்த, "இளந்தாமரை' மாநாட்டுக்கு, நேற்று முன்தினம் இரவிலிருந்தே, இளைஞர்களும், தொண்டர்களும் குவிந்ததால், திருச்சியே விழாக்கோலம் கண்டது. மாநாட்டுக்கு வந்த அனைவரும், காவி நிற உடை, துண்டு, தொப்பி அணிந்து வந்ததால், மாநகரமே காவி மயமாக காட்சியளித்தது. மாநாட்டில், அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் மக்கள் பங்கேற்க வசதியாக கடந்த, 2ம் தேதியிலிருந்து, "ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவம் மூலமும் முன்பதிவு செய்யப்பட்டது. மொத்தம், 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மாநாடு மாலை, 3:00 மணிக்கு துவங்கினாலும், அதிகாலையில் இருந்தே இளைஞர்களும், தொண்டர்களும் மாநாட்டு மேடைக்கு சாரைசாரையாக வரத் துவங்கினர். ஆங்காங்கே தாரைத் தப்பட்டை, டிரம்ஸ் வாசித்து மாநாட்டுக்கு வந்த மக்களை தொண்டர்கள் மகிழ்வித்தனர். சில நாட்களாக, திருச்சியில் வெயிலின் தாக்கம், அதிகளவு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, திடீரென மழை பெய்ததால், பா.ஜ.,வினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், லேசான தூறலுடன் மழை நின்றதால், நிம்மதி அடைந்தனர். நேற்று காலை, வெயில் கொளுத்தியது. இதனால், மாநாட்டு திடல் அமைந்துள்ள பகுதியில் தொண்டர்கள், இலவச நீர் மோர், குடிநீர் வழங்கினர். மரத்தடி நிழலில் தொண்டர்களும், இளைஞர்களும், மக்களும் இளைப்பாறி, ஓய்வெடுத்தனர். மக்கள் வசதிக்காக கரீம் குட்டி என்ற தனியார், "மொபைல் டாய்லட்' ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. மாநாடு தொடர்பான, "சிடி'க்கள், மோடி குறித்த புத்தகங்கள், கட்சி புத்தகம், தொப்பி, "டிசர்ட்' போன்றவை அமோகமாக விற்பனையாயின.
மோடி வருகை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தின் அனைத்து, "செக்போஸ்ட்'களிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். "செக்போஸ்ட்'கள் வழியாக திருச்சி மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸார், சோதனைக்கு பின்னர் அனுப்பினர். கட்சி வாகனங்கள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, வாகனங்களின் எண்கள் பதிவு செய்யும் பணியில், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள், சாலை மறியல் மற்றும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டனர்.
கொளுத்தும் வெயிலிலும் குவிந்த கூட்டம்
* தமிழக பா.ஜ., இளைஞர் அணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி, பொன்மலை ஜீ கார்னர் மைதானத்தில், நேற்று மாலை, 3:45 மணிக்கு, கொளுத்தும் வெயிலில் துவங்கியது.
* ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பஸ், கார் போன்ற வாகனங்களில், நேற்று காலை முதல் திருச்சிக்கு வந்து குவிந்தனர்.
* மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்து, சென்னை திருச்சி பைபாஸ் சாலையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
* அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள், சாரை சாரையாக, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், உற்சாகத்துடன் வந்தனர்.
* பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநாட்டு மைதானம் கண்காணிக்கப்பட்டது.
* இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள்அதிகளவில் பங்கேற்றனர்.
* செங்கோட்டை வடிவத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் மீது, பா.ஜ., கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
* மாநாட்டு மேடையின் முகப்பில், பா.ஜ., தலைவர்கள் ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
* மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த, பெரிய, "டிவி' திரையில் மாநாட்டு காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பப்பட்டன.
* மாநாட்டிற்கு வந்தவர்களை, "தமிழகம் காப்போம்; தாயகம் காப்போம்' வாசகங்கள் அடங்கிய பனியனை அணிந்த தொண்டர்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
* மாநாட்டு மேடை பகுதியை, கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, மாநாட்டு மேடையை போலீசார் கண்காணித்தனர்.
* வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் பிரிவு, உளவுத்துறை, தேசிய புலனாய்வுத் துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பா.ஜ., மாநாட்டில் குற்றவாளிகள் போட்டோ:
ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட, பல வழக்குகளில் தேடப்படும், தலைமறைவாக உள்ள, நான்கு பேரின் புகைப்படங்கள், போலீசார் சார்பில், திருச்சியில் நடந்த, 'இளந்தாமரை' மாநாட்டு நுழைவாயிலில் ஒட்டப்பட்டிருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன், வேலூரில் இந்து அமைப்பைச் சேர்ந்த வெள்ளையன், சேலத்தைச் சேர்ந்த, பா.ஜ., மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக்குழு, தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் தேடப்படும் குற்றவாளிகளாக, பன்னா இஸ்மாயில், 32, பிலால் மாலிக், 25, அபுபக்கர் சித்திக், 48, "போலீஸ்' பக்ருதீன், 36, ஆகிய, நால்வரும் போலீசாரால் அறிவிக்கப்பட்டனர். திருச்சியில் நேற்று, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற, "இளந்தாமரை' மாநாடு மைதானத்தில், போலீசார் சோதனை நடத்தும் இடத்தில், குற்றவாளிகள் நால்வரின் படத்துடன், அவர்கள் பெயர் மற்றும் அங்க அடையாளங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்துடன், "இவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என்று போலீஸ் அறிவித்த நோட்டீசும் ஒட்டப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து, "இதை ஏன் இங்கே ஒட்டி வைத்துள்ளீர்கள்?' என ஆத்திரத்துடன், போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். "இவர்கள் யாரும் பார்வையாளர் தோரணையில், மாநாட்டு திடலுக்குள் நுழையாமல் இருக்கவும், அவர்களை மாநாட்டுக்கு வருபவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ளவும் ஒட்டி வைத்துள்ளோம்' என, போலீசார் விளக்கம் கூறினர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் குடும்பம்: மோடி ஆறுதல்:
சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தாருக்கு, இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க வந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, ஆறுதல் கூறினார். தமிழக, பா.ஜ., கட்சியின் இளைஞரணி சார்பில், திருச்சி "ஜி' கார்னர் மைதானத்தில் இளந்தாமரை மாநாடு நேற்று நடந்தது. இதற்காக நேற்று மதியம், 3:20 மணிக்கு, தனிவிமானம் மூலம் திருச்சி வந்த மோடி, விமான நிலையத்திலிருந்து நேராக எஸ்.ஆர்.எம்., ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின் தமிழக பா.ஜ., கட்சி நிர்வாகிகளுடன், தமிழகத்தில் கட்சி நிலவரம் குறித்தும், லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணி குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதன்பின், கடந்த ஜூலை, 19ம் தேதி சேலத்தில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட, பா.ஜ., கட்சியின் மாநில நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக சேலத்திலிருந்து ஆடிட்டர் ரமேஷ் மனைவி சுபா, அவரது தாயார் மற்றும் சகோதரர்கள், திருச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று மாலை, 4.30 மணிக்கு அவர்களை சந்தித்த மோடி, அவருடைய குடும்பத்துக்கு கட்சி என்றும் கடமைப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார். அப்போது, கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மோடிக்கு பிடித்த பெயர் பாகேஷ்?:
திருச்செந்தூர் பா.ஜ., நிர்வாகி ஒருவரின் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க, நேற்று மாலை ஹோட்டலில் இருந்த மோடியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குழந்தையைப் பார்த்த அவர், அதை கொஞ்சி, ஆண்குழந்தை என்பதால், பாகேஷ் என்று பெயர் வைத்தார்.
ஆமதாபாத் சென்றார் மோடி!
இளந்தாமரை மாநாட்டுக்கு வந்திருந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, தனி விமானம் மூலம், திருச்சி வந்தார். மாநாடு முடிந்த பிறகு, இரவு 8:00 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில், நரேந்திர மோடி, ஆமதாபாத் புறப்பட்டுச் சென்றார். ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் இரவு, 8:10 மணிக்கு, சென்னை புறப்பட்டுச் சென்றார்.
கறுப்பு பலூன் பறக்கிறதா?
மோடி பங்கேற்கும் மாநாட்டு மைதானத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அடிக்கடி வானத்தை நோக்கிப் பார்த்தபடி, ‘கறுப்பு பலூன் பறக்கிறதா?’ என, கண்காணித்தனர். திருச்சி வரும் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்த, சில அமைப்பினர் திட்டமிட்டனர். அப்படி நடக்க விடாமல் தடுக்க, திருச்சி மாநகர் முழுவதும், உளவுத் துறை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநகர் முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த, எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர், மோடி பங்கேற்கும் மாநாடு நடக்கும் மைதானத்தின் மீது, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு, எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டதாக தெரிகிறது. இதை மோப்பம் பிடித்த போலீசார், கறுப்பு பலூன் திட்டத்தை முறியடிக்க உஷாராகினர். நேற்று மதியம், 12:00 மணி முதலே, மாநாட்டு மைதானத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த உளவுத் துறை போலீசாரும், விவரம் தெரிந்த போலீஸ் அதிகாரிகளும், அடிக்கடி வானத்தில், கறுப்பு பலூன் பறக்கிறதா என்று பார்த்தபடி இருந்தனர். பல போலீசார் அடிக்கடி வானத்தை பார்த்ததால், மாநாட்டுக்கு வந்திருந்த பார்வையாளர்களும், என்ன விஷயம் என்று தெரியாமல், அடிக்கடி வானத்தை பார்த்தபடி இருந்தனர்.
திருச்சி – பாதுகாப்பு கோட்டை:
மோடி வருகை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தின் அனைத்து, ‘செக்போஸ்ட்’களிலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ‘செக்போஸ்ட்’கள் வழியாக திருச்சி மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார், சோதனைக்கு பின்னர் அனுப்பினர். கட்சி வாகனங்கள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, வாகனங்களின் எண்கள் பதிவு செய்யும் பணியில், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல, ஏழு செக்போஸ்ட்களின் வழியாக, மதியம் வரை, ஆயிரக்கணக்கான வாகனங்களில், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள், மக்கள் கடந்து சென்றனர். மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், காவி நிற உடை அணிந்து வந்தனர். தவிர தொப்பி, துண்டு என அனைத்திலும் காவி நிறம் காணப்பட்டது. இதனால், மாநகரமே காவி மயமாக காட்சியளித்தது.
மோடியின் அழைப்பை மறுத்த சு.சாமி:
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அழைப்பை, சுப்ரமணியசாமி ஏற்க மறுத்துள்ளார். ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசாமி, பா.ஜ., கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், தன் கட்சியை இணைத்துக் கொண்டார். குஜராத்தில் தங்கியிருந்து, லோக்சபா தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரு தினங்களுக்கு முன், திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, சுப்ரமணியசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், உலகம் முழுவதும், பா.ஜ., கட்சியை பரப்ப உள்ளதாகவும், லண்டன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள, ஆர்.எஸ்.எஸ்.,- பா.ஜ., கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும், திருச்சி மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை என்று சாமி கூறி விட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளந்தாமரை மாநாடு - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இளந்தாமரை மாநாடு
அப்படி வென்றால் மோடி மஸ்தான் வேலை என்றே கூறுவோம்.SajeevJino wrote:நிச்சயமாக சொல்லுகிறேன்Muthumohamed wrote:
15 எம் பி சீட்டுங்களா ?
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010
Re: இளந்தாமரை மாநாடு
"""மோடி மஸ்தான் வேலை"" அப்படி என்றால்...!!!!!T.N.Balasubramanian wrote:அப்படி வென்றால் மோடி மஸ்தான் வேலை என்றே கூறுவோம்.SajeevJino wrote:நிச்சயமாக சொல்லுகிறேன்Muthumohamed wrote:
15 எம் பி சீட்டுங்களா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இளந்தாமரை மாநாடு
இந்த சித்து வேலை தெரியாதா ? நண்பரே ...SajeevJino wrote:"""மோடி மஸ்தான் வேலை"" அப்படி என்றால்...!!!!!T.N.Balasubramanian wrote:அப்படி வென்றால் மோடி மஸ்தான் வேலை என்றே கூறுவோம்.SajeevJino wrote:நிச்சயமாக சொல்லுகிறேன்Muthumohamed wrote:
15 எம் பி சீட்டுங்களா ?
ரமணியன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இளந்தாமரை மாநாடு
கண்டிப்பாக இல்லை
நம்மக்கு தேவை ஒரு அரசு ஊழல் குறைந்த ஒரு அரசு ..மேலும் நாடு மக்களின் உயிரின் மேல் அக்கறையுள்ள ஒரு அரசு
மட்டற்ற நாட்டு மக்களிடம் பேசும் பொது நான் ஒரு இந்தியன் என்று பெருமையோடு பேச தன்மானத்தை நிலை நிறுத்தும் அரசு
இவைகள் தான் மோடியின் சித்து வேலைகளாக இருக்கும்
நம்மக்கு தேவை ஒரு அரசு ஊழல் குறைந்த ஒரு அரசு ..மேலும் நாடு மக்களின் உயிரின் மேல் அக்கறையுள்ள ஒரு அரசு
மட்டற்ற நாட்டு மக்களிடம் பேசும் பொது நான் ஒரு இந்தியன் என்று பெருமையோடு பேச தன்மானத்தை நிலை நிறுத்தும் அரசு
இவைகள் தான் மோடியின் சித்து வேலைகளாக இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மருத்தவ உச்சி மாநாடு
» சென்னையில் ஒரு மாநாடு
» ஜி 20 மாநாடு 2023
» ஜி-7 மாநாடு: டிரம்ப் 'பல்டி'
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» சென்னையில் ஒரு மாநாடு
» ஜி 20 மாநாடு 2023
» ஜி-7 மாநாடு: டிரம்ப் 'பல்டி'
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|