ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

3 posters

Go down

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை Empty உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

Post by சாமி Fri Sep 20, 2013 7:44 am

தானதன தானதனத் தந்தனதான –தானத்

தந்தனத் தானதனத் தந்தனதான

..............................................................

ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்

கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?

தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை

மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்

பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்

போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்

அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை

ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்

தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த

மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்

அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்

அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.

எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது

வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!

செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்

கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!

எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்

பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!

எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்

விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!

காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்

அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்

சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்

தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?

மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்

என்னாடு என்னாடி நரம்பில்ஏறி

வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்

பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே

தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்

தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்

தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்

எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்

தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே

முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்

குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை

குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்

தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு

துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்

தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை

அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்

தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்

தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்

என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது

ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!

கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்

கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!

(இயற்றியவர் - சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை Empty Re: உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

Post by ayyasamy ram Fri Oct 04, 2013 7:27 am

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
-
>இரா.இரவி
=========
வீடு மாறுவதற்கே இந்த வலி என்றால்...
பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .
பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை Empty Re: உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

Post by சிவா Fri Oct 04, 2013 1:05 pm

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – தலைப்பே கவிபாடுகிறது!


உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை Empty Re: உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum