Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை
3 posters
Page 1 of 1
உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை
தானதன தானதனத் தந்தனதான –தானத்
தந்தனத் தானதனத் தந்தனதான
..............................................................
ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்
கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?
தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை
மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்
பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்
போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்
அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை
ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்
தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த
மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்
அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்
அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.
எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது
வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!
செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்
கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!
எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்
பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!
எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்
விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!
காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்
அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்
சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்
தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?
மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்
என்னாடு என்னாடி நரம்பில்ஏறி
வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்
பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே
தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்
தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்
தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்
எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்
தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே
முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்
குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை
குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்
தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு
துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்
தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை
அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்
தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்
தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்
என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது
ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!
கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்
கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!
(இயற்றியவர் - சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill)
தந்தனத் தானதனத் தந்தனதான
..............................................................
ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்
கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?
தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை
மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்
பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்
போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்
அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை
ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்
தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த
மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்
அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்
அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.
எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது
வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!
செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்
கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!
எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்
பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!
எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்
விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!
காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்
அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்
சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்
தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?
மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்
என்னாடு என்னாடி நரம்பில்ஏறி
வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்
பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே
தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்
தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்
தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்
எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்
தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே
முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்
குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை
குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்
தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு
துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்
தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை
அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்
தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்
தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்
என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது
ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!
கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்
கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!
(இயற்றியவர் - சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill)
Re: உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை
வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
-
>இரா.இரவி
=========
வீடு மாறுவதற்கே இந்த வலி என்றால்...
பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .
பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி
-
>இரா.இரவி
=========
வீடு மாறுவதற்கே இந்த வலி என்றால்...
பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .
பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது
Re: உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை
உள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – தலைப்பே கவிபாடுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» குயிலின் கூவல்
» கூவத்தின் கூவல்
» கிளியின் கதை
» கிளியின் கால்களை வெட்டி
» சீட்டெடுத்துக் கொடுக்கும் கிளியின் எதிர்காலம்...!
» கூவத்தின் கூவல்
» கிளியின் கதை
» கிளியின் கால்களை வெட்டி
» சீட்டெடுத்துக் கொடுக்கும் கிளியின் எதிர்காலம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|