ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்

+6
கலைவேந்தன்
ராஜா
ayyaasamy
ரூபன்
சிவா
Admin
10 posters

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Go down

இராம காவியம் - Page 5 Empty இராம காவியம்

Post by Admin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:30 pm

சூர்ப்பணகை, உன் தம்பி மூக்கை அறுத்ததனால் என் அழகு போய்விட்டது. பெருமானே தங்களுக்கு ஒரு தம்பி இருப்பதாக இப்பொழுது அறிகின்றேன். என்னைத் தங்கள் தம்பிக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுங்கள். நானும் அவரும் இன்பமாக வாழ்வோம். மலரினும் மெல்லிய இந்தப் பெண்ணால் உங்களுக்கு என்ன பயன் ? என்னைச் சேர்த்துக் கொண்டால் போரில் உதவி புரிவேன். நல்ல உணவுகளைத் தேடித் தருவேன். உங்களை வானவெளியிலே தூக்கிச் செல்லுவேன். நீங்கள் மிகுந்த அறிவு உள்ளவர்கள். மூக்கு இருந்தால் அழகாக இருக்கும். பலரும் என்னைக் கண்டு விரும்புவார்கள். மூக்கில்லாத என்னை ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அயோத்திக்குப் போனால் என்னைப் பார்த்தவர்கள் இராகவா உன் தம்பி மனைவிக்கு மூக்கு இல்லையே என்று கேட்டால் என் மனைவி சீதைக்கு இடுப்பு இல்லையே என்று சொல்லுங்கள். முகத்தில் மூக்கு இருந்து என்ன பயன் ? நீங்கள் அறிவு படைத்தவர்கள். அதனால், வேண்டாத மூக்கை வெட்டி விட்டீர்கள். பெண்ணாகிய என்பால் இரக்கம் காட்டி என்னை உங்கள் தம்பிக்கு மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பிதற்றினாள்.

இராமர், கொடிய அரக்கியே என் தம்பி கண்டால் உன் உயிருக்கு உலை வைத்து விடுவான். ஓடிப் போ என்ற கூறி விட்டுப் பர்ணசாலைக்குச் சென்றார்.

கரன் வதை் அவள் அறுப்பட்ட காதுகளையும் மூக்கையும் எடுத்துக் கொண்டு ஜனஸ்தானத்தில் ஆட்சி புரிகின்ற தன் சிறிய தாயார் கும்பீநசியின் மகனாகிய கரனுடைய அரசவைக்குச் சென்று, அவன் கால்மேல் விழுந்து கதறிப் பதறி அழுதாள். அரசவையில் இருந்தவர்கள் சூர்ப்பணகையின் நிலை கண்டு, கதிகலங்கி, மதிகலங்கி நின்றார்கள்.

கரன் தங்கையின் நிலைகண்டு எரிமலைபோல் குதித்தான். கால்களால் தரையை மிதித்தான். என் அன்புத் தங்கையே பதினாலு உலகங்களிலும் உன்னைத் தொட்டு மூக்கு அரிவார் இல்லை. நீ இராவணேசுரனின் சகோதரி. தெய்வத்துக்கு வேண்டுகோள் செய்து மூக்கை அரிந்து கொண்டனையா ?

சூர்ப்பணகை, அண்ணே இராமன், இலட்சுமணன் என்று இரண்டு மானிடர்கள். சிறந்த வில்லாளிகள், அரக்கர் குலத்தை வேருடன் அழிக்கப் பஞ்சவடியில் வந்து தங்கியிருக்கிறார்கள். அந்த இராமனுடைய மனைவி சீதை. அவள் பேரழகி. அவளை அண்ணனுக்குத் தரவேண்டுமென்று தூக்கப் போனேன். இளையவனாகிய இலட்சுமணன் என்னுடைய மூக்கையும் காதையும் அறுத்துவிட்டான். இதுதான் நடந்தது என்றாள்.

கரன் கோபித்துப் போருக்கு எழுந்தான். அவனுடைய அமைச்சர்கள், மகா வீரனே இரு மானிடப் புழுக்களின் மீது நீர் போருக்குச் சென்றால் தேவர்கள் சிரிப்பார்கள் என்று கூறித் தடுத்தார்கள்.

கரன், நன்று கூறினீர் என்று சொல்லிப் பதினாலு கோடி வெண்கலத்தேர் வீரர்களைப் போருக்கு அனுப்பினான். சூர்ப்பணகை வழி காட்ட அவர்கள் பஞ்சவடியை அடைந்தார்கள். போர்ப் பறை அறைந்தார்கள். அது கேட்டு இலட்சுமணர் கொதித்து எழுந்தார். இராமர், தம்பீ நீ சீதைக்குக் காவலாக இரு. நான் சென்று இவர்களைக் கொன்று வருவேன் என்று கூறிப் புறப்பட்டார்.

இராமருக்கும் அசுர சேனைகளுக்கம் போர் நிகழ்ந்தது. இராமர் வெண்கலத்தேர் வீரர்களைக் கொன்று அழித்தார். கரனும், திரிசிரனும் , தூஷணனும் அறுபது லட்சம் சேனைகளுடன் வந்து இராமருடன் கடும் போர் புரிந்தார்கள்.

இராமர், திரிசிரனையும், தூஷணனையும் கொன்றார். கரன் இராமருடன் போர் புரிகின்றபொழுது அவர் நெற்றியில் பாணத்தால் உதிரம் ஒழுகச் செய்தான். இராமர் சீற்றமடைந்து வில்லில் பாணத்தைப் பூட்டி வேகமாக இழுத்தார். வில் ஒடிந்து விட்டது. இராமர் சிறிதும் தளர்ச்சி அடையாமல் தன் வலக்கைப் பின்புறம் நீட்டினார். பரசுராமர் கொடுத்த திருமாலின் வில்லாகிய பிரசண்ட கோதண்டத்தை வருணனிடம் கொடுத்து வைத்திருந்தார். அந்த வில்லைக் கொண்டு வந்து வருணன் கொடுத்தான். ரகுவீரர் பிரசண்ட கோதண்டத்தை வளைத்து, பாணத்தைத் தொடுத்து, கரனைக் கொன்று அருளினார். இராமர் பஞ்சவடி சென்றார். சீதையும், இலட்சுமணரும் கண்ணீரினால் அவர் உடம்பில் இருந்த புண்ணைக் கழுவினார்கள்.

சூர்ப்பணகை, அரக்கர் குல வீரர்களே நான் மனிதர்களை விரும்பி மூக்கறுப்புண்டேன். என் வாக்கினால் நீங்களும் அழிந்தீர்கள் என்று கூறி வருந்தி, இலங்கையை நோக்கிப் புறப்பட்டாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:48 pm

பொன்மானும் பெண்மானும்

[You must be registered and logged in to see this image.]


சூர்ப்பணகை முகத்தில் உதிரம் ஒழுக அலங்கோலமாக இலங்கைவாசிகள் திடுக்கிட்டுத், திகைத்து நின்றார்கள். இராவணன் சபா மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான். அரம்பையர்கள் ஆடினார்கள் கந்தர்வர்கள் பாடினார்கள் முனிவர்கள் தங்கக் கிண்ணத்தில் அட்சதையை வைத்துக் கொண்டு இந்த அரிசியை உன் வாயில் என்று இடுவோமோ என்ற முணுமுணுத்துக் கொண்டு நீடு வாழ்க என்ற உரத்த குரலில் கூறிக்கொண்டே அட்சதையைத் தெளித்தார்கள். மகோன்னதமான அந்த ராஜ சபையில் நெருப்போடு மேகம் வீழ்வதுபோல், உதிரம் சிந்த சூர்ப்பணகை இராவணன் காலில் வீழ்ந்து அழுதாள்.

இராவணன் தங்கையின் நிலைமையைக் கண்டு கட்டுக்கடங்காத கடுங்கோபத்தைக் கொண்டான். கோபத்தினால் அவன் கண்களிலும் காதுகளிலும், மூக்கிலும் இருந்து நெருப்புப் பொறிகள் பறந்தன. அதனால் மீசை மயிர்கள் எரிந்து கரிந்தன. நாவினால் அத்தீயை அணைத்துக் கொண்டான். இடி இடித்ததுபோல் முழங்கி, என் அருமைத் தங்கையே உன் மூக்கையும், காதையும் அறுத்தவர்கள் யார் ? என் அருமைத் தங்கையாகிய உன் மூக்கு அரிய உலகங்களிலும் யாருக்குத் துணிவு ஏற்படும் ? இவ்வாறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களை ஒரு நொடியில் நமன் உலகிற்குக் குடியேற்றுவேன் என்று முழங்கினான், அவனுடைய சீற்றத்தைக்கண்டு அமரர்கள் அஞ்சினார்கள். கதிரவன் கதிகலங்கினான். எட்டுக்குல மலைகள் அசைந்தன. ஏழு கடல்களும் கொந்தளித்தன.

சூர்ப்பணகை, அண்ணா இரண்டு சிறிய மானிடர்கள் முப்புரிநூல் தரித்துள்ளவர்கள். தசரத ராஜகுமாரர்கள். சமானமில்லாத வில்லாளிகள், உன்னை ஒரு பொருளாக எண்ணாமல் ஒரு சிறிய துகளாக எண்ணுபவர்கள். மூத்தவனாகிய இராமன் மிகவும் சாந்த சீலன். இளையவன் சீற்ற முடையவன். அவன்தான் என்னை இவ்வாறு செய்தான் என்றாள்.

இராவணன், அன்புத் தங்கையே தேள்கூடக் கை வைத்தால் தான் கொட்டும். நீ என்ன செய்தாய் ? என்று கோபத்துடன் கேட்டான்.

அண்ணா இராமனுடைய மனைவி அழகு சிகரம் அவளைக் காண லட்சம் கண்கள் வேண்டும். உன் இருபது கண்கள் போதா. அவள் தங்கச்சிலை, அன்னநடை, மின்னலிடை, பால்மொழி, சேல்விழி, அவளை நீ அடைந்தால் அதுவே பெரும்பாக்கியம் ஆகும். அண்ணா இந்திரன் சசிதேவியைப் பெற்றான். முருகனின் தந்தையாகிய சிவபெருமான் உமாதேவியை மனைவியாகப் பெற்றார். செந்தாமரைக் கண்ணாகிய் திருமால் லட்சுமிதேவியை மனைவியாகப் பெற்றார். சீதையை நீ பெற்றாயானால், சீதைக்குள்ள அழகு இந்திராணிக்கும், பார்வதிக்கும் திருமகளுக்கும் இல்லாமையினால் நீயே பெரிய புண்ணியவான். அண்ணா திருமால் இலக்குமியை மார்பில் வைத்திருக்கின்றார். சிவபெருமான் மலைமகளை தன் உடம்பின் ஒரு பாதியில் வைத்திருக்கின்றார். சீதையை நீ அடைந்தால் அவளை எங்கே வைத்து வாழ்பபோகின்றாய் ? அண்ணா அழகின் தெய்வாமாகிய இலட்சுமி சீதைக்குப் பணிவிடை செய்யவும் தகுதியாக மாட்டாள். அவள் கைப்பட்டால் பட்டமரம் துளிர்க்கும். அவள் பேசினால் கல் கரையும், இரும்பு இளகும், ஆதலால், அவளை உனக்குக் கொண்டு வந்து தர வேண்டுமென்று தூக்கப்போனேன். கோபமே வடிவாகிய இலட்சுமணன் மூக்கையும், காதையும் அரிந்துவிட்டான். அண்ணா நீ சீதையைக் கொண்டு வந்து வாழ்கின்றபொழுது அந்த இராமனை எனக்குக் கொடுத்துவிடு என்றாள்.

இதனைக் கேட்ட இராவணன், தங்கையே ஜனஸ்தானத்தில் வாழ்கின்ற கரனிடம் சொல்லிருந்தால், கரன் அரனிடம் வரம் பெற்றவன். அவன் அந்த மானிடப் புழுக்களைக் கொன்றிருப்பானே அவனிடம் நீ ஏன் முறையிடவில்லை ? என்று கேட்டான்.

சூர்ப்பணகை, அப்படிச் செய்யாமல் இருப்பேனா அண்ணா நான் கரனிடம் போய் முறையிட்டேன். கரன், திரிசரன், தூஷணன் அறுபது லட்சம் சேனைகளுடன் இராமனிடம் போர் புரிந்து மூன்று நாழிகையில் அத்தனைப் பேரும் மாண்டு போனார்கள் என்று கூறியதைக் கேட்டதும் இராவணன், தன் தம்பியாகிய கரன் மாண்டதையும் மறந்தான். தங்கையின் நாசியை அறுத்த லட்சுமணனையும் மறந்தான். சூர்ப்பணகையால் கேள்விப்பட்ட சீதையை மறந்தானில்லை.

அரசவையைக் கலைத்துவிட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான். சீதாதேவியை தன் இதயமாகிய சிறையில் வைத்தான். பிராட்டியார் மேல் கொண்ட பெருங்காதலால் காமாக்கினி கொழுந்து விட்டு எரிந்தது. அவன் உடம்பெல்லாம் கருகியது. மையல் பெருகியது. சந்திரனும், தென்றல் காற்றும் அவனுக்கு வடவைத் தீயைப்போல் வெப்பத்தைக் கொடுத்து வாட்டி வதைத்தன., வசந்தருது முதலிய ருதக்களையெல்லாம் மாற்றி மாற்றி அழைத்தான். காலங்கள் அவன் கட்டளைக் கடங்கி மாறி மாறி வந்தன. அன்று இரவு அவன்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. பொழுது புலர்ந்தது.

கண்ட கண்ட இடமெல்லாம் சீதையின் வடிவம் உருவெளியில் தோன்றின. அந்த மாய வடித்தைத் தடவித்தடவித் பார்த்து ஏமாந்தான். இதைப்போல் சூர்ப்பணகை இராமபிரானையே எண்ணி ஏங்கினாள். அவளுக்கும் கண்ட கண்ட இடங்களெல்லாம் இராகவனுடைய உருவம் தோன்றிக் காட்சி அளித்தது. தூதரை அனுப்பிச் சூர்ப்பணகையை இராவணன் அழைத்தான். பொய்தங்கும் நெஞ்சைவிடக் கொடியவளாகிய சூர்ப்பணகை அங்கு வந்தாள். தங்கையே இதோ பார் மின்னல் இடை, இருண்ட ஜடை, மான் விழி, தங்க மேனி, இவள் தானே நீ சொன்ன சீதை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:48 pm

சூர்ப்பணகை, அண்ணா நீலமேகம் போன்றி அழகிய மேனி. அழகிய சடைமுடி, மரவுரி, வில்லை ஏந்திய திருக்கை இது இராமன் அண்ணா என்றாள். அங்கே சீதையுமில்லை இராமனும் இல்லை.

தங்கையே நாம்தான் இந்திர ஜாலம் செய்கிறோமென்றால், இந்தச் சிறிய மானிடர்கள் மந்திரஜாலம் செய்து நம்மையே ஏமாற்றுகிறார்கள்.

சூர்ப்பணகை, அண்ணா நீ இரவெல்லாம் சீதையையே நினைத்தபடியால் உனக்கு அவள் வடிவம் தெரிகிறது என்றாள்.

தங்கையே எனக்குச் சீதை மேலுள்ள ஆசைப்பெருக்கால் சீதையின் வடிவம் தெரிகிறது என்றாள். உனக்கு ஏன் இராமன் வடிவம் தெரிகிறது ?

அண்ணா இராமன் மீதுள்ள அச்சத்தினால் எனக்கு தெரிகின்றது என்றாள்.

இராவணன் காலையில் நீராடினானில்லை. வழக்கம்போல சிவபூசை செய்தானில்லை. வஞ்சனை செய்து சீதையைக் கவர வேண்டும் என்றே எண்ணினான். தாடகையின் மகனான மாயத்தில் வல்ல மாரீசனைத் துணை பற்ற வேண்டும் என்று எண்ணினான். கடற்கரையில் ஓர் ஆலமரத்தின் கீழ் தவம் செய்து கொண்டிருந்த மாரீசனிடம் சென்றான்.

மாரீசன் இராவணனைக் கண்டு துணுக்குற்றான். இந்த காலை நேரத்தில் இவன் எங்கு வந்தான் ? என்று எண்ணினான். மருகனே வருக வருக எல்லாரும் நலமா ? என்று வினாவினான்.

இராவணன், மாரீசனைப் பார்த்து, மாமா எல்லாரும் நலம். உன் மருகியாகிய சூர்ப்பணகையைத் தசரத குமாரர்களாகிய இராம லட்சுமணர் மூக்கையும் காதையும் அரிந்து விட்டார்கள். கரன், திரிசிரன், தூஷணாதியரை வதைத்து விட்டார்கள். நம்முடைய குலத்துக்கே இது பெரிய அவமானம்.

மாமா இராகவனுடைய மனைவி சீதை அளவற்ற அழகுள்ளவளாம். அவளை நான் அடைய வேண்டும். இதற்கு நீ துணை செய்ய வேண்டும் என்று கூறினான்.

மாரீசன், இராவணா உன்னுடைய செய்கையால் நமது அசுர குலமே அழிந்துவிடும். நான் தீயவனாக இருந்தாலும் உனக்குத் தூய உள்ளத்துடன் அறிவுரை கூறுகின்றேன். பாவங்களுக்கெல்லாம் தலையாய பாவம் பரதாரத்தை விரும்புவது. உனக்கு ஒரு லட்சம் மனைவியர் இருக்க, இன்னொருவன் மனைவியை விரும்பலாமா ? பிறன் மனைவியை விரும்பி அழிந்தவர்கள் பலர். இந்திரன் அகலிகையை விரும்பிப் பெருமை குன்றினான். சந்திரன் தாரையை விரும்பி நலம் அழிந்தான். பரதாரகமனம் செய்து அழிந்தவர் பலர். இராவணா உனக்கு கிடைத்திருக்கின்ற பதவியும் செல்வமும் எளிதாகக் கிடைத்தவை அன்று. பலகாலும் பட்டினி கிடந்து வேள்வித் தீயில் உன் கரங்களையும், சிரங்களையும் துணித்து, அக்னியில் ஆஹுதி கொடுத்துப் பலகாலம் தவம் செய்து பெற்ற பதவியைப் பெண்ணாசையினால் இழக்காதே என்று அறவுரை கூறினான்.

செவிடன் செவியில் வீணையின் ஒலி விழுமா ? இராவணன். மாமா அற்பமான மானிடப் பதர்களுக்கு அஞ்சுகின்றாய். ஜானகியை நான் அடைந்தே தீர வேண்டும் என்றான் தீவிரமாக.

மாரீசன், இராவணன் திருந்தமாட்டான். இவனுக்கு அழிவுகாலம் வந்திருக்கின்றது என்று எண்ணி, இராவணா நீயும் நானும் போர் செய்து இராம இலட்சுமணர்களைக் கொன்ற சீதையைக் கவரலாம் என்று கூறினான்.

இராவணன், மாமா சீதை அளவில்லாத கற்புள்ளவள். கணவன் இறந்தவுடன் அவளும் இறந்து விடுவாள். ஆதலால், வஞ்சனையாகக் கவர்தல் வேண்டும் என்றார்கள்.

மாரீசன், நான் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டான்.

மாமா பெண்களுக்கு அதிசயப் பொருள்களில் விருப்பம் அதிகம். நீ பொன் மானாகச் சென்று சீதைக்கு முன் உலாவுவாய். சீதை மான் பிடித்துத் தருமாறு இராமனை வேண்டுவாள். மான் பின்னே இராமனும், இலட்சுமணனும் செல்வார்கள். நான் சீதையை வஞ்சனையாக அபகரித்துக் கொள்வேன் என்றான்.

மாரீசன், இராவணா இராகவன் என் தாய் தாடகையையும் என் சகோதரனாகிய சுபாகுவையும் இளமையிலேயே கொன்றவன். அன்றே என்னைக் கொல்ல பாணத்தைத் தொடுத்தான். அக்கணை என்னைக் கடலில் தள்ளியது. நான் உனக்கு உறவாகி இத்தனைக் காலம் வாழ்ந்தேன். இப்போது என்னை நமன் உலகம் வா வா என்று கைகாட்டி அழைக்கின்றது. அசுரகுல வேந்தனாகிய நீ மாள்வது திண்ணம். நான் முன் கூட்டியே சென்று உங்களுக்கெல்லாம் நரக உலகத்தில் இடம் பிடித்து வைப்பேன் என்று கூறினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 2:48 pm

பஞ்சவடியில் இராமச்சந்திர மூர்த்தி சந்தியாவந்தனம் செய்துவிட்டு மரகதக் கம்பளம் விரித்தாற்போன்ற புல்தரையில் மனோ சாந்தியுடன் வீற்றிருந்தார். மாரீசன் நவமணிகள் இழைத்த பொன் மானாகச் சீதா தேவியின் திருமுன் உலாவினான். சீதை அந்த மானைக்கண்டு அதன்மீது அளவற்ற ஆசை கொண்டாள். கண்ணை இமைக்காமல் பார்த்துப் பரவசமடைந்தாள். இராமபிரானைப் பார்த்து பெருமானே இந்த மானைப் பாருங்கள் எத்துணை அழகாக இருக்கின்றது ? இதனைப் பற்றிக் கொடுங்கள். இதனுடன் நான் விளையாடுவேன் என்றாள்.

அரண்மனையில் தனக்கென்றிருந்த விலைமதிக்க முடியாத நவரத்தின் அணிகலன்களையும் பட்டாடைகளையும் தூசாக நினைத்துத் துறந்து வந்த ஜனக ராஜகுமாரி, வனத்தில் உலாவும் மானை விரும்பினாள். அதற்கென்ன காரணம் ? விதி வழி மதி செல்லுகின்றது.

இராமபிரான், தம்பி இலட்சுமணா நீ உன் அண்ணிக்கு பாதுகாவலாக இரு., நான் சென்று மானைப் பற்றித் தருவேன் என்றார்.

கூர்த்த மதியுடைய இலட்சுமணர், அண்ணா அண்ணிக்கு யஜமான் தாங்களிருக்க அந்த மான் ஏன் ? தவம் செய்ய வந்த தங்களுக்குத் துணை செய்ய வந்த அண்ணி காட்டு மானை விரும்புவது நலன் அன்று என்றார்.

சீதாதேவி, பெருமானே தங்கள் தம்பி எப்போதும் வேதாந்தமே பேசுவார். இந்த மான்மீது எனக்கு அதிக விருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. தாமதம் செய்தால் மான் ஓடிவிடும். இதனைச் சீக்கிரம் பற்றிக் கொடுங்கள் என்றாள்.

இராமர், தம்பி நாட்டையும் வீட்டையும் தியாகம் செய்து வந்த உன் அண்ணியின் விருப்பத்தை, நான் நிறைவேற்ற வேண்டும். ஆதலால், நீ இங்கு இரு. நான் சென்று மானைப் பற்றி வருவேன் என்றார்.

இலட்சுமணர், அண்ணா நெய்கின்றவனுக்குக் குரங்குக் குட்டி ஏன் ? என்று ஒரு பழமொழி உண்டு. இயற்கையான மானுக்கு இத்தனை அழகு இருக்காது. மாரீசன் மான் வடிவாக வந்திருக்கின்றான் என்று எனக்கு தோன்றுகின்றது. அயோத்தியில் அம்மாவின் வார்த்தையால் அப்பா மாண்டு விட்டார். தாங்கள் அண்ணி வார்த்தையைக் கேட்கின்றீர்கள். இதனால், என்ன துன்பம் வருமோ என்று அஞ்சுகின்றேன். இவனை மானாக அனுப்பிய அசுரக் கூட்டம் மேகம்போல் சூழ்ந்து சூழ்ந்து நமக்கு இடர் செய்ய இருக்கின்றது என்றார்.

சீதை மான் வேண்டுமென்று கண்ணீர் சிந்தி அழுதாள். இராமர், இலட்சுமணா இவன் மாரீசனாக இருந்தால் என்ன ? ஓர் அம்பினால் இவனைக் கொல்லுவேன். நீ இங்கு இரு என்று சொல்லிவிட்டுக் கோதண்டத்தைக் எடுத்துக் கொண்டு மான் பின்னே சென்றார்.

மான் குன்றிடை தவழும், மேகக் குழுவில் நடக்கும், நின்றால் நிற்கும், சென்றால் அதுவும் செல்லும். இப்படி எம்பெருமானை நெடுந்தூரம் அலைக்குழித்தது. இராமர் இவன் அரக்கன் என்று உணர்ந்தார். ஒரு கூரிய பானத்தைத் தொடுத்தார். செத்தும் கெடுத்தான் சீவகத்துச் செட்டி என்ற பழமொழிபோல் மாரீசன் இராமா குரலால், ஆ சீதா ஆ இலட்சுமணா என்று அலரி மாண்டான்.

இதனைக் கேட்ட சீதாதேவி இராமருக்கு ஏதோ ஆபத்து வந்தது என்று எண்ணி, இலட்சுமணா அண்ணா அலறுகிறார். நீ ஓடி உதவி செய் என்றாள்.

இலட்சுமணர், அண்ணி வேதவேத்யனான என் அண்ணனுக்கா ஆபத்து ? என் அண்ணனுடைய கோதண்டம் காதண்டம் வரை வளைந்தால் மூதண்டம் பிளக்குமே என் அண்ணன் சுண்டு விரல் அசைந்தால் அண்டங்கள் அசையுமே ஆறாயிரம் எறும்புகள் சேர்ந்து ஓர் இரும்புக் குண்டை விழுங்குமா ? எண்ணாயிரம் புழுக்கள் சேர்ந்து நெருப்பைத் தின்னமா ? சூரிய குலத்தை மூவேழு இருபத்தோரு முறை கருவறுத்த பரசுராமனை என் அண்ணா ஒரு விநாடியில் வென்றாரே தாங்கள் நேரில் பார்த்துக் கொண்டிருந்தீர்களே யாராலும் வெல்ல முடியாத கிராதனை ஒரு விநாடியில் கொன்றாரே. கரன் முதலிய அரக்கர்களை மூன்று நாழிகையில் வதை செய்தாரே இவற்றையெல்லாம் அறிந்த தாங்கள் பேராற்றல் படைத்த எம்பெருமானுக்கு ஆபத்து என்று எண்ணலாமா ? நான் தங்களை விட்டுப் பிரிந்தால் அரக்கர்களால் தங்களுக்கு துன்பம் நேரும் என்றார்.

சீதாதேவி, இலட்சுமணா நீ மாற்றாந்தாய் மகன். நயவஞ்சகன். நாட்டிலே கைகேயி வெண்கொற்றக்குடையைப் பறித்துக் கொண்டாள். பரதன் அழுதுகொண்டே எம்பெருமான் திருவடியில் முள் குத்தட்டுமென்று பாதுகையைப் பறித்துக் கொண்டான். நீ அடுத்துக் கெடுக்க வந்தனை போலும். உன் கருத்தை நான் உணர்கின்றேன். நீ அண்ணனுக்குத் துணை செய்யப் போகவில்லையானால், இதோ எரிகின்ற காட்டுத் தீயில் வீழ்ந்து மாண்டு போவேன், என்ற அக்கினிக்கருகில் ஓடினாள்.

இலட்சுமணர், அண்ணி நீர் இறக்க வேண்டாம். தாங்கள் சொல்லம்பினால் என்னைத் துளைத்துவிட்டீர். நான் போகின்றேன். வெஞ்சின் விதியினை வெல்ல வல்லவர் யார் ? நான் போகின்றேன் என்று பெரும் துயரத்துடன் புறப்பட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 3:08 pm

ஜடாயுவின் வீரப்போர்

[You must be registered and logged in to see this image.]


இலட்சுமணர் மிகவும் வேதனைப்பட்டு உள்ளம் உடைந்தார். "தான் பிரிந்து சென்றால் சீதைக்கு என்ன ஆபத்து வருமோ ?" என்று எண்ணிக் கலங்கினார். துன்பம் நேர்ந்தால் ஜடாயு பகவான் காத்தருள்வார் என்று ஒருவாறு மனம்தேறி இராமரை நாடிப் புறப்பட்டுச் சென்றார்.

மாயையில் வல்ல இராவணன் முதிய தவமுனிவனாக, காவித்துணியும் தண்டு கமண்டலமும் உத்திராட்ச மாலையும் ஏந்தி, சீதாதேவியின் பாணசாலையை அடைந்தான்.

பிராட்டியரை உற்று நோக்கினான். பிராட்டியாரின் அழகைப் பார்க்க எனக்குள்ள இருபது கண்கள் போதாதே. ஆயிரங்கண்கள் இல்லையே ? என்று வருந்தினான். வேதகீதங்களை இனிய குரலில் பாடினான். ஆ.. . ஆ.. இப்பெண்மணி எத்தனை அழகாக இருக்கின்றாள் ?

அழுகின்ற முகத்தின் அழகே இப்படி இருக்குமானால் புன்னகை பூத்த முகம் எப்படி இருக்கும் ? நான் இனி இலங்கையை ஆளமாட்டேன். இலங்கை ஆட்சியை இவளை எனக்கு தெரிவித்த என் தங்கை சூர்ப்பணகையிடம் கொடுத்துவிட்டு நான் இந்தப் பெண்மயிலுக்கு ஏவல் செய்து வாழ்வேன் என்றெல்லாம் எண்ணினான்.

சீதாதேவி, சந்நியாசியைப் பார்த்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, முனிவரே வருக என்று கூறி, ஒரு தருப்பைப் பாயிட்டு அமரச் சொன்னாள்.

இராவணன், "பெருமை நிறைந்த பெண்மணியே நீர் யார் இங்கு ஏன் இருக்கின்றீர்" என்று வினவினான்.

சீதா தேவி, "முனிவரே நான் தசரதருடைய புதல்வரின் மனைவி. என் பெயர் சீதை.

"கணவனாரின் பெயரைக் கற்புடைய பெண்கள் சொல்லக்கூடாது. நான் துறவிகளைத் தெய்வமாக எண்ணுகின்ற ஜனக மாமன்னரின் புதல்வி.. . தாங்கள் எங்கிருந்து வருகின்றீர் ?" என்று கேட்டாள்.

"இராவணன், இலங்கையை ஆளுகின்றவன். அளவில்லாத பெருமையுடையவன். நற்குண சீலன், இந்திரன் முதலிய இமயவர், அவனுக்கு ஏவல் புரிகின்றார்கள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள வெள்ளிமலையை அள்ளியெடுத்தவன். அவன் பிரமதேவருடைய பேரன். புகழ்பெற்ற நிகரில்லாத வீராதி வீரன். பெண்கள் நாயகமே இராவணன் உயர்ந்த பண்புடையவன் இசையிலும் வல்லவன். மிகவும் நல்லவன். அவன் ஒரு மாதரை நாடுகின்றான்" என்று கூறினான்.

சீதாதேவி, "தவமுனிவரே தாங்கள் தீயவனைத் தூயவனாகக் கூறுகின்றீர் என் கணவனார், இராவணாதி அரக்கர்களை அழிக்க உறுதி கொண்டுள்ளார். இராவணன் இருபது தோள்களையுடைய வீரன் என்று கூறினீரே. ஆயிரந்தோள்களையுடைய கார்த்தவீரியனை இரண்டு தோள்களையுடைய பரசுராமர் கொன்றதை நீர் அறியவில்லையா ? அசுரர் குலத்தில் வந்த இராவணன் முதலிய தீயவர்களை அழித்துத் தூயவர்களை வாழவைப்பதை என் கணவனார் விரதமாகக் கொண்டுள்ளார்" என்று கூறினாள்.

சீதாபிராட்டியாரின் வீரதீர மொழிகளைக் கேட்ட இராவணன் எரிமலைபோல் சீற்றம் அடைந்தான். அந்த கோபாக்கினியால் அவனுடைய மாய வடிவம் அகன்றது. பத்துத் தலைகளும் இருபது தோள்களும் உடைய அசுர வடிவுடன் நின்றான். சீதாதேவி அவ்வடிவைக் கண்டு அஞ்சி நடுங்கினாள். இராவணன் அவரைத் தீண்ட அஞ்சி, ஆழமாக அகழ்ந்து பூமியுடன் பர்ணசாலையை எடுத்துத் தேரின் மீது வைத்து விண்வழியே புறப்பட்டான்.

சீதாதேவி, எரியில் வீழ்ந்த மலர்க்கொடிபோல் துடிதுடித்தாள். அலறினாள். இரக்கமில்லாத அரக்கனே மானை அனுப்பி மாயஞ்செய்து என்னைக் கவர்ந்த தன்மை என் கணவனாருக்கு அஞ்சினாய் என்பதை விளக்குகின்றது. மரங்களே மலைகளே என்னை இந்த அரக்கன் கவர்ந்ததை எம்பெருமானிடம் கூறுவீர்கள். மாதாவனைய கோதாவரியே நீ என் கணவனாரிடம் கூறுவாய் என்று கதறி அழுதாள். தெய்வத்தை நினைத்து தொழுதாள். அவளுடைய துன்பத்தைக் கண்டு சராசரங்கள் எல்லாம் துன்புற்றுன.

ஒரு குன்றின்மீது வயது தளர்ந்த சோர்ந்திருந்த ஜடாயு சீதாதேவியின் குரலைக் கேட்டார். உணர்ச்சியினால் உந்தப்பட்டு பறந்து வந்தார். சீதாதேவியை இராவணன் கவர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். "ஏ மூடனே இந்தப் பெண் தெய்வத்தை நீ அபகரிக்கலாமா ? யாக குண்டத்தின் அருகில் இருக்கின்ற நெய்யை நாய்க்குட்டி விரும்பலாமா ? இவள் உலகமாதா. உனக்கு அழிவுகாலம் வந்துவிட்து. அதனால், இந்த அதர்மத்தைச் செய்கின்றாய் என்று கூறிச் சிறகினால் வரும் காற்றினால் அங்குள்ள அலைகளையும், மரங்களையும் நடுங்க வைத்தார்.

ஜடாயுவின் ஆற்றலைக் கண்டு அமரர்களும் அதிசயித்தார்கள். இராவணனைப் போகவொட்டாமல் தடுத்துப் போர் புரிந்தார். மூக்கினால் கிள்ளியும் சிறகினால் அடித்தும் அமராடினார். இராவணனுடைய வீணைக் கொடியை மூக்கினால் துணித்து எறிந்தார். அவன் உடம்பில் உதிரம் ஒழுக அடித்தார். தேர்ப்பாகனுடைய தலையை வெட்டித் தள்ளினார். தன் மாமனாராகிய ஜடாயுவின் வீரப்போரைக் கண்டு சீதை மகிழ்ந்தாள். ஜடாயு இராவணனுடைய தேரை அழித்தார்.

இராவணன் மிகச் சிறந்த வேலை அவர்மீது விடுத்தான். அந்த வரபலமுடைய வேல் அவருடைய மார்பில் பட்டுக் கூர் மழுங்கித் திரும்பியது. இராவணன் தண்டாயுதத்தால் ஜடாயுவை அடித்தான். ஜடாயு உடல் புண்ணாகி உதிரம் ஒழுக, மீண்டும் எழுந்து அவனுடன் போர் புரிந்தார். இராவணன் சிவபெருமான் தந்த வாளை எடுத்து ஜடாயுவின் இரு சிறகுகளையும் வெட்டி வீழ்த்தினான். ஜடாயு உதிரம் ஒழுக, "ராம்.. . ராம்.. ." என்று கூறி மண்ணில் வீழ்ந்தார். வானவர் மலர்மழை பொழிந்தார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 3:09 pm

இராவணன் சாலையுடன் சீதையைத் தேரில் வைத்து இலங்கையை நோக்கிச் செல்லலாயினான். அதுகண்டு ஜடாயு பெரிதும் வருந்தினார். "என் சிறை அற்றுவிட்டது. ஆனால், சீதாதேவியின் கற்பு என்றும் சிறையறாது" என்று புலம்பி மூர்ச்சித்து விட்டார்.

சீதாதேவி ஜடாயுவுக்கு நேர்ந்த மரணத்தைக் கண்டு துயரக் கடலில் ஆழ்ந்தர். "தர்மம் தோற்றும் அதர்மம் வெல்வதா ? என்னைக் காக்க வந்த நீர் இந்த நிலையை அடைந்தீரே ? அந்தோ தேவரீர் தங்கள் புதல்வரைக் கண்டு என் நிலையைக் கூறுவீராக " என்று அழுதாள்.

இராவணன் இலங்கையடைந்து தேவியை அசோக வனத்தில் சிறை வைத்தான். கொடிய அரக்கியரைக் காவல்புரிய ஏற்பாடு செய்தான்.

சீதை தனியே இருப்பதால் என்ன இடர் விளையுமோ ? ஏது வருமோ ? என்ற வருந்தி இலட்சுமணர் அண்ணனை நாடிச் சென்றார்.

மாரீசன் குரலை மாற்றிப் புலம்பினானே இதனைக் கேட்டுச் சீதை கலங்குவாளே என்று இராமர் எண்ணி, வேகமாகத் திரும்பி வந்தார். வருகின்ற வழியில் தொலைவில் தம்பியைக் கண்டார். திடுக்கிட்டார்.. . மனம் பதைபதைத்தார்.

சீதையைத் தனியே விட்டு என் தம்பி வரமாட்டான். மாரீசன் குரலைக்கேட்ட ஜானகி கடுஞ்சொற்களால் என் தம்பியை வைதிருக்கவேண்டும். இல்லையேல் என் தம்பி வந்திருக்கமாட்டான்.

அண்ணா இது மான் அன்று. மாரீச அரக்கன். மான் பிடிக்கப் போகவேண்டாம்" என்று என் தம்பி என்னைத் தடுத்தான். அவன் சொல்லைக் கடந்து நான் மான் பின் சென்றேன். என் தம்பி என் சொல்லைக் கடந்து வருகின்றான். அதலால், என் தம்பி மீது பிழையில்லை. என்மீதுதான் பிழை என்று இராமர் கருதினார்.

இலட்சுமணர், இராமருடைய திருவடியில் வீழ்ந்தார், இராமர், தம்பீ அண்ணியைத் தனியே விட்டு ஏன் வந்தாய் ? என்று கேட்டார்.

இலட்சுமணர், அண்ணா அரக்கன் குரலைத் தங்கள் குரலாகக் கருதிய அண்ணி, தங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது நீ சென்று துணை புரிக என்றார். நான் பலப்பல கூறியும் அண்ணி கேளாமல் நெருப்பில் வீழ்ந்து மாள்வேன் என்று நெருப்பிடம் நெருங்கினார். "நான் வரவில்லை யென்றால் நெருப்பில் வீழ்ந்து மாண்டுபோவார். ஆதனால், வர நேர்ந்தது" என்றார்.

இராமர், தம்பி உன்மீது குற்றம் இல்லை.. மானை நோக்கி வந்தது என் பிழை என்று பர்ணசாலையிருந்த இடம் சென்றார். பர்ணசாலை மண்ணோடு பறிக்கப்பட்டு வெறுமையாக இருந்தது இராமருக்குக் கண் சுழன்றது. விண் சுழன்றது. மண் சுழன்றது. ஆறாத்துயரம் அடைந்தார். அவருக்கு உலகமே இருண்டுவிட்டது.

இலட்சுமணர், எம்பிராட்டியைத் தீண்டுவதற்கு அஞ்சி பர்ணசாலையுடன் கொண்டு சென்றுள்ளான். தேர்ச்சுவடு தெரிகின்றது. அதுவுந் தெற்கே நோக்கிச் சென்றுள்ளது. நாம் விரைந்து செல்லுவோம் என்றார். இராமரும் இலட்சுமணரும் தெற்கு நோக்கிச் சென்றார்கள். வழியில் வீணைக் கொடி வீழ்ந்திருந்தது.

இலட்சுமணர், அண்ணா இதோ பாருங்கள் வீணைக் கொடி.. இது இராவணனுடைய கொடி.. . நமது பெரியப்பா ஜடாயு போர் புரிந்திருப்பார் போலும்.. . அவருடைய மூக்கினால் கொடி முரிந்துள்ளது என்ற கூறி, மேலும் விரைந்து சென்றார்கள் வழியில் பல தலைகள், பல கரங்கள் அறுபட்டு வீழ்ந்திருந்தன. இதனைக்கண்ட இராமபிரான் தம்பீ தலைகள் பல கைகள் பல இருப்பதனால் பலர் சேர்ந்து சீதையை அபகரித்திருப்பார்கள் போலும்" என்றார்.

இலட்சுமணர், அண்ணா தலைகள் பல, கரங்கள் பல ஆனால், கால்கள் இல்லை.. . அதனால் இராவணன் ஒருவன் தான் கவர்ந்துளன், அவனுடைய சிரங்களும் கரங்களும் அறுக்க அறுக்க முளைக்கும் வரம் பெற்றவன் என்ற கூறி, மீண்டும் விரைந்து செல்வராயினர். உதிரச் சேற்றிலே ஜடாயு நினைவு இன்றி மூர்ச்சிருப்பதைக் கண்டார்கள்.

இராமர், தந்தையே தந்தையே என்று வாய் விட்டுப் புலம்பியழுதார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 3:10 pm

நாட்டில் ஒரு தந்தையை இழந்தேன். காட்டில் ஒரு தந்தையரை இழந்தேன். அந்தோ என் செய்வேன். என் பொருட்டுத் தேவரீர் இந்த மரணத்தை எய்தினீர் என்று கதறி யழுதார்.

ஜடாயு மூர்ச்சை தெளிந்தார். இராவணனுடைய பத்துத் தலைகளையும் பலமுறை வெட்டி, வெற்றி பெற்ற மூக்கால் இராம லட்சுமணருடைய உச்சியை மோந்தார்.

மக்களே சீதையைத் தனியே விட்டு எங்குச் சென்றீர்கள் ? இராவணன் என் மருகியைச் சாலையுடன் எடுத்துச் சென்றான். நான் என்னால் ஆனமட்டுந் தடுத்தேன். சிவன் தந்த வாளால், என் சிறையை வெட்டி விட்டான் என்றார்.

இதனைக்கேட்ட இராமர் எரிமலைபோலச் சீறினார். சீதையை இராவணன் எடுத்ததையும் தங்கள் சிறகுகளையும் இராவணன் வெட்டியதையும் பார்த்திருந்த விண்ணவரையும் விண்ணவர் உலகையும் அழிப்பேன் என்ற கோதண்டத்தை வளைத்து நாணொலி செய்தார். இராமருடைண கோபாக்கினியைக் கண்டு உலகம் நடுங்கியது.. . இலட்சுமயரும் அஞ்சினார்.

இவ்வாறு இராமச்சந்திர மூர்த்தி, விண்ணவர்கள்மீது கோபித்தபோது, ஜடாயு பகவான், இராகவா அழகிய இளம் பெண்ணைத் தனியே காட்டில் விட்டு, மான் பின் சென்று குலப்பழியைத் தேடிக் கொண்டீர்கள். உங்கள் குற்றமேயாகும், உலகத்தைக் கோபிக்கலமா ? என்று சிறிது உரத்த குரலில் கூறினார். இராமருக்கு அறிவுரை கூற, அவரையன்றி வேறுயாருளர் ?

இராமர் சீற்றத்தை விடுத்துச் சாந்தமாகி, பெரியப்பா இராவணன் எங்கே சென்றான் ? என்று கேட்டார்.

ஜடாயு இலங்கை என்று ஒரு சொல் கூறியிருந்தால் சீதா தேவியை உலகமெலாம் தேடும் தன்மை நேர்ந்திருக்காது. உரத்த குரலில் பேசியதால் ஜடாயு ஆற்றல் அடங்கி பரமாத்மாவாகிய இராமரைப் பார்த்துக் கொண்டே ஆவி நீங்கினார். அறுபது ஆயிரம் ஆண்டு தவம் செய்து இராமரை மகனாகப் பெற்ற தசரதருக்கு இந்தப் புண்ணியம் அமையவில்லை. மரணத் தருவாயில் இராமரைத் தரிசிக்கும் வாய்ப்பு தசரதர் பெறவில்லை. ஜடாயு செய்த புண்ணியத்தால் மரணப் படுக்கையில் இராமச்சந்திர மூர்த்தியைத் தரிசித்தார். "ராம ராம" என்று கூறிக்கொண்டே, அவருடைய ஆன்மா சாந்தியடைந்தது.

அரண்மனையையும் விலைமதிக்கவொண்ணாத ஆடை ஆபரணங்களையும் துறந்து வந்து சீதாதேவி மானைப் விரும்பியதும், அதனைப் பற்றித் தருமாறு கணவனுக்குக் கட்டளை யிட்டதும் வேதங்கள் தேட நின்ற விமலன், காட்டுமானைத் தேடிச் சென்றதும், சீதை இலட்சுமணருடைய மனம் நோவப் பேசியதும் ஆகிய அனைத்தும் விதி செய்யும் விளையாடல் என உணர்க. எல்லாம் விதிப்படிதான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஜடாயுவின் ஆன்மா பரகதியை அடைந்தது. அவருடைய பிரிவை எண்ணி இராமர் பெரிதும் புலம்பினார். அவருடைய உடம்பை மந்திரத்துடன் கூடிய புனித நீரால் அலம்பி காட்டில் உள்ள விறகுகளை அடுக்கி, ஓமாக்கினி வளர்த்து தகனம் செய்து எலும்பை நீரில் கரைத்தார்.

இந்தப் பாக்கியம் ஜடாயு பெற்றார்.

அங்கிருந்து இராம லட்சுமணர் கிரவுஞ்ச வனத்தையடைந்தார்கள். ஆதித்தன் மேற்கடலில் முழுகினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 3:11 pm

சபரி மோட்சம்



இராமர் ஜடாயு பகவானுக்கு நெருப்புக்கடன், நீர்க்கடன்களைச் செய்தபிறகு, சீதாதேவியைத் தேடும் பொருட்டு, இராமரும் இலட்சுமணரும் தெற்கு நோக்கிச் சென்றனர். ஆதித்தன் மேற்கடலில் வீழ்ந்தான். எங்கும் இருள் சூழ்ந்தது. ஒரு மலைச்சாரலில் இராமர் இருந்து சீதா தேவியை நினைந்து, பெரிதும் உள்ளம் வருந்தினார். இட்சுவாகு குலத்தில் பிறந்த என் மனைவியை அரக்கன் கவர்ந்து சென்றனனே என்ற தன்மானமும் சீதை மீதுள்ள காதலும் அவரை மிகவும் வருத்தின. "எனக்கு இனி கோதண்டம் வேண்டுமோ ?" என்று எண்ணி, வில்லை நோக்கிச் சிரிக்கும். ஆற்றல் நிறைந்த தன் தோள்களை நோக்கிச் சிரிக்கும். உலகத்தைக் காக்க வந்த நான், என் மனைவியைக் காக்க முடியாது கவல்கின்றேனே என்றும், சீதை என்ன துன்பம் அடைகின்றாளோ என்றும் எண்ணி வேதனை அடைந்தார்.

இலட்சுமணர் மாந்தளிர், அசோகந்தளிர், புங்கந்தளிர் முதலிய தளிர்கள் பரப்பிய படுக்கையில் சாய்ந்தார். அவருடைய திருமேனியின் வெப்பத்தால், அந்தத் தளிர்கள் தீய்ந்துவிட்டன, வாயும், நெஞ்சும் உலர்ந்து விட்டன.

இராமர் தம்பியை நோக்கி, தம்பீ தண்ணீர் விடாய் மிகுந்துள்ளது. தண்ணீர் கொண்டு வருவாய் என்று பணித்தருளினார்.

இதைக் கேட்ட இலட்சுமணர், "இராமர் கேட்பதற்கு முன்னமே செய்திருக்க வேண்டும் ஏவா மக்கள் மூவா மருந்து என்ற பழமொழிப்படி நானே குறிப்பறிந்து தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். என் கடமை தவறிவிட்டேனே" என்ற எண்ணித் தண்ணீரை கோக்கிப் புறப்பட்டார். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. புதிய வனம். கையில் விளக்கு இல்லை, நெஞ்சில் இராம பக்தி நிறைந்திருந்து. காலால் தடவிக் கொண்டு தண்ணீரை நாடி நான்கு திசைகளிலும் அலைந்தார்.

அங்கே அயோமுகி என்ற அரக்கி இலட்சுமணரைக் கண்டு, காமத்தீயால் கருகினாள், உள்ளம் உருகினாள். "ஆ இவன் என்ன மன்மதனா ? இந்திரன் மைந்தனா ? எத்துணை அழகு ? இவனைக் கணவனாக அடைந்து வாழ்வேன்" என்று எண்ணினாள்.

அவள் ஆயிரம் அமாவாசை ஒருங்கு சேர்ந்தாற் போன்ற கரிய உடம்பும், பெரிய தனங்களும், விகாரமான முகமும் உடையவளாய் நின்றாள், மலைப்பாம்புகளைக் கை வளையலாக அணிந்தும் பாம்பாகிய கயிற்றில் கட்டிய புலிகளை ஆரமாக அணிந்தும், இரண்டு சிங்கங்களைக் காதில் குழைகளாக அணிந்தும், நெருப்புச் சிந்திய கண்களுடனும் காட்சியளித்தாள். இலட்சுமணருக்கு முன்னே வந்து நின்றாள். இலட்சுமணர் அவனை நோக்கி, "நீ யார் ?" என்று வினாவினார்.

அயோமுகி, என் உள்ளத்தை கவர்ந்த அழகனே, நான் இந்தக் காட்டில் வாழும் அயோமுகி. உன்னைக் கண்டு மையல் கொண்ட தையலானேன். ஐயனே உன் கரங்களால் என்னைப் அணைத்து என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக என்றாள்.

இலட்சுமணர், அவளுடைய கோர வடிவத்தைக் கண்டு சிரித்தார். இந்தக்காட்டில் சூர்ப்பணகை போன்ற அடங்காப் பிடாரிகள் பலர் இருப்பார்கள் போலும். "கொடியவளே என் அருகிலே வந்து நெருப்பிலிட்ட பஞ்சைப்போல, எரிந்து கரிந்து சாம்பலாகாதே.. . விலகிப்போ" என்று விரட்டினார்.

அயோமுகி ஒரு விநாடியில் இலட்சுமணரை எடுத்துத் தன் மார்பில் அணைத்து விண் வழியே பறந்து செல்லலானாள். அந்தக் காட்சி முருகன் மயில் மேல் சென்றது போலிருந்தது. இலட்சுமணருடைய ஆற்றல் அவள் கையில் அடங்கியது. இரு மலைகளுக்கு நடுவே அகப்பட்டு கொண்டது போல் ஆனார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by சிவா Mon Jun 15, 2009 3:11 pm

இராமரது துயரம்

இராமபிரான், தண்ணீரைத் தேடிச் சென்ற தம்பி திரும்பி வாராமையால் பெரிதும் வருந்திப் புலம்பலானார். இலட்சுமணர் எள் என்றால் எண்ணெயாய்க் கொண்டு வருவான், பஞ்சென்றால் புடைவையாய்க் கொண்டுவருவான். தண்ணீரை நாடிச் சென்றவன் திரும்பி வரவில்லையே. தண்ணீர் கிடைக்காமையால் அலைகிறானோ ? ஒருகால் சீதையை கவர்ந்த அரக்கன் எதிர்ப்பட, போர் செய்யத் தொடங்கினானோ ? என் அருமைத் தம்பியை இராவணன் கவர்ந்து சென்றானோ ? அவன் செய்த மாயத்தால் மாண்டு போனானோ ? தம்பீ இலட்சுமணா உத்தம குணங்களுக்கு உறைவிடமானவனே உன் பிரிவால் பெரிதும் வருந்துகின்றேன். சீதையை பிரிந்தும், உன்னைப் பிரியாத தன்மையால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

என் சிற்றன்னையாகிய சுமத்திரை இலட்சுமணரைப் பார்த்து "மகனே இராமன் அயோத்திக்கு வந்தால் நீ வருக. இல்லையேல் அவனுக்கு முன் மாண்டுபோக வேண்டும்" என்று கட்டளையிட்டாளே. அதனை நிறைவேற்றும் பொருட்டு எனக்கு முன் நீ மாய்ந்துவிட்டாயோ ? இனி, எப்பிறப்பில் காண்பேன் ? உன்னைப் போன்ற உத்தம சகோதரன் உலகில் உண்டோ ? உன்னைப் பிரிந்து உயிர் வாழேன். பதினான்கு ஆண்டுகள் என்னை உண்பித்து நீ உண்ணாமலிருந்தாய். என்னை உறங்குவித்து நீ உறங்காமலிருந்தாய். நாட்டைத் துறந்து, நகரைத் துறந்து, வீட்டை துறந்து அன்புருவாகிய இன்ப மனைவியைத் துறந்து, காட்டில் கண்ணிமைக்காமல் என்னைக் காத்து நின்றனையே. தருமத்தின்மேல் ஆணை. அடுத்த பிறவி எனக்கு வருமானால் நீ எனக்குத் தமையனாகப் பிறக்கவேண்டும். நான் உனக்கு தம்பியாகப் பிறந்து, இந்த கடன்களைத் தீர்ப்பேன். இனி நான் வாழகில்லேன் என்று புலம்பி, வடிவாளை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக் கொண்டார். தற்கொலை செய்து கொள்ள முயல்கின்றார்.

இராமர் தன் காதல் மனைவியைப் பிரிந்தபோது பெரிதும் வருந்தினார். ஆனால், உயிர்விடத் துணியவில்லை. இப்பொழுது தன் அருமைத் தம்பியைப் பிரிகின்றபொழுது. உயிர்விடத் துணிந்தார். இதனால், இராமருக்குச் சீதை மீதுள்ள பட்சத்தைக் காட்டிலும் உடன் பிறந்தான் மீது பட்சம் அதிகம் என்பது புலனாகின்றது.

அயோமுகியின் கைக்குள் அகப்பட்ட இலட்சுமணரின் செவியில் இராமருடைய அழுகுரல் கேட்டது. இலட்சுமணர். அண்ணா அழுகின்றாரே என்று எண்ணி. வாள் பிடித்த கையை வெளியே எடுத்து வாளினால் அயோமுகியினுடைய மூக்கு முதலிய உறுப்புகளை அறுத்து வீழ்த்தினார். வேதனைப் பட்ட அயோமுகி "ஓ" வென்று புலம்பினாள். அரக்கியின் குரலைக் கேட்ட இராமர், கழுத்தில் வைத்த வாளை எடுத்துக் கொண்டார். அது இருளை நீக்கி ஒளியை வாரியிறைத்தது.

இலட்சுமணர், பெண் கொலை கூடாது என்று அயோமுகியைக் கொல்லாமல் விட்டு, இராமரிடம் ஓடி வந்து வணங்கி நின்றார். கன்றைக் கண்ட பசுவைப் போல் இராமர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

"அன்புத் தம்பியே நீ மாய்ந்து விட்டனையோ என்று வருந்தினேன். என்ன நிகழ்ந்தது ?" என்று வினாவினார்.

இலட்சுமணர், அண்ணா "அயோமுகி என்ற அரக்கி என்னைக் கவர்ந்தாள். பெண்ணைக் கொல்லக்கூடாது என்று அவளுடைய மூக்கு முதலியவைகளைக் கொய்து திரும்பினேன்" என்றார்.

"தம்பீ இலட்சுமணா மாதரைக் கொல்வது பழி பாவம் என்று அவளை மன்னித்து மனுகுல நெறியை நிலைநாட்டினாய். உன் புகழ் வாழ்க" என்று வாழ்த்தினார்.

தண்ணீர் கிடைக்காமையினால் வருணாஸ்திரத்தை விடுத்து வான நீரைத் தருவித்துப் பருகி விடாய் தீர்ந்தார். தம்பி அமைத்த தளிர்ப்படுக்கையில் தம்பி கால் வருடக் கண் துயின்றார். கதிரவன் உதயஞ் செய்தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by ரூபன் Mon Jun 15, 2009 6:25 pm

இந்த வாரம் பக்தி வாரம்!!!!!!!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இராம காவியம் - Page 5 Empty Re: இராம காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum