புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:15 am

சீதா கல்யாணம்

[You must be registered and logged in to see this image.]

நீலமாலை என்ற தாதி சீதையிடம் சென்று இராமர் வில்லை வளைத்த செய்தியைக் கூறினாள். தாதியின் வார்த்தையைக் கேட்டு, சீதாதேவி பெருமகிழ்ச்சியுற்றாள். இவள் சொன்ன குறிப்பினால், நேற்ற நான் கண்ட வீரன்தான் வில் வளைத்திருக்க வேண்டும். வேறு ஒருவன் வில் வளைத்திருந்தால் நான் மாண்டுவோவேன் என்று எண்ணினாள்.

சுபையில் ஒரு பெண்மணி இராமரைப் பார்க்கச் சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இன்னொருத்தி சீதையைப் பார்க்குந்தோறும் இராமருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இராமருடைய தம்பியைப் பாருங்கள் அண்ணனுக்க இவர் இளையார். குணங்களில் இளையார் என்றாள்.

இந்தப் புண்ணிய புருஷர்களை மிதிலாபுரிக்க அழைத்துக் கொண்டு வந்த விசுவாமித்திரருக்க நன்றி சொல்லுங்கள் என்றாள். ஜனகர் விசுவாமித்திர முனிவரின் ஆலோசனைப் படி அயோத்திக்குத் திருமண ஓலை அனுப்பினார்.

ஓலைக்கொண்டு வந்து கொடுத்தவரக்குத் தசரதர் ஆடையும், அணிகலனும் வழங்கினார். எல்லாரையும் மிதிலைக்கப் புறப்படுமாறு கட்டளையிட்டார். ஆன்றோர்களைச் சேர்ந்த சிறியவரும் ஆன்றோராக மாறிவிடுவார்கள். தசரதருடைய பொற்றேரில் தங்கத்தினாலாகிய சக்கரங்கள் உருண்டு உருண்டு இருண்ட கல்லையும் பொன்மயமாக்கி விட்டன. எல்லாரும் மிதிலையைச் சேர்ந்தார்கள். ஜனகர் தசரதரை வரவேற்புச் செய்து உபசரித்தார். இராமர் தந்தையாரை வணங்கினார்.

திருமண நாளன்று மணமக்களை அலங்கரித்துத் திருமண மண்டபத்தில் அமர்த்தினார்கள். சதானந்தர் புரோகிதராக இருந்து வேத மந்திரங்களைக் கூறினார். மணவறையில் சீதை வளையலைத் திருத்துவதுபோல் கடைக்கண்ணால் காகுத்தனைக் கண்டு களித்தாள்.

ஜனகர் சீதாதேவியின் கரமலரை இராமருடைய கரமலரில் வைத்து, வேத மந்திரத்துடன் தாரை வார்த்தத் தந்தார். இராமர் சீதையின் கழுத்தில் மங்கல நாண் கட்டினார்.

இராமர் சீதாதேவிக்குத் தாலிபூட்டியவுன் தாயைப் பார்க்கினும் மிக்க அன்புடன் கைகேயியை முதலில் வணங்கினார். பின்னர், கோசலையையும் சுமித்திரையையும் வணங்கினார். வசிட்டர் விசுவாமித்திரருடைய குருமார்களைப் பணிந்தார். பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில் சீதாதேவியின் திருமணம் நடைபெற்றது.

வசிட்டர் முதலிய முனிவர்களின் ஆலோசனையின்படி ஜனகருடைய தம்பி குசத்துவசருடைய புதல்வி மாண்டவியைப் பரதர் திருமணம் செய்துகொண்டார். ஜனகருடைய புதல்வி ஊர்மிளையை இலட்சமணர் திருமணம் செய்துகொண்டார். மாண்டவியின் தங்கை கீர்த்தியைச் சத்ருக்னர் திருமணம் செய்துக்கொண்டார். இவ்வாறு, நான்கு திருமணங்கள் நடை பெற்றன.

விசுவாமித்திரர் விடைபெற்றுக் கொண்டு தமது தவவனம் சென்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:15 am

தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ, ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஜனகா, 4 பெண்களுக்கும் 400 படுக்கை, 400 வெள்ளியண்டா, 400 தங்கக்குடம், 400 போர்வை, 400 பசுக்கள் இவ்வாறு நிரம்பச் சீதனந்தந்து, அறவுரை கூறி வழியனுப்பினார். இராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்

பரசுராமர் வழியில் மயில் வலமாகவும், காகம் இடமாகவும் சென்றன. இது அபசகுனம். ஏதிரில் நிறைகுடம் வந்தது. இது நல்ல சகுனம். ஆகத்திக்கீரை எதிரில் வந்தத. இது கெடுதல். சுலவைத் தொழிலாளி அழுக்குத் துணிமூட்டையுடன் வந்தான். இது நல்லது. இவ்வாறு சகுனங்கள், நல்லதும் கெட்டதும் மாறிமாறி வந்தன. தசரதர் நிமித்தங்கள் பற்றிக் கூறும் நிபுணரை அழைத்து இதுபற்றிக் கேட்டார். அவர்கள், மலைபோல ஆபத்து வரும், பனிபோல விலகி விடும் என்றார்கள்.

ஆலகால விடம் போலவும், வடவைத் தீயைப் போலவும், எட்டுத் திசைகளும் அதிர, விண்ணும் மண்ணும் அதிர்ச்சியடைய அஷ்டகுல யானைகள் அஞ்சக் கண்ணிலே நெரப்புப் பொறி சிந்த, மூக்கிலே, காதிலே புகைவர, கையில் வில் ஏந்தி பரசுராமர், அடா ராமா! அடா ராமா! என்று காது செவிடுபட, உரத்த குரலில் கூறிக்கொண்டு எதிரில் வந்தார்.

இவர் பரம பராக்கிரமசாலி கார்த்த வீரியார்ச்சுனருடைய ஆயிந் தோள்களை மபவால் துணி செய்தவர். சூரிய குலத்தை 21 தலைமுறை கருவறுத்தவர். சமந்த பஞ்சகம் என்று ஐந்து உதிர மடுவை உண்டாக்கிப் பிதிர்களக்குப் பிண்டம் தந்தவர்.

தசரத மன்னர் அஞ்சி, பரசுராமர் முன் சென்று, அவர் கால்மேல் வீழ்ந்து, முனிவரரே! இராமன் சிறிய பாலகன். அவன் ஒரு குற்றமும் செய்யாதவன். ஆறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தாலும் மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார்.

நதியின் வெள்ளத்தை உப்பு மூட்டையால் தடுக்க முடியுமா ? அதுபோல் தசரதரின் வேண்டுகோளைப் பரசுராமர் பொருட்படுத்தவில்லை. பேராற்றல் படைத்த பரசுராமன் எங்கே ? இராமன் எங்கே ? பரசுராமனுடைய கோபம் உலகத்தையே எரித்துவிடுமே! என் மகன் பிழைக்கமாட்டான் என்று எண்ணித் தசரதர் மூர்ச்சையடைந்தார்.

பரசுராமர் இராமனுக்க மன்னே நின்று, இராமா! நீ அரசன் மகன். ஆதலால், உனக்கு ஆசி என்றார். பெரிய மகான்கள் குலம் குறித்துப் பேசுவது நன்றன்று.

இராமர் பரசுராமா! உன்னைப் பார்த்தால் வேதியனைப் போல் காணப்பெறுகின்றது. அதனால், உனக்கு வணக்கம் என்றார்.

பரசுராமர், இந்த இளைஞன் நம்மைச் சொல்லம்பால் தொளைத்துவிட்டான். வேதியனைப்போல் என்ற வார்த்தை எத்தனைக் கொடுமையானது ? என்ற எண்ணி, மேலும் கோபக்கனலைச் சிந்தி, ஏ ராமா! தாடகை என்ற பெண்ணைக் கொன்றாயே அது முறையா ? நீதியா ? என்றார்.

பரசுராமா! பயிர் செய்கின்றவன் நெல்லை வளர்க்கப் புல்லைப் பிடுங்கி எறிவான். அதுபோல், அரசனாகிய நான் தூயவரைக் காக்கத் தீயவரை அழிப்பது அரச தரமம் ஆகம். பரசராமா! நீ வேதியனாயிற்றே. வேடர் ஏந்தும் வில்லை. வேதம் ஏந்தும் கையில் ஏந்தி அலைகின்றனையே ? நீ வேதியனா ? வேடனா ? என்று பதிலுக்குக் கேட்டார் இராமர்.

இராமா! நீ வில் ஏந்துவது நியாயந்தான். பெண்ணைக் கொன்றது நியாயம் ஆகாதே ? என்றார் பரசுராமர்.

பரசுராமா! பிறர் கண்ணில் உள்ள கடுகு அளவுள்ள அழுக்கைப் பூதக்கண்ணாடி போட்டுப் பெரிதாகப் பார்க்கின்றாயே. உன் கண்ணில் பூசணிப்பழமத் அளவு அழுக்கு இருக்கின்றதே. காட்டில் வசித்த கொடியவளாகிய தாடகையைக் கொல்லலாமா என்று கேட்கின்றாயே - பத்து மாதம் சுமந்து அங்கமெல்லாம் நொந்து பெற்ற தாயரைக் கொன்றனையே ? அது முறையா ?

இராமா! மானசீகக் கற்பு நிலையில் சிறிது தாழ்ந்த தாயைக் கொல்லுமாறு என் தந்தையார் கட்டளையிட்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. அதனால், நான் தாயைக் கொன்றேன். அது தாய் கொலையாகாது அத முறைதான்.

ழுரசுராமா! என் குருவாகிய விசுவாமித்திரர் தாடகையைக் கொல்லுமாற கட்டளையிட்டார். குரு வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லக்கூடாது. அதனால், தாடகையை வதைத்தேன். அது பெண் கொலையாகாது.

இராமா! நீ ஒரு பழைய கறையான் அரித்த வில்லை ஒடித்ததைப் பெரிதாக எண்ணித் துள்ளுகின்றாய். இதோ! இந்தப் பிரசண்ட் கோதண்டத்தை வளைத்தால் உன்னை உயிரோடு விடுவேன். இந்தா வில்!

இராமர்! நீ அந்தக் கோதண்டவில்லை வாங்கி ஒரு விநாடியில் வளைத்து, ஒரு பாணத்தைத் தொடுத்து, இந்த அம்புக்கு என்ன இலக்கு ? என்று கேட்டார்.

நடுங்கி ஒடுங்கி, தலைக்குமேல் கரங்களைக் கூப்பி, நான் அநதணன், என்னை மன்னித்து அருள் என்றார் பரசுராமர்.

பரசுராமா! நான் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் அம்பு மன்னிக்காது. அதற்க வழி சொல்.

என் தவ வலிமையைத் தந்தேன் என்றார் பரசுராமர்.

இராமர் தன் கணையால் பரசராமருடைய தவ வலிமையை அழித்து, பரசுராமா ? நீ அரச தருமத்தை விடுத்துஇ அந்தண தருமத்தை எடுத்து மேல் கடல் ஓரம் போய்த் தவம் செய் என்று கூறி அருள் புரிந்தார்.

அந்தக் கோதண்டத்தை வருணதேவனிடம் தந்து. தக்க தருணத்தில் என்னிடம் தருக என்றார் இராமர் பரசுராமர்.இராமரைத் தொழுது விடை பெற்றச் சென்றார்.

பிறகு, இராமர் தம் தந்தையாரை எடுத்து மூர்ச்சை தெளிவித்துப் பரசுராமர் தோல்வியடைந்ததைக் கூறினார்.

தசரதர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். எல்லாரும் அயோத்தியை அடைந்தனர்.

கைகேயின் சகோதரர் யுதாசித்து வந்து, தம் தகப்பனார், தம் பேரப்பிள்ளைகளை அழைத்துவரச் சொன்னதாகக் கூறினான். தசரதர் பரத சத்துக்னரைத் தங்கள் பாட்டன் நாட்டுக்குக், கேகய நாட்டுக்குப் போய்வரக் கட்டளையிட்டார். பரதரும், சத்ருக்னரும் இராமரை வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கேகய நாட்டுக்குப் புறப்பட்டனர்.

இராமர் சுகமே அயோத்தியில் வாழ்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:18 am

முடிசூட்டு விழா

[You must be registered and logged in to see this image.]

இராமாயணமாகிய இதிகாசத்தை நீட்டி வளரச் செய்தவர்கள் சிறிய இரு பெண் பாத்திரங்கள் ஆவார்கள். ஒருத்தி கூனி, மற்றொருத்தி சூர்ப்பணகை. இந்த இருவர்களும் இழிந்த பாத்திரங்கள் என உணர்க.

சூர்ப்பணகை இவ்வரலாற்றை வளர்த்திவிட்டாள். பத்து மாதக் கதைதான் மூன்றரைக் காண்டங்களாகும்.

சீதா தேவியின் திருமணத்துக்குப்பின் தசரதச் சக்ரவர்த்தி அயோத்தியை ஆட்சி புரிகின்றார்.

மக்கள் மனக்கவலையின்றி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். அயோத்தியில் அமைதியும் அறநௌpயும் நிறைந்து நின்றன.

இராமபிரான் அதிகாலையில் எழுந்து நீராடி. நித்திய வழிபாடுகளை முடித்துத் தாய் தந்தையரை வணங்குவார் குருநாதராகிய வசிட்டரை வணங்குவார். ஆலயம் சென்று இறைவழிபாடு புரிவார். ஏழை எளியவர்கட்கு உதவி புரிவார். சீதா தேவிக்கு வேதவேதாங்களை உபதேசிப்பார். அலையில்லாத கடலின் படகில் சென்றால் எத்தணை இன்பம் இருக்கும் ? இராமமூர்த்தி சுகமாக வாழ்ந்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:20 am

தசரதருக்கு ஓர் அதிர்ச்சியான அறிவிப்பு

ஒருநாள் காலை தசரதர் நீராடிக் கண்ணாடிக்கு எதிரே நின்று தலைமயிரைச் சிக்கெடுத்து ஒழுங்கு செய்யும் பொழுது காதின் அருகில் ஒரு மென்மையான நரைமுடியைக் கண்டார். அதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மன்னவனே! உனக்கு முதுமை வருகின்றது. முதுமை வந்தால் மரணம் வரும். மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இனியும் நீர் அரசியலில் வாழ்வது நன்றன்று. இத்தனைக் காலம் உலகுக்கு உழைத்தாய். இனி, உன் உயிருக்கு உழைப்பாய் என்று எச்சரிக்கை செய்வது போல் இருந்தது.

தசரதர் திருவருள் உணர்த்த யாக்கை நிலையாமையை உணர்ந்தார். வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு என்ற அறிஞரின் அறிவுரையை உணர்ந்தார். அதனால், அரசியலைத் தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு. ஆட்சியைத் துறந்து, கானகம் சென்று வானகம் புகுந்து, முத்தி நலம் பெறச் பெரிதும் விழைந்தார்.

இதனால்தான், இராமருடைய மகுடாபிஷேக விழாவை அதிக ஆடம்பரமாகப் புரிய விரும்பினாரில்லை.

இராமருடைய பட்டாபிஷேக விழாவுக்கு ஜனக மன்னர் வரவேண்டும். பரதர் வரவேண்டும் என்றெல்லாம் அவர் எண்ணினாரில்லை. காலை 11 மணிக்குச் செயற்குழு கூட்டி, மறுநாள் அதிகாலை பட்டாபிஷேக விழா அமைத்துவிட்டார். இடையில் 19 மணி நேரந்தான் இருந்தது. இது துறவிலே அவருக்க இருந்த அதிதீவிரத்தை உணர்த்துகின்றது.

ஒரு கோடீஸ்வரனுடைய தலைமயிர் தீப்பற்றிக் கொண்டது. அவன் என் தகுதிக்கு எற்பப் பன்னீரால்தான் இதனை அணைக்க வேண்டும். உடனே ஓடி பன்னீர் வாங்கி வாருங்கள் என்றா கூறுவான் ? இத்தகைய உணர்ச்சி உந்திய சக்கரவர்த்தி உடனே மகனுக்கு மகுடம் சூட்டித் தவநெறி மேற்கொள் விழைகின்றார் உன உணர்க.

தனி மண்டபத்தில் இருந்து அமைச்சர்களையெல்லாம் அழைத்தார். வசிட்ட முனிவரை அழைத்தார். அந்த ஆலோசனை மண்டபத்தில் இருந்து, தம் கருத்தைக் கூறுகின்றார்.

அந்த அமைச்சர்கள் அறிவின் சிகரங்கள், அறநெறி வழுவாதவர்கள். வந்ததைக் கண்டு மேல் வருபவற்றை உணர்பவர்கள். இடித்து அறங்கூறும் இயல்பினர். ஊறுதியை இயம்பும் இயல்புடையவர்கள்.

தசரதர், ஞகுருநாதா! அமைச்சர் பெருமக்களே! எனக்கு மூப்பு வந்துவிட்டது. இத்தனைக் காலம் புறப்பகையை ஒடுக்கி அரசாட்சி செய்தேன். அரசு ஆட்சியை, அர-சாட்சியாகச் செய்தேன. இனி, நான் அகப்பகையை வென்று தவத்தைச் செய்து பரகதியடைய விரும்புகிறேன்.

மற்றவர்கட்கு மருமகள் திருமகளப் போல் வருவார்கள் எனக்குத் திருமகளே மருமகளாக வந்திருக்கின்றாள்.

அன்பர்களே! இராமனுக்கு நிலமகளை இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்து வைக்க விரும்புகின்றேன். நீங்கள் இதற்க அனுமதி தரவேண்டும்ஞ என்றார்.

வசிட்டர், அரசர் பெருமானே! இராகவன் உண்ணும் நீரினும் உயர்ந்தவன். இராமனுக்கு முடி சூட்டுவதால் உலகம் உய்யும், நாடும் நகரும் மக்களும் நலம் பெறுவார்கள் என்றார்.

தசரதர் ஜோதிட வல்லாரை அழைத்து அவருடன் ஆய்ந்து மறுநாள் சூரியோதயத்தில் முடிசூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். தசரதருடைய கட்டளைப்படி, சுமந்திரர் இராமருடைய திருமாளிகைக்குப் போய் இராமரைத் தேரில் ஏற்றிக்கொண்டு அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

இராமர் வசிட்ட முனிவரை வணங்கி, தந்தையாரை வணங்கினார். வணங்கிய மைந்தனைத் தந்தையார் தோளும் மார்பும் பொருந்தத் தழுவி மகிழ்ந்தார்.

தம் தோளில் உள்ள பூபாரத்தை மகனுடைய தோளில் இட நினைக்கின்றார். ஆதலின், அவருடைய தோள்களையும் மார்பையும் தமது தோளினால் அளப்பதுபோல இருந்தது, அந்தக் காட்சி.

தசரதர், ஞஎன் அருந்தவச் செல்வமே! எனக்கு மூப்பு வந்துவிட்டது. இனி, நான் தவஞ்செய்து பரகதியடைய வேண்டும். சாகும்வரை அரசியலிலேயே உழல்வது அறிவுடையவர் செயல் ஆகாது. கண்ணா! நமது குலத்தில் தோன்றி முன்னோர்கள் தகுந்த வயதில் மூத்த மகனுக்கு முடி சூட்டிவிட்டுக் காட்டில் தவஞ்செய்து முத்தி நலம் பெற்றார்கள். இது நமது குல தருமம். நாளைக் காலை உனக்கு முடி சூட்டுவிழா நடைபெறும். இன்று நீ விரத நெறியில் இருந்து திருவருளையும் குருவருளையும் பெறுகஞ என்றார்.

அரசுச் செல்வம் நம்பால் எய்துகின்றதே என்று இராமர் மகிழ்ந்தாரில்லை. இப்போது மகிழ்ந்திருந்தால் சிறிய தாய், வனம் போ என்கிறபோது வருந்தியிருப்பார் என்பது பொதுமறை. தந்தை சொல்லே வேத வாக்காக எண்ணி இருந்தார்.

சுமந்திரே, பட்டாபிஷேக விழாவுக்கு உரிய ஏற்பாடுகள் எல்லாவற்றையும் குறைவறச் செய்யும். மன்னர்களே! நீங்கள் எல்லாரும் இருந்து இராமனுக்கு முடிசூட்டி வைப்பீர்கள் என்றார் தசரதர். அரசவை கலைந்தது.

தசரதர் கௌசலையின் மாளிகைக்குப்போய், கௌசலையைப் பார்த்துப் பெண்மணியே! நாளைக் காலை உன் மகனுக்கு முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றார்.

கௌசலை தன் அருமந்த மகனுக்குப் பட்டாபிஷேகம் என்றவுடன் மகிழ்ச்சி கடலாகப் பொங்கியது. ஆனால் உடனே அந்த மகிழ்ச்சி வற்றிவிட்டது. பட்டங்கட்டிய மறுநாளே மன்னவர் கானகம் போய்விடுவாரே ? என்ற எண்ணி உள்ளம் வருந்தினாள்.

நமது செயலில் என்ன உள்ளது ? எல்லலம் ஈசன் செயல் என்று கருதினாள். மகனுடைய முடிசூட்டு விழா இனிது நடைபெற, ஆலயஞ்சென்று இறைவனை வழிபட எண்ணிச் சுமித்திரையுடன் சென்று வழிபாடு செய்தாள். அன்னமும் ஆடையும் சொர்ணமும் வறியவர்க்கு வழங்கினாள்.

அரசருடைய ஆணையின்படி யானைமீது முரசு முழக்கி, இராமபிரானுடைய பட்டாபிஷேகத்தை எங்கும் அறிவித்தார்கள். இதனைக் கேட்டு மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். வாழை கமுகுகள் நட்டு, மலர்மாலைகளைத் தொங்கவிட்டு, களப கஸ்தூரி தெறித்து நகரை அலங்கரித்தார்கள் ஆடினார்கள், பாடினார்கள், மெலிந்தவர்கள் மகிழ்ச்சியினால் பருத்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:23 am

வசிட்டர் இராமருக்கு அரச நீதி உபதேசித்தல்

[You must be registered and logged in to see this image.]

இராமச்சந்திர், வசிட்டரிடம் சென்று வணங்கினார். வசிட்டர் ஆசி கூறி இராகவா! உனக்கு நாளை முடிசூட்டப்பெறும். நான் கூறும் அறவுரைகளைக் கேட்டு, நீ அதன்படி ஒழுகுவாயாக தணிந்த சிந்தையையுடைய அந்தணர்கள் மிகவும் சிறந்தவர்கள். நீ அவர்களை வணங்கி, அவர்களின் ஆசியைப் பெறுவாயாக. அந்தணர்களின் உள்ளம் உவக்க நடப்பாயாக.

அமைச்சர்களின் அறிவுரையை மதித்து அதன்படி நடப்பாயாக.

இராமா! இனிமையாகப் பேசவேண்டும், ஈந்து உவக்க வேண்டும். மக்களுக்கு நன்மையே புரிய வேண்டும்.

உயிரை உடம்பு தாங்குவதுபோல் மக்களை மன்னவன் தாங்கிக் காத்து நலம் புரியவேண்டும்.

ஏழை எளியவர்கட்கு உதவி செய்ய வேண்டும். மக்களின் துயரங்களையகற்றி அவர்கள் அச்சம் இன்றி வாழ வழிவகுக்க வேண்டும். அரசனுக்க ஆசையிருக்கக் கூடாது. சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு, அரச நீதிகளை உபதேசித்து, இராமரைத் தருப்பையின்மீது அமரச் செய்து, வேத மந்திரங்களைக் கூறி, சடங்குகளைச் செய்தார். இராமருடன் ஆலயம் சென்று இறைவழிபாடு நடத்தினார்.

எல்லாம் திருவருளின் திட்டப்படிதான் நடக்கும். நம் செயலால் ஒன்றும் நடைபெறாது. ஒன்றை நினை, அது ஒழிந்திட்டு ஒன்றாகும். சக்ரவர்த்தி தசரதர் தம் மூத்த மகனுக்கு முடிசூட்டுவிழா என்று சகல ஏற்பாடுகளும் செய்தார். வசிட்டாதி முனிவர்களும் இருந்து செய்த ஏற்பாடு. அது தவிடுபொடியாகிவிட்டது. பட்டாபிஷேகம் நடைபெறவில்லை. திருவருள் துணை புரிந்தாலன்றி எதுவும் நடைபெறாது என்பது இவ்வரலாற்றால் உணர்தல் வேண்டும்.

இந்தப் பட்டாபிஷேகம் 14 ஆண்டுகள் வழிந்து சக்ரவர்த்தியில்லாமல் நடந்தது. மனித முயற்சியால் எதுவும் முடிவு பெறாது என உணர்க.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:35 am

கூனியால் வந்த ஆனி

[You must be registered and logged in to see this image.]

முன் செய்வினையால் உடம்பில் கோணல் ஏற்படும். ஆனால், இராமயணத்தில் வரும் கூனிக்கு உள்ளத்திலும் கோணல்.

கூனி என்ற பேர் பெற்ற இவர் மந்தரை என்ற இயற்பெயரையுடைவள். கேகய நாட்டு மன்னனுடைய அரண்மனையில் பணிபுரிந்தவள, கைகேயிக்குச் செவிலித்தாய், தூக்கி எடுத்து உணவூட்டி வளர்த்தவள். அதனால், கைகேயிடம் அன்பு பூண்டவள். திரேதா யுகமே கூனியாக அவதரித்த மகாமேரு கிரியைப் போன்ற ஒரு பெரிய கேடு சூழ்ந்தாள்.

மனத்திலும் கோணல் உண்டு என்ற பட்டினத்துச் சுவாமிகள் கூறுகின்றார். இறைவனே! நல்வினையால் ஒருவனுக்குச் செல்வம் பல வழிகளில் வரும். வட்டி மூலம் வரும், வாடகை மூலம் வரும், வியாபாரததின் மூலம் வரும், விவசாயத்தின் மூலம் வரும், மனைவி மூலம் சீதனம் வரும். இதுபோல் இறைவா! இச்சிறியேனுக்குப் பாவங்கள், கோணல் பட்ட மனத்தாலும், வாக்கினாலும், ஐம்புலன்களாலும் வந்து குவிகின்றன. அப்பாவங்கள் தவம் செய்தாலும் போகமாட்டா.

இவ்வாறு, அயோத்தி மாநகரம் இன்ப வெள்ளத்தில் நீந்துகின்ற நேரத்தில் இராவணனாகிய கொடியவன் முனிவர்களுக்கும் ஏனைய சாதுக்களுக்கும் செய்யும் கொடுமை திரண்டு ஒரு வடிவங்கொண்டு வந்ததுபோல, கைகேயின் மாளிகையருகில் கூனி தோன்றினாள்.

மேல்மாடியில் பஞ்சணைமீது கைகேயியைத் தூங்க வைத்து விட்டுவந்த கூனி, இன்று என்ன விழா ? நகரம் சொர்க்கம் போல் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றதே ? என்று வினாவினாள். அங்கிருந்தவர்கள், கூனி! உனக்கு இது தெரியாதா ? நாளை இராமச்சந்திர மூர்த்திக்கு மகுடாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது என்றார்கள்.

இதனைக் கேட்ட கூனியின் மனத்தில் கோபத் தீ மூண்டது. அவள் கண்களில் தீப்பொறி பறந்தது. காதிலே மூக்கிலே புகையுண்டாயிற்று. பட்டாபிஷேகமா ? பட்டாபிஷேகமா என்று கூறிக் கறுவினாள். இதனை நான் தடுத்து நிறுத்துவேன் என்று கூறினாள்.

இராமர் முன்னொரு காலத்தில் மண் உருண்டை வைத்துக் குறி வைத்து வில் ஏந்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

கூனி மற்ற பெண்களுடன் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து வந்து கொண்டிருந்தாள். இராமர் இளமைப் பருவ விளையாட்டாக அவள் முதுகில் மண்ணுருண்டை எறிந்தார் என்று கூறுகின்றார்கள். அப்படியன்று, கருணையே வடிவான இராமர் மீது கருணை கொண்டு, பச்சை மண்ணுருண்டையைக் கூன் நிமிரட்டுமே ? என்று எறிந்தார். கும் கீழே விழ அவள் நிலத்தில் விழுந்தாள். அங்குள்ள பெண்மணிகள் கைகொட்டிச் சிரித்தார்கள். கூன் தீரவே மண்ணுருண்டை எறிந்தார் என்ற ஆழ்வார் கூறுகின்ற திறத்தை இங்கு நோக்குங்கள்.

தைய உண்டைவில் நிறத்திற்
றெறித்தாய்
-திருவாய்மொழி 1.5.5

முதல்நாள் போரில் தோல்வியடைந்த இராவணன், தன் சிறிய பாட்டனார் மாலியவானிடம் கூறியதையும் இங்கு நினைவு கூர்க.

இராவணன், தாத்தா! இராமன் என்மீது சினந்து போர் புரியவில்லை. இளமையில் கூனியின் கூன்போக மண்ணுருண்டை கொண்டு விளையாடியதுபோல் போர் புரிந்தான். கோபித்துப் போர் புரிந்தால் நான் பிழைத்து வந்திருக்க மாட்டேன் என்று கூறினான்.

இந்தச் சிறிய சம்பவத்தைக் கூனி நினைத்து இராமருக்குத் தீங்கு செய்ய முயல்கின்றாள்.

அயர்ந்து உறங்குகின்ற கைகேயியின் கால்களைப் பற்றி, கைகேயீ! உனக்குப் பகை வந்து சூழ்ந்திருக்கின்றது. இந்த ஆபத்தான நேரத்தில் நீ உறங்குகின்றாயே ? என்றாள்.

கைகேயி, கூனி, வேதமே யனைய இராமனை மகனாகப் பெற்ற எனக்குப் பகை வருமோ! ஒருபோதும் வராது. நீ என்ன உளறுகின்றாய். ? என்றாள்.

கூனி மதியில்லாத மங்கையே! நீ இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கின்றாய். கைகேயீ! உன் மகனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தன் கணவனுக்குத் தலையணை மந்திரம் ஓதி, உன் மகன் இல்லாத நேரத்தில், ஆண்கள் எள்ளி நகையாட, தாடகை என்ற பெண்ணைக் கொன்றானே இராமன், அந்த இராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடை பெறும். இத்தைப் பெரிய பூகம்பம் நேர்ந்துள்ளது. நீ ஒன்றும் உணராமல் உறங்குகின்றாயே என்றாள்.

இராமபிரானுக்கு முடிசூட்டு விழா என்று கேட்டவுடனே கைகேயி அடைந்த ஆனந்தத்துக்க எல்லையே இல்லை. அவள் முகம் பொலிவுற்றது, அகம் மிக மகிழ்ந்தது. துள்ளிக் குதித்தாள். இந்த மங்களமான நிகழ்ச்சியைக் கூறிய கூனிக்குத் தன் கழுத்தில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஓர் இரத்தின மணிமாலையை அவள் கழுத்தில் பரிசாக இட்டாள்.

கைகேயிக்கு இராமபிரான்மீது அத்துணை ஆழமான அன்பு இருந்தது. அந்த மாலையைக் கூனி கழற்றி வீசி எறிந்தாள்.

நிலம் குழியாகின்ற அளவுக்க மாலையை நிலத்தில் வீசி எறிந்தாள். அந்த மணிமாலை சிதையாதிருந்தது. அது அத்துணை உயர்ந்த மாலை என உணர்க.

கூனி, கைகேயீ! இன்னும் நீ சிறு பெண்ணாகவேணிருக்கின்றாய். தன் அதிநுட்பமான மதிநுட்பத்தால் உன் மாற்றவளாகிய கௌசலை வாழ்வு பெற்று உயர்ந்துவிட்டாள். உன் மகன் நடைப்பிணம்போல் ஆகிவிட்டான். சீதையும் இராமனும் சிங்காசத்திலிருக்க உன் தவப்புதல்வன் கைகட்டி, வாய் பொத்தி நிலத்தில் நின்று சேவகம் புரிய வேண்டும். அரச மாதேவியாகிய நீ கௌசலைக்குப் பணிவிடை புரியவேண்டும். கௌசலையின் தாதிக்குத் தாதியாக ஏவல் புரியவேண்டும். இப்படி ஓர் அவல நிலை நேர்ந்துவிட்டதே. முற்றாள் மைந்தனுக்கு முடிசூட்டுவிழா என்றால். நீ வருந்த வேண்டாமா ? மகிழ்கின்றாயே! பேதையே நவரத்தின மாலையை எனக்குப் பரிசாகத் தருகின்றாயே ? உனக்கு அறிவு இருகின்றதா ?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:36 am

என் அன்பு மகளே! வறுமையால் வாடுபவர்கள் உன்பால் வந்தால் அள்ளி அள்ளி வழங்குவாயே! இனி, உன்னால் அவ்வாறு அறஞ்செய்ய இயலாது. வழக்கமாகத் தந்தவர்க்கு இல்லையென்று கூறவாயா ? கொடுக்க முடியாதபோது அத்துன்பத்தால் மாண்டு போவாயா ? செல்வத்தில் வாழ்ந்த நீ இனி, வறுமையால் வாடுவாயா, உன் எதிர்கால அவலநிலையை நினைத்து வருந்துகின்றேன் என்றாள்.

இதனைக் கேட்ட கைகேயி புன்னகை புரிந்தாள். கூனி! நீ விளங்காமல் பேசுகின்றாய். இராமன் என் அன்புப் புதல்வன்.. . அறிவற்ற நீ ஏன் அரசியலில் புகுந்து பேசுகின்றாய் ? மதி கெட்டவளே. எங்கள் மனுகுலம், மயில் குலத்துரிமையுடையது. மயில் பல முட்டைகள் இடும். மூத்த குஞ்சுக்குத்தான் தலையில் கொண்டையிருக்கும். அதுபோல் எங்கள் ஆதித்தன் குலத்தில் மூத்த மகனுக்கு முடிசூடும் உரிமையுண்டு. இத்தகைய மரபை அழக்கலாமா ? சீதா தேவியின் திருமணம் முடிந்த பின், அயோத்திக்கு வரும் வழியில் எரிமலைபோல எதிர்த்த பரசுராமனைச் சக்ரவர்த்தியா வென்றார் டூ பரதனா வென்றான் ? இராமன்தானே வென்றான். இராமன் பரசுராமனை வென்ற நம்மைக் காத்தருளினாரே! அன்ற நம்மைக் காத்தவன் நான்கு புதல்வர்களில் மூத்தவன் .. . பட்டங்கட்ட ஏற்றவன். சீதைக்கு மாங்கல்யம் தரித்து அத்துணைப் பெரிய சபையிலே இராமன் எனக்குத்தானே முதல் வணக்கம் செய்தான். இராமன் ஆட்சி செய்தால் எல்லாம் எனக்குத் தான் உரியனவாகும். கூனி! அரசியலுக்கும் உனக்கும் வெகு தூரம் நீ இதில் தலையிடாதே. நீ எனக்கும் நல்லவள் அல்லள், பரதனுக்கும் நல்லவள் அல்லள், மீண்டும் பேசினால் உனக்குத் தண்டனை கிடைக்கும் என்றாள்.

கூனி, கைகேயீ! உனக்கு ஒன்றும் தெரியவில்லை. பதவியில் அமர்ந்தவட[ன் மனிதன் மாறிவிடுவான். இப்போது நான் கூறவதைக் கவனமாகக் கேள். கேகய நாடு வளமையான நாடு, விதேக நாடு வறண்ட நாடு. விதேக நாட்டு மன்னன் கேகள நாட்டு மன்னனாகிய உன் தந்தைமீது பலமுறை படையெடுத்து வந்தான். அப்போது உன் கணவர் தன் மாமனாருக்குத் துணை புரிந்தனால் ஜனகர் தோல்வியுற்றார். இப்போது, அரசர் இராமனுக்கு முடிசூட்டிக் கானகம் போனதால், ஜனகர் தன் மருமகனாகிய இராமருடன் கூடி, உன் தந்தையாரையும் உன் உடன் பிறந்தாரையும் கொன்ற விடுவார். இதனால்தான் இதனை வற்புறுத்திக் கூறுகின்றேன் என்றாள்.

எப்போதும் பெண்களக்குத் தாய்வீட்டுப் பாசம் அதிகம்.

தாட்சாயணி தன்னை அழைக்காத தட்சயாகத்துக்குச் சென்று துயரம் அடைந்தாள் என்பதனையும் இங்கு உன்னுக.

இதனைக் கேட்டவுடன் கைகேயின் உள்ளம் மாறிவிட்டது. ஆனால், கூனியின் வார்த்தையால் மட்டுமே அவள் மனம் மாறவில்லை. அரச்கர்கள் செய்த பாவமும் நல்லோர்கள் செய்த தவமுமே இதற்குக் காரணம். கைகேயின் இரக்கம் இன்மையே இராம சரித்திரமாகிய அமுதத்தை எல்லாரும் நுகர்ந்து நலம் பெறுகின்றார்கள்.

கைகேயின் இளகிய உள்ளம் கருங்கல் பாறையாக மாறியது. அவளது குறிந்த உள்ளம் எரிமலையாகக் கொடுங்கனல் வீசத் தொடங்கியது. கைகேயி, கூனி! நீ கூறியது உண்மை. இராமனும் ஜனகரும் சேர்ந்து என் தாய்வீட்டை அழித்து விடுவார்கள். இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முடிவி கட்டியதை எப்படி மாற்ற முடியும். இது எளிதாக ஆகுமா ? என்று கேட்டாள்.

கூனி, என் அன்பு மகளே ( அதுபற்றி நீ கவலைப் படாதே. சம்பராசுரப் போரில் நீ உன் கணவருக்குத் தேர் ஓட்டினாய் அல்லவா ? அதுபோது பள்ளத்தில் சாய்ந்த தேரை உன் வலிமையால் சரி செய்தாயல்லவா ? அப்போது அரசர் இரண்டு வரங்கள் தருகிறேன் என்றார் அல்லவா ? அந்த இரு வரங்களையும் இப்போது கேள். ஓருவரம் பரதன் நாடாள வேண்டும். மற்றொரு வரம், இராமன் வரவுரியுடன் சடைமுடியுடன் கானகம் போகவேண்டும்.

பதினான்கு வருடம் உண்ணாமலும், உறங்காமலும் இருந்தவனால் எனக்கு மரணம் வரனும் என்று இந்திரஜித் வரம் பெற்றான். அதனால், இங்குத் தெய்வச் செயலால் 14 ஆண்டு என வந்தது.

அரச மகளிர் இரு வரந்தான் பெறலாம் என்பது சாத்திரம். அதனால் கைகேயி இருவரம் பெறுகின்றாள். குந்தியும் கர்ணனிடம் ஒரு வரங்களைப் பெற்றாள் என மகாபாரதம் கூறுகின்றது.

கைகேயி கூனிக்கு மணிமாலையும் பொற்காசுகளும் கொடுத்து அனுப்பினாள்.

கைகேயி தன் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்தாள். தலையில் சூடியிருந்த மலரை எடுத்து எறிந்தாள். வளையல்களை உடைத்தாள். தாந் அயிந்த அணிகலன்களைக் கழற்றிப் பல திசைகளிலும் எறிந்தாள். அவள் படுக்கை வீட்டில் பெறுந்தலையில் படுத்திருப்பது, நாளை மகாலட்சுமியாகிய சீதா தேவி அயோத்தியை விட்டுக் கானகம் போகின்றாளே என்று அவள் தம்க்கையாகிய மூதேவி வந்து படுத்திருப்பதைப்போல் இருக்கின்றதாம் அந்தக் காட்சி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:45 am

தசரதரும் கைகேயியும்
[You must be registered and logged in to see this image.]

தசரதர் தன் மனைவியர்கட்குப் பட்டாபிஷேக நிகழ்ச்சியை அறிவித்துவிட்டு இறுதியாகச் கைகேயின் பொன் மாளிகைக்குச் சென்றார். எப்போதும் அகமலர்ந்து முகமலர்ந்து வரவேற்று உபசரிக்கின்ற காதல் மனைவி கைகேயியைக் கண்டாரில்லை. படுக்கையறையில் தலைவிரித்துக்கொண்டு அலங்கோலமாகப் படுத்திருக்கின்ற பத்தினியைக் கண்டார். திடுக்கிட்டார். மனைவியை அன்புடன் எடுத்துக் கண்ணீரைத் துடைத்தார். அவள் விம்மி விம்மியழுதாள்.

பெண்மணி! உனக்கு என்ன கவலை ? ஏன் அழுகின்றாய் ? நீ வருந்தியழு நான் ஒருநாள் கூடப் பார்த்ததில்லையே ? உன்னை யாராவது இகழ்ந்தார்களா ? நீ உயிர்த் துணைவியாயிற்றே என்று தசரதர் வினவினார்.

கைகேயி,பெருமானே! வேறு ஒன்றுமில்லை - முன் சம்பராயுத்தத்தில் எனக்கு இருவரங்கள் தருவதாக வாக்களித்தீரே அந்த வரங்களை இப்போது கேட்கின்றறேன். என்றாள்.

தசரதர்,பெண்ணரசே! இதற்கா இத்தனை சாகஸம் - தொடர்பு இல்;லலதவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குகின்ற யான் என் உயிரினும் உயர்ந்த உனக்கு இல்லையென்பேனா ? உன் மைந்தன் இராமனமீது ஆணை. உனக்கு என்ன வேண்டும் ? கேள் என்றார்.

கைகேயி,மன்னவரே! ஒருவரம் என் மகன் அரியணையில் அமர்ந்து அரசு புரியவேண்டும், மற்றொரு வரம் இராமன் மரவுரி சடைமுடியுடன் பதினான்கு ஆண்டுகள் வனம் போக வேண்டும் என்றாள். இதனைக் கேட்டுத் தசரதர் இடி யேறுண்ட நாகம் போல் நடுங்கினார். உயிர்ப்பு அடங்கி ஓவியம்போல் மயங்கிக் கிடந்தார். செய்வது யாது என்ற அறியாது திகைத்தார். நாம் கனவு காண்கின்றோமா ? என்று எண்ணினார். கைகேயியைப் பற்றி எற்றலாமா ? என்று எண்ணினார். மாதரை அடிப்பது முறையன்று என்று கருதினார். சூவதனையால் துடித்தார். கைகேயின் கால்மீது வீழ்ந்தார். அருவிபோல் கண்ணீர் பெருகியது.

பெண்மணி! ஐம்பத்தாறு தேயத்து மன்னர்களும் என்னைப் பணிகின்றார்கள். நான் உன்னைப் பணிகின்றேன். உன் மனத்தை மாற்றியவர் யார் ? உன் வரத்தின்படி நான் அரச பதவியைத் தந்தாலும் உத்தம குணமுடைய பரதன் அதனை ஏற்றக் கொள்ளமாட்டான. நாளை நான் இராகவனுக்கு முடிசூட்டுவேன். முடிசூடிக்கொண்டே இராமன் என்னை வணங்குவான். இராமா! இந்த அரச பதவியைப் பரதனுக்குத் தருவாயாக என்று நான் கூறுவேன். தந்தை சொல்லைத் தட்டாத இராமன் பரதனுக்கு முடிசூட்டுவான். இது எனக்கும் பெருமை. இராமனுக்கு பெருமை. பரதனுக்கும் பெருமை. நீ பிடிவாதம் செய்யாதே என்றார்.

கைகேயி,மன்னர் பெருமானே! ஒரு சொல்லுக்காக மனைவியை விற்ற அரிச்சந்திரனுடைய மரவில் வந்த நீர் சொன்ன சொல்லைத் தவறக் கூடாது. நீர் இதனை என் வரத்தின்படி செய்யவில்லையானால் இப்போதே நான் உயிர் துறப்பேன். அபயனம் புகுந்த ஒரு புறாவுக்காக தன் உடல் தசையை அறுத்துத் தலையில் ஏறிய சிபிச் சக்கரவர்த்தியின் மரவில் வந்த நீர் சொல் தவறலாமா ? பரதன் நாடாள வேண்டும். இராமன் காடு போகவேண்டும் என்றாள்.

தசரதர் இதனைக் கேட்டு அளவில்லாத துயரத்தையடைந்தார்.

கைகேயீ! நான் போக வேண்டிய காட்டுக்கு இராமன் போவதா ? மெல்லணையில் துயின்ற என் அருநமந்த மகன் கல்லணையில் துயில்வதா ? இராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கோ உன் மகனுக்கோ என்ன தீங்கு செய்வான் ? அவன் சரயு நதிக்கரையில் ஒரு பர்ணசாலையில் இருக்கட்டும். பரதன் முடி சூட்டி ஆட்சி புரியட்டும். வெப்பமான விலங்குகள் வாழும் கானகத்துக்கு இராமனை அனுப்பாதே. துண்மையான உன் பெண்மையுள்ளம் இரும்பா ? கல்லா ? பரதன் நாடாளும் ஒரு வரத்தைத் தந்தேன். மறுவரத்தை மறந்து விடு 60 ஆயிரம் ஆண்டு தவம் புரிந்து பெற்ற மகனாகிய ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிவதா ? அதனை நினைத்தால் என் இதயம் வெடித்துவிடும்போல் இருக்கின்றதே. இராமா! இராமா! என்று புலம்பினார்.

கைகேயி,தந்த வரத்தை மறுப்பது தகாது என்று கூறினாள். மன்னவர் இராமா இராமா என்று அழுது மூர்ச்சித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:47 am



இராமர் வனம் போக விடைபெறுதல்


[You must be registered and logged in to see this image.]

அன்று இரவு கழிந்து பொழுது புலர்கின்றது. அயோத்தியில் வாழும் மாந்தர்கள் மாட்டற்ற மகிழ்ச்சியினால், இராமருடைய மகுடாபிஷேக விழாவைச் சேவிக்க பட்டாபிஷேக மண்டபத்தில் குழுமினார்கள். வசிட்ட முனிவர் வேதியர்கள் புடைகுழ அங்கு வந்தார். சுமந்திரரே! பட்டாபி ஷேகம் புரியும் நேரம் நெருங்குகின்றது. நீர் போய் மன்னவரை அழைத்து வருக என்றார். சுமந்திரர் மன்னவர் கைகேயியின் அரண்மனையில் இருக்கட்டும் என்ற எண்ணிக் கைகேயியின் திருமாளிகையை அடைந்தார். அங்கே சக்கரவர்த்தி படுக்கை யறையில் அவசமாக இருந்ததை அவர் கண்டாரில்லை.

கைகேயி அமைச்சரைப் பார்த்து,அமைச்சரே! நீர் சென்று இராமனை இங்கு அழைத்து வாரும் என்றான். சுமந்திரர் மகுடம் சூடிக்கொள்ளும் மகனை வாழ்த்தியனுப்புவார் போலும் என்று எண்ணி இராமருடைய திருமாளிகையை அடைந்து, இராமரைப் பணிந்து, கைகேயி அம்மையார் அழைக்கின்றார் என்று கூறினார்.

இராமர் ஜானகி! முடிசூட்டும் நேரம் நெருங்கிவிட்டது. என்ன என் அன்னை அழைக்கின்றார். சென்ற வருவேன். நீ மகுடாபிஷேகத்துக்கு ஆ[யுத்தமாக இரு என்று கூறி விட்டுத் தேரில் ஏறிப் புறப்பட்டார். சுமந்திரர் தேரைச் செலுத்தினார் மக்கள் இராமபிரானக் கண்டு கண்ணுங் கருத்துங் குளிர்ந்து களிப்புற்றனர். இராமரைக் கௌசலாதேவி பெற்றார். ஆனால், வளர்த்தது கைகேயிதானே. ஆதனால், தன் அன்பு மகன் இராமபிரானை வாழ்த்தி அனுப்புகின்றார். என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். வீரர்கள் வாள் ஏந்திக் காவல் புரிந்தார்கள். இளம் மகளிர் வெண்சாமரம் இரட்டினார்கள். பல பெண்கள் இனிமையாகப் பாடினார்கள். பலர் மலர் சொரிந்து தூதி செய்தார்கள். வேத வித்தக்களாகிய அந்தணர்கள் மந்திரங் கூறி வாழ்த்தினார்கள்.

இராமர் கைகேயியின் மாளிகையை அடைந்தார். கைகேயி முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தாள். இராமர் (அம்மா ) என்று அன்புடன் அழைத்த அஞ்சலி செய்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:47 am

கைகேயியின் கட்டளை

இராமா! உன் தந்தை இப்போது ஒரு புதிய கட்டளையிட்டிருக்கின்றார். அதனை நான் கூறலாமா என்றாள் கைகேயி. இராமர் அம்மா! தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் இதனைவிட எனக்கு நலம் வேறு உளதோ ? கட்டளை இடுங்கள். அதனை அடியேன் செய்வேன் என்றார்.

கைகேயி,இராமா! கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் பரதன் ஆட்சி புரியவேண்டும். நீ பதினான்கு ஆண்டுகள் சடை முடியோடும், மரவுரியுடனும் வெப்பமான கானகம் போக வேண்டும். இது அரசனுடைய ஆணை என்றாள்.

இதனைக் கேட்ட இராமபிரான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அவருடைய திருமுகம் தாமரையிலும் மிக அழகாக மலர்ச்சியடைந்தது.

பாரம் நிறைந்த வண்டியில் பூட்டிய காளை மாட்டை விழ்த்துவிட்டால் அக்காளை மாடு மகிழ்வதுபோல் அகமும் முகமும் மலர்ந்து இராமன் கூறுகின்றார்.

முன்னறி தெய்வமாகிய அன்னயே! ஆயிரந் தந்தையர் சேர்ந்தால் ஒரு தாயாகுமா என்னை முந்நூறு நாள் சுமந்து பெற்றுப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்த தாயினும் சிறந்த கோயில் உளதோ ? இல்லை. உன் நலத்திலே தங்களுக்குத்தானே அக்கறை யதிகம். அம்மா! மன்னவருடைய கட்டளையே இல்லை என்றாலும் தங்கள் கட்டளையை மறுப்பேனா ? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ. அரச பதவி அல்லல் பல தருவது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. அடியேன் செய்த புண்ணியம் இந்த இனிய வாய்ப்பு கிடைத்தது. இன்றே வனம் போகின்றேன் என்று கூறி விடைபெற்று. இராமர் புறப்பட்டார்.

இராமபிரான், வனம் போகக் கைகேயியிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். வெண்கொற்றக் குடையில்லை. வெண் சாமரமில்லை. தனியே புறப்படுகின்றார். சக்ரவர்த்தியின் தனிப்பெரும் புதல்வர் துணையின்றித் தனியே போகின்றாரே, என்று கம்பநாடர் எண்ணுகின்றார். இராமருக்கு முன்னும் பின்னும் இருவரைச் சேர்க்கின்றார். இராமருக்கு முன் விதி செல்கின்றது. தருமம் பின்னே அங்குத் தொடர்ந்து செல்லுகின்றது.

இங்கே இழைக்கின்ற விதி என்பது இராமபிரான் செய்த விதி என்று பொருள் செய்யக்கூடாது. இராவணாதி அவுணர்கள் செய்கின்ற விதி என்ற பொருள் செய்ய வேண்டும்.

இராமபிரான் தன்னைப் பெற்ற கௌசலையின் திருமாளிகைக்குச் சென்றார்.

இராமர் தாயரை அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கினார். நிலத்தில் வீழ்ந்து பணிந்த மகனை எடுத்துக் கன்னத்தைக்கிள்ளி முத்தம் தந்துமகனே, நீடு வாழ்க. உனக்கு மகுடாபிஷேகம் செய்யும் நேரம் ஆயிற்றே. பரதன் வரவேண்டும். ஜனக மாமன்னர் வரவேண்டும் என்று தாமதிக்கின்றார்களா ? பட்டாபிஷேகம் செய்ய ஏன் தாமதிக்கின்றார்கள் என்று கௌசலை வினவினார்.

இராமர்,அம்மா! அப்பா இந்தத் தேசத்தைப் பரதன் ஆளவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றார் என்றார்.

கௌசலை,மகனே! மிகவும் நல்லது. இட்சுவாகு குலத்தில் மூத்தவனக்குத்தான் முடிசூட்டவேண்டும். மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடிசூட்டுவது முறைமையன்று. ஆனால் உன்னைவிடப் பரதன் நல்லவன். அவன் அரசு புரிந்தால் நாட்டுக்கு நலம், அரசியல் ஒரு சுமை. நீ ஆத்ம நலனுக்கு அதிகம் பாடுபடலாம் என்றாள்.

அம்மா! அப்பாவுடைய கட்டளை மற்றொன்றும் உண்டு. அடியேன் மரவுரியுடன் சடைமுடி தாங்கி 14 ஆண்டுகள் வனம் போகவேண்டும். இது பிதாவின் கட்டளை. ஆதலால், அடியேன் வனம் போகின்றேன்.

இந்த வார்த்தையைக் கேட்ட கௌசலை,மகனே! என்ற நிலத்தில் வீழ்ந்தாள். வேதனையால் மனம் வெந்து நொந்த துடிதுடித்தாள். தாம் போகவேண்டிய வெப்பமான கானகத்துக்கு உன் தந்தை உன்னைப் போக் சொன்னாரா ? மெல்லணையில் படுத்த நீ காட்டில் கல்லணையில் படுக்க வேண்டுமா ? உன் மெல்லிய பாதம் கல்லும் முள்ளும் நிறைந்த கட்டில் நடக்க வேண்டுமா ? காய்கனி உண்டு உயிர் வாது வேண்டுமே ? இது என்ன வஞ்சம் ? கல் நெஞ்சம். நீ போகின்ற காட்டிற்கு நானும் வந்த உனக்குத் துணை புரிகின்றேன் என்று கூறிப் புலம்பி யழுதாள்.

அம்மா! தந்தை சொல்தான் எனக்கு மந்திரம். நான் கானகம் போகவில்லையானால் தந்தையாரின் வாய்மை வழுவும். தாங்கள் தந்தையாருக்கு உதவி புரிய இங்கே இருக்க வேண்டும். பல பிறளகளைப் பெறலாம், கணவன் ஒருவன் தானே! தாங்கள் என்னுடன் வருவது முறையன்று. என் வேண்டுகோளைப் புறக்கணிக்க வேண்டாம். அடியேனுக்கு உளமாற ஆசிகூறி வனம் போக விடை கொடுங்கள்.

கௌசலை கண்ணீர் வடித்தாள். மகனே! அயலூர் போகும் மகனுக்குத் தாய்ட்டமுது கட்டித் தருவாள். பரதனுக்க அரசு என்றதனால் கட்டமுதம் தர எனக்கு இயல்பு இல்லை. அப்படியே கடன் வாங்கிக் கட்டமுது தந்தாலும் இரு வேளைக்குத்தானே ஆகும்.

என் ஆருயிரே! அருமைப் பாலகனே! ஒரு தாய் மகனுக்குச் செய்யும் உதவியைச் செய்ய நான் ஆற்றல் இன்றித் துன்புறுகின்றேன். தருமம் என்ற ஒரு கட்டமுதை உனக்குத் தருகின்றேன். நீ அறநெறியில் ழுவாதிரு. உனக்கு விலங்குகளும் பறவைகளும் உதவி செய்யும். (விலங்கு - வாநரம், பறவை - ஜடாயு)

மகனே! உன் ஆருயிரை அரனார் காக்க, உன் சிரத்தைத் திருமால் காக்க, உன் தோள்களை அசுவிநி தேவர்கள் காக்க, ஏனைய தேவர்கள் உன்னைக் காக்கட்டும். நீ வாழ்கின்ற கானகத்தில் காலமில்லாத காலத்திலும் மரங்கள் பழுத்த உனக்கு உதவுமாக ,, மூலம் இன்றியே அங்கே நறுமணம் வீசுமாக.. . நீ வசிக்கின்ற காடு வெப்பம் இன்றித் தணிந்து குளிர்ந்து உனக்கு நலம் புரியக் கடவது. போய் வருக! என்ற ஆசி கூறினாள்.

இராமர் சுமித்திரையின் பொன் மாளிகைக்குப் புறப்பட்டார். கௌசலை தசரதரிடம் போய் இராமனை வனம் போகவாவண்ணம் தடுத்து நிறுத்த அனுமதி பெறலாம் என்று எண்ணிக் கைகேயியின் மாளிகைக்குச் சென்றாள். அங்கு மன்னவர் இருக்கும் அவல நிலையைக் கண்டு ஆறாத் துயரங் கொண்டு மன்னவருடைய பாதங்களைப் பற்றி வாய்விட்டுப் புலம்பியழுதாள். அக்குரலைக் கேட்ட வசிட்டர் கைகேயியின் மாளிகையை அடைந்து மன்னவன் மூர்ச்சிருப்பதைக் கண்டார்.

திடுக்கிட்டார். வசிட்ட முனிவர்கைகேயியைப் பார்த்த அம்மா! என்ன நிகழந்தது ? மன்னவர் தம்மை மறந்து மூர்ச்சித்திருக்னிறாரே! என்ன காரணம் ? என்று வினாவினார்.

கைகேயி, குருநாதா! சம்பராசுர யுத்தத்தில் மன்னவர் எனக்கு இருவரங்களைத் தந்தார். பரதன் நாடு ஆளவும், இராமன் சடைமுடியுடன் 14 ஆண்டுகள் காடாளவும் வரம் கேட்டேன். வரத்தைத் தந்துவிட்டு இப்போது துயரப்படுகின்றார். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டாவோ ? என்றாள்.

வசிட்ட முனிவர் கைகேயியால் விளைந்த விளைவு என உணர்ந்தார்.

அம்மா! சக்ரவர்த்தி கொடுத்த வரம் கொடுத்ததுதான். ஆனால், குலகுருவாகிய நான் உன்னை ஒரு வரம் கேட்கின்றேன். பரதன் முடிசூட்டி அரசு புரிவானாக. இராமன் வனம் போகமாமல் அயோத்தியில் ஒரு தவச்சாலையில் இருக்கட்டும் இது நீ எனக்குத் தரும் வரம் என்றார்.

கரும்பாறை போன்ற கடிற நெஞ்சமுடைய அக்கொடியவள், கைகேயி, இராமன் காடுபோகவேண்டும். இல்லையேல் நான் இப்போதே உயிரை விடுவேன் என்றாள். வசிட்டர் சீற்றம் அடைந்தார். கைகேயீ! மூத்தவன்தான் முடிசூடவேண்டும் என்பது மனுகுலத்தில் வழிவழியாக வந்த மரபு. உன்னால் அந்த மரபு அழிகின்றது. மன்னர் பெருமான் மரண வேதனையடைந்துள்ளார். அதனைக் கண்டும் நீ இரங்கவில்லை. நீ பெண்ணா ? பேயா ? என்று உரத்த குரலில் கடிந்துரைத்தார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக