ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

+3
பூவன்
யினியவன்
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by krishnaamma Wed Sep 18, 2013 8:48 pm

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! 3

அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது.

அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்த சிங்கராஜாவுக்கு 60 வயது ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தன. சிங்கராஜாவின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகக் கொண்டாட மற்ற மிருகங்கள் தீர்மானித்தன. விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன.

விழாவன்று, சிங்கராஜாவும் ராணியும் அமர்வதற்கு தேக்கு மரத்தாலான சிம்மாசனமும் தோதகத்தி மரத்தினால் ஒரு பல்லக்கும் செய்வது என அமைச்சர் நரியும் தளபதி கரடியும் முடிவு செய்தன. எனவே காட்டில் உள்ள மரங்களிலேயே மிகவும் நல்ல மரங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து அவற்றை வெட்டின. விழா நடப்பதற்கான மேடை அமைப்பதற்காகவும் ஏராளமான மாமரங்களை வெட்டின.

நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மற்ற மிருகங்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரிகள் அமைக்கவும் முடிவு செய்தன. இதற்காக ஏராளமான பலகைகள் தேவைப்பட்டன.

அதற்காக காட்டிலுள்ள அகன்று வளர்ந்த பெரிய மரங்கள் பல வெட்டப்பட்டன.
விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து மிருகங்களும் தங்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தன.


அந்தக் காட்டில் ஏழை முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் பரணி. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அதற்குப் பரணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றும் அம்மா முயல் அடிக்கடி கூறுவாள். ஆனால் பரணி முயல் ஒருவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.

சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாணத்துக்கு காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
பரணி முயலுக்கும் அந்த அழைப்பிதழ் வந்தது.

உடனே பரணி யோசிக்க ஆரம்பித்தது. சிங்கராஜாவுக்குப் பரிசாகக் கொடுக்கத் தன்னிடம் போதுமான வசதி இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
மா, புளி, பலா, அரசு, வேம்பு ஆகிய மர விதைகளைச் சிறிய தொட்டிகளில் போட்டு வளர்க்க ஆரம்பித்தது.


சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாண தினமும் வந்தது. சிங்கத்தின் குகையிலிருந்து விழா மேடை வரை, வரிசையாக வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அன்று காலையில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளர்ந்திருந்த நிழலான இடத்தில் அமைந்திருந்த காட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சிங்கராஜாவும் ராணியும் வந்தனர். மான்கள் மந்திரம் ஓத சிங்கராஜாவும் ராணியும் கோவிலை 108 முறை வலம் வந்தனர்.

பின் ஆயுள் ஹோமம் செய்தனர். மதியம் சாப்பிட வந்த மிருகங்களுக்கு தவிட்டு கானப்பயிறு நெய்சாதம், கேப்பை பாயசம், அவித்த மொச்சை, முளைக்கீரை பெரியல், கொள்ளு ரசம் என விருந்து அமர்க்களப்பட்டது.

தொடரும்..........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by krishnaamma Wed Sep 18, 2013 8:49 pm

மாலை வேளையில் சிங்கராஜாவும் ராணியும் தோதகத்தி பல்லக்கில் காட்டில் ஊர்வலமாக வந்தனர். யானைகள் மலர் மாலைகள் அணிவிக்க, மேடையில் தேக்கினால் செய்த சிம்மாசனத்தில் சிங்கராஜாவும் ராணியும் அமர்ந்திருந்தனர்.
மேடையில் குயில்கள் பாட, குரங்குகள் மத்தளம் அடிக்க, கரடிகள் நாதஸ்வரம் வாசிக்க, மயில்கள் நடனமாட விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எல்லோரும் சிங்கராஜாவுக்குத் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளைக் கொடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர். சிலர் பொன்னாடை போர்த்தினர். சிலர் குத்துவிளக்குகளைப் பரிசாக அளித்தனர். மற்றவர்கள் வெள்ளியில் ஆன பொருட்களைப் பரிசாகக் கொடுத்தனர். எல்லோரும் சிங்கராஜாவிடமும் ராணியிடமும் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பி தங்கள் இடத்துக்கு வந்த அமர்ந்து கொண்டிருந்தனர்.

கடைசியில் தயங்கித் தயங்கி வந்த பரணி முயல் தனது பரிசை எடுத்து சிங்கராஜாவுக்கு முன்பு எடுத்து வைத்தது.
ஐந்து சிறிய அழகிய தொட்டிகளில் தான் வளர்த்த மரக்கன்றுகளைத்தான் பரிசாகக் கொண்டு வந்திருந்தது பரணி முயல். சிங்கராஜாவிடம் மிகவும் பணிவுடன் அவற்றை அளித்தது.

இந்தக் காட்சியைக் கண்ட மற்ற மிருகங்கள் சிரிக்க ஆரம்பித்தன. சிங்கராஜாவுக்கும் ராணிக்கும் பரணியின் பரிசு ஆச்சரியத்தை அளித்தது. மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, சிங்கராஜா பரணி முயலைப் பார்த்து, ""உனக்கு இந்தப் பரிசைக் கொடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?'' என்று கேட்டது.

அதற்கு, பரணி முயல், ""சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! முதல் காரணம் நானொரு கூலித் தொழிலாளி. என்னிடத்தில் விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுக்கப் பொருளாதார வசதி இல்லை. மற்றொரு காரணம் இந்த விழாவுக்காக காட்டிலிருந்து பலவகையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் காட்டில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது. மரங்கள் இல்லையேல் காடுகள் இல்லை. மழையும் சரியாகப் பெய்யாது.

மழையில்லையென்றால் மீண்டும் மரங்கள் வளர்வது தடைபட்டு விடும். காட்டின் செழிப்பு குறைந்து போய்விடும். அப்புறம் நாமெல்லாம் வாழ்வதற்கு நல்ல இடமில்லாமல் போய்விடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அதனால்தான் இப்படியொரு பரிசை உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சில நாட்களுக்கு முன்பாகவே இந்த மரக்கன்றுகளை வளர்க்க ஆரம்பித்தேன்'' என்று கூறியது.

""ஆமாம், நீ சொல்வது உண்மைதான். இந்த விழாவுக்காக ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாதது எனது தவறுதான். நீதான் எனது அறிவுக் கண்களைத் திறந்தாய் பரணி. மற்றவர்கள் கொடுத்த பரிசுகளை விட மதிப்பு மிக்கது நீ தந்த பரிசு. இனி இந்த மாதிரி ஆடம்பர விழாக்களுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்று ஆணையிடுகிறேன். மேலும் இப்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக எனது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகளை நடுவதற்கும் உத்தரவிடுகிறேன்.

உனக்கும் ஒரு வேலை தருகிறேன். அதன்படி உனக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் மரக்கன்றுகளை வளர்த்து நீ எங்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான ஊதியம் உனக்குத் தரப்படும். நீ தரும் மரக்கன்றுகள் அனைத்தும் காட்டில் ஆங்காங்கே நடப்பட்டு சிறந்த முறையில் வளர்க்கப்படும்...'' என்று சிங்கராஜா தனது கம்பீரக் குரலில் அறிவித்தது.

மற்ற மிருகங்கள் அனைத்தும் வாயடைத்து நின்றன. அவற்றின் திகைப்பு அடங்க வெகு நேரமாயிற்று. பரணி முயல் சிங்கராஜாவுக்கு நன்றி கூறிவிட்டு சந்தோஷமாகத் தனது வீட்டுக்குத் திரும்பியது.பரணி முயலுக்கென தனி நிலம் கிடைத்துள்ளதால் அதுவும் ஒரு காலத்தில் தரணி ஆளப்போவது நிச்சயம்தானே!

நன்றி : சிறுவர் மணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by யினியவன் Wed Sep 18, 2013 9:16 pm

நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by பூவன் Wed Sep 18, 2013 9:17 pm

யினியவன் wrote:நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா? புன்னகை
அதுக்குள்ளவா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by யினியவன் Wed Sep 18, 2013 9:23 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா? புன்னகை
அதுக்குள்ளவா  ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நீங்க சொல்றது சரி தான் பூவன் - அம்மா தலைப்பை கிழட்டு சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்ன்னு தான் வெச்சிருக்கணும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by யினியவன் Wed Sep 18, 2013 9:27 pm

அம்மா எனக்கு ஒரு டவுட்டு:

காட்டில் வாழும் சிங்கத்தின் லைப் ஸ்பேன் 15 வருஷம், ஜூவில் வாழ்ந்தால் 25 வருஷம் தான் - கதைக்காக 60 வதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by krishnaamma Wed Sep 18, 2013 9:40 pm

யினியவன் wrote:அம்மா எனக்கு ஒரு டவுட்டு:

காட்டில் வாழும் சிங்கத்தின் லைப் ஸ்பேன் 15 வருஷம், ஜூவில் வாழ்ந்தால் 25 வருஷம் தான் - கதைக்காக 60 வதோ?
நானா கதை எழுதினேன், கதைக்காக அவங்க 60 என்று போட்டிருப்பாங்க புன்னகைமுயல் என்ன பரணி நக்ஷத்திரத்தில் பிறக்குமா? குழந்தைகளுக்கு சொல்வதறக்காக  இப்படி சொல்லி இருப்பாங்க புன்னகை
கதை இன் கருத்து தானே முக்கியம் புன்னகை
இந்த கதை இன் கருத்து எவ்வளவு நல்ல கருத்து இனியவன் புன்னகை
குழந்தைகள் மனதில் மரம் வெட்டக்கூடாது மற்றும் வளர்க்கணும் என்று பதியுமே !
.
.
.
வயதான சிங்கம்  இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும். நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 11:45 am

நல்ல கதை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by DERAR BABU Thu Sep 19, 2013 11:56 am

நேற்று இந்த கதையை தான் குழந்தைகளுக்கு சொன்னேன் அக்கா ........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by krishnaamma Thu Sep 19, 2013 12:00 pm

DERAR BABU wrote:நேற்று இந்த கதையை தான் குழந்தைகளுக்கு சொன்னேன் அக்கா ........
நன்றி பாபு, நான் இனியவனுக்கு எழுதிய பதில் போல, குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே நல்ல சுற்று சூழல் வேண்டும் என்றால் மரங்கள் அவசியம் , அனாவஸ்யமாய் அவற்றை வெட்டக்கூடாது என்று சொல்லி மனதில் பதியவைக்கணும். மேலும் பரிசுகள் வழங்கும்போது சின்ன சின்ன செடிகளை அளிக்கவேண்டும் அவர்களுக்கு. நாங்கள் இந்த முறை எங்கள் 'ஜெனசிசில்' பரிசுகள் அப்படித்தான் கொடுத்தோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Empty Re: சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum