ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

3 posters

Go down

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Empty தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

Post by சாமி Tue Sep 17, 2013 6:07 pm

சிறுமழையை கூட சேமிக்க முடியாத துயரம்!

மன்னர்கள் கோயில்கள் கட்டிய அளவு ஏரிகளும் வெட்டினர். வடக்கே வீராணம் ஏரி முதல் தெற்கே விஜயநாராயணம் ஏரி வரை அனைத்தும் மன்னர்கள், ஜமீன்தாரர்கள், சில இடங்களில் மக்களால் அமைக்கப்பட்டவை. ஏரியிலிருந்து நீர் செல்லும் மதகுகள், வாய்க்கால்கள் குடி மராமத்து முறையில் ஊர்மக்கள் உழைப்பால் பராமரிக்கப்பட்டன. இதற்கு பிரதிபலனாக ஏரிக்கரை மரங்கள், மீன்களை குத்தகைக்கு விட்டனர். மன்னர் ஆட்சி காலத்தில் ஊர் சபைகளின் கீழ் அமைந்த ஏரி வாரியம் குளங்களை பராமரித்தது. கிபி 768ஆம் ஆண்டு பையனூர் கல்வெட்டு பையனூர் ஏரிக்கு மாமல்லபுரத்து வணிகர் 6400 காடி நெல்லை ஊர்சபையாராகிய ஆளுங்கணத்தாருக்கு வழங்கிய தகவலை கூறுகிறது. அதை இருப்பாக கொண்டு அதிலிருந்து கிடைக்கும் பொலிவூட்டு (வட்டி ) மூலம் குளத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ முத்தரையன் என்ற அதிகாரி குருவித்துறை பெருமாளுக்கு தானமாக வழங்கிய நிலத்துக்காக ஏரியில் இருந்து கூடுதல் வாய்க்கால் அமைத்ததை ஊர்சபை அரசருக்கு தெரிவிக்க, அந்த வாய்க்கால் தூர்க்கப்பட்டது. இது தவிர, 10 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் ஆண்டுதோறும் ஏரியில் ஒரு குழி வண்டல் தோண்டவேண்டும். தவறினால் 4 பொன் தண்டம் கொடுக்கவேண்டும் என மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. ஏரி குளங்களில் விவசாயிக்கு மட்டுமின்றி சலவை தொழிலாளர், கால்நடை வளர்ப்போர், மீன் பிடிப்போருக்கும் உரிமை இருந்தது.

மழை நீர் சேமிப்பு திட்டம் அமலில் இல்லாவிட்டாலும் அதற்கான செயல்பாடு அக்காலத்தில் இருந்தது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் விழுந்த மழைநீரை சேமிக்கும் இடமாகவே சிவகங்கை குளத்தை ராஜராஜன் அமைத்தான். பிற்காலத்தில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நகரில் பெய்த மழைநீரை பல்வேறு தெருக்களிலிருந்து சுடுமண் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்தில் சேர்த்தார். ஆங்கிலேயர்கள் பொதுப்பணித்துறையை நிறுவிய பின் நீராதார பராமரிப்பு அரசின் உரிமையானது. 1800ல் ராணுவ பொறியாளர் ஒருவரை ஏரி மராமத்து அலுவலராக ஆங்கில அரசு நியமித்தது. 1878 & 80ல் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரி மராமத்து ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். 200 ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்பு கொண்ட குளங்களை அரசும் மற்றவற்றை மக்களும் பராமரித்தனர். இதுவே பின்னர் பொதுப்பணித்துறையாக உருவானது. நில உடமைதாரரே பாசன வேலையை செய்யவேண்டும். அல்லது அதற்கான சம்பளத்துக்கு இருமடங்கு பணம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தும் சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம் 1858ல் இயற்றப்பட்டது. 1901ல் அமைக்கப்பட்ட ஆணையம், ‘நீராதார பராமரிப்பு அரசின் கடமை. எனவே, இந்த சட்டம் செல்லத்தக்கதல்ல‘ என்று கூறியது. அதன்பின்பு நீருக்கும் விளைச்சலுக்கும் தீர்வை வசூலித்ததால் விவசாயிகளுக்கு ஆர்வம் அற்றுப்போனது. சுதந்திரத்துக்கு பின்பு உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக அரசே பாசன பராமரிப்பை மேற்கொண்டதால் குளத்துப்பற்றுகளின் உரிமையாளர்கள் முற்றிலும் பற்றற்றவர்களாகினர்.

தமிழகத்தில் உள்ள 39,202 ஏரி, குளங்களில் கால் பங்கை காணவில்லை. அதற்காக ‘கிணற்றை காணோம்‘ கதையாக பொதுப்பணித்துறையிடம் புகார் செய்யமுடியாது. ஏனெனில், அவர்கள் அறியவே அவை களவாடப்பட்டன. ஓடைகள் ஆக்கிரமிப்பால் குளங்களும், குளங்களின் ஆக்கிரமிப்பால் வயல்களும், வயல்களின் ஆக்கிரமிப்பால் விவசாயமும் அழிந்துபோயின. பொதுப்பணித்துறைக்கு துணை நிற்கவேண்டிய வருவாய், உள்ளாட்சி துறைகள் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவாளர்களாக ஆனதால் இந்த நிலை. நீர்நிலை ஆக்கிரமிப்பால் உணவுப்பஞ்சம் மட்டுமல்ல, குடிநீர் பஞ்சமும் தலைதூக்குகிறது. வேளாண்மை தொழில் மட்டுமின்றி, மின் உற்பத்தி மற்றும் அனைத்து தொழில்களும் வியாபாரமும் சேர்ந்தே முடங்குகிறது. நீராதாரங்களை பாதுகாக்க நீரை பயன்படுத்துவோரின் பங்களிப்பு முக்கியம் என்பதால் அவர்களை கொண்டு சங்கம் அமைக்க உலக வங்கி நிபந்தனை விதித்தது. இதையொட்டி 2001 முதல் சங்கங்கள் அமைக்கப்பட்டு 2004ல் தேர்தல் நடைபெற்றது. இச்சங்கத்தினருக்கு விவசாயிகளிடம் நிதி வசூலிக்க, மீன், பாசி குத்தகை விட, பொதுப்பணித்துறை அதிகாரியுடன் இணைந்து கணக்கு தொடங்கி அதை வரவு, செலவு செய்ய உரிமை வழங்கப்பட்டது. ஆனால், அது நீர் மேல் எழுத்தாகிவிட்டது. பாசன சங்க தலைவர்கள் அடங்கிய நீராதார அமைப்பின் உச்சநிலைக்குழு பொதுப்பணித்துறை செயலர் முன்னிலையில் கூட்டப்படவேண்டும்.

ஆனால், அதைக்கூட திருமூர்த்தி நீர்த்தேக்கத்திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றபின்பே கடந்த 4ஆம் தேதியில் கூட்டியுள்ளனர். 2012ல் வெளியிடப்பட்ட தேசிய நீர் கொள்கை நீர் வள ஆதார அமைப்பை பாதுகாக்கும் அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. நீர் நிலையில் மக்களுக்கு உள்ள உரிமையை மறுதலிக்கிறது. அவற்றை தனியாருக்கு ஏலமுறையில் கொடுக்கவும், தண்ணீர் மற்றும் கழிவு நீருக்கு வரி விதிக்கவும் வகை செய்கிறது.எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை சேமித்து வைக்க குளங்களும் ஏரிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களும் ஏரிகளும் சுருங்கிப் போய் விட்டன. சுருங்கிய ஏரி, குளங்களை பராமரித்து தூர்வாறி வைத்திருந்தால் அவற்றில் ஆண்டு முழுவதற்கும் தேவையான தண்ணீரை சேமிக்க முடியும். அதுவும் செய்வதில்லை. பாதிக்கு மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போய் விட்டன. ஏரி, குளங்களுக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டன. சிறு மழையைக் கூட சேமிக்க முடியாத துயரம் தான் நிலவுகிறது.

இது குறித்து கோதையாறு வடிநிலக்கோட்ட பாசன தலைவர் வக்கீல் வின்ஸ் அன்ட்றோ கூறுகையில், ‘ விவசாயம் லாபகரமாக இருந்த அந்த காலத்துக்கு குடிமராமத்து பொருந்தும். இப்போது ஆக்கிரமிப்பை தடுக்கும் வலிமை விவசாயிகளுக்கு இல்லை. தற்போது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீர்பாசன அமைப்பின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு அரசு செயல்படவேண்டும். குளங்களை தூர்வார கனிம வளத்துறை அனுமதிக்கும் முன்பு சுற்றுச்சூழல் குழு ஒன்று இசைவளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவ்வாறு ஒரு குழுவை அமைக்கவேண்டும். தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்ட விதிகளை பின்பற்றி நாகர்கோவில் பார்வதிபுரம் அனந்தனார் சானல் கரையில் 160க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள் கொண்ட ஆக்கிரமிப்பை அகற்றினோம். புதிய ஆக்கிரமிப்பை அகற்ற இந்த நடைமுறையை பின்பற்ற தேவையில்லை.‘ என்றார்.
தண்ணீரின் பயன்பாட்டை குடிக்க, விவசாயம் செய்ய, நீர் மின்சாரம் தயாரிக்க, சுற்றுச்சூழலை பேண, விவசாயம் சார்ந்த, சாராத தொழில்கள் செய்ய, போக்குவரத்து மற்றும் இதர பயன்பாட்டுக்கு என 2002ஆம் ஆண்டு தேசிய நீர் கொள்கை வரிசைப்படுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே நீராதார பாதுகாப்பு உரிமையும் வழங்கப்படவேண்டும். பொதுச்சொத்தான தண்ணீரில் மக்களுக்கான உரிமை எப்போதும் இருந்துவரவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

4கட்ட நடைமுறை
தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007ன்படி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளரே நான்கு கட்ட நடைமுறையை பின்பற்றி ஆக்கிரமிப்பை அகற்றலாம். முதலாவதாக வருவாய் துறை மூலம் நீர் நிலையை அளந்து வரைபடமும், ஆக்கிரமிப்பு பற்றிய அறிக்கையும் தயாரிக்கவேண்டும். இரண்டாவது அதை விளம்பரப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பொதுப்பணித்துறையே அகற்றப்போவதாக நோட்டீஸ் அனுப்பிவிட்டு நேரடியாக நடவடிக்கையில் இறங்கலாம்.
நன்றி-தினகரன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Empty Re: தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

Post by ராஜா Tue Sep 17, 2013 6:25 pm

தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டம் 2007ன்படி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளரே நான்கு கட்ட நடைமுறையை பின்பற்றி ஆக்கிரமிப்பை அகற்றலாம். முதலாவதாக வருவாய் துறை மூலம் நீர் நிலையை அளந்து வரைபடமும், ஆக்கிரமிப்பு பற்றிய அறிக்கையும் தயாரிக்கவேண்டும். இரண்டாவது அதை விளம்பரப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பொதுப்பணித்துறையே அகற்றப்போவதாக நோட்டீஸ் அனுப்பிவிட்டு நேரடியாக நடவடிக்கையில் இறங்கலாம்.
இறங்கலாம் ..... அதன் பிறகு அவரால் ஏறி வரமுடியாது , நேரடியா மேலே அனுப்பிடுவோம்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Empty Re: தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 6:40 pm

எல்லாமே அரசாங்கம் செய்யனும் நாங்க ஏதும் செய்ய மாட்டோம் ஆனா அரசாங்கத்திடம் இருந்து வரும் இலவசம் மட்டும் வேணும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்! Empty Re: தூர்ந்த குளங்கள் தொலைந்த கால்வாய்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum