புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_m10தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழியில் படிக்கிறார்கள், தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:03 pm

மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி வரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

குடிசைப்பகுதி மாணவர்களுக்கு அரசின் உதவி இல்லாமலேயே இலவசமாகக் கல்வி, மதிய உணவு, இதர பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது காரைக்காலில் இயங்கி வரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி.

22 பேருடன் தொடங்கிய இந்தப் பள்ளியில் இப்போது 250 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலம்தான் அறிவு என்றும் தமிழ்வழிக் கல்வியால் எதையும் சாதிக்க முடியாது என்றும் இன்றைய சமூகத்தை மயக்கி வைத்திருக்கும் மாயத்திரையை விலக்கி, தாய்மொழிக்கல்வி வெறும் கல்வியை மட்டும் கற்றுத் தருவதில்லை; அது அறநெறியில் தொடங்கி, அறிவியல் வரை அனைத்தையும் கற்றுத் தருகிறது என்பதை அப்பட்டமாக உலகிற்கு நிரூபித்து, தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்துக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது இந்த தமிழ்ப்பள்ளி.

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு புத்தக அறிவை விடவும் நீதிபோதனைகளும், வாழ்வை எதிர்கொள்ளும் விதம் பற்றியுமே அதிகம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. இதனை தன் லட்சியமாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, காரைக்காலில் இயங்கிவரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி.

தரமான மாணவர்கள் உருவாக வேண்டுமெனில் அது தாய்மொழிக் கல்வியால் மட்டும்தான் முடியும் என்கிற நோக்கத்துடன் 1995-ஆம் ஆண்டு பேராசிரியர் மருதமுத்து அவர்களால், 22 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி. பொதுவாக எங்கள் பகுதி குடிசைகள் நிறைந்த, படிப்பறிவில்லாத பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி. வசதி வாய்ப்பற்ற இந்தப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை சரியாகப் படிக்க வைக்காததால் அவர்கள் வளர்ந்தபிறகு பல்வேறுவிதமான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு, அவர்களின் வாழ்க்கையே பாழாகிப்போவதை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு வெறும் கல்வியை மட்டும் புகுத்தினால் போதாது. அதனுடன் இணைத்து அறநெறி மற்றும் நல்லொழுக்கத்தையும் இணைத்து புகுத்தினால்தான் அவர்கள் வாழ்வு மேம்படும் என்பதால் அவர்களுக்கு அவற்றையும் இணைத்துப் புகுத்தினோம்" என்கிறார், இந்தப் பள்ளியின் தாளாளர் முத்துகிருட்டிணன்.

பேராசிரியர் மருதமுத்துவிற்குப் பிறகு 2000-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியை இவர்தான் நிர்வகித்து வருகிறார். பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டபோதெல்லாம், இவரது மனைவியும், மருத்துவருமான உமா மகேஸ்வரியின் உதவியால் சமாளித்திருக்கிறார். பள்ளியை நிர்வகிப்பதற்காக தனது வழக்கறிஞர் பணியையும் துறந்துவிட்டு முழு நேரத்தையும் பள்ளிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் இவர்.

திருவள்ளுவர் அறநெறிக் கல்விப் பணி அறக்கட்டளையை ஆரம்பித்து, தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி கிளப் போன்றவற்றின் உதவியுடன் இந்தப் பள்ளியை இப்போது சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். சிறப்பான நூலகத்தை அமைத்துள்ளோம். மாணவர்கள் தினமும் நூலகத்தில் வந்து புத்தகம் வாசிப்பதை கட்டாயமாக்கி இருக்கிறோம். தன்னார்வலர்கள் மற்றும் எக்ஸ்போ பிரைட் உதவியுடன் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் மாலை உணவு வழங்கி வருகிறோம். வெறும் கல்வியுடன் நின்றுவிடாமல், நீதி போதனை வகுப்புகளும், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கரகம், சிலம்பம், காவடி போன்ற கலைகளையும் கற்றுத் தருகிறோம். இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்கள் பள்ளியில் உள்ள தோட்டத்திலேயே இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவித்து அதனையே மாணவர்கள் உண்கிறார்கள்" என்கிறார், முத்துகிருட்டிணன் பெருமையுடன்.

இப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தமிழில் உரையாடுவதையே ஊக்குவிக்கும் அதே நேரத்தில் ஆங்கிலத்தின் அவசியத்தையும் புறக்கணிக்காமல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆங்கில வகுப்புகள் எடுத்து மாணவர்களின் ஆங்கிலத் திறனையும் வளர்த்து வருகிறார்கள். மாலை நேரத்தில் விளையாட்டு என்பது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வியுடன் இணைத்து மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, கையெழுத்துப் பயிற்சி, உடல்கல்வி, மருத்துவ முகாம்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவற்றை மாணவர்களின் பங்களிப்புடன் செய்து வருகிறோம். தமிழ்வழிக் கல்வியின் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது எனப் பலரும் இப்போது கூறிவருகின்றனர். நமது பிள்ளைகளை காசு சம்பாதிக்கும் இயந்திரமாக உருவாக்க ஆசைப்படுகிறோம். அதுதான் இன்றைய சமூகத்தின் அவல நிலைக்குக் காரணம். உண்மையில் நமது பிள்ளைகளை நாம் நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டும். அது தாமொழிக் கல்வியால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆங்கிலத்தின் அவசியத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஸ்கைப் (skype) மூலமாக தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் எடுக்க முடிவு செய்தோம். லோக்கலெக்ஸ் நிறுவனர் இராஜாராம் மற்றும் அனு அவர்களின் உதவியுடன் தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு தினமும் ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகளை எடுத்து வருகிறோம். ஸ்கைப் மூலம் பாடம் எடுக்க ஆரம்பித்தபிறகு மாணவர்களின் கல்வித்திறன் வளர்ந்திருக்கிறது" என்கிறார், டாக்டர். உமா மகேஸ்வரி.

ஸ்கைப் மூலம் பாடம் எடுக்க ஆரம்பித்தபிறகு எங்களால் இப்போது ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை எளிதாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. தினமும் மதியம் ஒரு மணி நேரம் ஸ்கைப் மூலம் ஆசிரியர்கள் எங்களுக்குப் பாடங்களை எடுக்கிறார்கள். ஸ்கைப் மூலமே எங்களுக்கு அவ்வப்போது தேர்வுகளும் நடத்தப்படுவதால் முன்னைவிட இப்போது கணிதம், ஆங்கிலம், பொதுஅறிவு ஆகியவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், இங்கு படிக்கும் மாணவி விஷ்ணுப்ரியா.

வாரம் ஒருமுறை எங்கள் பள்ளியிலேயே தலைவர்கள் பற்றிய திரைப்படம் ஒன்றைத் திரையிடுகிறார்கள். வாரம் முழுவதும் ஒரு தலைவரைப்பற்றித் தெரிந்துகொள்ளச் சொல்லி வார இறுதியில் அவர்களைப்பற்றி பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குகிறார்கள். இதன் மூலம் எங்களுடைய பொது அறிவு வளர்கிறது. விளையாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் காட்ட பள்ளியே ஊக்கப்படுத்துவதால் எங்களுக்கு பாடப் புத்தகத்தை தாண்டி இன்னொரு உலகம் இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், மாணவர் வினோத்.

நான் இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில்தான் படித்தேன். அப்போதே எங்களுக்கு கல்வியைத் தவிர்த்து வாழ்க்கைக் கல்வியையும் இந்தப் பள்ளி உணர்த்தியது. 12-ஆம் வகுப்புத் தேர்வில் காரைக்கால் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று இப்போது புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் வழியில் ஆரம்பக்கல்வியைப் படித்ததால் என்னால் இப்போது மருத்துவக் கல்வியையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், முன்னாள் மாணவி வெண்மணி.

நானும் 10-ஆம் வகுப்புவரை இந்தப் பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். என்னைப் போன்ற, பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள மாணவர்களின்மேல் தனிக்கவனம் செலுத்திப் படிக்க வைக்கிறார்கள். நான் இப்போது டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கிறேன். தாய்மொழிக் கல்வி எங்களுக்கு வாழ்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தந்திருக்கிறது" என்கிறார், முன்னாள் மாணவர் லூகாஸ்.

தாய்மொழியில் படித்த எந்த மாணவனும் பின்தங்கவில்லை என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்தத் தமிழ்ப் பள்ளி.

நன்றி - சு.வீரமணி (புதிய தலைமுறை)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:21 pm

தமிழ்வழி கல்வி என்று பேசினாலே எரிந்து விழுறாங்க நம்மாளுங்க. நான் தமிழ்வழி கல்வி அவசியம் பற்றி ஒரு பதிவை (மனிதன் இயந்திர மொழியில் கற்பது சிறப்பு) எங்கள் ஊர்சார் யாஹூ குரூப்பில் பகிர்ந்தேன். போட்டதுதான் தெரியும் தமிழ்வழி கல்வி பயனற்றது என குறிப்பாக தநு (IT) துறை சார்ந்தவர் வரிந்துகொண்டு வருகின்றனர்.

நல்லா பொதுசபையிலே தமிழில் படிப்பது வேஸ்ட் என்று சொல்கின்றனர். என்ன செய்வது இப்படி தான் பலரும் எண்ணம் கொண்டிருக்கும் போது, மக்களின் இந்த ஆங்கில போதையை தெளியவைப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை தான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 15, 2013 4:38 pm

தாய்மொழியில் படித்த எந்த மாணவனும் பின்தங்கவில்லை என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்தத் தமிழ்ப் பள்ளி.

இவர்களின் வெற்றி நடை தொடரட்டும்

ராஜு அண்ணா சொல்வதுபோல் ஆங்கில போதையை தெளிய வைப்பது மிக கஷ்டம் தான்





தாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Mதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Uதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Tதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Hதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Uதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Mதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Oதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Hதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Aதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Mதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! Eதாய்மொழியில் படிக்கிறார்கள்,  தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 5:33 pm

இன்றைய மாறிவரும் சூழலில் பெற்ற தாய் தந்தையரையே பேண மறக்கும் நம் சமுதாயம் தாய் மொழியைப் பற்றி எங்கே சிந்திக்கப் போகிறது???

மாற்றங்கள் வரும் என நம்புவோம்.




கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Mon Sep 16, 2013 10:07 am

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.மாவட்டந்தோறும் இதுமாதிரியான பள்ளிகளிருந்தால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கலாம். கோடிகோடியாக கொட்டி ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்க்கு செலவழிக்கும் செல்வச்சீமான்கள் இதுபோன்றதொரு சேவையை செய்யலாம். அப்படி முழுநேர சேவை செய்ய மனம்வராவிடினும் இருப்பவர்களிடம் அளவாக பெற்று இயலாதவர்களுக்கும் அளிக்கலாம். நம்மை போன்ற ஆர்வமுள்ளவர்களும் இதுபோன்று கல்வி சேவையில் இறங்களாம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 10:19 am

Muthumohamed wrote:தாய்மொழியில் படித்த எந்த மாணவனும் பின்தங்கவில்லை என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்தத் தமிழ்ப் பள்ளி.

இவர்களின் வெற்றி நடை தொடரட்டும்

ராஜு அண்ணா சொல்வதுபோல் ஆங்கில போதையை தெளிய வைப்பது மிக கஷ்டம் தான்
கஷ்டம் தான் ஆனால் நாம் மொழி பல இன்னல்களை கடந்து நிற்கிறது இனியும் வளரும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக