புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்பு வழக்கில் சூப்பர் தீர்ப்பு
Page 1 of 1 •
புதுடில்லி: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இன்று மதியம் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார். இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையொட்டி குற்றவாளிகள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்றைய தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு சரியான பாடமாக அமையும் என பலரும் மகிழ்ச்சி தெரிவி்த்துள்ளனர்.
மீடியாவுக்கு நன்றி :
பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். நீதிபதிக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். போலீசார் தங்களின் கடமைகளை , சாட்சியங்களை சரியாக செய்துள்ளனர். இது மிக அபூர்வமான வழக்கு. எனவே இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இது நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பத்திரிகைகள் பங்கும் உண்டு. இதற்கும் நன்றி என அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
சமூகம் இந்த குற்றத்தை ஏற்காது:
இந்த தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கண்ணா கூறுகையில்: இது போன்ற ஒரு குற்றத்தை சமூகம் பொறுத்துக்கொள்ளாது. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்த வேளையில் குற்றவாளிகளை சும்மா விட முடியாது. மனித தன்மையற்ற இந்த குற்றத்தை சகித்து கொள்ள முடியாது. இந்த மாணவி இறுதிக்கட்டம் வரை கொடுமைபடுத்தப்பட்டிருக்கிறார். இது போன்ற கொடூர செயல்களை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சட்டத்துறை சும்மா இருக்க முடியாது. இது ஒரு அரிய வழக்குகளில் ஒன்று. என்று நீதிபதி கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான தீர்ப்பு :
இந்த தீர்ப்பிற்கு பின்னர் கோர்ட் வெளியே நிருபர்களிடம் பேசிய குற்றவாளிகள் வக்கீல் ஏ. பி. சிங் கூறுகையில்: இந்த தீர்ப்பு அரசின் பிரஷர் காரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான தீர்ப்பு , மரணத்தண்டனை விதிப்பதால் கற்பழிப்பை கட்டுப்படுத்த முடியாது. நான் எனது மகளுக்கு இப்படி போன்ற முன் செக்ஸ் உறவு வைத்திருந்தால் எரித்து கொன்று விடுவேன். எனது மகளை இப்படி ஒரு ஆண் நண்பருடன் சுற்றி வர அனுமதிக்க மாட்டேன். ஏன் அனைவரும் தங்களின் மகள்களை கட்டுப்படுத்த தவறுகின்றனர்? என்றார்.
குடும்பத்திற்கு நியாயம் : ஷிண்டே: இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே கூறுகையில்: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் , அவரது குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைத்துள்ளது, இந்த குற்றவாளிகளை நீதி தேவதை கண்டித்துள்ளார். நீதித்துறைக்கு யாரும் பிரஷர் கொடுக்க முடியாது. ஐகோர்ட்டில் அப்பீல் செய்தாலும் நாங்கள் விரைந்து செயல்பட்டு தண்டனையை விரைவில் நிறைவேற்றுவோம். வர்மா கமிட்டி மூலம் கற்பழிப்பு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய சட்டம் கொண்டு வர அரசு கடும் முயற்சி செய்தது. வழக்கில் போலீசார் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நம்பிக்கை வீண் போகவில்லை : தாயார்; நீதித்துறையின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என்று மாணவியின் தாயார் கண்ணீர் விட்டபடி கூறினார். உள்துறை செயலர் ஆர்.பி.,சிங் இந்த தீர்ப்பு கிடைக்க வழி செய்த பாடுபட்ட போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பா.ஜ., தலைவர் சுஷ்மாசுவராஜ் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
முழு திருப்தி: மாணவியின் தந்தை :
இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து நான் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என உயிரிழந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில்; இந்த வழக்கில் போலீசாரும், நீதித்துறையும் தனது கடமையை சரியாக செய்துள்ளது என்றார்.
இந்த வழக்கில் கடந்த 7 மாதத்தில் மொத்தம் 117 முறை நீதிபதி அமர்ந்து விசாரணை நடத்தினார். 85 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகவும், 17 பேர் எதிர் தரப்பு சாட்சிகளாகவும் விசாரிக்கப்பட்டனர். இதில் ராமன்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். சிறுவனாக கருதப்பட்ட ஒருவருக்கு கடந்த 31ம் தேதி 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டது எனவும், இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் பல மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர், மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 16 ம் தேதி டில்லி மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் ஒரு பஸ்சில் ஏறினர். இந்த பஸ்ஸில் பெண் மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்தி பஸ் டிரைவர் மற்றும் சக நண்பர்கள் மொத்தம் 6 பேர் சேர்ந்து இந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர். காலையில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் டில்லியில் வெகுண்டெழுந்தனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடனே வழங்க வேண்டும் என்றும் போராட்டக்குழுவினர் பிரதமர், ஜனாதிபதி மாளிகை, சோனியா வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டனர் . நாடு முழுவதும் பல இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது.
தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி டிசம்பர் மாதம் 21 ம் தேதி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி கடந்த டிச. 29 ல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய மைனர் ஒருவரும் அடங்குவர். அனைவர் கவனத்தையும் ஈர்த்ததால் இந்த வழக்கு வேகமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கென விரைவு கோர்ட் அமைக்கப்பட்டது . 6 பேரில் ராமன்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மைனர் மீதான குற்றம் தனியாக சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சிறுவனுக்கு சட்டத்தின்படி அதிகப்பட்ச தண்டனை 3 ஆண்டு சிறை வழங்கப்பட்டது. இன்று குற்றவாளிகள் முகேஷ்சிங், தினேஷ்சர்மா, அட்சய் தாக்கூர், பவன்குப்தா ஆகியோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
9 மாதங்கள் : 130 வாய்தா:
இந்த வழக்கு நடந்து முடிய 9 மாதங்கள் ஆகியுள்ளன. விரைவு கோர்ட்டில் 7 மாதம் தொடர்ந்து நடந்த வழக்கில் இது வரை 130 வாய்தாக்கள் தள்ளி போடப்பட்டுள்ளன. கடத்தி கற்பழித்தல், கொலை, கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்குதல், சாட்சியங்களை மறைத்தல், கிரிமினல் சதி தீட்டுதல், உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டம் 364 ( கடத்தி கற்பழித்தல்), 302 ( கொலை ) , 307 ( கொலை முயற்சி) , 376 (2) ( கூட்டாக கற்பழித்தல் ) , 365, 394, 395, 397, 120 உள்ளிட்ட 13 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டுள்ளன.
இது போன்று யாருக்கும் நேரக்கூடாது : மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த அவரது ஆண் நண்பர் அவிந்த்ரா பாண்டே இன்று ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: நாங்கள் இருவரும் வார இறுதி நாளில் இந்த இடத்திற்கு வருவோம். வந்து திரும்பும் போது வந்த ஒரு பஸ்சில் இருந்தவர்கள் எங்கே போக வேண்டும், ஏறுங்கள் என்றனர். சரி என்று ஏறினோம். சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் மாணவியையும், என்னையும் தாக்கினர். எனது முகத்தில் ஓங்கி குத்தினர். இதில் எனக்கு ரத்தம் வடிந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. வெளியே யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. எனது கண்ணாடியை உடைத்து கீழே தள்ளிவிட்டனர். பஸ் வேகமாக ஓடிக்கொண்டிருந்ததால், அதில் இருந்து நாங்கள் இருவரும் சீழே குதிக்க முயன்றோம். அதற்குள் எல்லாம் முடிநதுவிட்டது.அந்த சம்பவத்தினை என்னால் இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். எனக்கும் நினைவு அலை இல்லாமல் தான் இருந்தது. டாக்டர்கள் 4 மணி நேரம் கழித்துதான் வந்தனர். தற்போது டில்லியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்றும் உள்ளது . இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார் சோகத்துடன்.
தினமலர்
மீடியாவுக்கு நன்றி :
பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். நீதிபதிக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். போலீசார் தங்களின் கடமைகளை , சாட்சியங்களை சரியாக செய்துள்ளனர். இது மிக அபூர்வமான வழக்கு. எனவே இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இது நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பத்திரிகைகள் பங்கும் உண்டு. இதற்கும் நன்றி என அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
சமூகம் இந்த குற்றத்தை ஏற்காது:
இந்த தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கண்ணா கூறுகையில்: இது போன்ற ஒரு குற்றத்தை சமூகம் பொறுத்துக்கொள்ளாது. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்த வேளையில் குற்றவாளிகளை சும்மா விட முடியாது. மனித தன்மையற்ற இந்த குற்றத்தை சகித்து கொள்ள முடியாது. இந்த மாணவி இறுதிக்கட்டம் வரை கொடுமைபடுத்தப்பட்டிருக்கிறார். இது போன்ற கொடூர செயல்களை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சட்டத்துறை சும்மா இருக்க முடியாது. இது ஒரு அரிய வழக்குகளில் ஒன்று. என்று நீதிபதி கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான தீர்ப்பு :
இந்த தீர்ப்பிற்கு பின்னர் கோர்ட் வெளியே நிருபர்களிடம் பேசிய குற்றவாளிகள் வக்கீல் ஏ. பி. சிங் கூறுகையில்: இந்த தீர்ப்பு அரசின் பிரஷர் காரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான தீர்ப்பு , மரணத்தண்டனை விதிப்பதால் கற்பழிப்பை கட்டுப்படுத்த முடியாது. நான் எனது மகளுக்கு இப்படி போன்ற முன் செக்ஸ் உறவு வைத்திருந்தால் எரித்து கொன்று விடுவேன். எனது மகளை இப்படி ஒரு ஆண் நண்பருடன் சுற்றி வர அனுமதிக்க மாட்டேன். ஏன் அனைவரும் தங்களின் மகள்களை கட்டுப்படுத்த தவறுகின்றனர்? என்றார்.
குடும்பத்திற்கு நியாயம் : ஷிண்டே: இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே கூறுகையில்: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் , அவரது குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைத்துள்ளது, இந்த குற்றவாளிகளை நீதி தேவதை கண்டித்துள்ளார். நீதித்துறைக்கு யாரும் பிரஷர் கொடுக்க முடியாது. ஐகோர்ட்டில் அப்பீல் செய்தாலும் நாங்கள் விரைந்து செயல்பட்டு தண்டனையை விரைவில் நிறைவேற்றுவோம். வர்மா கமிட்டி மூலம் கற்பழிப்பு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய சட்டம் கொண்டு வர அரசு கடும் முயற்சி செய்தது. வழக்கில் போலீசார் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நம்பிக்கை வீண் போகவில்லை : தாயார்; நீதித்துறையின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என்று மாணவியின் தாயார் கண்ணீர் விட்டபடி கூறினார். உள்துறை செயலர் ஆர்.பி.,சிங் இந்த தீர்ப்பு கிடைக்க வழி செய்த பாடுபட்ட போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பா.ஜ., தலைவர் சுஷ்மாசுவராஜ் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
முழு திருப்தி: மாணவியின் தந்தை :
இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து நான் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என உயிரிழந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில்; இந்த வழக்கில் போலீசாரும், நீதித்துறையும் தனது கடமையை சரியாக செய்துள்ளது என்றார்.
இந்த வழக்கில் கடந்த 7 மாதத்தில் மொத்தம் 117 முறை நீதிபதி அமர்ந்து விசாரணை நடத்தினார். 85 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகவும், 17 பேர் எதிர் தரப்பு சாட்சிகளாகவும் விசாரிக்கப்பட்டனர். இதில் ராமன்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். சிறுவனாக கருதப்பட்ட ஒருவருக்கு கடந்த 31ம் தேதி 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டது எனவும், இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் பல மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர், மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 16 ம் தேதி டில்லி மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் ஒரு பஸ்சில் ஏறினர். இந்த பஸ்ஸில் பெண் மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்தி பஸ் டிரைவர் மற்றும் சக நண்பர்கள் மொத்தம் 6 பேர் சேர்ந்து இந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர். காலையில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் டில்லியில் வெகுண்டெழுந்தனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடனே வழங்க வேண்டும் என்றும் போராட்டக்குழுவினர் பிரதமர், ஜனாதிபதி மாளிகை, சோனியா வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டனர் . நாடு முழுவதும் பல இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது.
தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி டிசம்பர் மாதம் 21 ம் தேதி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி கடந்த டிச. 29 ல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய மைனர் ஒருவரும் அடங்குவர். அனைவர் கவனத்தையும் ஈர்த்ததால் இந்த வழக்கு வேகமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கென விரைவு கோர்ட் அமைக்கப்பட்டது . 6 பேரில் ராமன்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மைனர் மீதான குற்றம் தனியாக சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சிறுவனுக்கு சட்டத்தின்படி அதிகப்பட்ச தண்டனை 3 ஆண்டு சிறை வழங்கப்பட்டது. இன்று குற்றவாளிகள் முகேஷ்சிங், தினேஷ்சர்மா, அட்சய் தாக்கூர், பவன்குப்தா ஆகியோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
9 மாதங்கள் : 130 வாய்தா:
இந்த வழக்கு நடந்து முடிய 9 மாதங்கள் ஆகியுள்ளன. விரைவு கோர்ட்டில் 7 மாதம் தொடர்ந்து நடந்த வழக்கில் இது வரை 130 வாய்தாக்கள் தள்ளி போடப்பட்டுள்ளன. கடத்தி கற்பழித்தல், கொலை, கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்குதல், சாட்சியங்களை மறைத்தல், கிரிமினல் சதி தீட்டுதல், உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டம் 364 ( கடத்தி கற்பழித்தல்), 302 ( கொலை ) , 307 ( கொலை முயற்சி) , 376 (2) ( கூட்டாக கற்பழித்தல் ) , 365, 394, 395, 397, 120 உள்ளிட்ட 13 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டுள்ளன.
இது போன்று யாருக்கும் நேரக்கூடாது : மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த அவரது ஆண் நண்பர் அவிந்த்ரா பாண்டே இன்று ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: நாங்கள் இருவரும் வார இறுதி நாளில் இந்த இடத்திற்கு வருவோம். வந்து திரும்பும் போது வந்த ஒரு பஸ்சில் இருந்தவர்கள் எங்கே போக வேண்டும், ஏறுங்கள் என்றனர். சரி என்று ஏறினோம். சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் மாணவியையும், என்னையும் தாக்கினர். எனது முகத்தில் ஓங்கி குத்தினர். இதில் எனக்கு ரத்தம் வடிந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. வெளியே யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. எனது கண்ணாடியை உடைத்து கீழே தள்ளிவிட்டனர். பஸ் வேகமாக ஓடிக்கொண்டிருந்ததால், அதில் இருந்து நாங்கள் இருவரும் சீழே குதிக்க முயன்றோம். அதற்குள் எல்லாம் முடிநதுவிட்டது.அந்த சம்பவத்தினை என்னால் இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். எனக்கும் நினைவு அலை இல்லாமல் தான் இருந்தது. டாக்டர்கள் 4 மணி நேரம் கழித்துதான் வந்தனர். தற்போது டில்லியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்றும் உள்ளது . இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார் சோகத்துடன்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டால் எரிப்பானாம். கற்பழித்துக் கொலை செய்பவனுக்காக வாதாடுவானான். இவனையெல்லாம்தான் முதலில் எரித்துக் கொல்லனும்.சிவா wrote:
அரசியல் ரீதியான தீர்ப்பு :
இந்த தீர்ப்பிற்கு பின்னர் கோர்ட் வெளியே நிருபர்களிடம் பேசிய குற்றவாளிகள் வக்கீல் ஏ. பி. சிங் கூறுகையில்: இந்த தீர்ப்பு அரசின் பிரஷர் காரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான தீர்ப்பு , மரணத்தண்டனை விதிப்பதால் கற்பழிப்பை கட்டுப்படுத்த முடியாது. நான் எனது மகளுக்கு இப்படி போன்ற முன் செக்ஸ் உறவு வைத்திருந்தால் எரித்து கொன்று விடுவேன். எனது மகளை இப்படி ஒரு ஆண் நண்பருடன் சுற்றி வர அனுமதிக்க மாட்டேன். ஏன் அனைவரும் தங்களின் மகள்களை கட்டுப்படுத்த தவறுகின்றனர்? என்றார்.
தினமலர்
கற்பழிப்புக்கு இப்படி தண்டனை கிடைக்கும் என்று அச்சுறுத்தும் வகையில் முன் மாதிரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணா அவர்களுக்கு பெண்ணினம் சார்பில் நன்றிகள்.
நல்ல தீர்ப்பு
திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டால் எரிப்பானாம். கற்பழித்துக் கொலை செய்பவனுக்காக வாதாடுவானான். இவனையெல்லாம்தான் முதலில் எரித்துக் கொல்லனும்.Aathira wrote:தினமலர்
கற்பழிப்புக்கு இப்படி தண்டனை கிடைக்கும் என்று அச்சுறுத்தும் வகையில் முன் மாதிரியான தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணா அவர்களுக்கு பெண்ணினம் சார்பில் நன்றிகள்.[/quote]உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கீறேன் அக்கா ...
இது போல வக்கீல்கள்,அப்புறம் மனித உரிமை கழகம் என்ற பெயரில் இருக்கும் சில அதிமேதவிகள் இவர்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறுவன் என்ற முறையில் தப்பித்த ஒருவனை 18 வயது கடந்தவுடன் அடுத்த வருடம் மீண்டும் வழக்கு தொடுத்து - இதே தண்டனை கொடுக்கணும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இனி இந்த கேஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும் இழுக்கடித்து இழுக்கடித்து மக்களை மறக்கடித்து விடுவார்கள்.
இந்த மாதிரி செயலில் ஈடுபடும் மிருகத்தை எல்லாம் உடனுக்குடன் தீர்ப்பு கொடுத்து தூக்கில் ஏற்றினால் தான்
சரியான தண்டனையாக இருக்கும்.
இந்த மாதிரி செயலில் ஈடுபடும் மிருகத்தை எல்லாம் உடனுக்குடன் தீர்ப்பு கொடுத்து தூக்கில் ஏற்றினால் தான்
சரியான தண்டனையாக இருக்கும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|