புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:08 pm

தந்தானே தானனன்னே! - நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார் ஆசிரியர் தவமணி.

அறிவியல் என்றாலே அரை கிலோமீட்டர் தூரத்துக்கு தலை தெறிக்க ஓடுவதுதான் மாணவர்களின் வழக்கம். புரியாத பெயர்களையும், அறியாத சூத்திரங்களையும் கொண்ட அறிவியல் பாடம் அகப்படாமல் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் பலர். ஆனால் கொட்டாம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கோ அறிவியல் பாடம் என்றாலே தேன் போல இனிக்கிறது. காரணத்தை அறிந்து கொள்வதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றோம்.

தந்தானே தானனன்னே" என்கிற நாட்டுப்புறப் பாடல் பள்ளியிலிருந்து ஒலித்ததும், ஏதோ கலை நிகழ்ச்சிதான் நடக்கிறது என்று நினைத்து நாம் உள்ளே சென்றுபார்க்க, விழா நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பாடல் ஒலி வந்த வகுப்பறையை நோக்கி நடந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் அமர்ந்திருக்க... அறிவியல் ஆசிரியர் தவமணி நாட்டுப்புறப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். பாடவேளையில் பாடல் எதற்கு? எனக் குழம்பிப்போய் உற்றுக் கவனித்தால் அது பாடல் அல்ல, பாடம் என்பது புரிந்தது!

தனிம வரிசை அட்டவணையை அழகான நாட்டுப்புறப் பாடலில் அவர் பாட, மாணவிகளும் திரும்பப் பாடுகின்றனர். மாணவி ஒருவரிடம் அவர் கேள்வி கேட்க, நொடி நேரமும் தாமதிக்காமல் வரிசையாக வந்து விழுகிறது 20 வேதியியல் தனிமங்களின் பெயர்கள். பாடத்தைப் பாடலாக்கிய  ஆசிரியர் தவமணி, வகுப்பு முடிந்ததும் தன்னுடைய புதிய முயற்சி குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

என்னுடைய சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகிலுள்ள நாகப்பன் செவல்பட்டி என்கிற சிற்றூர். பள்ளிப் படிப்பு முழுவதும் அரசு பள்ளிகளில்தான். எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வேன். பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் ஆசிரியர் பணியிலிருந்த ஆர்வம் காரணமாக 1989-இல் பி.எட். படித்தேன். படிக்கும்போதே நாட்டுப்புற இசையில் ஆர்வம் இருந்தது. நண்பர்கள் தொடர்ந்து  ஊக்கப்படுத்த, அகில இந்திய வானொலியில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடத் தொடங்கினேன். பல ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தாலும், வானொலியில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்தேன்.

இந்தச் சூழலில் 1996-ஆம் ஆண்டு பெற்றோர்-ஆசிரியர் கழக ஆசிரியராக மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு பள்ளியில் வேலைக்குச்  சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் அறிவியல் பாடம் எடுக்கும்போது மாணவர்கள் ஆர்வமின்றி இருந்ததைப்  பார்த்தேன். எனவே நாட்டுப்புற பாடல் மூலம் அறிவியல் பாடத்தை கற்றுக்  கொடுக்கலாம் என்று ஒரு மாற்று முயற்சியில் இறங்கினேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதையே இப்போதுவரை தொடந்து பின்பற்றி வருகிறேன்" என்கிறார் ஆசிரியர் தவமணி.

அறிவியல் பாடங்களில் கடினமான பகுதியாகக் கருதப்படும் தனிம வரிசை அட்டவணை, காரங்கள்-அமிலங்கள், அணுவியல், வேதியியல் சமன்பாடுகள் போன்ற பகுதிகளை எளிமையான நாட்டுப்புற மெட்டில் பாட்டாகப் பாடி அசத்துகிறார் இவர். திரைப்படங்களில் வரும் நாட்டுப்புறப் பாடல், பக்திப் பாடல் மெட்டுக்களும் இந்த வரிசையில் சேரும்.  அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் ஆங்கிலம், கணித சூத்திரங்கள் என அனைத்தையும்  நாட்டுப்புற மெட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

எந்தத் தலைப்பில் பாடல் எழுதச் சொன்னாலும் உடனே எழுதி விடுவேன்.  மாணவர்கள் கடினம் என்று நினைக்கும் பாடங்கள் எவை என்பதை அவர்களிடமே கேட்டு அதற்கேற்ப பாடல் எழுதுவேன். முதலில் அறிவியல் பாடங்களுக்கு மெட்டமைத்து வந்தேன். மாணவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்ற பாடங்களிலும் பாடல்கள் தயார் செய்தேன். பாடல்கள் மூலம் பாடம் படிப்பதால் மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் எளிதாகவும், விரைவாகவும், குழப்பமின்றியும் பாடம் படிக்கின்றனர். இதனால் தொடர்ந்து என் பாடத்தில் 100 சதவீதத் தேர்ச்சியும் கிடைக்கிறது. சக ஆசிரியர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமியும் என்னை ஊக்கப்படுத்துவதோடு தேவையான ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனர்" என்கிறார்.

2005-இல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி பாதித்த கிராமம் ஒன்றில் இடைநிலை பட்டதாரி ஆசிரியராக தவமணி பணியாற்றிக் கொண்டிருந்தபோது,  சுனாமியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாயிருந்த மாணவர்கள் மத்தியில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார். சுனாமி பாதித்த அதிர்ச்சியிலிருந்து மாணவர்கள் மீளவில்லை. ஆர்வமின்றி ஏதோ கடமைக்கு பள்ளிக்கு வந்தோம் என்றுதான் அமர்ந்திருந்தனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் மீன் பிடிக்கச்  சென்றுவிடுவர். எனவே மாணவர்களை உற்சாகப்படுத்த நாட்டுப்புற மெட்டில் பாடல் நடத்தினேன். மாணவர்களுக்கும் இந்த முறை பிடித்துப்போக, பாடம் நடத்துவதை ஆர்வத்தோடு கவனித்தனர். மீன் பிடிக்கச்சென்ற மற்ற மாணவர்களிடம் நான் பாடம் நடத்தும் விதம் குறித்து எடுத்துக்கூறி அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதனால் முழு வருகை கிடைத்ததோடு தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது" என்று தனது அனுபவத்தை விவரித்தார் தவமணி.

அறிவொளி இயக்கம், எய்ட்ஸ் விழிப்புணர்வு எனப் பல நிகழ்ச்சிகளை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நிகழ்த்தியுள்ளார் இவர். பொதுவாக கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் மாணவர்களும் கவனத்தோடு படிப்பதில்லை. எனவே, என் வகுப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனி அக்கறை எடுத்துக்கொள்கிறேன். நானும் கிராமப்புறப் பள்ளியில் படித்ததால் அவர்களின் பிரச்சினைகள் குறித்து நன்றாகத் தெரியும். அதற்கேற்ப அவர்களை அன்புடன் கையாளுவேன். கிராமப்புற மாணவர்களிடையே போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், பெரும்பாலான போட்டித்தேர்வு வினாக்கள் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. எனவே போட்டித் தேர்வு வினாக்களை வகுப்பறையில் வாசிக்கச் செய்து, ‘நீ இப்போது படிக்கும் பாடங்கள்தான் உன் வாழ்வை உயர்த்தப் போகிறது’ எனக் கூறி பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பேன்" என்கிறார் தவமணி.

அரசாங்க வேலைக்கு நான் 15 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால் தற்போது அதிக அளவில், அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை இளைஞர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். போட்டித் தேர்வுக்குப் பயன்படும் பள்ளிப் பாடங்களையெல்லாம் நாட்டுப்புறப் பாடலாக்கி கேசட் வடிவில் வெளியிட வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். இது போட்டித் தேர்வுக்குத்  தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். என்னை அணுகினால் போட்டித் தேர்வுகள் குறித்த வகுப்புகளை இலவசமாக நடத்தவும் தயாராக இருக்கிறேன்" என்கிறார் தவமணி ஆர்வத்துடன்.
நன்றி - எம்.செந்தில்குமார் - புதிய தலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக