ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணைக் கவரும் மரத்தரைகள் !

2 posters

Go down

கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Empty கண்ணைக் கவரும் மரத்தரைகள் !

Post by krishnaamma Tue Sep 10, 2013 9:11 pm

கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! 50ci

வீட்டின் வெளிப் புறத்தை விதவிதமான வண்ணங்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தினை பெரிதும் ஈர்ப்பவை உள் அலங்காரங்கள். எளிமையான வீட்டை பிரம்மிக்கத்தக்க வகையில் மாற்றி அமைப்பதும் உள்அலங்காரங்களே. மின் விளக்குகள், கலை ஓவியங்கள், சிற்பங்கள், வண்ண மயமான கண்ணாடிகள், சோபா செட்டுகள் என பலவகையான அலங்காரப் பொருட்களை கொண்டு அலங்கரித்தாலும் கட்டுமான அழகினை பிரதிபலிப்பவை தரைகள். இதனால் வீட்டின் தரைப்பகுதிகளை மார்பிள்ஸ், வண்ணமயமான டைல்ஸ், ஸ்பெஷல் மோல்டிங்ஸ், கற்கள் அலங்காரம் என பலவிதமான தரைப்பதிப்புகளை கொண்டு அழகூட்டுவர். இந்த வகையில் தரைகளை அழகுபடுத்த மரங்களை தரையில் பதிக்கும் முறை தற்போது பிரபலமடைந்து பரவி வருகின்றன. மரவேலைப்பாடுகள் கலந்த அலங்காரங்கள் நடைமுறையில் ஒருபக்கம் இருக்க, 2013–ம் ஆண்டின் சிறந்த தரைப்பதிப்பு முறையாகவும் மரத்தரை பதிப்புகள் மாறியுள்ளன.

மரத்தரை பதிப்பு

மரங்கள், தனித்தன்மை கொண்ட புதுபிக்கத்தக்கப் பொருள். இதனால் மரங்களை தரை பதிப்புகளாக பதிப்பதினால் வீட்டில் இயற்கை சூழலை தவழ விடுவதோடு வீட்டின் உள்தோற்றத்தை ஆடம்பரமிக்கதாக மாற்றி அழகையும் அள்ளி தருகிறது.

தரை பதிப்புகளாக பதிக்கப்படும் மரப்பலகைகள் தரையின் மேற்பரப்பின் உள்ள பொருட்களை தாங்கும் உறுதியை பெற்றிருக்க வேண்டும். ஆகையால் குறிப்பிட்ட கடின தன்மையை தன்னுள் கொண்ட மரவகைகளை மட்டுமே தரை பதிப்புகளாக பயன்படுத்த முடியும்.

மாறுபட்ட வண்ணங்கள்

அந்தவகையில் உலகம் முழுவதும் பலவகையான மரங்கள் காணப்பட்டாலும் 100–க்கும் குறைவான மரவகைகளே தரைப்பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் படாக், கருவேலி, இயற்கை மூங்கில், ரோஸ்வுட், மாஹொகானி, பிரஸிலியன் வகை தேக்கு போன்றவை அதிகம் விரும்பப்படும் மரவகைகள்.

இத்தகைய மரங்களின் பலகைகள் பலவகைப்பட்ட வண்ணங்கள், வெவ்வேறு வகைகள் மற்றும் கடின தன்மைகளிலும் (ஜன்கா) கிடைக்கின்றன. அவை மரப்பலகையாக செதுக்கப்படும் தன்மையை பொருத்தே மாறுபட்ட வண்ணங்களும், தோற்றமைப்பும், கடின தன்மையும் கிடைக்கும்.

அழகை அதிகரிக்கும்

இவற்றில் வீட்டின் வடிவமைப்பிற்கு ஏற்ப சதுரம், வட்டம், நீள் கோடுகள் போன்ற வடிவங்களிலும், சிவப்பு, வெள்ளை, கருப்பு, காவி என பல வண்ணங்களில் கிடைக்கும் மரப்பலகைகளை அவற்றின் கடின தன்மையுடன் ஒப்பிட்டு பொருளாதாரத்துக்கு ஏற்ற ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி தரையாக பதிப்பது வீட்டின் அழகினை பன் மடங்காக பெருக செய்யும்.

மேலும் ஒரே வண்ணத்தை தேர்ந்தெடுக்காமல் இரு வேறு நிற தரை பதிப்பு பலகைகளை மாறி மாறி பதித்து வீட்டை அலங்கரிப்பது கண்களை கவர்ந்திழுக்கும். நேர்த்தியாக வெட்டப்பட்ட மரப்பலகையின் மேற்பரப்பில் முலாம்கள் பூசுவதினால் மரப்பலகையின் கடின தன்மை அதிகரிப்பதுடன் வெப்பம், ஈரபதம் போன்ற காலநிலைகளையும் தாங்கும் திறனையும் பெறும். இதுதவிர மரப்பலகைகளுக்கு கூடுதல் பொலிவையும் சேர்க்கும்.

பதிக்கும் முறை

அதற்கு ஏற்றது போல் மெழுகு, ஆயில் வார்னிஷ், பிளாஸ்டிக் கோட்டிங், கெமிக்கல் கோட்டிங் என பலவகையான பூச்சு வேலைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு வித்தியாசமான வண்ணங்களில் கிடைக்கும் மரப் பலகைகளை வீட்டின் தேவைக்கேற்றார் போல வாங்கி அவைகளை எளிதில் தரையில் பதித்து வீட்டிற்கு அழகினை சேர்த்திடலாம்.

மரங்களை தரையில் பதிக்க கலவை, சிமெண்ட், மணல் போன்ற பொருட்கள் தேவைப்படுவதில்லை. சமதளமாக இல்லாத தரைகளை மெல்லிய பைபரிங் ரப்பர் பொருட்களை கொண்டு நிரப்பி சமப்படுத்தப்படுகிறது. பின்னர் அந்த தரைகளில் மரத்தரை பதிப்புகள் இறுக்கமாக பதிக்கப்படுகிறது. 20–க்கு 20 அளவு உள்ள அறையின் தரையில் பதிக்க அதிக பட்சமாக அரை நாள் மட்டுமே ஆகும். வேலைகள் முடிவடைந்த உடனே மரத்தரைகளில் அழுத்தம் தரும்படி நடக்கலாம். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட மரத்தரை பதிப்புகள் வீட்டின் அழகை மேம்படுத்தும்.

நன்றி : தினத்தந்தி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்ணைக் கவரும் மரத்தரைகள் ! Empty Re: கண்ணைக் கவரும் மரத்தரைகள் !

Post by யினியவன் Tue Sep 10, 2013 9:34 pm

நல்லாருக்கும்மா மரத்தரை.

மேலே மரமண்டை கீழே மரத்தரை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum