புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
56 Posts - 43%
heezulia
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
jairam
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
Poomagi
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
1 Post - 1%
சிவா
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
16 Posts - 4%
prajai
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
7 Posts - 2%
Jenila
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
4 Posts - 1%
jairam
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
Rutu
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகள் உண்டா?


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 4:14 pm

மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா?

இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

வெப்துனியா



 ஆவிகள் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 06, 2013 4:23 pm

மாயாவி உண்டா?அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 4:26 pm

காவிகளில் நடமாடும் பல பாவிகள் உண்டு தெரியும் , இந்த ஆவிகள் தெரியவில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 10:02 pm

ம.இதுவும் நான் முன்பு போட்டிருக்கேன் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 8:36 am

ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்று பேசுவதற்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

ஒருமுறை என் நண்பர்கள் இருவர் ஆவிகள் /பேய்கள் உண்டா என்ற விவாதத்தில் அதை சோதிக்க முடிவெடுத்து பொன்மலை அருகே உள்ள சுடுகாட்டில் இரவு சரியாக 11.30 மணிக்கு சென்றனர். ஒரு நண்பர் கொஞ்ச தூரத்தில் நிற்க மற்றொருவர் கையில் மல்லிகை பூவுடன் சுடுகாட்டு பக்கம் போயிறுக்கிறார். மல்லிகை பூவை கையில் ஏந்தி கொண்டு 10 நிமிடம் நின்றிருந்த நண்பரை சிறிது தொலைவில் நின்றுகொண்டிருந்த நண்பர் என்ன பாஸ் எந்த ஆவி,பேயி எதையும் காணோம் என்று சொல்லிமுடிப்பதற்குள் ,பூ வைத்திருந்த நண்பர் பக்கம் ஒரு வெள்ளை உருவம் அருகில் நடந்து வந்ததாம். தொலைவில் நின்ற நண்பரின் கண்களுக்கு மட்டும் தெரிந்த அவ்வுருவத்தை கண்டு பாஸ் உங்க பக்கம் ஏதோ வெள்ளை உருவம் வருது வந்துடுங்க பிளீஸ் என்று கத்த மல்லிகை பூ நண்பரோ அதை தானும் பார்க்கும் ஆர்வத்தில் எங்கட எதையும் காணோம் என்று சுத்தும் முத்தும் பார்த்து கொண்டிருக்க விழுந்து ஒரு அடி கன்னத்தில்.
அவ்வளவு தான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர்கள் வீடு வந்து திரும்பிப்பார்த்தாக சொன்னார் .

நானும் உங்களை போலத்தான் நல்ல கதை விடுறாங்க என்று அவர்களை கேலி செய்தேன். அவர்கள் வேண்டுமென்றால் நீ வாவே திரும்ப ஒருமுறை நேரடி சோதனை செய்வோம் என்று சொல்ல .. போங்கட இவனுங்களா என்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து.

யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 07, 2013 8:43 am

எதுக்குங்க இந்த "பாய்சன் டெஸ்ட்" லாம் ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 8:57 am

கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த சோதனை ரொம்ப எளிது நண்பரே புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 8:59 am

யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
நான் தயார் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 9:05 am

பூவன் wrote:
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
நான் தயார் ...
பூவுடன் எப்போதும் கோவையில் கொய்யாபழம் தேடும் உங்களை கண்டால் பேய்தான் ஓட்டம் பிடிக்கும் பாஸ்.

ஒரு பேயை சுடுகாட்டை விட்டு விரட்டின பாவம் அது எங்கு போகும் புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 9:07 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யாரவது தயாரா திருச்சி பொன்மலை சுடுகாட்டுக்கு வருகை தர புன்னகை
நான் தயார்  ...
பூவுடன் எப்போதும் கோவையில் கொய்யாபழம் தேடும் உங்களை கண்டால் பேய்தான் ஓட்டம் பிடிக்கும் பாஸ்.

ஒரு பேயை சுடுகாட்டை விட்டு விரட்டின பாவம் அது எங்கு போகும் புன்னகைபுன்னகை
நீங்கள்  தானே கேட்டீர்கள்  யார்  வர  தயார்  என்று  . நான்  பேயை  பார்க்க  ரொம்ப நாள்  ஆசை ,  அதான்  , நிறைய  கொள்ளிவாய்  பிசாசு  பார்த்துள்ளேன்  பெய்  தான் பார்க்க  முடியல  அதான்  நீங்க  கூட்டி  போங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக