Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
4 posters
Page 1 of 1
தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
ஏராளமான முறைகேடு:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சோதனையில் ஆடிட்டர்கள்:
ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.
"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':
ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
ஏராளமான முறைகேடு:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சோதனையில் ஆடிட்டர்கள்:
ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.
"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':
ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
லாபத்தில பங்கு தரலாமே (ஓ அரசு நிறுவனமோ)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
உண்மைதான்ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சம்பளமும் மாதாமாதம் சம்பாரிக்காதவர்கள்,
சமானியர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் தங்களின் வாழ்க்கையை ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
ஒரு டாஸ்மாக் ஊழியனின் ஒரு நாள் வருமானம் குறைந்தபட்சம் 1000 ரூபாய்கள். இந்த சம்பளம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
செத்தானுங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|