ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

+2
யினியவன்
ராஜு சரவணன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Fri Aug 30, 2013 12:17 am

[You must be registered and logged in to see this image.]
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.
மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து இது தான் அம்மொழி சொல்லுக்கான தமிழ் சொல் என்று கூறிவருகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து புதிய தமிழ் சொற்களை உருவாக்கிவருகிறோம். 
உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தமிழ் என சொல்லிக்கொண்டு இன்று பலமொழிகளில் இருந்தது சொற்களை கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலத்தை நாம் பின்தொடர்கிறோம். அதை அடிப்படையாக கொண்டு சொல்லாக்கம் செய்கிறோம். எவ்வளவு ஒரு இழிவான நிலைக்கு தமிழை கொண்டுவந்து விட்டோம். இதற்கு பெயர் தான் சொல்லாக்கமா? இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே, நான் இங்கு சாடுவது கீழ்காணும் சொற்களை போல் சொல்லாக்கம் செய்யும் நமது அறிஞர்களை தான்.
Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்  
இப்படி பல சொற்களை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் இதை சொற்கொலை என்று கூட சொன்னால் மிகையாகாது. நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு. இவற்றை நாம் கணக்கிற்கு வேண்டுமானால் இத்தனை சொற்கள் உருவாக்கப்பட்டது என எழுதி வைத்துகொள்ளலாம், பேச்சு வழக்கில் பயன்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆங்கில சொற்களுக்கு இணையாக தமிழ் சொல் என மேலே காணும்படியான முறையில் புதிய சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவதும், பட்டி மன்றங்கள் நடத்துவதும், மக்களுக்கு மொழி பற்று இல்லை என்று சாடுவதும், உணர்சிவசமாய் பேசுவதும் கேட்பவருக்கு நகைப்புக்குரிய விசயமாக தான் தென்படுமே ஒழிய எவ்வித மாற்றங்களும் தராது. இதுபோன்று தான் நாம் இன்று சொற்களை மன்னிக்கவும் சொற்தொடர்களை உருவாக்கி நமது மொழி சொல்லே இல்லாத வற்றிய மொழி போல் அதன் தொன்மை, புகழ், வளங்களை பாழ்படுத்து வருகிறோம். இன்று ஆங்கிலம் தமிழுக்கு ஆசானமொழியாகி விட்டது.
புகைவண்டி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அதற்கு சொல்லாக்கம் செய்யும் போது உருவாக்கப்படும் சொல் ஒரு வேர்ச்சொல்லாக தான்  உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த அந்த சொல்லை கொண்டு அத்துறை சார்ந்த மற்ற சொற்களை உருவாக்க எதுவாக இருக்கும். அதை விடுத்து புகை விடுவதால் புகை வண்டி என பெயர் வைப்பதும், புகையில் படம் எடுத்ததால் புகைப்படம்  என பெயர் வைப்பதும் எவ்வளவு ஒரு அறிவு தனமான செயல்பாடுகள். இதனால் தான் நாமில் சிலர் புகைவண்டி என்றால் என்ன என்று கேட்டால் என் அப்பன் தான் என சொல்லி நக்கலடிக்க செய்கிறார்கள். 
சரி Photo என்பதற்கு புகைப்படம் என்றே வைத்துகொள்வோம். ஆங்கிலத்தில் Photography என்ற சொல்லை Clipping என்ற சொல்லாக்க விதிப்படி Photo என ஒற்றை சொல்லாகவும், Camera என்ற சொல்லை அதே விதிப்படி Cam என்றும் அழைகின்றனர். இந்த சொல்லுக்கு தமிழில் இரண்டு சொற்கள் அப்படியே சேர்த்து (புகை + படம்) எழுதும் நாம் Photocam என்ற ஒற்றை ஆங்கில சொல்லுக்கு என்ன எழுதுவோம் புகைப்பட ஒளிபதிவு கருவி. இதுபோல் சொற்களை உருவாக்கிக்கொண்டு இந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழறிஞர் சொன்னால் நாம எப்படி பயன்படுத்தமுடியும். இதைசொல்லி முடிப்பதற்குள் விடிந்துவிடும் அல்லவா!. சொல் என்றால் ஒற்றையாக இருக்கவேண்டும், சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது. 

தொடரும்.....

பாகம் -2 க்கு [You must be registered and logged in to see this link.]சுடக்கவும்


Last edited by ராஜு சரவணன் on Sun Sep 08, 2013 12:55 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by யினியவன் Fri Aug 30, 2013 12:27 am

தொடருங்கள் டெக்லஸ் தொடருகிறோம் பதிவை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Fri Aug 30, 2013 12:34 am

நன்றி தல புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by yarlpavanan Fri Aug 30, 2013 5:56 am

தங்கள் பதிவை விரும்புகிறேன்.
தொடருங்கள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Sat Aug 31, 2013 8:28 am

yarlpavanan wrote:தங்கள் பதிவை விரும்புகிறேன்.
தொடருங்கள்.
நன்றி நண்பரே


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜா Sat Aug 31, 2013 10:49 am

சிறப்பான கண்ணோட்டம் ... புன்னகை
நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
தொடருங்கள் டெக்லஸ் ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by பூவன் Sat Aug 31, 2013 12:53 pm

நல்ல பதிவு அண்ணா தொடருங்கள் ...

அப்படியே நிறைய கலைசொற்களையும் அறிய தாருங்கள் ...தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Sun Sep 01, 2013 1:42 pm

ராஜா wrote:சிறப்பான கண்ணோட்டம் ... புன்னகை
நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
தொடருங்கள் டெக்லஸ் ....
 
நன்றி தல புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Sun Sep 01, 2013 1:43 pm

பூவன் wrote:நல்ல பதிவு  அண்ணா  தொடருங்கள் ...

அப்படியே நிறைய  கலைசொற்களையும் அறிய தாருங்கள்  ...தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) 3838410834 
 
நிச்சயம் பூவன் அதுக்கு தானே இந்த பதிவு புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Sun Sep 01, 2013 2:39 pm

Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்  
இவையாவும் சரியான சொற்கள் தானே இதை தவறு என்று சொல்கிறாரே என்று மனதில் பலருக்கு நிச்சயம் கேள்வி எழும். இந்த நினைப்பு தான் தவறு என்று சொல்லவருகிறேன். எத்தனை பேர் இதுபோன்ற பெயர்களை சொல்லி அழைகிறார்கள்/பயன்படுத்துகிறார்கள். சரி என்று சொன்னால் நாமே அதை பேச்சும் போது பயன்படுத்தலாமே, என தயங்குகிறோம்.
காரணம் :-
- யாருமே அதை பயன்படுத்துவதில்லை நான் மட்டும் என பயன்படுத்தனும். 
- இந்த சொற்களை பயன்படுத்தி பேச கூச்சமாய் இருக்கு.
- இந்த சொற்களை சொல்லி பேசினால் யாரும் மதிப்பதில்லை.
- சரியான சொல்லை நியாபகம் வைத்துகொள்ள கஷ்டமாக இருக்கு 
- ஒரு பொருளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொல் கொண்டு அழைகின்றனர், எந்த சொல் சரியான சொல் என தெரியவில்லை (AC - குளிர்பதனம்/ செந்தனப்பு/குளிசாதனம்/குளுரூட்டம்/குளிரூட்டி/பனிக்காற்றுப்பெட்டி) 

மேலே சொன்னதுபோன்ற காரணங்களுக்கு என்ன தான் தீர்வு. அந்தகாலத்தில் தமிழ் கலைசொல்லாக்க பிரச்னை இருந்ததாக தெரியவில்லை ஏனெனில் அப்போதிருந்த சூழ்நிலைகளில் அனைத்து வகையான துறை சார்ந்த கலைசொற்கள் நல்லமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது என்ன புது பிரச்சனையாக பேசுகிறோம் என்ற பல விசயங்களை பின்வரும் பதிவுகளில் அலசுவோம்.


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Empty Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum