ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் சொன்ன கதைகள்

+10
T.N.Balasubramanian
ayyasamy ram
செல்வமூர்த்தி
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
யினியவன்
Muthumohamed
ராஜா
அசுரன்
சிவா
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty முதல்வர் சொன்ன கதைகள்

Post by சிவா Sun Aug 25, 2013 8:13 am


சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:-

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம்.

ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை நிறைய பொற்காசுகளை வழங்கினார் ராஜா. இந்த பொற்காசுகளை வழங்கிவிட்டு ராஜா வெளியே வந்தவுடன் மாடு ஒன்று, அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. இதனால் ராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ராஜாவின் காவலாளிகள் ராஜாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தகவலை அமைச்சருக்கு தெரிவித்த காவலாளிகள் ராஜா இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் அந்த விவசாயி தான் என்றும், அந்த விவசாயியை ராஜா பார்த்ததால் தான் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்றும் எடுத்துக் கூறினர். அமைச்சரும் அந்த விவசாயியை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார்.

மன்னர் அந்த விவசாயிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தனக்கு மரண தண்டனை என்று கேள்விபட்டதும் அந்த மனிதர் சிரித்தார்.

உடனே மன்னர் “இன்று மாலை, உனக்கு மரண தண்டனை. நீ இப்படிச் சிரிக்கிறாயே?” என்று அந்த மனிதரைப் பார்த்து வினவினார்.

அதற்கு அந்த மனிதர் நிதானமாக பதில் கூறினார். “நீங்கள் என்னை பார்த்ததால் உங்களுக்கு தலையில் அடிபட்டுவிட்டது. அப்படிப்பட்ட சனியன் பிடித்த முகம் எனக்கு. என்னை பார்த்ததால் இந்த அளவோடு போய்விட்டது. ஆனால், நான் இன்றைக்கு முதல் தடவையாக உங்கள் முகத்திலே முழித்தேன். அதன் பலன் என்ன? என் உயிரே போகப் போகிறது. இது தான் மன்னராகிய உங்களின் முக லட்சணம்!” என்று கூறினான் அந்த மனிதன்.

இதைக் கேட்ட ராஜாவின் முகம் மாறியது. அந்த மனிதருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். ராஜாவையே எதிர்த்துக் கேட்கக் கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர் பிழைத்தது.
துணிச்சலுடன் ஈடுபாடும் சேர்ந்து விட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

முதலமைச்சர் கூறிய மற்றொரு நீதிக்கதை வருமாறு:-

ஞானியின் இயல்பு:

ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரைத் தேடி சில பேர் சென்றார்கள். “என்ன சுவாமி? எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த ஞானி “நான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

“உங்கள் கொள்கை என்ன?” என்று ஞானியிடம் கேட்டனர்.

“தியானம் செய்வது, பசி எடுத்தால் சாப்பிடுவது. தூக்கம் வந்தால் தூங்குவது. இது தான் என் கொள்கை” என்றார் ஞானி.

இதைக் கேட்டவுடன் அந்த நபர்களுக்கு ஆச்சரியம். “என்ன சுவாமி இப்படி சொல்கிறீர்கள்? உங்கள் செயலில் எந்தத் தனித்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று கேட்டனர்.

“ஆமாம்” என்றார் அந்த ஞானி.

“என்னங்க இது? பசித்தால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது என்பது எல்லோரும் செய்வது தானே?” என்று அந்த நபர்கள் கேட்டனர். இதைக் கேட்டதும் ஞானி சிரித்தார்.

“நீங்கள் சாப்பிடும் போது, உங்கள் மனது சாப்பாட்டில் இருக்காது. நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைத்துக் கொண்டு சாப்பிடுவீர்கள். உங்கள் மனம் அலைபாயும். நான் அப்படி இல்லை. தியானம் செய்யும் போது எனது மனம் தியானத்தில் தான் இருக்கும். சாப்பிடும் போது எனது சிந்தனை சாப்பாட்டில் தான் இருக்கும். அதே போல் தூங்க வேண்டும் என்றால் தூங்குவேன். எதைச் செய்கிறேனோ நான் அதுவாகி விடுவேன். அது தான் என் இயல்பு. இது தான் எனக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு” என்று கூறினார் ஞானி. இதிலிருக்கும் நீதி என்னவென்றால் செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய் விடும் போது அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.

பாவேந்தர் பாரதிதாசனிடம் சென்ற ஒருவர் “கவிதை இயற்றுவது எப்படி?” என்று கேட்டார்.

“கவிதையை இயற்றவெல்லாம் முடியாது. புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லுக்கிட்ட போய் விட வேண்டும். அது சொல்வதை எழுத வேண்டும். அது தான் கவிதை” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அதாவது, புல்லைப் பற்றி பாட வேண்டுமென்றால் புல்லாக மாற வேண்டும். அப்போது தான் கவிதை வரும் என்பது இதன் அர்த்தம். செய்யும் தொழிலே தெய்வம் என்று ஆகிவிட்ட பிறகு எண்ணம், இயக்கம் எல்லாம் அதில் ஒன்றிப் போய்விடும்.

இது போன்ற ஈடுபாட்டினையும் துணிச்சலையும் நீங்கள் உங்கள் பணிகளில் செலுத்தினால் குற்றங்கள் மேலும் குறைக்கப்படும். சட்டம்-ஒழுங்கு இன்னும் சிறப்போடு நிலைநாட்டப்படும். இந்தச் சமூகம் உங்களைப் பாராட்டும். மக்கள் ஆனந்தப்படுவர். நானும் தொடர்ந்து, பெருமிதம் அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


 முதல்வர் சொன்ன கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by அசுரன் Sun Aug 25, 2013 9:13 am

புல்லை பற்றி பாடவேன்டுமென்றால் புல்லாக மாறவேன்டும் என்ற கதையை நான் கேட்டேன். மற்ற இரு கதைகளும் அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by ராஜா Sun Aug 25, 2013 11:16 am

சிவா wrote:ராஜாவையே எதிர்த்துக் கேட்கக் கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர் பிழைத்தது.
துணிச்சலுடன் ஈடுபாடும் சேர்ந்து விட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
அந்த ராஜா நல்லவனாக இருந்ததால் விவசாயி பிழைத்தான் , நம்ம தமிழ்நாடு ராஜாராணிகள் போல இருந்தால் அவ்வளவு தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:06 am

கதையை பற்றி கருத்து சொன்னால் அம்மா கேஸ் போட்டாலும் போட்டிடிடும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் T முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் O முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் A முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் E முதல்வர் சொன்ன கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by யினியவன் Mon Aug 26, 2013 12:35 am

Muthumohamed wrote:கதையை பற்றி கருத்து சொன்னால் அம்மா கேஸ் போட்டாலும் போட்டிடிடும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வந்து பார்த்துட்டு கருத்து சொன்னால் அம்மா கேஸ் போடுவாங்கன்னு அவதூறு பரப்பியதால் - உங்கள் மீது அவதூறு வழக்கு போடப் போறாங்களாம் முகம்மத் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:52 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:கதையை பற்றி கருத்து சொன்னால் அம்மா கேஸ் போட்டாலும் போட்டிடிடும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வந்து பார்த்துட்டு கருத்து சொன்னால் அம்மா கேஸ் போடுவாங்கன்னு அவதூறு பரப்பியதால் - உங்கள் மீது அவதூறு வழக்கு போடப் போறாங்களாம் முகம்மத் புன்னகை
 பார்ததுக்கும் கேஸா அநியாயம் அநியாயம் அநியாயம்



 முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் T முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் O முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் A முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் E முதல்வர் சொன்ன கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by யினியவன் Mon Aug 26, 2013 12:55 am

Muthumohamed wrote:பார்ததுக்கும் கேஸா அநியாயம் அநியாயம் அநியாயம்
பார்த்தாலும் கேசு
பார்க்கலேன்னாலும் கேசு
ஏன்னா அம்மாவுக்கு நாமெல்லாம் லூசு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by Muthumohamed Mon Aug 26, 2013 1:00 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:பார்ததுக்கும் கேஸா அநியாயம் அநியாயம் அநியாயம்
பார்த்தாலும் கேசு
பார்க்கலேன்னாலும் கேசு
ஏன்னா அம்மாவுக்கு நாமெல்லாம் லூசு
 
அப்படி தான் போல் தெரிகிறது



 முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் T முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் U முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் O முதல்வர் சொன்ன கதைகள் H முதல்வர் சொன்ன கதைகள் A முதல்வர் சொன்ன கதைகள் M முதல்வர் சொன்ன கதைகள் E முதல்வர் சொன்ன கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by சிவா Sat Jun 28, 2014 3:09 am

ஒரு ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவர் இருந்தார். அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தார். ஒரு நாள் மனைவி தனது கணவனைப் பார்த்து, “”சும்மாவே உட்கார்ந்து இருக்கிறீர்கள்? சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்” என்றாள்.

உடனே கணவன், “”தான் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன். அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும். நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்” என்றான்.

“”ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள் மனைவி.

அதற்கு கணவன், “”அந்தக் குட்டி வளரும். பிறகு நிறைய குட்டிகள் போடும். அதையெல்லாம் சந்தையில் கொண்டு போய் விற்றுவிட்டு அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன். பசு நிறைய பால் கொடுக்கும். அதைக் கொண்டு போய் பண்ணையில் கொடுத்தால் அதிக காசு கிடைக்கும். நாமும் காபி சாப்பிடலாம். உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம்” என்றான் கணவன்.

உடனே மனைவி, “”அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டுக்கும் கொஞ்சம் பால் கொடுத்து அனுப்பலாம்” என்றாள்.

இதற்கு கணவன் மறுக்க இந்த இடத்தில் சண்டை தொடங்கி விட்டது. இரண்டு பேரும் சத்தம் போடத் தொடங்கி விட்டார்கள். இதை அறிந்து பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான். இருவரும் வாங்காத மாட்டுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது வாக்குவாதத்தில் தெரிந்தது.

உடனே, இரண்டு பேரையும் பார்த்து, “”உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசம் செய்து விட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்றான்.
இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, “”நான் இன்னும் மாடே வாங்கவில்லை. உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்” என்றான்.

உடனே பக்கத்து வீட்டுக்காரன், நீ தான் உளறுகிறாய். மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவர்களுடைய அம்மா வீட்டுக்கு பால் கொடுத்து அனுப்ப முடியுமோ அதுபோலத் தான் அந்த மாடு இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது” என்றான்.

அப்போதுதான் அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் கணவன். இல்லாத விஷயத்துக்கு சண்டை போட்டுக் கொண்டு இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கணவனும், மனைவியும் அன்பாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை வேண்டும். இதுதான் நல்ல குடும்பத்துக்கு அழகு என்று குட்டிக் கதை மூலம் விளக்கினார் முதல்வர் ஜெயலலிதா.


 முதல்வர் சொன்ன கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 28, 2014 8:30 am

சூப்பர் கதைகள். நன்றி மாமா அங்கள். அது சரி, ஒன்னும் இல்லாததுக்கா வீட்ல கணவன் மனைவி சண்ட போடுராங்க, வீட்ல சண்டைக்கு காரணமே, இந்த வீட்டுக்கார அம்மாக்கள் தான். இது எனது 41 ஆண்டு உண்மையா அனுபவம். சில சமயங்கள்ல மண்ட ஒடைஞ்ச அனுபவமும் இருக்கில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 முதல்வர் சொன்ன கதைகள் Empty Re: முதல்வர் சொன்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum