ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat 24 Aug 2013 - 18:57

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ்


இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர் மாவட்டம் .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே .முத்தமிழ் போல ,முப்பால் போல , முக்கனி போல மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று வகைப்பாவும் உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள், மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின் மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .

.94 கவிஞர்களின் பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள் ஒருவர்க்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் .கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று .

மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம்
புதுவாழ்வில் தமிழிருக்க வேண்டா மா ? சொல் !

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப தற்குக்
கரும்புதந்தால் போதாது !வையம் ஆளும்

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில்

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

தேர்தல்அவலம் பற்றி வென்ற வேட்பாளர்களின் நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர்

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும்
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள்

முனியனையும் கலியனையும்
காமாட்சியையும் மீனாட்சியையும்

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார்

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம்
மறப்பது நமது மாண்பு .
மறதி வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும் காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம் நீ . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும்
ஆயிரம் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கின்றன
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய் ,
பாடுங்களமாய் ,

வெட்டிப் பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய்

பூனைக்கும் நாய்க்கும்
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம் பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று .

கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள் வண்ணத்தோடு மட்டுமே
வாழ்கிறோம் .
வருணத்தோடு இல்லை .

சாதி சாத்திரம்
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால்
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை
நாங்கள் மனிதர்களாக
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால்
விண்ணைத் தொடும் சிறகுகள்
முளைக்காமல் போயிருக்கும் ... !

மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா இறந்தபோது
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும்
அதிகமாகவே கவலையளித்தது
முகத்தில் இல்லாத மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன் . குடியாத்தம் .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க

எம் பொண்டாட்டி சொல்றா
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது
ரொம்ப கஷ்டம்டா மவனே !

எனது ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்
உணர்த்துகிறது
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது
வண்ணத்துப்பூச்சியின்
இறுதி ஊர்வலம் !

கவிஞர் ஆரிசன் கீழக் கொடுங்காலூர் .

இறந்தவர் கொடை
மரணத்திலும் உயிர்பெற்றது
கண்கள் !

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்
ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum